Tuesday, February 13, 2018

போஜர்கள், விருஷ்ணிகள்: உட்பகை! - சாந்திபர்வம் பகுதி – 81

The internal hostility between Bhojas and Vrishnis! | Shanti-Parva-Section-81 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 81)


பதிவின் சுருக்கம் : உறவினர்களை நிறைவுகொள்ளச் செய்ய முடியாதபோது செய்ய வேண்டியது குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; போஜர்களுக்கு, விருஷ்ணிகளுக்குமிடையில் உண்டான உட்பகையால் கிருஷ்ணன் துன்புற்றிருந்தபோது, நாரதர் அவனுக்குச் சொன்ன வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(இவ்வழியில்) ஒருவனால் தன் இரத்த சொந்தங்களையும், உறவினர்களையும் வெல்லமுடியவில்லையெனில், எவர்கள் நண்பர்களாக வேண்டுமோ அவர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள். அப்போது, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பின் இதயங்களையும் வெல்லும் வகையில் ஒருவன் தனது நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது சம்பந்தமாகப் பழங்கால வரலாற்றில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நாரதருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் தென்படுகிறது.(2)

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாசுதேவன் {கிருஷ்ணன் நாரதரிடம்}, "ஓ! நாரதரே, கல்லாத மூட நண்பனும், கல்விமானாகவே ஆனாலும் நல்லறிவில்லாத நண்பனும் ஒருவனுடைய கமுக்கமான {இரகசிய} ஆலோசனைகளை அறியத் தகுந்தவர்களல்ல[1].(3) ஓ! தவசியே {நாரதரே}, நீர் என்னிடம் கொண்டுள்ள நட்பை நம்பி, நான் உம்மிடம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஓ! விருப்பம் போல் சொர்க்கத்திற்குச் செல்ல முடிந்தவரே, அடுத்தவன் நுண்ணறிவைக் கொண்டவன் என்ற உறுதியடைந்தால் மட்டுமே ஒருவன் அவனிடம் பேசலாம்.(4) நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வத்தைக் குறித்து முகத்துதி செய்து ஒருபோதும் அடிமைத் தொழில் செய்வதில்லை. நான் என்னிடமுள்ளவற்றில் பாதியை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தீய பேச்சுகளை மன்னிக்கிறேன்[2].(5) நெருப்பை அடைய விரும்பும் ஒரு மனிதனால் அரணிக்கட்டை அரைக்கப்படுவதைப் போலவே, என் இதயமும் என் உறவினர்களின் தீச்சொற்களால் கலங்கடிக்கப்படுகிறது. உண்மையில், ஓ! தெய்வீக முனிவரே, அந்தக் கொடூரப் பேச்சுகள் என் இதயத்தைத் தினமும் எரிக்கின்றன.(6)

[1] கும்பகோணம் பதிப்பில், "பண்டிதனல்லாத மித்திரனும், பண்டிதனாயிருந்தும் நல்லறிவில்லாத அமித்திரனும் மிக்க ரஹஸ்யமான விஷயத்தைத் தெரிந்து கொள்ளத் தக்கவரல்லர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நலன்விரும்பியாக இல்லாத ஒரு மனிதனும், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொள்ளாத கல்விமானும், மிக இரகசியமான ஆலோசனைகளை அறியக்கூடாது" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "நான் அரசனென்னும் பெயருள்ளவனாகி ஞாதிகளுக்கு அடிமைத் தொழிலைச் செய்துவருகிறேன்; புஜிக்கத்தக்கவைகளில் பாதியை மட்டுமே புஜிக்கிறேன்; மற்றொரு பாதியை ஞாதிகளுக்கு அளிக்கிறேன்; அவர்கள் வாக்கிலிருந்து வெளியாகும் கடுஞ்சொற்களையும் பொறுக்கிறேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வங்களைக் குறித்துப் பேசும் அடிமையாகச் செயல்படுவதில்லை. நான் இன்ப நுகர் பொருட்களில் பாதியை மட்டுமே அனுபவிக்கிறேன். நெருப்பிற்கான விருப்பத்தால் ஒன்றுடனொன்று உரசப்படும் இரு குச்சிகளைப் போல என் இதயத்தை நொறுக்கும் அவர்கள் பேசும் கடுஞ்சொற்களையும் நான் மன்னிக்கிறேன்" என்றிருக்கிறது.

சங்கர்ஷணரில் {பலராமன்} வலிமையும், கதனில் மென்மையும் வசிக்கின்றன, பிரத்யும்னனைப் பொறுத்தவரையில், அவன் மேனியழகில் என்னையும் விஞ்சியிருக்கிறான். ஓ! நாரதரே, (இவர்கள் அனைவரும் என் தரப்பில் இருந்தாலும்) நான் ஆதரவற்றவனாகவே இருக்கிறேன்.(7) அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில், பெருஞ்செழிப்புடையவர்கள், வலிமை நிறைந்தவர்கள், துணிவுமிக்கவர்கள் மற்றும் தொடர்ந்த விடா முயற்சியுடையவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.(8) யாருடைய தரப்பில் அவர்கள் இல்லையோ அவர்கள் அழிவை அடைவார்கள், மறுபுறம், யார் தரப்பில் அவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைத்தையும் அடைகிறார்கள். (ஆஹுகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர்) இருவராலும் மீண்டும் மீண்டும் விலக்கப்படும் நான், யாருடைய தரப்பையும் அடைந்ததில்லை.(9) ஒருவன் தன் தரப்பில் ஆஹுகர், மற்றும் அக்ரூரர் ஆகிய இருவரையும் கொண்டிருப்பதைவிட வேறு எந்தத் துன்பம் பெரியது? இருவரையும் என் தரப்பில் கொள்ளாமல், அவர்களில் ஒருவரை மட்டுமே கொள்வதை விட வேறு எந்தத் துன்பம் பெரியது?[3](10) ஒருவரோடொருவர் சூதாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரர்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் அவர்களுடைய தாயைப் போலத்தான் நான் இருக்கிறேன்.(11) ஓ! நாரதரே, இவ்வாறே நான் அவர்கள் இருவராலும் துன்பத்துக்குள்ளாகிறேன். எனக்கும் என் உறவினர்களுக்கும் எது நன்மையோ, அதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்{கிருஷ்ணன்}.(12)

[3] "உண்மை என்னவென்றால் ஆஹுகரும், அக்ரூரரும் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்ப்பவர்களாவர். எனினும் இருவரும் கிருஷ்ணனை அன்புடன் விரும்பினர். ஆஹுகர் எப்போதும் அக்ரூரை விலக்குமாறு கிருஷ்ணனுக்கு அறிவுரை கூறினார், அக்ரூரும் ஆஹுகரை விலக்குமாறு அவனுக்கு அறிவுரை கூறினார். கிருஷ்ணன் இருவரின் நட்பையும் மதித்ததால் அவர்களில் ஒருவரையும் விலக்க முடியவில்லை. இங்கே அவன் என்ன சொல்கிறானென்றால், அவர்கள் இருவரையும் கொண்டிருந்தாலும் துன்பம், கொள்ளாவிட்டாலும் துன்பம் என்கிறான்" என்று இங்கே கங்குலி விளக்குகிறார்.

நாரதர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, வெளியில் இருந்து வருவது, உள்ளிருந்து வருவது எனத் துன்பங்கள் இருவகைப்படும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவை ஒருவனின் சொந்த செயல்பாடுகளாலோ, பிறரின் செயல்பாடுகளாலோ உண்டாகின்றன.(13) இப்போது உனக்கு நேரும் துன்பமானது, உன் சொந்த செயல்களாலேயே உள்ளிருந்து உண்டானது. அக்ரூரரைச் சார்ந்தவர்களான பலதேவனும் {பலராமனும்}, போஜகுலத்தைச் சேர்ந்த பிறரும்,(14) செல்வம், அல்லது பேராசை, அல்லது {குற்றமுள்ள} சொற்கள், அல்லது வெறுப்பின் நிமித்தமாக அவரது {அக்ரூரரின்} தரப்பைச் சேர்ந்திருக்கிறார்கள். உன்னைப் பொறுத்தவரையில், நீ அடைந்த செல்வத்தை மற்றவருக்கு {ஆஹுகருக்குக்} கொடுத்தாய்.(15) நண்பர்களாக இருக்க வேண்டிய மனிதர்களை நீ கொண்டிருந்தாலும், உன் செயலாலேயே நீ உன் தலைக்கு மேல் துன்பத்தை ஏற்றுக் கொண்டாய். ஒருவன் கக்கிய உணவை மீண்டும் உட்கொள்ள முடியாததைப் போலவே, உன்னால் அந்தச் செல்வத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.(16)

பப்ருவிடம் இருந்தோ, உக்ரசேனரிடம் இருந்தோ (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) நாட்டையும் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. ஓ! கிருஷ்ணா, (அவர்களிடம் இருந்து) அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்வது உட்பகையை உண்டாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் உன்னாலேயே கூட அவ்வாறு செய்யமுடியாது.(17) ஒருவேளை அம்முயற்சி வெற்றிபெற்றாலும், பெரும் பிரச்சனைக்குப் பிறகே, அடைவதற்கரிதான அந்த மிகக் கடும் சாதனையை அடைய முடியும். பெரும் படுகொலைகளும், செல்வத்திற்குப் பேரிழப்பும் நேரிடும், ஒருவேளை மொத்த அழிவும்கூட ஏற்படலாம்.(18) எனவே, இரும்பாலாகாததும், மென்மையானதாக இருப்பினும், இதயங்கள் அனைத்தையும் துளைக்கவல்லதுமான ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக. அவ்வாயுதத்தை மீண்டும் மீண்டும் கூர்த்தீட்டி உன் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்துவாயாக" என்றார்.(19)

வாசுதேவன் {கிருஷ்ணன் வாசுதேவரிடம்}, "ஓ! தவசியே, இரும்பாலாகாததும், மென்மையானதும், இருப்பினும் அனைவரின் இதயங்களையும் துளைக்கவல்லதும், என் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்த நான் பயன்படுத்த வேண்டியதுமான அந்த ஆயுதம் எது?" என்று கேட்டான்.(20)

நாரதர் {கிருஷ்ணரிடம்}, "உன் சக்திக்குத் தக்கபடி உணவளிப்பது, மன்னிப்பது {பொறுமை}, நேர்மை, மென்மை, உரிய மரியாதை கொடுத்து கௌரவித்தல் ஆகியவற்றையே இரும்பாலாகாத அவ்வாயுதம் கொண்டுள்ளது.(21) கொடுஞ்சொற்கள் பேசும் உறவனிரின் கோபத்தையும், அவர்களது இதயங்கள், மனங்கள் மற்றும் இகழும் நாவுகளையும் மென்மையான வார்த்தைகளால் மட்டுமே அடக்குவாயாக.(22) தூய்மையான ஆன்மாவையும், பெருஞ்சாதனைகளையும், நண்பர்களையும் கொண்ட பெரிய மனிதனாக இல்லாத எவராலும், கனமான சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. நீ (விருஷ்ணிகளை ஆளும்) இந்தப் பெருங்கனத்தை உன் தோள்களில் சுமப்பாயாக.(23) மேடுபள்ளமில்லாத சமமான சாலையில் அனைத்து எருதுகளாலும் கனமான சுமைகளைச் சுமக்க முடியும். அவற்றில் பலமிக்கவையே கடினமான சாலைகளிலும் அத்தகு கனங்களைச் சுமக்கவல்லனவாகும்.(24) ஒற்றுமையின்மையால் போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருக்கும் அழிவே ஏற்படும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ அவர்களில் முதன்மையானவனாவாய். போஜர்களும், விருஷ்ணிகளும் அழியாமல் இருக்கத்தக்கவகையில் நீ செயல்படுவாயாக.(25)

ஞானியான ஒரு மனிதனிடம், நுண்ணறிவு, மன்னிப்பு {பொறுமை}, புலனடக்கம், ஈகை ஆகியவற்றைத் தவிர வேறேதும் இருக்காது.(26) தன் குலத்தை மேன்மையுறச் செய்வதே எப்போதும் புகழத்தக்கதும், மகிமையானதும், நீண்ட வாழ்வை அளிக்கக்கூடியதுமாகும். ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களுக்கு அழிவு நேராத வகையில் நீ செயல்படுவாயாக.(27) ஓ! தலைவா, கொள்கை மற்றும் போர்க்கலை ஆகியவற்றைப் பொறுத்தவரையில், நீ அறியாதது ஒன்றுமில்லை[4].(28) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, லோகபாலர்கள் அனைவரையும் நம்பியிருக்கும் அனைத்து உலகங்களையும் போல, யாதவர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் அனைவரும் உன்னையே நம்பியிருக்கின்றனர். ஓ! மாதவா {கிருஷ்ணா}, முனிவர்கள் எப்போதும் உன் முன்னேற்றத்தையே வேண்டுகின்றனர்.(29) அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தை அறிந்தவன் நீயே. உன்னை நம்பி மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்க்கும் யாதவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் நீயே" என்றார் {நாரதர்}".(30)

[4] கும்பகோணம் பதிப்பில், "ஓ பிரபுவே, சந்தி விக்கிரகமுதலிய ஆறு குணங்களை ப்ரயோகிப்பதும், யாத்திரை செய்வதும், வருங்கால நிகழ்காலங்களிலுள்ளதும் உம்மால் அறியப்படாதது ஒன்றுமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ தலைவா, கொள்கையின் ஆறு பண்புகளையோ, போர் தொடுத்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நீயே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாய், அனைத்தையும் நீ அறிவாய்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 81ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்