Sunday, October 15, 2017

பரிதாபமாக அழுத உத்தரை! - ஸ்திரீ பர்வம் பகுதி – 20

Uttara's piteous lament! | Stri-Parva-Section-20 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 05) [ஸ்திரீ பர்வம் - 11]


பதிவின் சுருக்கம் : உத்தரை அழுதுகொண்டிருப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அபிமன்யுவின் பெருமைகளைச் சொல்லி அழுத உத்தரை; உத்தரையை இழுத்துச் சென்ற மத்ஸ்யக் குலப் பெண்கள்; விராடன் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்களும் பெருந்துக்கத்தால் பீடிக்கப்படுவது; அபிமன்யுவைப் போன்றே மேலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, "எவன் அவனது தந்தையையும் {அர்ஜுனனையும்}, உன்னையும் விட வலிமையிலும், துணிவிலும் ஒன்றரை மடங்கு மேம்பட்டவனாகக் கருதப்பட்டானோ, எவன் செருக்குமிக்கதும், சீற்றமிக்கதுமான ஒரு சிங்கத்துக்கு ஒப்பானவனாக இருந்தானோ,(1) எவன் எந்தவொரு தொண்டனுமில்லாமல், தனியொருவனாக ஊடுருவப்பட முடியாத எனது மகனின் {துரியோதனனின்} வியூகத்தை ஊடுருவினானோ, எவன் பலருக்குக் காலனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டானோ, ஐயோ, அவன் {அந்த அபிமன்யு} இப்போது மரணத்திற்கு அடிபணிந்து இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(2) ஓ! கிருஷ்ணா, அளவிலா சக்தி கொண்ட வீரனும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்யு இறந்த பிறகும்கூட அவனது ஒளி மங்காமல் இருப்பதை நான் காண்கிறேன்.(3) அங்கே விராடனின் மகளும், காண்டீவதாரியின் மருமகளும், களங்கமற்ற அழகுடையவளுமான அந்தப் பெண் {உத்தரை}, தன் வீரக் கணவனைக் கண்டு, துயரத்தில் மூழ்கி புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(4)


ஓ! கிருஷ்ணா, விராடனின் மகளான அந்த {அபிமன்யுவின்} இளம் மனைவி, தன் தலைவனை அணுகி, அவனைத் தன் கரங்களால் மென்மையாகத் தடவிக் கொண்டிருக்கிறாள்.(5) உயர்ந்த நுண்ணறிவையும், பெரும் அழகையும் கொண்ட அந்தப் பெண், முன்பெல்லாம் தேனூட்டப்பட்ட மதுவால் {மத்வீகமது} வெறியூட்டப்பட்டு, வெட்கத்துடன் தன் தலைவனைத் தழுவிக் கொண்டு, முற்றாக மலர்ந்த தாமரைக்கு ஒப்பானதும், சங்கு போன்று மூன்று கோடுகளுடன் கூடிய கழுத்தால் தாங்கிக் கொள்ளப்பட்டதுமான சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} முகத்தில் முத்தமிடுவாள்[1].(6,7) ஓ! வீரா, தன் தலைவனின் கவசத்தைக் கழற்றும் அந்தக் காரிகை {உத்தரை}, தன் துணைவனின் குருதிதோய்ந்த உடலை இப்போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(8)

[1] கும்பகோணம் பதிப்பில், "நல்ல மனமுள்ளள்ளவும், ஆசைப்படத்தக்க ரூபமுள்ளவளுமான இந்த உத்தரையானவள், மலர்ந்த கமலம் போன்றதும் சங்குபோலத் திரண்டிருக்கும் கழுத்தையுடையதுமான அந்த அபிமன்யுவினுடைய முகத்தை மோந்து கட்டிக் கொள்ளுகிறாள். கோபமுள்ளவளான இவள், முன் லஜ்ஜையுள்ளவளாகவும், மதுமயக்கம் மிஞ்சினவளாகவும் இவனை ஆலிங்கனம் செய்து கொள்வாள்" என்றிருக்கிறது.

ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண் {உத்தரை}, தன் தலைவனைக் கண்டு, {உன்னை நோக்கி} உன்னிடம், "ஓ! தாமரைக் கண்ணா, உமக்கு ஒப்பான கண்களைக் கொண்ட இந்த வீரர் கொல்லப்பட்டார்.(9) ஓ! பாவமற்றவரே, வலிமையிலும், சக்தியிலும், ஆற்றலிலும் இவர் உமக்கு இணையானவராக இருந்தார். அழகிலும் இவர் உமக்கு ஒப்பானவரே. இருப்பினும் எதிரியால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்" என்கிறாள்.(10) பிறகு தன் தலைவனிடம் {அபிமன்யுவிடம்} பேசும் அந்தக் காரிகை, "அனைத்து ஆடம்பரங்களுடனும் நீர் வளர்க்கப்பட்டீர். ரங்கு மானின் மென்மையான தோலிலேயே நீர் உறங்குவீர். ஐயோ, இப்படி இன்று வெறுந்தரையில் கிடக்கும் உமது உடல் வலியை உணரவில்லையா?(11) தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், யானைகளின் துதிக்கைகள் இரண்டுக்கு ஒப்பானவையும், வில்லை அடிக்கடி பயன்படுத்துவதால் கடினமடைந்த தோலால் மூடப்பட்டிருப்பவையுமான உமது பருத்த கரங்களை விரித்துக் கொண்டு, ஓ! தலைவா, பயிற்சிக்கூடத்தில் அதிகப் பயிற்சியினால் களைப்படைந்தவரைப் போலவே அமைதியாக உறங்குகிறீர். ஐயோ, இவ்வாறு அழுது கொண்டிருக்கும் என்னிடம் நீர் ஏன் பேசாமலிருக்கிறீர்?(12,13) நான் உமக்கு எக்குற்றமும் இழைத்ததாக எனக்கு நினைவில்லையே. பிறகு ஏன் என்னிடம் நீர் பேசாமலிருக்கிறீர்? முன்பெல்லாம், தொலைவிலேயே என்னைக் கண்டாலும் பேசுவீரே.(14) ஓ! மதிப்புக்குரிய ஐயா, பெரும் மதிப்பிற்குரிய சுபத்திரையையும், தேவர்களுக்கு ஒப்பான இந்த உமது தந்தைமாரையும், துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான என்னையும் விட்டுவிட்டு நீர் எங்கே செல்லப் போகிறீர்?" என்று சொல்லி அழுகிறாள்.(15)

ஓ! கிருஷ்ணா, அந்த அழகிய காரிகை {உத்தரை}, குருதி தோய்ந்த தன் தலைவனின் குழல்களைத் திரட்டி, அவனது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவன் உயிரோடிருப்பதைப் போல அவனிடம் {பின்வருமாறு} பேசிக் கொண்டிருக்கிறாள்.(16) அவள் {உத்தரை அபிமன்யுவிடம்}, "வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரை} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனுமான உம்மை, போருக்கு மத்தியில் அந்தப் பெரும் தேர்வீரர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(17) ஐயோ, யாவரால் நீர் உயிரை இழக்கச் செய்யப்பட்டீரோ, தீச்செயல்களைச் செய்பவர்களான அந்தக் கிருபர், கர்ணர், ஜெயத்ரதர், துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} உள்ளிட்ட போர்வீரர்களுக்கு ஐயோ.(18) இளம் வயதுடைய போர்வீரரான உம்மைச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்த உம்மைக் கொன்ற அந்த நேரத்தில், அந்தப் பெரும் தேர்வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? {அவர்களுடைய மனம் எவ்வாறு உம்மைக் கொல்லத் துணிந்தது}(19) ஓ! வீரரே, பல பாதுகாவலர்களைக் கொண்ட நீர், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆதரவற்றவராக எவ்வாறு கொல்லப்பட்டீர்?(20)

ஓ! வீரரே {அபிமன்யுவே}, ஒன்று சேர்ந்த பலரால் போரில் நீர் கொல்லப்பட்டதைக் கண்டும், மனிதர்களில் புலியும், பாண்டுவின் மகனுமான உமது தந்தையால் {அர்ஜுனரால்} எவ்வாறு உயிரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?(21) ஓ! தாமரைக் கண்ணைக் கொண்டவரே, உம்மை இழந்த பிறகு, பரந்த நாட்டை அடைந்ததோ, எதிரிகளை வீழ்த்தியதோ பார்த்தர்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.(22) ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையப்படும் அருள் உலகங்களுக்கு, நானும் அறம் மற்றும் தற்புலனடக்கப் பயிற்சிகளால் வெகு விரைவில் வந்துவிடுவேன்.(23) போரில் கொல்லப்பட்ட உம்மைக் கண்ட பிறகும், பாவியான நான் இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால், நேரம் வராதபோது சாக முடியாது என்பது தெரிகிறது.(24) ஓ! மனிதர்களில் புலியே, பித்ருக்களின் உலகத்திற்குச் சென்று, புன்னகையுடன் கலந்த இனிய வார்த்தைகளை என்னிடம் போல வேறு யாரிடம் இப்போது நீர் பேசுவீர்?(25)

உமது பேரழகாலும், புன்னகை கலந்த உமது மென்மையான வார்த்தைகளாலும் சொர்க்கத்தின் அப்சரஸ்களுடைய இதயங்களை நீர் கலங்கடிப்பீர் என்பதில் ஐயமில்லை.(26) ஓ! சுபத்திரையின் மகனே, அறச்செயல்கள் புரிந்தோருக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைந்து, அந்த அப்சரஸ்களுடன் இப்போது நீர் கலக்கப் போகிறீர். அவர்களுடன் விளையாடும்போது, நான் உமக்குச் செய்த நற்செயல்களைச் சிற்சில நேரங்களிலாவது நினைத்துப் பார்ப்பீராக.(27) ஓ! வீரரே {அபிமன்யுவே}, {திருமணம் செய்து} ஏழாம் மாதத்தில் நீர் உயிரை இழந்திருப்பதால், இவ்வுலகத்தில் என்னுடனான உமது இணைப்பு ஆறு மாதங்களுக்கே[2] விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது" {என உத்தரை அபிமன்யுவோடு பேசிக் கொண்டிருக்கிறாள்}.(28)

[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் என்னுடன் உமக்கு இந்த ஆறுமாதகாலம் வரையில் தான் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டது. ஏழாவது மாதத்தில் நீர் மரணத்தை அடைந்துவிட்டீர்" என்றிருக்கிறது. பாண்டவர்களின் தலைமறைவு வாசம் முடியும்போது உத்தரை அபிமன்யு திருமணம் நடக்கிறது. அந்தக் காலத்திலிருந்து ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியாகப் போர்த்தயாரிப்புகள் நடந்திருக்க வேண்டும் என்பதற்கு இவ்வரிகள் சான்று பகர்கின்றன.

ஓ! கிருஷ்ணா, தன் நோக்கங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்பட்டு இவ்வாறு புலம்பிக்கொண்டிருப்பவளும், துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பவளுமான உத்தரையை மத்ஸ்ய அரசக் குடும்பத்தின் பெண்கள் இழுத்துச் செல்கின்றனர்.(29) உத்தரையை இழுத்துச் செல்லும் அந்தப் பெண்களும், கொல்லப்பட்ட விராடனைக் கண்டு அந்தப் பெண்ணைவிட {உத்தரையைவிட} அதிகம் பீடிக்கப்பட்டு உரத்த ஓலமிட்டு அழுது கொண்டிருக்கின்றனர்.(30) துரோணரின் கணைகளாலும், ஆயுதங்களாலும் சிதைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டிருந்த விராடன், அலறும் கழுகுகள், ஊளையிடும் நரிகள் மற்றும் கரையும் காகங்களால் சூழப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறான்.(31) கரிய கண்களைக் கொண்ட அந்த மங்கையர், இன்பமாக அலறிக் கொண்டிருந்த ஊனுண்ணும் பறவைகள் அமர்ந்திருந்ததும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்ததுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} உடலைப் புரட்ட முயற்சிக்கின்றனர். துயரால் மிகவும் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்திருக்கும் அவர்களால் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியவில்லை {விராடனின் உடலைப் புரட்ட முடியவில்லை}.(32) சூரியனால் எரிக்கப்பட்டு, முயற்சியால் களைப்படைந்திருக்கும் அவர்களது முகங்கள் நிறமற்றவையாக மங்கியிருக்கின்றன.(33) ஓ! மாதவா, அபிமன்யுவைத் தவிர்த்து, {விராட இளவரசனான} உத்தரன், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணன், அழகன் லக்ஷ்மணன் ஆகிய மற்ற பிள்ளைகள் அனைவரும் கூடப் போர்க்களத்தில் {இவ்வாறே} கிடப்பதைப் பார்" என்றாள் {காந்தாரி}.(34)

ஸ்திரீ பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்