Monday, October 02, 2017

வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 05

Aswatthama reached the gate! | Sauptika-Parva-Section-05 | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : உறங்குபவர்களைக் கொல்வது முறையாகாது என்று தடுத்த கிருபர்; அதை மறுத்து இரவிலேயே அவர்களைக் கொல்லப்போவதாகச் சொன்ன அஸ்வத்தாமன்; கிருபரும், கிருதவர்மனும் அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றது...


கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, "ஒருவன் பெரியோரிடம் கடமையுணர்வுடன் பணிசெய்பவனாக இருப்பினும், அறிவற்றவனாகவோ, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்காதவனாகவோ இருப்பின், அவனால் அறக்கருத்துகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே என் கருத்து.(1) அதேபோலவே, பணிவில்லாத அறிவாளியும், அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) துணிச்சல் கொண்ட ஒரு மனிதன், அறிவற்றவனானால், தன் வாழ்நாள் முழுவதும் கல்விமான்களிடம் பணிவிடை செய்தாலும், (கறியிலேயே {குழம்பிலேயே} மூழ்கியிருந்தாலும்) கறிச்சுவையறியாத மரக்கரண்டியைப்[1] போலவே தன் கடமைகளை அறிவதில் தவறுவான்.(3) எனினும், ஞானியான ஒரு மனிதன் கல்விமானிடம் ஒரு கணம் பணிசெய்தாலும், (கறியைத் தீண்டியதும்) கறிச்சுவையறியும் நாவைப் போலத் தன் கடமைகளை அறிவதில் வெல்கிறான்.(4) அறிவைக் கொண்ட மனிதன், பெரியோரிடம் பணிவிடை செய்து, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, அறநெறிகளின் விதிகளை அறிவதில் வென்று, அனைவராலும் ஏற்கப்பட்டவற்றில் ஒருபோதும் சச்சரவு கொள்ள மாட்டான்.(5)


[1] சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - சிவவாக்கியம் 520

அடங்காதவனும், தொடர்பற்றவனும், தீய ஆன்மா கொண்டவனுமான பாவி, விதியை அலட்சியம் செய்து, தன்னலத்தை நாடினால் பாவத்தையே இழைக்கிறான்.(6) நலம்விரும்பிகள் தனது நண்பனைப் பாவத்தில் இருந்து தடுப்பார்கள். {அவ்வாறு} தடுக்கப்படும் ஒருவன் செழிப்பை வெல்கிறான். வேறுவகையில் செய்பவன் அவல நிலையையே அறுவடை செய்கிறான்.(7) மூளை கலங்கிய ஒருவன், ஆறுதல் தரும் வார்த்தைகளால் தடுக்கப்படுவதைப் போலவே, ஒரு நண்பனும் அவனது நலன்விரும்பிகளால் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படுபவன் ஒரு போதும் அவல நிலைக்கு இரையாகமாட்டான்.(8) ஒரு நல்ல நண்பன் தீச்செயலைச் செய்யப்போகும்போது, ஞானம் கொண்ட அவனது நலன் விரும்பிகள் தங்கள் சக்தி கொண்ட மட்டும் மீண்டும் மீண்டும் அவனைத் தடுக்க முயல வேண்டும்.(9) ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, உண்மையில் எது நன்மையானது என்பதில் உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பின்னால் நீ வருத்தப்படாத வகையில், நான் சொல்வதைச் செய்வாயாக.(10)

உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொல்வது அறவிதிகளுக்கு ஏற்ப இவ்வுலகில் மெச்சப்படுவதில்லை. தங்கள் ஆயுதங்களை வைத்துவிட்டவர்கள், தங்கள் தேர்கள் மற்றும் குதிரைகளில் இருந்து இறங்கியவர்கள் ஆகியோரின் வழக்கிலும் {அவர்கள் கொல்லப்படுவதும்} அவ்வாறே {மெச்சப்படுவதில்லை}.(11) "நாங்கள் உன்னவர்கள்" என்று சொல்பவர்கள், சரணடைந்தவர்கள், கேசம் கலைந்தவர்கள், தாங்கள் ஏறிவந்த விலங்குகள் கொல்லப்பட்டவர்கள், தேர்கள் நொறுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கொல்லத்தகாதவர்களே.(12) ஓ! தலைவா {அஸ்வத்தாமா}, பாஞ்சாலர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றிவிட்டு இவ்விரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுடன் உறக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள், இறந்த மனிதர்களைப் போன்றவர்களாவர்.(13) கோணல்புத்தி கொண்ட எந்த மனிதன் அவர்களிடம் அப்போது பகைமை கொள்வானோ, அவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பமும் இல்லாதவனாக ஆழமான எல்லையற்ற நரகில் மூழ்கிப் போவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) இவ்வுலகில் நீ ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கொண்டாடப்படுகிறாய். ஒரு சிறு மீறலையும் நீ இதுவரை செய்ததில்லை.(15) அடுத்தச் சூரிய உதயத்தில், அனைத்துப் பொருட்களையும் ஒளி கண்டடையும்போது, பிரகாசம் கொண்ட இரண்டாவது சூரியனைப் போலப் போரில் நீ உன் எதிரிகளை வெல்வாயாக.(16) உன்னைப் போன்ற ஒருவனிடம் இருக்கத் தகாததும், நிந்திக்கத்தக்கதுமான இந்தச் செயலானது, வெண்பரப்பில் சிவப்புப் புள்ளியைப் போலத் தெரியும். இதுவே என் கருத்தாகும்" என்றார் {கிருபர்}.(17)

அஸ்வத்தாமன் {கிருபரிடம்}, "ஓ! அம்மானே {தாய்மாமனே}, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும், அறமெனும் அணையானது இதற்கு முன்பே பாண்டவர்களால் நூறு துண்டுகளாக நொறுக்கப்பட்டுவிட்டது.(13) மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உமது கண்களுக்கும் முன்பாகவே, ஆயுதங்களைக் கீழே வைத்த என் தந்தை {துரோணர்}, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனான கர்ணனும், தன் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து, பெரும் துயரில் மூழ்கியிருந்தபோது, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.(20) அதேபோலவே, சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், தன் ஆயுதங்களைக் கீழே வைத்து, ஆயுதமற்றவராக ஆன பிறகு, சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்ட அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(21) 

அதே போலவே, வலிமைமிக்க வில்லாளியான பூரிஸ்ரவஸ், போர்க்களத்தில் பிராய நோன்பை நோற்றுக் கொண்டிருந்தபோது, மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்தபடியே யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்டார்.(22) பீமனோடு கதாயுதப் போரில் மோதிய துரியோதனனும், பூமியின் தலைவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான்.(23) தன்னைச் சுற்றி நின்ற பெரும் எண்ணிக்கையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மன்னன் {துரியோதனன்} தனியொருவனாக நின்று கொண்டிருந்தான். அத்தகு சூழ்நிலையிலேயே அந்த மனிதர்களில் புலியானவன் {துரியோதனன்}, பீமசேனனால் கொல்லப்பட்டான்.(24) செய்தி சொல்லும் தூதர்கள் மூலமாக அறிந்தவையும், தொடைகள் முறிந்து பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த மன்னனுடையவையுமான அந்தப் புலம்பல்களைக் கேட்டு என் இதயத்தின் மையப் பகுதியே பிளக்கிறது.(25)

அறமெனும் அணையை முறித்தவர்களும், நியாயமற்றவர்களும், பாவிகளுமான பாஞ்சாலர்களும் அத்தகையவர்களே {வஞ்சகர்களே}. கருதுகோள்கள் அனைத்தையும் மீறியவர்களான அவர்களை நீர் ஏன் நிந்திக்கவில்லை.(26) இரவில் உறக்கத்தில் புதைந்திருப்பவர்களும், என் தந்தையைக் கொன்றவர்களுமான பாஞ்சாலர்களைக் கொன்ற பிறகு, அடுத்த வாழ்வில் {ஜென்மத்தில்} நான் ஒரு புழுவாகவோ, சிறகு படைத்த பூச்சியாகவோ பிறந்தாலும் எனக்குக் கவலையில்லை.(27) நான் எதைத் தீர்மானித்திருக்கிறேனோ, அஃதை நிறைவேற்ற என்னை அது விரைவுகொள்ளச் செய்கிறது. அதனால் பரபரப்பாக இருக்கும் நான் எவ்வாறு உறக்கத்தையோ, மகிழ்ச்சியையோ அடைய முடியும்?(28) அவர்களை அழிக்க நான் அமைத்திருக்கும் இந்தத் தீர்மானத்தைக் கலங்கடிக்கவல்லவன் இன்னும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்" என்றான் {அஸ்வத்தாமன்}".(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு மூலையில் இருந்த தன் தேரில் குதிரைகளைப் பூட்டித் தன் எதிரிகள் இருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டான்.(30)

அப்போது, உயர் ஆன்மா கொண்டவர்களான போஜனும் {கிருதவர்மனும்}, சரத்வான் மகனும் {கிருபரும்} அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, "உன் தேரில் ஏன் குதிரைகளைப் பூட்டுகிறாய்? நீ என்ன செய்யப் போகிறாய்?(31) ஓ! மனிதர்களில் காளையே, நாளை உன்னோடு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உன் துன்ப துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். எங்களிடம் நம்பிக்கையின்மை கொள்வது உனக்குத் தகாது" என்றனர்.(32)

தன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன், தான் செய்யத் தீர்மானித்திருக்கும் செயலை உண்மையாக அவர்களிடம் சினத்துடன் சொன்னான்.(33) அவன், "நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளால் கொன்ற என் தந்தை {துரோணர்}, தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(34) அவன் {திருஷ்டத்யும்னன்} தன் கவசத்தை அகற்றி இருக்கும் அதே நிலையில், இன்று நான் அவனைக் கொல்லப் போகிறேன். பாஞ்சால மன்னனின் பாவம் நிறைந்த மகனை ஒரு பாவச்செயலால் இன்று கொல்லப் போகிறேன்.(35) ஆயுதங்களால் கொல்லப்பட்டோர் ஈட்டும் உலகங்களைப் பாவியான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} அடையாதவாறு, ஒருவிலங்கைப் போல அவனைக் கொல்ல நான் தீர்மானித்திருக்கிறேன்.(36) தாமதமில்லாமல் உங்கள் கவசங்களை அணிவீராக, உங்கள் விற்களையும், வாள்களையும் எடுத்துக் கொள்வீராக. தேர்வீரர்களில் முதன்மையானவர்களே, எதிரிகளை எரிப்பவர்களே, எனக்காக இங்கேயே காத்திருப்பீராக" என்றான் {அஸ்வத்தாமன்}.(37)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அஸ்வத்தாமன், தன் தேரில் ஏறிக் கொண்டு, எதிரியிருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.(38) அந்த மூவரும் எதிரியை எதிர்த்துச் சென்றபோது, தெளிந்த நெய்யூட்டப்பட்ட சுடர்மிக்க மூன்று வேள்வி நெருப்புகளைப் போல ஒளிர்ந்தனர்.(39) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்கள், முகாமில் உறங்கிக் கொண்டிருந்தவர்களான பாஞ்சாலர்களை நோக்கிச் சென்றார்கள். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, {முகாமின்} வாயிலை அடைந்ததும் நின்றான்" {என்றான் சஞ்சயன்}.(40)

சௌப்திக பர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 40

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்