Tuesday, July 25, 2017

சல்லியனின் தொண்டர்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 18

The followers of Shalya! | Shalya-Parva-Section-18 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : தங்கள் தலைவனின் படுகொலைக்குப் பழிதீர்க்க முனைந்த சல்லியனின் தொண்டர்கள்; அவர்களைத் தடுத்த துரியோதனன்; துரியோதனனுக்குக் கீழ்ப்படியாத மத்ரகர்கள்; அவர்களைத் தாக்கி அழித்த பாண்டவர்கள்; மத்ரகர்களைக் காக்க துரியோதனனைத் தூண்டிய சகுனி; மத்கர்களைக் காக்க விரைந்த கௌரவவீரர்கள்; களத்தில் இருந்து மீண்டும் புறமுதுகிட்ட கௌரவர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சல்லியன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ர மன்னனை {சல்லியனைப்} பின்தொடர்ந்த எழுனூறு {700} வீரப் போர்வீரர்கள் பெரும் சக்தியுடன் போரிடச் சென்றனர்.(1) தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, எப்போதும் வெண்சாமரம் வீசப்பட்டு, மலை போன்ற ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு வந்த துரியோதனன், "செல்லாதீர்கள், செல்லாதீர்கள்" என்று சொல்லி மத்ரகப் போர்வீரர்களைத் தடுத்தான்.(2) துரியோதனனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், அவ்வீரர்கள், யுதிஷ்டிரனைக் கொல்லும் விருப்பத்தோடு பாண்டவப் படைக்குள் ஊடுருவினர்.(3) துரியோதனனிடம் மாறாப்பற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்கப் போராளிகள், தங்கள் விற்களில் உரத்த நாணொலி எழுப்பியபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(4)


அதேவேளையில், சல்லியன் கொல்லப்பட்டதையும், மத்ரக மன்னனின் {சல்லியனின்} நலனில் அர்ப்பணிப்புக் கொண்ட மத்ரகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் யுதிஷ்டிரன் பீடிக்கப்படுவதையும் கேட்ட பெரும் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டும், தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்துக் கொண்டும் அங்கே வந்தான்.(5,6) பிறகு, அர்ஜுனன், பீமன், பாண்டுவின் மூலமாக மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, மனிதர்களில் புலியான சாத்யகி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள்,(7) திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைக் காக்க விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து நின்றனர்.(8) மன்னனை {யுதிஷ்டிரனைச்} சுற்றித் தங்கள் நிலைகளை ஏற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான அந்தப் பாண்டவர்கள், பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போலப் பகைவரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். உண்மையில், மரங்களை அசைக்கும் வலிமைமிக்கச் சூறைக்காற்றைப் போல அவர்கள் உமது படையை நடுங்கச் செய்தனர்.(9)

{ஆனாலும்} எதிர்க்காற்றால் கலங்கலடிக்கப்படும் பெரும் கங்கையாற்றைப் போல, மீண்டும் அந்தப் பாண்டவப் படை அதிகமாகக் கலக்கமடைந்தது.(10) அந்த வலிமைமிமிக்கப் படையைக் கலங்கச் செய்தவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் (மத்ரகர்கள) அனைவரும், "எங்கே அந்த மன்னன் யுதிஷ்டிரன்?(11) துணிச்சல்மிக்க அவனது சகோதரர்கள் ஏன் இங்குத் தென்படவில்லை? பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்களுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டிக்கும் என்ன ஆயிற்று? திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களான திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர் எங்கே சென்றுவிட்டனர்?" என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(12) இதனால், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், அந்த வார்த்தைகளைச் சொல்லி மூர்க்கமாகப் போரிட்டுக் கொண்டிருந்த மத்ர மன்னனின் தொண்டர்களைக் கொல்லத் தொடங்கினர்.(13) அந்தப் போரில் உமது துருப்புகளில் சிலர் தேர்ச்சக்கரங்களால் நசுக்கப்படுவதும், சிலர் உயர்ந்த கொடிமரங்களால் கொல்லப்படுவதும் அங்கே காணப்பட்டது.(14) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உமது மகனால் தடுக்கப்பட்டாலும் கூட, அந்த வீரப் பாண்டவர்களைக் கண்டதும், அவர்களை எதிர்த்து மேலும் விரைந்தனர்.(15)

மென்மையாகப் பேசிய துரியோதனன், அவ்வீரர்கள் எதிரியோடு போரிடுவதைத் தவிர்க்க முயன்றான். எனினும், பெரும் தேர்வீரர் எவரும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.(16) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காந்தார மன்னனின் மகனும், பேச்சுத்திறன் கொண்டவனுமான சகுனி, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(17) "நம் கண்களுக்கு முன்பாக மத்ரகப் படை கொல்லப்படும்போது, நாம் எவ்வாறு நின்று கொண்டிருக்கலாம்? ஓ! பாரதா {துரியோதனா}, நீ இங்கிருக்கும்போது இது {இப்படி நடப்பது} நல்லதாகத் தெரியவில்லை.(18) ஒற்றுமையுடன் நான் அனைவரும் போரிட வேண்டும் என்பதே நமது திட்டம். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு ஏன் நீ, நமது துருப்புகள் இவ்வாறு எதிரிகளால் கொல்லப்படும்போதும் பொறுத்துக் கொள்கிறாய்?" என்று கேட்டான்.(19)

துரியோதனன் {சகுனியிடம்}, "என்னால் முன்பே தடுக்கப்பட்டாலும், அவர் என் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இந்த மனிதர்கள் ஒன்றாக இந்தப் பாண்டவப்படைக்குள் சென்று விட்டனர்" என்றான்.(20)

சகுனி, "போரில் சினத்தால் தூண்டப்படும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. அம்மனிதர்களிடம் நீ கோபப்படுவது உனக்குத் தகாது. அக்கறையின்மைக்கு இது சமயமில்லை.(21) எனவே, மத்ர மன்னனின் தொண்டர்களான அந்தப் பெரும் வில்லாளிகளைக் காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நமது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் செல்வோம்.(22) ஓ! மன்னா {துரியோதனா}, பெருங்கவனத்துடம் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம்" என்றான் {சகுனி}. சகுனியின் நடத்தையைக் குறித்துச் சிந்தித்த கௌரவர்கள் அனைவரும், மத்ரர்கள் இருந்த அந்த இடத்திற்குச் சென்றனர்.(23) இவ்வாறு (தன் தாய்மாமனால்) சொல்லப்பட்ட துரியோதனனும், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், அவ்வொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியும், ஒரு பெரும் படை சூழ எதிரியை எதிர்த்துச் சென்றான்.(24) "கொல்வாயாக, துளைப்பாயாக, பிடிப்பாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக" என்ற இவ்வொலிகளே அங்கே அந்தத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன.(25)

அதேவேளையில், அந்தப் போரில் மத்ர மன்னின் {சல்லியனின்} தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைத் தாக்குவதைக் கண்ட பாண்டவர்கள், மத்யமம் என்றழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களை அணிவகுத்துக் கொண்டு அவர்களை எதிர்த்துச் சென்றனர்[1].(26) கையோடு கையாகச் சிறிது நேரம் போரிட்டவர்களும், மத்ரமன்னனின் தொண்டர்களுமான அந்த வீரப் போர்வீரர்கள், அழிவைச் சந்திப்பது அங்கே காணப்பட்டது.(27) பிறகு நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்த போது, ஒன்று சேர்ந்து வந்த பாண்டவர்கள், பெரும் சுறுசுறுப்புடன் மத்ரகர்களின் படுகொலையை நிறைவுசெய்து, மகிழ்ச்சியில் நிறைந்து இன்பக்கூச்சலிட்டனர்.(28) அப்போது சுற்றிலும் அங்கே தலையில்லாத வடிவங்கள் எழுவது காணப்பட்டது. சூரிய வட்டலில் இருந்து பெரும் எரிநட்சத்திரங்கள் விழுவதும் தென்பட்டது.(29) பூமியானது, தேர்கள், உடைந்த அச்சுகள், நுகத்தடிகள், கொல்லப்பட்ட போர்வீரர்கள், உயிரற்ற குதிரைகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டது.(30)

[1] கும்பகோணம் பதிப்பில், "பாண்டவர்களோ, யுத்தத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிற மத்ரராஜனுடைய துணைவீரர்களைக் கண்டு அவர்களுடைய படைவரிசையின் நடுவிடத்தை அடைந்து அவர்களை எதிர்த்தார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் அடிக்குறிப்பாக, "மென்மையான அல்லது மிதமாக என்ற பொருளில் மத்யமம் என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அணிவகுப்புக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் குல்மம் என்பதாகும்; வியூகம் அல்ல. வியூகத்தின் வடிவில் மொத்த படையும் அணிவகுக்கப்படும், குல்மம் என்பதோ படைப்பிரிவு என்று சொல்லத்தக்க வகையில் இருக்கும் ஒரு சிறு பிரிவாகும். பாண்டவர்கள் இத்தாக்குதலை மிகத்தீவிரமாகத் தாக்கவில்லை என்பதுதான் இங்கே உள்ள அறிவுரையாகத் தெரிகிறது" என்றிருக்கிறது.

காற்றின் வேகத்தைக் கொண்டவையும், (வழிநடத்த சாரதிகளில்லாமல்) தேர்களில் இன்னும் பூட்டப்பட்டிருந்தவையுமான குதிரைகள், ஓ! ஏகாதிபதி, போர்க்களத்தில் இங்கேயும் அங்கேயும் போர்வீரர்களை இழுத்துச் செல்வது காணப்பட்டது.(31) சில குதிரைகள் உடைந்த சக்கரங்களைக் கொண்ட தேர்களை இழுத்துச் சென்றன, சில உடைந்த தேர்களின் பகுதிகளைச் சுமந்து கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(32) பூட்டாங்கயிறுகளால் தணிவடைந்த சில குதிரைகளும் ஆங்காங்கே தென்பட்டன புண்ணியங்கள் தீர்ந்து சொர்க்கத்தில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து தேர்வீரர்கள் கீழே விழும்வதும் காணப்பட்டன.(33) மத்ரமன்னனின் துணிச்சல்மிக்கத் தொண்டர்கள் கொல்லப்பட்ட போது, தாக்குவதில் பெருந்திறன் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பார்த்தர்கள், தங்களை நோக்கி ஒரு குதிரைப்படை வருவதைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் அதை நோக்கி வேகமாக விரைந்தனர்.(34) தங்கள் கணைகளால் உரத்த விஸ் ஒலியை உண்டாக்கி, தங்கள் சங்கொலிகளுடன் கலந்து பல்வேறு வகை ஒலிகளையும் வெளியிட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமான அவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.(35)

மத்ர மன்னனின் அந்தப் பெரும்படை அழிக்கப்பட்டதைக் கண்டும், அவர்களது வீர மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதைக் கண்டும் துரியோதனனின் மொத்த படையும் மீண்டும் களத்தில் இருந்து புறமுதுகிட்டது.(36) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லாளிகளான பாண்டவர்களால் தாக்கப்பட்ட அந்தக் குரு படையானது, அச்சத்தால் தூண்டப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது" {என்றான் சஞ்சயன்}.(37)[2]

[2] பிபேக் திப்ராயின் பதிப்பில், இந்தப் பகுதியில் இருந்து "ஹ்ரதபிரவேச {உப} பர்வம்" தொடங்குகிறது. ஆனால், கும்பகோணம், கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் இந்தப் பகுதியும், "கதாயுத்த பர்வத்திற்கு" முன்பு அடுத்தடுத்து வரும் பகுதிகளும் "சல்யவதபர்வம்" என்ற உபபர்வத்தின் கீழேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்