Tuesday, October 03, 2017

வாயிலைக் காத்த பூதம்! - சௌப்திக பர்வம் பகுதி – 06

A being guarding the gate! | Sauptika-Parva-Section-06 | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 06)


பதிவின் சுருக்கம் : முகாமின் வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்; அங்கே ஒரு பெரும்பூதத்தைக் கண்டது; அஸ்வத்தாமன் ஏவிய ஆயுதங்கள் அனைத்தையும் அந்தப் பூதம் விழுங்கியது; மஹாதேவனைத் துதிக்க நினைத்த அஸ்வத்தாமன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, முகாமின் வாயிலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நின்றதைக் கண்டதும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் என்ன செய்தனர். இதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(1)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கிருதவர்மனையும், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபரையும் அழைத்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் நிறைந்து முகாமின் வாயிலை அணுகினான்.(2) அங்கே, பெரும் உடற்கட்டைக் கொண்டதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், சூரியன் அல்லது சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு பூதமானவன் அவ்வாயிலைப் பாதுகாப்பதைக் கண்டான்.(3) அவனது {அந்தப் பூதத்தின்} இடுப்பைச் சுற்றி குருதி சொட்டும் புலித்தோல் இருந்தது. மேலும் அவன் கருப்பு மானை {மானின் தோலை} மேலாடையாக அணிந்திருந்தான். அவன் ஒரு பெரும்பாம்பைத் தன் புனித நூலாக அணிந்திருந்தான்.(4) நீண்டவையாகவும், பருத்தவையாகவும் இருந்த அவனது கரங்கள் பல வகையிலான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்தன. அவன் தனது தோள்களைச் சுற்றிலும் ஒரு பெரும்பாம்பை அங்கதமாக {தோள்வளையாக} அணிந்திருந்தான். அவனது வாய் நெருப்பின் தழல்களுடன் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(5)

அவனது பற்கள் அவனது முகத்தைக் காணப் பயங்கரமானதாகச் செய்தன. அவனது வாய் திறந்திருந்ததாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது. அவனது முகமானது ஆயிரக்கணக்கான அழகிய விழிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனது உடலும், ஆடைகளும் வர்ணிக்க இயலாதவையாக இருந்தன. அவனைக் கண்டால் மலைகளே கூட ஆயிரந்துண்டுகளாகச் சிதறிவிடும்.(7) அவனது வாய், மூக்கு, காதுகள் மற்றும் அந்த ஆயிரக்கணக்கான கண்கள் ஆகியவற்றில் இருந்து சுடர்மிக்க நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது.(8) அந்தச் சுடர்மிக்கத் தழல்களில் சங்குகள், சக்கரங்கள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரிஷிகேசர்கள் {கிருஷ்ணர்கள்} வெளிப்பட்டார்கள்.(9) மொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் அந்த இயல்புக்குமீறிய பூதமானவனைக் கண்ட துரோணர் மகன், எந்தக் கலக்கமும் அடையாமல், தெய்வீக ஆயுதங்களின் மழையால் அவனை  மறைத்தான். எனினும் அந்தப் பூதமானவன், துரோணர் மகனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(10) கடல்நீரை விழுங்கும் வடவா நெருப்பைப் போல, அந்தப் பூதமானவன், துரோணர் மகன் ஏவிய கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(11)

தன் கணைமாரி கனியற்றதானதைக் கண்ட அஸ்வத்தாமன், நெருப்பின் தழலைப் போன்ற ஒரு நீண்ட ஈட்டியை {ரதசக்தியை} அவன் மீது ஏவினான்.(12) சுடர்மிக்க முனையைக் கொண்ட அந்த ஈட்டியானது, அந்தப் பூதத்தின் மீது மோதி, யுகமுடிவின்போது, ஒரு பெரும் எரிநட்சத்திரமானது {உற்கையானது} சூரியன் மீது மோதி உடைந்து, ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலத் துண்டுகளாக நொறுங்கி விழுந்தது.(13) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத அஸ்வத்தாமன், வானின் வண்ணத்தைக் கொண்டதும், தங்கக் கைப்பிடியைக் கொண்டதுமான தன் சிறந்த வாளை உறையில் இருந்து உருவினான். அந்த வாளும், பொந்துக்குள் இருந்து வெளிப்படும் சுடர்மிக்கப் பாம்பைப் போல வெளியே வந்தது.(14) பிறகு, துரோணரின் அந்தப் புத்திசாலி மகன் {அஸ்வத்தாமன்}, அந்தச் சிறந்த வாளை அந்தப் பூதத்தின் மீது வீசினான். அந்தப் பூதத்தை அடைந்த அந்த ஆயுதமானது, பொந்துக்குள் மறையும் கீரிப்பிள்ளையைப் போல, அவனது உடலுக்குள்ளேயே மறைந்து போனது.(15) அப்போது சினத்தில் நிறைந்த துரோணரின் மகன், இந்திரனைக் கௌரவிக்க நிறுவப்படும் கம்பின் {இந்திரத்வஜத்தின்} அளவு உள்ள ஒரு சுடர்மிக்கக் கதாயுதத்தை ஏவினான். அந்தப் பூதமானவன் அதையும் விழுங்கினான்.(16) இறுதியாக, தன் ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்து போன அஸ்வத்தாமன், சுற்றிலும் தன் கண்களைச் சுழல விட்டு, மொத்த ஆகாயமும் ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} உருவங்களால் அடர்த்தியாக நிறைந்திருப்பதைக் கண்டான்.(17)

ஆயுதங்களை இழந்தவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அற்புதக் காட்சியைக் கண்டு, கிருபரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, துயரமடைந்து, {தனக்குள்ளேயே}, "அறிவுரை கூறும் நண்பர்களின் நன்மையான வார்த்தைகளைக் கேட்காத ஒருவன், நலன்விரும்பிகள் இருவரை அலட்சியம் செய்த மூடனான என்னைப் போலவே, பேரிடரில் மூழ்கி வருந்த வேண்டியிருக்கும்.(19) சாத்திரங்களில் சுட்டப்பட்டுள்ள வழியை அலட்சியம் செய்து, தன் எதிரிகளைக் கொல்ல முயலும் மூடன், அறத்தின் பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் பாதையற்ற காட்டில் தொலைந்து போகிறான்.(20) பசுக்கள், பிராமணர்கள், மன்னர்கள், பெண்கள், நண்பர்கள், தன் தாய், தன் ஆசான், பலவீனன், மடையன், குருடன், உறங்கிக் கொண்டிருக்கும் மனிதன், பயந்த மனிதன், உறக்கத்திலிருந்து அப்போதே எழுந்தவன், போதையில் இருப்பவன், பைத்தியக்காரன், மூளையற்றவன் ஆகியோர் மீது ஒருவன் ஆயுதங்களை ஏவக்கூடாது. பழங்காலத்தின் ஆசான்கள் எப்போதும் இந்த உண்மையை மனிதர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.(21,22) எனினும் நான், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அழிவில்லாத வழியை அலட்சியம் செய்து, தவறான பாதையில் நடந்து, இந்தப் பயங்கரத் துயரில் விழுந்திருக்கிறேன்.(23)

ஒரு பெரும் செயலை அடைய முயன்று, அச்சத்தால் ஒருவன் விழுவதை {விலகிப் போவதைப்} பயங்கரப் பேரிடராக ஞானியர் அழைக்கின்றனர்.(24) என் திறன் மற்றும் வலிமையை மட்டுமே வெளிப்படுத்தி, என்னால் நான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை. விதியை விட மனிதமுயற்சி எதிர்பார்த்த பலனைத் தரும் என்று ஒருபோதும் கருதப்படுவதில்லை.(25) தொடங்கப்பட்ட மனிதசெயலெதுவும் விதியால் வெல்லவில்லையென்றால், அதைச் செய்பவன், அறப்பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் காட்டில் தொலைந்து போகிறவன் ஆகிறான்.(26) ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அச்சத்தால் ஒருவன் விலகும்போது அந்தத் தோல்வியை மடமை என்று தவசிகள் சொல்கின்றனர்.(27) என் செயலுடைய தீய தன்மையின் விளைவால் இந்தப் பேரிடர் எனக்கு வந்திருக்கிறது. அல்லது துரோணரின் மகன், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.(28) மேலும், நான் என் முன்னே காணும் இந்தப் பூதமானவன், மிக அற்புதமானவனாக இருக்கிறான். உயர்த்தப்பட்ட தெய்வீக தண்டத்தைப் போலவே அவன் இங்கே நின்று கொண்டிருக்கிறான். இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், இந்தப் பூதத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை.(29)

நியாயமற்ற வகையில் நான் அடைய முயன்ற பாவம் நிறைந்த என் தீர்மானத்தின் பயங்கரக் கனியே இந்தப் பூதம் என்பதில் ஐயமில்லை. இவன் என் தீர்மானத்தைக் கலங்கடிக்கவே இங்கே நின்று கொண்டிருக்கிறான்.(30) எனவே, போரில் இருந்து நான் விலகுவது விதியால் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விதி என் நோக்கத்திற்குச் சாதகமாகாத வரையில் அஃதை என்னால் நிறைவேற்ற முடியாது.(31) எனவே, இந்நேரத்தில் நான் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடப்போகிறேன். என் முன்பாக உயர்த்தப்பட்டிருப்பதும், அச்சந்தருவதுமான இந்தத் தெய்வீகத் தண்டத்தை அவன் விலக்குவான்.(32) நன்மையனைத்தின் ஊற்றுக்கண்ணும், கபர்தின் {கபர்தி = அடர்ச்சடையன்} என்றும் அழைக்கப்படுபவனும், மனித மண்டையோடுகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், ருத்ரன் என்றும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், உமையின் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனை} நான் சரணடையப் போகிறேன்.(33) தவத்துறவுகள் மற்றும் ஆற்றலில் அவன் தேவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்பவனாவான். எனவே, திரிசூலபாணியான அந்தக் கிரிசனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடப்போகிறேன்" என்றான் {அஸ்வத்தாமன்}".(34)

 சௌப்திக பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்