Saturday, January 05, 2019

திருமகள் வசிப்பிடம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 11

The residence of Goddess Sree! | Anusasana-Parva-Section-11 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 11)


பதிவின் சுருக்கம் : லட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் ருக்மிணிக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பாரதர்களின் தலைவரே, எந்த வகை ஆண், அல்லது எந்த வகைப் பெண்ணில் செழிப்பின் தேவி {லட்சுமி} எப்போதும் வசிக்கிறாள்?" எனக் கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக உள்ளபடியே நடந்ததையும், நான் கேட்டதையும் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு காலத்தில் இளவரசி ருக்மிணி, தேவகி மகனின் {கிருஷ்ணனின்} முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(2) தன் கொடியில் மகரத்தைக் கொண்டவனான பிரத்யும்னனின் தாயானவள் {ருக்மிணி}, அழகில் சுடர்விடுபவளும், தாமரையின் நிறத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவியை {லட்சுமியைக்} கண்டு, ஆவலால் நிறைந்தவளாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள்:(3) "நீ யாரின் அருகில் இருக்கிறாய், யாருக்குத் தொண்டாற்றுகிறாய்? மேலும் நீ யாருக்குத் தொண்டாற்றுவதில்லை? ஓ! அனைத்துயிரினங்ளுடைய தலைவனின் அன்புக்குரியவளே, ஓ! தவத்திலும், பலத்திலும் ஒரு பெருமுனிவருக்கு இணையானவளே, இஃதை எனக்கு உண்மையில் சொல்வாயாக" என்று கேட்டாள்.(4) அந்த இளவரசியால் {ருக்மிணியால்} இவ்வாறு கேட்கப்பட்டவளும், சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவி, அருளால் தூண்டப்பட்டு, இனிமையானவையும், அழகானவையுமான இந்த வார்த்தைகளைக் கருடனைத் தன் கொடியில் கொண்டவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து மறுமொழியாகக் கூறினாள்.(5)

ஸ்ரீ {லட்சுமி}, "ஓ! அருளப்பட்ட பெண்ணே {ருக்மிணி}, நாநலம், சுறுசுறுப்பு, காரியத்தில் கவனம் ஆகியவற்றைக் கொண்டவனும், கோபத்தில் இருந்து விடுபட்டவனும், தேவர்களை வழிபடுபவனும், நன்றியுணர்வுமிக்கவனும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த மனத்தைக் கொண்டவனுமாக இருப்பவனிடம் எப்போதும் வசிக்கிறேன்.(6) காரியத்தில் கவனமில்லாதவன், நம்பிக்கையில்லாதவன் {நாத்திகன்}, காமத்தின் விளைவால் இனக்கலப்பு செய்பவன், நன்றிமறந்தவன், தூய்மையற்ற நடைமுறைகளைக் கொண்டவன், கடுமையான மற்றும் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவன், கள்வன், தன் ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் வன்மத்தை வளர்ப்பவன் ஆகியோரிடத்தில் ஒருபோதும் வசிப்பதில்லை.(7) சக்தி, பலம், வாழ்வு, கௌரவம் ஆகியவை குறைந்திருப்போர், அற்ப காரியம் ஒவ்வொன்றிற்கும் துயரமடைபவர்கள், எப்போதும் கோபமடைபவர்கள் ஆகியோரிடத்தில் நான் ஒருபோதும் வசிப்பதில்லை. மேலும், எண்ணத்தில் ஒன்றாகவும், செயலில் மற்றொன்றாகவும் இருப்போரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை.(8) தனக்காக எந்த உடைமையையும் ஒருபோதும் விரும்பாதவன், அல்லது முயற்சியின்றிக் கிட்டும் பொருளில் நிறைவடைந்து எஞ்சியவற்றில் குருடாயிருப்பவன், அல்லது சொற்ப உடைமைகளிலேயே நிறைவடைபவர்கள் ஆகியோரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை[1].(9) தங்கள் வகைக்கான {வர்ணத்திற்கான} கடமைகளைச் செய்வோர், அல்லது அறக்கடமைகளை அறிந்தோர், அல்லது, முதியோரின் தொண்டிற்குத் தங்களை அர்ப்பணித்தோர், தங்கள் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டோர், அல்லது தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், அல்லது மன்னிக்கும் தன்மை என்ற அறத்தை நோற்பவர்கள், அல்லது செயல்படுவதில் திறனும் ஊக்கமும் வாய்ந்தவர்கள், அல்லது மன்னிக்கும் தன்மை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பெண்களிடம் நான் எப்போதும் வசிப்பேன்.(10)

[1] கும்பகோணம் பதிப்பில், "மனத்தில் மேன்மேல் பயனைக் கருதாதவர்களும், இயற்கையிலேயே மனச்சோர்வை அடைந்தவர்களும், அல்பத்தில் திருப்தி அடையும் தன்மையுள்ளவர்களுமாகிய மனிதர்களிடம் நான் ஒருகாலும் நன்றாயிருப்பதில்லை" என்றிருக்கிறது.

வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தேவர்களை வழிபடுபவர்களுமான பெண்களிடமும் நான் வசிக்கிறேன். வீட்டு அறைகலன்கள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கவனிக்காதவர்கள், தங்கள் கணவர்களின் விருப்பங்களுக்கு முரணான வார்த்தைகளையே எப்போதும் சொல்பவர்கள் ஆகிய பெண்களிடம் நான் வசிப்பதில்லை.(11) வேறு மனிதர்களின் வீடுகளில் விருப்பமுள்ளவர்கள் மற்றும் பணிவில்லாதவர்களாக இருக்கும் பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். மறுபுறம், தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்போர், நன்னடத்தையால் அருளப்பட்டவர்கள், எப்போதும் ஆபரணங்களை அணிந்து கொள்பவர்கள், நல்ல ஆடைகளை உடுத்துபவர்கள் ஆகிய பெண்களிடம் எப்போதும் நான் வசிக்கிறேன்.(12) பேச்சில் வாய்மை நிறைந்தோர், அழகிய ஏற்புடைய குணங்களைக் கொண்டோர், அருளப்பட்டோர், அனைத்து சிறப்புகளையும் கொண்டோர் ஆகிய பெண்களில் எப்போதும் நான் வசிக்கிறேன். பாவம் நிறைந்தோர், தூய்மையற்றோர், கடைவாயை நாவால் நனைப்போர், பொறுமையோ, மனோவுறுதியோ இல்லாதோர், சண்டை சச்சரவுகளில் விருப்பமுள்ளோர்;(13) அதிகம் உறங்குவோர் மற்றும் எப்போதும் படுத்தே கிடப்பவர்கள் ஆகிய பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். வாகனங்கள், அவற்றை இழுக்கும் விலங்குகள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள், நல்ல ஆபரணங்கள், வேள்விகள், மழை நிறைந்த மேகங்கள்,(14) முற்றாக மலர்ந்த தாமரைகள், கூதிர் கால ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் எப்போதும் நான் வசிக்கிறேன். யானைகள், மாட்டுக் கொட்டில், நல்ல இருக்கைகள், முற்றாக மலர்ந்த தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட தடாகங்கள் ஆகியவற்றில் நான் வசிக்கிறேன்.(15)

நாரைகளின் இனிய இசையைக் கொண்டவையும், பல்வேறு மர வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட கரைகளைக் கொண்டவையும், பிராமணர்கள், தவசிகள் மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறரால் அடையப்பட்டவையும், தங்கள் போக்கில் இனிமையான மென் சலசலப்பைக் கொண்டவையுமான ஆறுகளிலும் நான் வாழ்கிறேன்.(16) நீராடவும், தாகம் தணித்துக் கொள்வதற்காகவும் மூழ்கும் சிங்கங்கள் மற்றும் யானைகளால் சேறாகக் கலங்கி பெரும் அளவில் கரைபுரண்டோடும் நீருடன் கூடிய ஆழமான ஆறுகளிலும் நான் எப்போதும் வசிக்கிறேன். மதங்கொண்ட யானைகள், காளை மாடுகள், அரியணை ஆகியவற்றிலும், மன்னர்கள் மற்றும் நல்ல மனிதர்களிடத்திலும் நான் வசிக்கிறேன்.(17) எந்த வீட்டு மக்கள் வேள்வித் தீயில் ஆகுதிகளை ஊற்றி, பசுக்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்களை வணங்குகிறார்களோ அந்த வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன். தேவர்களின் வழிபாட்டில் சரியான நேரங்களில் மலர்களைக் காணிக்கையளிப்போர் உள்ள வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன்[2].(18)

[2] "தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் எதுவும் ‘வலி’ (வளையம் என்பதன் ஒருமை) என்ற பொருளைக் கொண்டதாகும். விலங்கின் உயிருக்குப் பதிலாகத் தேவர்களுக்கு மலர்களைக் காணிக்கையளிக்கும் வீட்டில் செழிப்பின் தேவி வசிக்கிறாள் என்பதே இந்த ஸ்லோக இரண்டாம் வரியின் பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்கள், அறம் நோற்பதில் அர்ப்பணிப்புள்ள க்ஷத்திரியர்கள், உழவில் அர்ப்பணிப்புள்ள வைசியர்கள், மூன்று மேல் வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} (மேனியால் செய்யப்படும்) தொண்டில் அர்ப்பணிப்புள்ள சூத்திரர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(19) நான் நாராயணனில் உறுதிமிக்க மாற்றமில்லாத இதயத்துடன் கூடியவளாக உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிக்கிறேன். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, ஏற்புடைய குணம், முற்று முழுதான அறம் ஆகியவை அவனிலேயே இருக்கின்றன.(20) ஓ! பெண்ணே {ருக்மிணி}, (நாராயணனைத் தவிர, நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும்) உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிப்பதில்லை என நான் சொல்ல முடியாதா? எந்த மனிதனிடம் நான் சக்தியாக வசிக்கிறேனோ, அவனிடம் அறமும், புகழும், ஆசைக்குரிய பொருட்களும், செல்வமும் தழைத்துப் பெருகும்" என்றாள் {ஸ்ரீ}" {என்றார் பீஷ்மர்}.(21)

அநுசாஸனபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்