Saturday, October 07, 2017

அழுது புலம்பிய யுதிஷ்டிரன்! - சௌப்திக பர்வம் பகுதி – 10

Yudhishthira's lamentation! | Sauptika-Parva-Section-10 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், "அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)


அந்தச் சாரதி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, "தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ! மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ! ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ! அற ஆன்மாவே, கிருதவர்மன் கவனமற்றிருந்த வேளையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் நான் தப்பித்து வந்தேன்" என்றான்.(6)

குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, (எதிரிகளை எதிர்த்துச் செல்கையில் அவர்களைத்) தாங்கிக் கொள்ள இயன்றவனானாலும், இந்தத் தீயச் செய்தியைக் கேட்டு, தன் மகன்களை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் பீடிக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான்.(7) சாத்யகி, முன்னே வந்து மன்னனைப் பிடித்துக் கொண்டான். பீமசேனன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரும் தங்கள் கரங்களை நீட்டினர் {நீட்டி யுதிஷ்டிரனைப் பிடித்துக் கொண்டனர்}.(8)

அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, புலனுணர்வு மீண்டு, சோகத்துடனும், தடுமாற்றத்துடனும் இவ்வார்த்தைகளைச் சொல்லிப் பெரும் துயரத்தால் அழுது புலம்பினான்: "ஐயோ, எதிரியை வென்றும், இறுதியில் நாமே வெல்லப்பட்டோம் {வீழ்ந்தோம்}.(9) ஆன்மப் பார்வை கொண்டவர்களால் கூட நிகழ்வுகளின் வழியை அறிவது கடினமே. வெல்லப்பட்ட எதிரி, வெற்றியடைந்துவிட்டான். மேலும், நாமோ வெற்றியடைந்தும், வெல்லப்பட்டோம் {வீழ்த்தப்பட்டோம்}.(10) சகோதரர்கள், நண்பர்கள், தந்தைமார், மகன்கள், நலன் விரும்பிகள், சொந்தங்கள், அமைச்சர்கள் ஆகியோர் அனைவரையும் வென்று இறுதியில் நாமே வெல்லப்பட்டோம்.(11) அவலம் செழிப்பாகத் தெரிகிறது, செழிப்பு அவலமாகத் தெரிகிறது. இந்த நமது வெற்றியானது, தோல்வியின் வடிவத்தையே ஏற்றிருக்கிறது. எனவே நமது வெற்றி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.(12) வெற்றியையடைந்தும், துயரமடைந்த அற்பனாக நான் துயரத்தையே அடைகிறேன். பிறகு, எவ்வாறு இதை என்னால் வெற்றியாகக் கருத முடியும்? உண்மையில், நான் எதிரியால் இரண்டு மடங்கு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.(13) யாருக்காகச் சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொன்று வெற்றிக்காகப் பாவமிழைத்தோமோ, ஐயோ, அவர்கள் வெற்றி மகுடம் சூடிக்கொண்டு, வீழ்த்தப்பட்டவர்களான கவனம் நிறைந்த எதிரிகளால் வெல்லப்பட்டனர்.(14)

முள்பதித்த கணைகள், நாளீகங்கள் ஆகியவற்றைத் தன் பற்களாகவும், வாளையே தன் நாவாகவும், நாணொலி தரும் நாண்கயிற்றுடன் கூடிய வில்லையே தன் வாயாகவும், உள்ளங்கையொலிகளையே தன் முழக்கமாகவும் கொண்டவனும், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், மனிதர்களில் சிங்கமுமான கோபக்காரக் கர்ணனிடம் இருந்தே தப்பித்தவர்கள், ஐயோ!, கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(15,16) தேர்களையே ஆழமான தடாகங்களாகவும், கணைமாரியே அலைகளாகவும், போர்வீரர்களின் ஆபரணங்களே ரத்தினங்களாகவும், தேர்க்குதிரைகளையே விலங்குகளாகவும், ஈட்டிகள் மற்றும் வாள்களையே மீன்களாகவும், யானைகளேயே முதலைகளாகவும், விற்களையே பெரும் நீர்ச்சுழிகளாகவும், வலிமைமையிக்க ஆயுதங்களையே நுரையாகவும், போர் அடையாளத்தையே சக்தியில் பெரும் சந்திரோதயமாகவும், நாண்கயிற்றின் நாணொலி மற்றும் உள்ளங்கையொலிகளையே முழக்கங்களாகவும் கொண்ட துரோணப் பெருங்கடலைத் தங்கள் சிறந்த ஆயுதங்களாலான படகால் கடந்த இந்த இளவரசர்கள், ஐயோ கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(17,18) இவ்வுலகின் மனிதர்களைப் பொறுத்தவரையில் கவனக்குறைவைவிட மரணத்திற்கான சக்திமிக்கக் காரணம் வேறு எதுவுமில்லை. கவனமற்ற மனிதனை செழுமையானது அனைத்துப் பக்கங்களிலும் கைவிடுகிறது, மேலும் அனைத்து வகை அவலங்களும் அவனை மூழ்கடிக்கின்றன.(19)

{பீஷ்மரின்} தேரில் நின்றதும், சிறந்த நுனி கொண்டதுமான உயர்ந்த கொடிமரத்தில் இருந்த புகைவிரிப்பானது {கொடியானது} அந்தப் பீஷ்ம நெருப்பை, பிழையற்றதாகக் காட்டியது. கணைகளே அதன் தழல்களாயின, கோபமே அதை வீசிப்பெருக்கும் காற்றானது. உறுதிமிக்க வில்லின் நாணொலியும், உள்ளங்கையொலியும் அந்நெருப்பின் முழக்கமானது. கவசமும், பல்வேறு வகை ஆயுதங்களும் அதற்குள் ஊற்றப்படும் ஹோமக் காணிக்கைகள் ஆகின. பகைவரின் பரந்த படையானது அந்த நெருப்பால் எரிக்கப்படும் உலர்ந்த காட்டுப்புல்லானது. ஐயோ, பயங்கர சக்தியுடன் கூடிய {பீஷ்மரெனும்} அந்தக் கடும் நெருப்பையும் தாங்கிக் கொண்டவர்கள், இறுதியில் கவனக் குறைவால் வீழ்ந்தனர்.(20,21) கவனக்குறைவுள்ளவன், ஞானத்தையோ, தவத்தையோ, செழிப்பையோ, பெரும்புகழையோ ஒருபோதும் அடையமுடியாது.(22)

நமது எதிரிகளில் எஞ்சியிருக்கும் சிலர், உண்மையில் இந்திரனைப் போன்றவர்களான அம்மன்னர்களின் மகன்கள் மற்றும் பேரர்கள் பலரை நமது கவனக்குறைவினால் கொன்றுவிட்டனர். ஐயோ, விலைமதிப்புமிக்கக் கப்பல்களில் செல்லும் வணிகர்களைப் போல, பெருங்கடலைக் கடந்த பிறகு, கவனக்குறைவினால் ஒரு சிறு ஓடையில் அழிந்தனர்.(23) யாருடைய உடல்கள் இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனவோ, அவர்கள் பொறாமையுள்ள அந்த இழிந்தவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், இளவரசி கிருஷ்ணைக்காகவே {திரௌபதிக்காகவே} வருந்துகிறேன்.(24) அவள் {திரௌபதி}, தன் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மதிப்பிற்குரிய தந்தையான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} ஆகியோரின் படுகொலையைக் கேட்டு உணர்வற்றுப் பூமியில் விழப் போகிறாள் என்பதில் ஐயமில்லை. அவள், துயரால் உடல்மெலிந்து மீண்டும் எழும்ப மாட்டாள்.(25) இத்தகு துன்பத்தின் விளைவால் உண்டாகும் துயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மகிழ்ச்சிக்குத் தகுந்தவளான அவள் எந்த அவல நிலையை அடைவாள்? மகன்கள் மற்றும் சகோதரர்களின் படுகொலையால் இதயம் பிளக்கப்படும் அவள், நெருப்பில் எரிபவளாக ஆகப்போகிறாள்" என்றான்.(26)

ஆழமான துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்ட அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பிறகு நகுலனிடம், "செல்வாயாக, சென்று, நற்பேறற்றவளான இளவரசி திரௌபதியையும், அவளது தாய்வழி உறவினர்களையும் அழைத்து வா" என்றான்.(27)

நீதியில் யமனுக்கு இணையான அம்மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையைக் கீழ்ப்படிந்து ஏற்ற நகுலன், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மனைவியர் அனைவருடன் {தன் தாய்மாருடன்} திரௌபதி எங்குத் தங்கியிருந்தாளோ அந்த இடத்திற்குத் தன் தேரில் வேகமாகச் சென்றான்.(28) யுதிஷ்டிரன், மாத்ரியின் மகனை {நகுலனை} அனுப்பிவிட்டு, துயரால் நொறுங்கி, கண்களில் கண்ணீருடன், எங்குத் தன் மகன்கள் போரிட்டார்களோ, எங்குப் பல்வேறு வகை உயிரினங்கள் இன்னும் மொய்த்துக் கொண்டிருந்தனவோ, அந்தக் களத்திற்குத் தன் நண்பர்கள் துணையுடன் சென்றான்.(29) கடுங்காட்சிகள் நிறைந்த அந்தச் சபிக்கப்பட்ட களத்திற்குள் நுழைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, குருதியில் மறைந்து, உடல்கள் சிதைக்கப்பட்டு, உடல்களில் இருந்து தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடப்பவர்களான தன் மகன்கள், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கண்டான்.(30) நீதியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அவர்களை அந்த அவலநிலையில் கண்டு ஆழமாகத் துயரடைந்தான். பிறகு அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தொண்டர்களுடன் சேர்ந்து உரக்க அழுது, புலன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

சௌப்திக பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்