Tuesday, February 20, 2018

அரசநகரத்தின் லக்ஷணம்! - சாந்திபர்வம் பகுதி – 86

Indication of the city in which the king may reside! | Shanti-Parva-Section-86 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 86)


பதிவின் சுருக்கம் : மன்னனும், அரச அங்கத்தினரும் வசிக்க வேண்டிய நகரத்திற்குரிய அடையாளங்கள், ஒரு நாடு வலுவூட்டப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டிய வழிமுறைகள்; தவசிகளிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...



யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் எவ்வித நகரத்திற்குள் வசிக்க வேண்டும்? அவன், ஏற்கனவே உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தில் வசிக்க வேண்டுமா? அல்லது அவன் தனியாக ஒன்றைக் கட்ட வேண்டுமா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, ஓ! குந்தியின் மகனே, ஒரு மன்னன் வசிக்க வேண்டிய நகரத்தைப் பொறுத்தவரையில் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்புகளையும், பிற்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விசாரிப்பதே {விசாரித்தறிவது} முறையாகும்.(2) எனவே, நகரரண்களின் {கோட்டைகளின்} தற்பாதுகாப்பைக் குறித்து நான் உரையாடப்போகிறேன். நான் சொல்வதைக் கேட்ட பிறகு, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, வழிநடத்தப்படும்படியே கவனமாக உன்னை நடத்திக் கொள்வாயாக.(3) ஆறு வகை அரண்களில் {துருக்கங்களில்} தன் கண்களைச் செலுத்தியபடியே {கவனத்தைக் கொண்டு} மன்னன், அனைத்து வகைச் செழிப்புகளையும், பயன்படுத்துவதற்கான அனைத்து வகைப் பொருட்களையும் அபரிமிதமாகக் கொண்ட தன் நகரங்களைக் கட்ட வேண்டும்.(4) நீர்அரண்கள் {ஜலதுர்க்கம்}, பூமிஅரண்கள் {பூமிதுர்க்கம்}, மலைஅரணங்கள் {கிரிதுர்க்கம்}, மனிதஅரண்கள் {மனுஷ்யதுர்க்கம்}, மண்அரண்கள் {மருதுர்க்கம்}, காட்டுஅரண்கள் {வனதுர்க்கம்} ஆகியனவே அந்த ஆறு வகை அரண்களாகவும் {துருக்கங்களாகும்}[1].(5)

[1] "சுற்றிலும் அனைத்துப் புறங்களிலும் ஓர் ஆற்றாலோ, ஆறுகளாலோ, கடலாலோ சூழப்பட்டன நீர் அரண்கள். சமவெளிகளில், உயர்ந்த மதில்களுடனும், சுற்றிலும் அகழிகளுடனும் கட்டப்பட்டன பூமி ஆரண்கள். பாதுகாவலர்கள் மற்றும் பற்றுறுதி கொண்ட மக்களால் முறையாகப் பாதுகாக்கப்படும் கோட்டையில்லா நகரங்களே மனித அரண்கள் ஆகும்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

அரணால் பாதுகாக்கப்பட்டதும், அரிசி மற்றும் ஆயுதக் கிடங்குகளை அபரிமிதமாகக் கொண்டதும், ஊடுருவமுடியா சுவர்கள் மற்றும் அகழியால் பாதுகாக்கப்பட்டதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், கல்வி மற்றும் இயந்திரவியல் கலையில் திறன் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள் வசிப்பதும், அனைத்து வகைப் பொருட்கள் நன்கு சேமிக்கப்பட்டதும், அறநடத்தையும், தொழிலில் நுண்ணறிவும், பலமும், சக்தியும் கொண்ட மனிதர்கள் நிறைந்ததும், விலங்குகள் நிறைந்ததும், நேர்மையான நடத்தை கொண்ட மனிதர்கள் இருப்பதும், அமைதி நிலைத்திருப்பதும், ஆபத்தில்லாததும், அழகால் சுடர்விடுவதும், இசை மற்றும் பாடல்களால் எதிரொலிப்பதும், துணிச்சல்மிக்க, செல்வம் நிறைந்த மனிதர்களைக் கொண்டதும், வேத மந்திரங்களின் ஒலியால் எதிரொலிக்கப்படுவதும், விழாக்களும், பண்டிகைகளும் அடிக்கடி நடைபெறுவதும், எப்போதும் தேவர்களின் வழிபாடுகள் நடைபெறுவதுமான ஒரு நகரத்திலேயே மன்னன், அவனது அமைச்சர்கள், பற்றுறுதி கொண்ட அவனது படையினர் ஆகியோர் வசிக்க வேண்டும்[2].(6-10)

[2] "இதற்கு முந்தைய வரியில் குறிப்பிட்டத்தைப் போன்ற இரண்டாம் வகை அரண் இஃது என நீலகண்டர் சொர்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அங்கே வசிக்கும் மன்னன், தன் படைகளை அதிகரித்து, தன் நண்பர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, நீதிமன்றங்களை நிறுவி தன் கருவூலத்தை நிறைப்பதில் ஈடுபட வேண்டும். தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிந்தனைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் அவன் தடுக்க வேண்டும்.(11) அவன் அனைத்துவகைப் பொருட்களையும் முன்னேற்பாட்டுடன் சேகரிப்பதிலும், தன் ஆயுதக்கிடங்குகளைக் கவனத்துடன் நிறைப்பதிலும் ஈடுபட வேண்டும். அரிசி மற்றும் பிற தானியங்களையும் அவனது கிடங்குகளில் அதிகரிக்கச் செய்து, (விவேகத்துடன்) தனது ஆலோசனைகளை உறுதியடையச் செய்ய வேண்டும்.(12) அவன் மேலும் தன் கிடங்குகளில், விறகு, இரும்பு, உமிகள், கரிகள், மரங்கள், கொம்புகள், எலும்புகள், மூங்கில்கள், மஜ்ஜை, எண்ணெய் மற்றும் வெண்ணெய், கொழுப்பு, தேன், மருந்து வகைகள்,(13) பட்டுச்சணல், {ஸர்ஜரம் எனும்} நறுமணத் திரவியம், அரிசி, ஆயுதங்கள், அம்புகள், தோல், (நாண்கயிறுகளுக்கான) நரம்பு, பிரம்பு, முஞ்சப் புல் {ஒரு வகைத் தர்ப்பம்}, பிறவகைச் செடிகொடிகள் {மூலிகைகள்} ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்.(14) மேலும், பெரும் அளவிலான நீரைக் கொண்ட குளங்கள் {அல்லது தொட்டிகள்} மற்றும் கிணறுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து, பாலுள்ள மரங்கள் அனைத்தையும் அவன் பாதுகாக்க வேண்டும்[3].(15)

[3] "அஃதாவது, ஆலமரம் மற்றும் அரசமரம் போன்றவை. இவை பயணிகளுக்குப் புத்துணர்வூட்டும் நிழலைத் தருகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

(பல்வேறு அறிவியல் துறைகளில்) ஆசான்களாக இருப்போரையும், ரித்விக்குகள், புரோகிதர்கள், வலிமைமிக்க வில்லாளிகள், கட்டடக் கலைஞர்கள், வானியல் வல்லுனர்கள், சோதிடக் கலைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரையும்,(16) ஞானம், நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, புத்திக்கூர்மை, துணிவு, கல்வி, உயர்குடி பிறப்பு, மனோசக்தி ஆகியவற்றைக் கொண்டவர்களையும், அனைத்தவகை பணிகளையும் செய்யவல்ல மனிதர்கள் அனைவரையும் கௌரவித்து, கவனத்துடன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.(17) மன்னன் நல்லோரைக் கௌரவித்து, நியாயமற்றவர்களைத் தண்டிக்க வேண்டும். தீர்மானத்துடன் செயல்படும் அவன், பல்வேறு வகையினரையும் அவரவருக்குரிய கடமைகளில் நிறுவ வேண்டும்.(18) அவன் {மன்னன்}, தன் நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் வெளிப்புற நடத்தையையும், மனோநிலையையும் ஒற்றர்கள் மூலம் சரியாக உறுதிச் செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .(19) மன்னன் தானே தன் ஒற்றர்கள், ஆலோசகர்கள், தன் கருவூலம், தண்டனை அளிக்கும் துறைகளைச் சார்ந்தோர் ஆகியோரை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்தும் இவர்களையே சார்ந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(20)

ஒற்றர்களையே தன் பார்வையாகக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகள், நண்பர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் செயல்களை அனைத்தையும், அவர்களது நோக்கங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.(21) பிறகு அவன் கவனத்துடன் தன் திட்டங்களை வகுத்து, தன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவர்களைக் கௌரவிக்கவும், பகைமையுடன் இருப்பவர்களைத் தண்டிக்கவும் செய்ய வேண்டும்.(22) மன்னன் எப்போதும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, எவருக்கும் துன்பமளிக்காமல் கொடைகளைக் கொடுக்க வேண்டும். நீதிக்குத் தடங்கலாகவோ, குறுக்கீடாகவோ ஒருபோதும் எதையும் செய்யாமல் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.(23) ஆதரவற்றோர், தலைவனற்றோர், முதியோர், விதவைகளாக இருக்கும் பெண்டிர் ஆகியோரை அவன் எப்போதும் பாதுகாத்து, அவர்களைப் பராமரிக்க வேண்டும்.(24)

மன்னன் எப்போதும் தவசிகளைக் கௌரவித்து, உரிய காலங்களில் துணிகள், பாத்திரங்கள் மற்றும் உணவை அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் (25) அவன் (நாட்டில்) தன்னிலை குறித்தும், தன் திட்டங்கள் அனைத்தையும் குறித்தும், தன் நாட்டைக் குறித்தும் மிகுந்த கவனத்துடன் அந்தத் தவசிகளுக்குத் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில் எப்போதும் அவன் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.(26) உயர்ந்த பிறப்பையும், பெரும் கல்வியையும் கொண்டவர்களும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் கைவிட்டவர்களுமான தவசிகளை அவன் காணும்போது, படுக்கைகள், ஆசனங்கள் மற்றும் உணவுக் கொடைகளுடன் அவர்களை அவன் கௌரவிக்க வேண்டும்.(27) எந்த இயல்பிலான துன்பத்தில் அவன் விழுந்தாலும், அஃதை அவன் ஒரு தவசியிடம் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். கள்வர்களே கூட அத்தகைய பண்பு கொண்ட மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வார்கள்.(28) மன்னன் தன் செல்வத்தை ஒரு தவசியின் பொறுப்பில் கொடுத்து, அவருடைய ஞானத்தை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அனைத்துச் சந்தர்ப்பங்களில் அவர்களுக்காகக் காத்திருக்கவோ, வழிபடவோ கூடாது[4].(29)

[4] "’ஞானத்தை எடுத்துக் கொள்’ என்பது அவர்களோடு ஆலோசனை நடத்து என்ற பொருளைக் கொண்டதாகும். ‘எப்போதும் அவர்களிடம் காத்திருக்கக் கூடாது {அவர்களுக்குப் பணி செய்து கொண்டிருக்கக்கூடாது}’ என்பது, மன்னனின் செல்வத்தை வைத்திருப்பவர்கள் அவர்கள்தான் என்று சந்தேகப்பட்டுக் கள்வர்கள் அவர்களைக் கொன்றுவிடக் கூடும்" என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவரிடம் நிதிகளை வைக்கலாம்; திரும்பவும் பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி அவர்களிடம் செல்வதும், அதிகமாகப் பூஜிப்பதும் கூடா" என்றிருக்கிறது.

தன் நாட்டில் வசிப்போரில் ஒருவரை அவன் தன் நட்புக்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோலவே, எதிரியின் நாட்டில் வசிப்போரில் மற்றொருவரையும் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். காடுகளில் வசிப்போரில் இருந்து மூன்றாமவரையும், தனக்குக் கப்பம் கட்டும் நாடுகளில் வசிப்போரில் ஒருவரை நான்காமவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(30) அவன், அவர்களிடம் நல்ல விருந்தோம்பலை வெளிப்படுத்தி, அவர்களுக்குக் கௌரவங்களை அளித்து, அவர்களுக்கான வாழ்வாதார வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவன் {மன்னன்} எதிரிகளின் நாடுகளில் வசிக்கும் தவசிகளிடமும், தன் நாட்டில் வசிக்கும் தவசிகளிடமும் ஒரே வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(31) தவங்கள் மற்றும் கடும் நோன்புகளில் ஈடுபடும் அவர்கள், மன்னனுக்குப் பேரிடர் நேர்ந்து அவன் பாதுகாப்பை நாடும்போது, அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பார்கள்.(32) மன்னன் வசிக்கத் தகுந்த நகரத்துக்குண்டான குறியீடுகள் நான் இப்போது உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்" என்றார் {பீஷ்மர்}.(33)

சாந்திபர்வம் பகுதி – 86ல் உள்ள சுலோகங்கள் : 33



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்