Sunday, October 01, 2017

கிருபர் அஸ்வத்தாமன் உரையாடல்! - சௌப்திக பர்வம் பகுதி – 04

Kripa and Aswatthama converse! | Sauptika-Parva-Section-04 | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 04)


பதிவின் சுருக்கம் : காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்...


கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)


[1] கும்பகோணம் பதிப்பில், "பாக்கியத்தினால் செய்ததற்குப் பிரதி செய்வதில் உனக்கு இந்தப் புத்தி உண்டாகிவிட்டது" என்றிருக்கிறது.

ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, உறங்கி, ஓய்வெடுத்து, சிறிது புத்துணர்வை அடைந்த பிறகு, நீ போரில் எதிரியோடு மோதுவாயாக. அப்போது, நீ எதிரியைக் கொல்வாய் என்பதில் ஐயமில்லை.(6) ஓ! தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான்?(8) எனவே, இவ்விரவில் உறங்கி ஓய்வெடுத்து, களைப்பையுதறிய பிறகு, நாளை காலையில் நாம் எதிரியைக் கொல்வோம்.(9) நீ தெய்வீக ஆயுதங்களில் திறன் கொண்டவன். நானும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. இந்தச் சாத்வதக் குலத்து வீரன் {கிருதவர்மன்}, போரில் எப்போதும் திறன் கொண்ட வலிமைமிக்க வில்லாளியாக இருக்கிறான்.(10)

ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வலிமையைப் போரில் வெளிப்படுத்தி, கூடியிருப்பவர்களான நம் எதிரிகளைக் கொல்வதில் வெல்வோம். உன் கவலைகளை அகற்றி, இவ்விரவில் ஓய்ந்து, மகிழ்ச்சியாக உறங்குவாயாக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ எதிரிகளை எதிர்த்து உன் தேரில் செல்லும்போது, விற்களைத் தரித்தவர்களும், எதிரிகளை எரிக்கவல்லவர்களுமான நானும் கிருதவர்மனும் கவசத்தைப் பூண்டு கொண்டு உன்னைப் பின்தொடர்வோம்.(12) எதிரிகளின் முகாமுக்குச் செல்லும் நீ, போரில் உன் பெயரை அறிவித்துக் கொண்டு, அவர்களைப் படுகொலை செய்வாயாக.(13) நாளை காலையில் தெளிவான வெளிச்சத்தில், பெரும் அசுரர்களைக் கொன்ற சக்ரனை {இந்திரனைப்} போல நீ அவர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்து விளையாடுவாயாக.(14) தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, சினத்தால் தானவப் படையைக் கொல்வதைப் போல நீயும் பாஞ்சாலப்படையை வெல்லத் தகுதவனே.(15)

போரில் என்னோடு சேர்ந்தும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நீ வஜ்ரபாணியாலேயே தாக்குப்பிடித்துக் கொள்ளப்பட முடியாதவனாவாய்.(16) நானோ, கிருதவர்மனோ, பாண்டுக்களை வெல்லாமல் போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.(17) கோபக்காரப் பாஞ்சாலர்களைப் பாண்டவர்களோடு சேர்த்துக் கொல்வோம், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வோம்.(18) எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் நாங்கள் இருவரும் நாளை காலையில் போரில் உனக்கு உதவிபுரிவோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்" என்றார் {கிருபர்}.(19)

ஓ! மன்னா, தன் தாய்மாமனால் இந்த நன்மையான வார்த்தைகள் சொல்லப்பட்ட போது, அஸ்வத்தாமன் சினத்தில் சிவந்த கண்களுடன், தன் மாமனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(20) "துன்பத்திலோ, சினத்தின் வசத்திலோ, காமத்தின் ஆதிக்கத்திலோ இருப்பவனும், செல்வத்தை அடைவதற்காக எப்போதும் திட்டங்களைச் சுழற்றும் இதயத்தைக் கொண்டவனுமான ஒருவனால் எங்கு உறக்கத்தை அடைய முடியும்?(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும்?(25)

போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் என் உயிரைத் தாங்கிக் கொள்ளும் எண்ணத்தையேகூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் தந்தை {துரோணர்} படுகொலை செய்யப்பட்டதன் விளைவால் அவனும் {திருஷ்டத்யும்னனும்}, அவனுடன் சேர்ந்திருப்போரும் என்னால் கொல்லத்தக்கவர்களாகிறார்கள்.(26) முறிந்த தொடைகளுடன் கிடக்கும் மன்னனின் {துரியோதனனின்} புலம்பல்களைக் கேட்ட பிறகும், எரியாத கடும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்?(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்?(28) நான் எத்தரப்பினரைச் சேர்ந்தேனோ, அவர்கள் வெல்லப்பட்டார்கள். விரைந்து வரும் நீரானது கடலை அதிகரிப்பது போல இந்த என் எண்ணமே என் கவலையை அதிகரிக்கிறது.(29)

ஓ! மாமா {கிருபரே}, வாசுதேவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படும் அவர்கள் மஹேந்திரனாலும் தடுக்கப்பட முடியாதவர்களாவர் என்று நான் கருதுகிறேன்.(30) என் இதயத்தில் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். என் கோபத்தைத் தணிக்கக்கூடிய மனிதன் எவனையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(31) என் நண்பர்களின் தோல்வியையும், பாண்டவர்களின் வெற்றியையும் தூதர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அஃது என் இதயத்தை எரிக்கிறது.(32) எனினும், என் எதிரிகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைக் கொன்ற பிறகு, ஓய்வெடுத்துக் கொண்டு, கவலையில்லாமல் உறங்குவேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)

சௌப்திக பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்