Friday, April 07, 2017

யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 67

Arjuna ensured Yudhishthira ! | Karna-Parva-Section-67 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : நடந்தவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; சம்சப்தகர்களுடன் தான் போரிட்டதையும், அஸ்வத்தாமன் குறுக்கிட்டதையும், தன்னால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் நுழைந்ததையும், கர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதத்தைத் தான் கண்டதையும் யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொல்வதாக யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கோபத்தில் நிறைந்திருந்த நேர்மையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், உயர் ஆன்ம அதிரதனும், எல்லையில்லா சக்தி கொண்டவனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பெரும் வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த யுதிஷ்டிரனிடம் மறுமொழியாக,(1) “இன்று சம்சப்தகர்களுடன் போரிடுகையில், குரு துருப்புகளின் முகப்பில் எப்போதும் செல்லும் துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளை ஏவியபடியே திடீரென என் எதிரில் வந்தார்[1].(2) மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட என் தேரைக் கண்டதும், துருப்புகள் அனைத்தும் அதைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின. அவர்களில் முழுமையாக ஐநூறு பேரைக் கொன்ற நான், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமரை} எதிர்த்துச் சென்றேன்.(3) பெரும் உறுதியோடு என்னை அணுகிய அந்த வீரர், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே} சிங்கத்தை எதிர்த்து வரும் யானைகளின் இளவரசனைப் போல என்னை எதிர்த்து விரைந்து, என்னால் கொல்லப்பட்டு வந்த கௌரவத் தேர்வீரர்களை மீட்க விரும்பினார்.(4) அப்போது, ஓ! பாரதரே, குருவீரர்களில் முதன்மையானவரும், நடுங்கச் செய்யப்பட இயலாதவருமான அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தப் போரில், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கூரிய கணைகளால் என்னையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} பீடிக்கத் தொடங்கினார்.(5)


[1] “வங்க உரையில் இரண்டாம் சுலோகத்தின் இறுதிச்சொல் தவறாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. குருசைனியேராஜன் Kurusainyeraajan என்று பம்பாய் பதிப்பில் காணப்படுவதே சரியானதாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “நான் இப்போது ஸம்சப்தகர்களோடு போர்புரிந்து கொண்டிருக்கும் ஸமயத்தில், என் முன்னிலையில், குருசேனைக்கு முன்பாகத்தில் செல்லுந்தன்மையுள்ள அஸ்வத்தாமா சஸ்ப்பங்கள் போல விளங்குகிற பாணஸமூகங்களை இறைத்துக் கொண்டு விரைவாகத் தோன்றினார்” என்றிருக்கிறது.

என்னோடு {அவர்} போரிட்டபோது, எட்டு இளங்காளைகளால் இழுக்கப்படும் எட்டு வண்டிகள் அவரது நூற்றுக்கணக்கான கணைகளைச் சுமந்து வந்தன. அவை அனைத்தையும் அவர் என் மீது ஏவினார். ஆனால் நானோ, மேகங்களை அழிக்கும் காற்றைப் போல என் கணைகளால் அவரது கணைமாரியை அழித்தேன்.(6) பிறகு, திறன், பலம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவற்றோடு கூடிய அவர், மழைக்காலங்களில் நீர்த்தாரைகளைப் பொழியும் கார்மேகத்தைப் போலத் தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட ஆயிரகணக்கான கணைகளை என் மீது ஏவினார்.(7) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளை இடப்புறத்தில் இருந்து ஏவுகிறாரா, வலப்புறத்தில் இருந்து எவுகிறாரா என்பதை நாங்கள் அறியாத வண்ணம் அவர் அந்தப் போரில் திரிந்தார், அதே போல அவர் {அஸ்வத்தாமர்} தமது கணைகளை எப்போது எடுத்தார், அவற்றை எப்போது விடுத்தார் என்பதையும் நாங்கள் அறியவில்லை.(8) உண்மையில், துரோணர் மகனின் வில்லானது இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே எங்களால் காணப்பட்டது. இறுதியாகத் துரோணர் மகன் ஐந்து கூரிய கணைகளால் என்னையும், மேலும் ஐந்து கூரிய கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தார்.(9) எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, வஜ்ரத்தின் சக்தியைக் கொண்ட முப்பது கணைகளால் நான் அவரைப் பீடித்தேன். என்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {அஸ்வத்தாமர்}, விரைவில், ஒரு முள்ளம்பன்றியின் வடிவை ஏற்றார்.(10)

அவரது {அஸ்வத்தாமரது} அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்திருந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரான தன் துருப்பினர் குருதியால் மறைக்கப்பட்டு, என்னால் மூழ்கடிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர், சூதன் மகனின் {கர்ணனின்} தேர்ப்படைப் பிரிவிற்குள் நுழைந்துவிட்டார்.(11) (பகைவரின் படைகளை) கலங்கடிப்பவனான கர்ணன், போரில் என்னால் மூழ்கடிக்கப்பட்ட துருப்புகளைக் கண்டு, யானைகளும், குதிரைகளும் அச்சமடைந்து ஓடுவதைக் கண்டு, ஐம்பது பெருந்தேர்வீரர்களுடன் என்னை வேகமாக அணுகினான். கர்ணனைத் தவிர்த்து, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வேகமாக வந்தேன்[2].(12) பாஞ்சாலர்கள் அனைவரும் கர்ணனைக் கண்டதால், சிங்கத்தின் மணத்தை {வாசனையை} அறிந்த பசுக்களைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கர்ணனை அணுகிய பிரபத்ரகர்களும், அகன்று விரிந்திருக்கும் காலனின் வாய்க்குள் நுழைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.(13) துன்பத்தில் இருந்த அந்தத் தேர்வீரர்களில், முழுமையாக ஆயிரத்து எழுநூறு பேரைக் கர்ணன் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவிட்டான். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்} நம்மைக் காணும் வரை தன் உற்சாகத்தை இழக்கவில்லை.(14) முதலில் நீர் அஸ்வத்தாமருடன் போரிட்டு, அவரால் மிகவும் சிதைக்கப்பட்டீர். கர்ணனால் நீர் காணப்பட்ட பிறகே அதை நான் கேள்விப்பட்டேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத அருஞ்செயல்களைச் செய்பவரே, கொடூரனான கர்ணனினிடம் இருந்து வந்த பிறகு, (முகாமில்) நீர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பீர் என்றே நான் நினைத்தேன்.(15)

[2] வேறொரு பதிப்பில், “நான் அவர்களை நாசஞ்செய்து கர்ணனைத் துரத்திவிட்டு உம்மைப் பார்ப்பதற்காக விரைவுடன் வந்தேன்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரின் முன்னணியில் கர்ணனால் வெளிப்படுத்தப்பட்ட பேரற்புதமான (பார்க்கவ) ஆயுதத்தை நான் கண்டேன். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணனைத் தடுக்கச் சிருஞ்சயர்களில் எந்தப் போர்வீரனாலும் இப்போது இயலாது.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகியும், திருஷ்டத்யும்னனும், என் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். வீர இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(17) ஓ! பெரும் மகிமை கொண்டவரே, பகைவரின் படையில் இருப்பவனும், வீரனும், வெல்லப்பட முடியாத தேர்வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இன்றைய இந்தப் போரில் காணப்பட்டால், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பாரதரே, விருத்திரனுடன் மோதிய சக்ரனை {இந்திரனைப்} போலவே அவனுடன் {கர்ணனுடன்} நான் போரிடுவேன். வெற்றிக்கான போரில் நானும், சூதன் மகனும் போராடுவதை வந்து பாரும்.(18,19) வலிமைமிக்கக் காளையின் முகத்தை நோக்கி ஓடும் மனிதர்களைப்[3] போல அங்கே அந்தப் பிரபத்ரகர்கள் கர்ணனை நோக்கி விரைகின்றனர். அங்கே, ஓ! பாரதரே, ஆறாயிரம் இளவரசர்கள், சொர்க்கத்திற்காகப் போரில் தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(20)

[3] ஒரு பலமிக்கக் காளையை முன்னால் இருந்து எதிர்க்கக்கூடாது.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணனோடு போரிட்டு, அவனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் இன்று நான் கொல்லவில்லையெனில், ஓ! மன்னர்களில் சிங்கமே {யுதிஷ்டிரரே}, தான் செய்த உறுதிமொழியை நிறைவேற்றாத ஒருவனுக்கு என்ன முடிவு ஏற்படுமோ, அதே முடிவு என்னையும் அடையட்டும்.(21) போரில் வெற்றி எனதே என எனக்கு ஆசி வழங்குமாறு நான் உம்மை இரந்து கேட்கிறேன். அதோ, தார்தராஷ்டிரர்கள் பீமரை விழுங்கப் போகின்றனர். ஓ! மன்னர்களில் சிங்கமே, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனது துருப்புகளையும், நம் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}".(22)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்