Wednesday, January 02, 2019

நரியும், குரங்கும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 09

The jackal and the ape! | Anusasana-Parva-Section-09 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 09)


பதிவின் சுருக்கம் : கொடையளிப்பதாக உறுதியளித்தும் அவற்றைக் கொடாமல் இருப்பவன் கதியை விளக்க நரி மற்றும் குரங்கின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் காந்தி கொண்டவரே, பிராமணர்களுக்குக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்த கொடைகளைப் புத்தி மயக்கத்தால் {லோபத்தினால்} கொடுக்காமலிருக்கும் மனிதர்கள் என்ன ஆகிறார்கள்?(1) ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, இவ்வகையில் உள்ள கடமைகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், உறுதியளித்த கொடையைக் கொடுக்காதிருக்கும் தீய ஈனர்களின் கதி என்னவாகிறது?" என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "உறுதிமொழியளித்த கொடை சிறிதாகவோ, பெரிதாவோ இருந்தாலும், அதைக் கொடுக்காத மனிதன், சந்ததியை எதிர்பார்க்கும் அலியைப் போல (அனைத்துத் திசைகளிலும்) தனது நம்பிக்கைகள் கனியற்றுப் போவதைப் பார்க்கும் பேரிழிவை அடைகிறான்.(3) ஓ! பாரதா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அத்தகைய மனிதன் தான் பிறந்த நாள் முதல், தன் மரணம் வரை செய்த நற்செயல்கள் எதுவும்,(4) வேள்வி நெருப்பில் அவன் ஊற்றும் ஆகுதிகள் எதுவும், அவன் அளிக்கும் கொடைகள் எதுவும், அவன் செய்யும் தவங்கள் எதுவும் என அனைத்தும் கனியற்று {பலனற்றுப்} போகின்றன.(5) ஓ! பாரதர்களின் தலைவா, சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், நன்கு அமைக்கப்பட்ட தங்கள் புத்தியின் துணை கொண்டு இதையே தங்கள் கருத்தாக அறிவிக்கின்றனர்.(6) அத்தகைய மனிதன், கருப்பு நிறக் காதுடைய ஆயிரம் குதிரைகளைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் கருதுகின்றனர்.(7)

இது தொடர்பாக ஒரு நரிக்கும், ஒரு குரங்குக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! பகைவர்களைச் சுடுபவனே, அவை இரண்டும் மனிதர்களாக இருந்தபோது அணுக்கமான நண்பர்களாக இருந்தன. மரணத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவர் நரியாகவும், மற்றவர் குரங்காகவும் ஆகினர்.(9) சுடலைக்கு மத்தியில் ஒரு விலங்கின் சடலத்தை உண்ணும் நரியைக் கண்ட குரங்கு, முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது அது {நரி} தன் நண்பனாக இருந்ததை நினைவு கூர்ந்து அதனிடம்,(10) "உண்மையில், ஒரு விலங்கின் அழுகிய சடலத்தைப் போன்ற வெறுக்கத்தக்க இந்த உணவை இப்பிறவியில் உண்ணும் கடப்பாட்டை அடையும் அளவுக்கு முற்பிறவியில் நீ இழைத்த பயங்கரப் பாவம் என்ன?" என்று கேட்டது.(11)

இவ்வாறு கேட்கப்பட்ட நரியானது, குரங்கிடம், "ஒரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு அக்கொடையை நான் அவருக்குக் கொடுக்காதிருந்தேன்.(12) ஓ! குரங்கே, இந்த இழிந்த இருப்பு நிலையில் நான் வீழ்ந்ததற்கு அந்தப் பாவமே காரணம். அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பசியேற்படும்போது, இத்தகைய உணவை உண்ணும் கடப்பாட்டை நான் அடைந்தேன்" என்று மறுமொழி சொன்னது".(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பிறகு அந்த நரியானது குரங்கிடம், "ஒரு குரங்காவதற்கு நீ இழைத்த பாவமென்ன?" என்று கேட்டது.(14)

அந்தக் குரங்கு {நரியிடம்}, "என்னுடைய முற்பிறவியில் பிராமணர்களுக்குச் சொந்தமான கனிகளை நான் அபகரித்து வந்தேன். அதனால் நான் குரங்கானேன். புத்தியும், கல்வியும் கொண்ட ஒருவரும் பிராமணர்களுக்குச் சொந்தமானதை ஒருபோதும் அபகரிக்கக்கூடாது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், ஒருவன் இதைத் தவிர்க்கும் அதே வேளையில் பிராமணர்களுடன் எந்தச் சச்சரவையும் தவிர்க்க வேண்டும். ஒருவன் அவர்களுக்கு உறுதியளித்த பிறகு அந்தக் கொடையை அவர்களுக்கு நிச்சயம் அவன் கொடுக்க வேண்டும்" என்றது".(15)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, நான் என் ஆசானுடன் பிராமணர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்தே இதை நான் கேட்டேன். இக்காரியத்தில் புராதனமான, புனிதமான அறிவுக்குள் அந்த அறம் சார்ந்த மனிதர் உரைத்துக் கொண்டிருக்கும்போது, இதை நான் கேட்டேன்.(16) ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, பிராமணர்களைக் குறித்துக் கிருஷ்ணர் {வியாசர்} உரையாடிக் கொண்டிருக்கும்போதும் இதை நான் கேட்டிருக்கிறேன்[1].(17) ஒரு பிராமணனின் உடைமை ஒருபோதும் அபகரிக்கப்படக்கூடாது. அவர்களை ஒருபோதும் தனிமையில் விடக்கூடாது. ஏழையாகவோ, கஞ்சனாகவோ, வயதில் இளையவராகவோ இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது.(18) பிராமணர்கள் இஃதை எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக உறுதியளித்த கொடையை நிச்சயம் கொடுக்க வேண்டும். மேன்மையான ஒரு பிராமணர் தன் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடையக்கூடாது.(19) ஓ! மன்னா, ஒரு பிராமணனுக்குள் எழும் எதிர்பார்ப்பானது சுடர்மிக்க நெருப்பைப் போன்றது எனச் சொல்லப்படுகிறது[2].(20)

[1] "தீவில் பிறந்த கிருஷ்ணர், அல்லது வியாசரே இங்கே கிருஷ்ணராகக் குறிப்பிடப்படுவதாக உரையாசிரியர் நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "ஒரு பிராமணரின் எதிர்பார்ப்பு நிறைவடையாமல் போனால், போலியாக எதிர்பார்ப்பை எழவைத்த மனிதனை அஃது எரிக்கவல்லதாகும் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

எதிர்பார்ப்புகள் எழுந்த ஒரு பிராமணர், எந்த மனிதன் மீது தன் கண்களைச் செலுத்துவாரோ அவன், ஓ! ஏகாதிபதி, சுடர்மிக்க நெருப்பால் எரிய வல்ல வைக்கோல் குவியலைப் போலவே எரியத்தகுந்தவனாவான்[3].(21) ஓ! பாரதா, மன்னன் கொடுக்கும் (கௌரவங்கள் மற்றும் கொடைகளில்) ஒரு பிராமணன் நிறைவடைந்து அந்த மன்னனிடம் இனிமையும், அன்பும் நிறைந்த வார்த்தைகளை {ஆசிகளைச்} சொல்லி அவன் அந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழும்போது, உடலில் உள்ள பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு மருத்துவனைப் போல அவன் அந்த மன்னனின் பெரும் நன்மைக்கான ஊற்றுக்கண்ணாகிறான்.(22) அத்தகைய ஒரு பிரமாணன், அந்த மன்னனின் மகன்கள், பேரர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், பிற அதிகாரிகள் ஆகியோரும் விலங்குகள், நகரம் மற்றும் மாகாணங்கள் ஆகியவையும் நன்மையும், அமைதியும் அடையும்படி செய்கிறான்.(23) பூமியில் ஆயிரங்கதிர் சூரியனைப் போல ஒரு பிராமணனின் சக்தி அவ்வளவு பெரியதாகும்.(24)

[3] கும்பகோணம் பதிப்பில், "அரசனே, ப்ராம்மணன் முதலில் ஆசையுண்டானதனால் கோபித்து எவனைப் பார்ப்பானோ அவனை விறகை அக்னி எரிப்பது போல எரித்து விடுவானல்லனோ?" என்றிருக்கிறது.

எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்க அல்லது மகிழ்ச்சிமிக்க நிலையை அடைய விரும்பினால், அவன் ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதாக உறுதியளித்ததை நிச்சயம் கொடுக்க வேண்டும்.(25) ஒரு பிராமணனுக்குக் கொடைகளை அளிப்பதால் அவன் நிச்சயம் உயர்ந்த சொர்க்கத்தை அடைவான். உண்மையில், கொடையளிக்கும் ஈகையே ஒருவன் அடையும் உயர்ந்த காரியம் {கர்மம்} ஆகும்.(26) ஒரு பிராமணனுக்கு ஒருவன் அளிக்கும் கொடைகளால், தேவர்களும், பித்ருக்களும் ஆதரிக்கப்படுகிறார்கள். எனவே, ஞானம் கொண்ட ஒருவன், பிராமணர்களுக்கு எப்போதும் கொடைகளை அளிக்க வேண்டும்.(27) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அளிக்கத் தகுந்த பிராமணனே ஒருவனுடைய உயர்ந்த நோக்கம் எனச் சொல்லப்படுகிறான்[4]. எக்காலத்திலும் ஒரு பிராமணனை முறையாக வழிபடாமல் அவன் வரவேற்கப்படக்கூடாது. {எப்போதும் ஒரு பிராமணன் முறையாக வழிபடப்பட்டு வரவேற்கப்பட வேண்டும்}." {என்றார் பீஷ்மர்}.(28)

[4] கும்பகோணம் பதிப்பில், "ப்ராம்மணன் முதன்மையான புண்யதீர்த்தமென்று சொல்லப்பெறுகிறான்" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்