Thursday, December 14, 2017

மன்னரின் மயக்கத்தை விலக்குவீராக! - சாந்திபர்வம் பகுதி – 51

Dispel the clouded learning of the King! | Shanti-Parva-Section-51 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 51)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மர்; பீஷ்மரின் துதிகளை ஏற்று, அவரைப் புகழ்ந்து, மன்னன் யுதிஷ்டிரனின் அறிவு மயக்கத்தை விலக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், தன் சிரத்தை சற்றே உயர்த்தி, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)


பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தெய்வீகக் கிருஷ்ணா, உனக்கு வணக்கம். உலகங்கள் அனைத்தின் தொடக்கமும், முடிவும் நீயே. படைப்பாளன் நீயே, அழிப்பவனும் நீயே. ஓ! ரிஷிகேசா, எவராலும் வெல்லப்பட இயலாதவன் நீயே.(2) இந்த அண்டம் உன் கைத்திறனே. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்டம் எழுந்த பொருளும் நீயே. உன்னை வணங்குகிறேன். படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் முடிவு நீயே. ஐம்பூதங்களையும் விஞ்சியவன் நீயே.(3) மூவுலகங்களே ஆனவனும், மூவுலகங்களுக்கும் மேம்பட்டவனுமான உன்னை நான் வணங்குகிறேன். ஓ! யோகினிகளின் தலைவனே, அனைத்திற்கும் புகலிடமாக இருக்கும் உனக்கு என் வணக்கம்.(4) ஓ! உயிரினங்களில் முதன்மையானவனே, என்னைக் குறித்து நீ சொன்ன வார்த்தைகள், மூவுலகங்களில் வெளிப்படும் உன் தெய்வீகப் பண்புகளைக் காண இயன்றவனாக என்னை ஆக்கியிருக்கின்றன. ஓ! கோவிந்தா, (அந்தக்கருணையின் விளைவால்), நான் உன் அழிவற்ற வடிவத்தைக் காண்கிறேன்.(5,6)

அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே. உன் தலை ஆகாயத்தில் இருக்கிறது, உன் பாதங்கள் பூமியில் இருக்கின்றன.(7) திசைப்புள்ளிகள் உன்னிரு கரங்களாக இருக்கின்றன, சூரியன் உன் கண்களாகவும், சக்ரன் {சுக்ரன்} உன் ஆற்றலாகவும் இருக்கிறான். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, காயாம்பூவின் வண்ணத்திற்கு ஒப்பான மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்திய உன் மேனி, மின்னலின் கீற்றுகளால் சக்தியூட்டப்பட்ட ஒரு மேகத்தைப் போல எங்களுக்குத் தெரிகிறது. ஓ! தேவர்களில் சிறந்தவனே, ஓ! தாமரைக் கண்ணனே, உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், உனது பாதுகாப்பை நாடுபவனும், அருள்நிறைந்த முடிவை அடைய விரும்புபவனும், எளியவனுமான எனக்கு நன்மையை நினைப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.(8,9)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மர்}, "ஓ! மனிதர்களில் காளையே, ஓ!இளவரசரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் கொண்ட அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாக இருப்பதால், நான் என் தெய்வீக வடிவை உமக்கு வெளிப்படுத்தினேன்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஓ! பாரதரே, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொள்ளாதவனிடமோ, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா இல்லாதவனிடமோ நான் என்னை வெளிப்படுத்துவதில்லை.(11) நீர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், எப்போதும் அறம் நோற்பவராகவும் இருக்கிறீர். தூய இதயம் கொண்ட நீர் எப்போதும் தற்கட்டுப்பாடு கொண்டவராகவும், தவங்களையும், தானங்களையும் நோற்பவராகவும் இருக்கிறீர்.(12) ஓ! பீஷ்மரே, உமது சொந்த தவங்களின் மூலமே நீர் என்னைக் காணத் தகுந்தவரானீர். ஓ! மன்னா, திரும்பி வராத {மறுபிறவியை ஏற்படுத்தாத} உலகங்கள் உமக்காகக் காத்திருக்கின்றன.(13) ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள்[1] இருக்கின்றன.(14) நெருப்பின் வடிவிலான தேவர்கள் மற்றும் வசுக்கள் அனைவரும், சூரியன் வட பாதையில் நுழையும் காலம் வரை {கண்களுக்குப்} புலனாகாத நிலையில் உமக்காகக் காத்திருக்கின்றனர்.(15)

[1]  கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் ஐம்பத்தாறு நாட்கள் என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் வேறு வகையில் இருக்கிறது. அது பின்வருமாறு, "உமது தவத்தால் திரும்பவும் ஸம்ஸாரத்திற்கு வரத்தகாத உத்தம உலகங்கள் உமது வரவை எதிர்பார்க்கின்றன. ஓ! குருஸ்ரேஷ்டரே, உமது ஜீவ காலம் இன்று முதல் இன்னும் முப்பது நாட்களிருக்கின்றன. அவை நூறு நாட்களுக்குச் சமமானவை. அதன்பின், இந்தச் சரீரத்தைவிட்டு நீர் உமது நற்கர்மங்களின் பயனை அடைந்து விளங்கப் போகிறீர்" என்றிருக்கிறது. மேலும் இது சம்பந்தமான அடிக்குறிப்பாக, "பீஷ்மர், தாம் படுத்தது முதல் ஐம்பத்தெட்டு நாளென்று சொல்லப்போகிறார். அவைகளில் இதுவரைசென்ற நாட்கள் இருபத்தெட்டு; விவரம் வருமாறு: பீஷ்மர் படுத்த பின்பு யுத்தம் நடந்த நாள் எட்டு; பிறகு துரியோதனன் இறந்த ஆசௌசதினம் பதினாறு; இருபத்தைந்தாவது நாள் ஸ்ராத்தம்; இருபத்தாறாவது நாள் பட்டணப்பரவேசம்; இருப்பத்தேழாவது தினம் பட்டாபிஷேகம்; இருபத்தொன்பதாவது நாள் பீஷ்மரிடம் வந்தது; அன்று முதல் மிச்சம் முப்பது நாள் என்றறிக" என்றிருக்கிறது.

ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, அண்டத்தின் காலத்திற்குக்கட்டுப்பட்டு, சூரியன் வடபாதைக்குத் திரும்பும்போது, இந்தப் பூமிக்கு எப்போதும் திரும்பிவராத அறிவுடையோரின் பகுதிகளுக்கு {ஞானிகளின் உலகங்களுக்கு} நீர் செல்வீர்.(16) ஓ! பீஷ்மரே, நீர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, இங்குள்ள ஞானங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இதன்காரணமாகவே, இந்த மனிதர்கள் யாவரும் கடமை மற்றும் அறநெறிகள் குறித்த உமது உரையைக் கேட்க உம்மை அணுகியிருக்கின்றனர்.(17) உண்மையில் உறுதியுடன் இருப்பவரும், தன் உறவினர்களைக் கொன்றதன் காரணமாக அறிவு மறைக்கப்பட்டவருமான யுதிஷ்டிரரிடம், அறம், பொருள் மற்றும் யோகம் குறித்த உண்மையான வார்த்தைகளைப் பேசி, அதன் காரணமாக அவரது துயரை விலக்குவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(18)

சாந்திபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்