Wednesday, December 13, 2017

பீஷ்மரின் மகிமை! - சாந்திபர்வம் பகுதி – 50

The glory of Bhishma! | Shanti-Parva-Section-50 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 50)


பதிவின் சுருக்கம் : பீஷ்மரின் அருகாமையை அடைந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட கிருஷ்ணன், யுதிஷ்டிரன் மற்றும் பிறர்; பீஷ்மரைப் புகழ்ந்த கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ராமரின் {பரசுராமரின்} சாதனைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஆச்சரியத்தால் நிறைந்து, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(1) "ஓ! விருஷ்ணி குலத்தோனே, கோபத்தில் க்ஷத்திரயர்களிடம் இருந்து பூமியை விடுவித்த உயர் ஆன்ம ராமரின் {பரசுராமரின்} ஆற்றல் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானது.(2) க்ஷத்திரிய குலக்கொழுந்துகள், ராமர் {பரசுராமர்} மீது கொண்ட அச்சத்தால், பசுக்கள், பெருங்கடல், சிறுத்தை புலிகள் கரடிகள், குரங்குகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டனர் (மறைக்கப்பட்டு வளர்த்து வரப்பட்டனர்).(3) ஒரு பிராமணரால் அறச்சாதனை நிறைவேறும்போது, இவ்வுலகில் வசித்த மனிதர்கள் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவர்களாவர்" என்றான்.(4) இந்த உரையாடல் முடிந்த போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அந்தச் சிறப்புமிக்க மனிதர்கள், பலமிக்கக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(5)


பிறகு அவர்கள், கதிர்களால் மறைக்கப்பட்ட மாலை சூரியனின் காந்திக்கு ஒப்பாகக் கணைப்படுக்கையில் நீண்டு கிடக்கும் பீஷ்மரைக் கண்டனர்.(6) நூறு வேள்விகளைச் செய்த சொர்க்கத்தின் தேவனை {இந்திரனைப்} போல அந்தக் குருவீரர் தவசிகள் பலரால் சூழப்பட்டிருந்தார். ஓகவதி ஆற்றின் கரையில் அமைந்திருந்ததான அவர் {பீஷ்மர்} கிடந்த இடம் மிகப் புனிதமானதாக இருந்தது.(7) தொலைவிலேயே அவரைக் கண்ட கிருஷ்ணன், தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நான்கு பாண்டவர்கள் மற்றும் சரத்வான் {கிருபர்} தலைமையிலான பிறர் ஆகியோர் தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, குழப்பமான தங்கள் மனங்களை ஒன்றுதிரட்டி, தங்கள் புலன்களை அனைத்தையும் குவித்துக் கொண்டு அந்தப் பெரும் முனிவர்களை அணுகினர்.(8,9) கோவிந்தன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் பிறர், வியாசரின் தலைமையிலான அந்த முனிவர்களில் முதன்மையானோரை வணங்கிவிட்டு, கங்கையின் மைந்தரை அணுகினர்.(10)

மனிதர்களில் முதன்மையானோரான அந்த யது மற்றும் குரு இளவரசர்கள், பெரும் தவத்தகுதி கொண்ட கங்கையின் மைந்தரைக் கண்டு, அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(11) அணைந்து போகும் நெருப்பாகத் தெரிந்த பீஷ்மரைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, உற்சாகமற்ற இதயத்துடன் பின்வருமாறு அவரிடம் பேசினான்.(12) கேசவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "உமது உள்ளுணர்வுகள் முன்பு போல இப்போது தெளிவாக இருக்கின்றனவா? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, உமது புத்தி மயங்காதிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.(13) கணைகளால் பீடிக்கப்பட்ட காயங்களில் இருந்து எழும் வலி உம்மைத் துன்புறுத்தவில்லை என நான் நம்புகிறேன். மனத்துயரால் உடல் பலவீனமடைகிறது.(14) ஓ! பலமிக்க வீரரே, அறவோரான உமது தந்தை சந்தனு உமக்களித்த வரத்தின் விளைவால், மரணமானது உமது விருப்பதைச் சார்ந்தே இருக்கிறது. நீர் அடைந்திருக்கும் இந்த வரத்தின் விளைவால் உண்டாகும் தகுதியை நான் அடையவில்லை.(15)

(உள்செலுத்தப்படும்) மிக நுண்ணிய ஊசி உடலுக்கு வலியை உண்டாக்கும். ஓ! மன்னா {பீஷ்மரே}, அவ்வாறிருக்கையில், நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டிருக்கும் உம்மிடம்என்ன கேட்க முடியும்?(16) வலி உம்மைப் பீடித்திருக்கிறது எனச் சொல்லமுடியாது என்பது நிச்சயம். ஓ! பாரதரே {பீஷ்மரே}, உயிரினங்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றைக் குறித்துத் தேவர்களுக்கே போதிக்க நீர் தகுந்தவர்.(17) பெரும் ஞானம் கொண்ட உமக்கு, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவை குறித்த அனைத்தும் உமக்கு நன்றாகத் தெரியும்.(18) ஓ! பெரும் ஞானியே, அறம் மற்றும் கடை ஆகியவற்றின் பெருங்கடலான நீ, படைக்கப்பட்ட உயிரினங்களின் அழிவு, அறவோருக்கான வெகுமதி ஆகியவற்றையும் நன்கறிவீர்.(19) நலமிக்க அங்கங்கள் மற்றும் முற்றான உடல் நலத்துடனும், பெருகும் அரசின் இன்பத்தில் நீர் வாழ்ந்த போது, பெண் தோழிகளால் சூழப்பட்டிருந்தாலும், பெண் உறவை நீர் மறுத்ததை நான் கண்டேன்.(20)

பெரும் சக்தியும், அறத்தில் உறுதியான அர்ப்பணிப்பும், வீரமும், அறத்தையே தமது தொடர்செயலாகக் கொண்டவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மரைத் தவிர, கணைகளின் படுக்கையில் கிடக்கும் மரணத் தருவாயிலும், தனது தவசக்தியின் மூலமாக மரணத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்கொண்ட வேறு எந்த மனிதனையும் மூவுலகிலும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(21,22) உண்மை, தவம், கொடை, வேள்விகள், ஆயுத அறிவியல், வேதங்கள், பாதுகாப்பு வேண்டுவோரைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இவ்வளவு அர்ப்பணிப்புடனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமலும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபாட்டுடனும் கூடிய உம்மைப்போன்ற பெரிய தேர்வீரர் எவரையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(23,24) தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களை ஒரே தேரில் சென்று அடக்கக்கூடியவர் நீர் என்பதில் ஐயமில்லை.(25)

ஓ! வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே, உம்மை ஒன்பதாவது வசு என்றே பிராமணர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எனினும், உமது நற்பண்புகளால் அவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்கும் நீர், வாசவனுக்கே இணையானவராவீர்.(26) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! உயிரினங்களில் முதன்மையானவரே, உமது ஆற்றலுக்காகத் தேவர்களாலும் கூடக் கொண்டாடப்படுபவர் நீர் என்பதை நான் அறிவேன்.(27) ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் உள்ள மனிதர்களுக்கு மத்தியில், உம்மைப் போன்ற இத்தகு பண்புகளைக் கொண்ட வேறு எவரையும் நாங்கள் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(28) ஓ! அரசவகையைச் சேர்ந்தவரே ஒவ்வொரு பண்பையும் பொறுத்தவரையில் நீர் தேவர்களையும் விஞ்சி நிற்கிறீர். உமது தவச் சக்தியின் மூலம் உம்மால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை உண்டாக்க முடியும். அவ்வாறிருக்கையில், உமது முதன்மையான நற்பண்புகளால் அருள் உலகங்கள் பலவற்றை நீர் அடைந்திருப்பதைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(29) தமது உறவினர்களைக் கொன்றதால் உண்டான கவலையில் எரிந்து கொண்டிருக்கும் பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரத்தை இப்போது அகற்றுவீராக.(30)

நால்வகையினரைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் கடமைகள் அனைத்தையும், நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்தும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(31) ஓ! பாரதரே நால்வகை அறிவுக்கிளைகளில், நான்கு ஹோத்திரங்களில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும், யோகம் மற்றும் சாங்கிய தத்துவங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகள்,(32) ஓ! பாரதரே {பீஷ்மரே}, ஓ! கங்கையின் மைந்தரே, நான்கு வகையினரின் கடமைகளையும், அறிவிக்கப்பட்டிருக்கும் அவர்களது நடைமுறைகளுக்குப் பொருந்தாத கடமைகளையும், அதனதன் விளக்கங்களோடு அறிந்தவர் நீர்.(33) நால் வகையினரின் கலப்பில் உதித்தவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளையும், குறிப்பிட்ட நாடுகள், குலங்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட, வேதங்களாலும், ஞானிகளாலும் அறிவிக்கப்பட்ட கடமைகள் யாவற்றையும் நன்கறிந்தவர் நீர்.(34) வரலாறுகளையும், புராணங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர் நீர். கடமை மற்றும் நடைமுறைகள் குறித்த சாத்திரங்கள் அனைத்தும் உமது மனத்திலேயே வசிக்கின்றன.(35) ஓ! மனிதர்களில் காளையே, உலகில் கற்கப்படும் அறிவைப் பொறுத்தவரையில் எழும் ஐயங்களை அகற்றக் கூடியவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை.(36) ஓ! மனிதர்களின் இளவரசரே {பீஷ்மரே}, பாண்டு மகன் {யுதிஷ்டிரன்} உணரும் துயரை, உமது நுண்ணறிவின் உதவியைக் கொண்டு விரட்டுவீர். பெரியவையும், பலதரப்பட்டவையுமான இத்தகு அறிவைக் கொண்டோர், திகைப்படைந்த மனங்களைக் கொண்ட மனிதர்களைத் தேற்றுவதற்காகவே வாழ்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}"[1].(37)

[1]  Sacred Text வலைத்தளம், கங்குலியின் புத்தகம், மன்மதநாததத்தரின் புத்தகம் ஆகியவற்றில் பகுதி 34-50 வரை அத்தியாய எண்களில் முரண் இருக்கிறது. 51ல் அவை அனைத்தும் சீரடைகிறது. எனவே, பகுதி 34ல் இருந்து இந்த 50வது பகுதிவரை அத்தியாய எண்களில் மாற்றம் செய்து சீர்படுத்தியிருக்கிறேன். இப்போது நமது தளத்தில் இருக்கும் அத்தியாய எண்களே சரியானவையாக இருக்கும்.



சாந்திபர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்