Sunday, March 10, 2019

கன்னியான கிழவி! - அநுசாஸனபர்வம் பகுதி – 20

The old lady turned to be a maiden! | Anusasana-Parva-Section-20 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 20)


பதிவின் சுருக்கம் : அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறியது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பெண்மணி, "அப்படியே ஆகட்டும்" என்றாள். பிறகு அவள் (முனிவரின் உடலில் பூசுவதற்காக) எண்ணெயும் {தைலமும்}, தூய்மைச்சடங்கின் போது அணியும் துண்டையும் கொண்டு வந்தாள்.(1) அந்தத் தவசியால் அனுமதிக்கப்பட்ட அவள், தான் கொண்டு வந்த நறுமணத் தைலத்தை அவரது உடல்முழுவதும் பூசினாள்.(2) மென்மையாக {தைலம் கொண்டு} பூசப்பட்ட அந்த முனிவர், பூச்சு முடிந்ததும், தூய்மைச் சடங்கிற்கான அறைக்கு {மஞ்சனமாடுமிடத்திற்குச்} சென்றார். அங்கே அவர் பெருங்காந்தியைக் கொண்டதும், சிறந்ததுமான புதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(3) முனிவர் தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, அந்த முதிய பெண்மணி தன் மென்மையான கரங்களால் இனிமையாகத் தீண்டி அவரது உடலைக் கழுவத் தொடங்கினாள்.(4) முனிவரின் தூய்மைச்சடங்கு காரியத்தில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மிக ஏற்புடைய தொண்டைச் செய்தாள். கடும் நோன்புகளைக் கொண்ட அம்முனிவர், தம்மைக் கழுவிய வெண்ணீருக்கும், தம்மைக் கழுவுவதில் ஈடுபடும் மென்கரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறியதால் மொத்த இரவும் இவ்வாறே கழிந்தது. நீராடலில் இருந்து எழுந்த முனிவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்[1].(5,6) கிழக்கு அடிவானில் சூரியன் எழுவதை அவர் கண்டார்.


[1] கும்பகோணம் பதிப்பில், "அம்முனிவர் அந்த ஆஸனத்தில் உட்கார்ந்த பிறகு இனிமையாகக் கைபடும்படி அந்த ஸ்திரீ மெதுவாக அவருக்கு ஸ்நானம் செய்வித்தாள்; அம்முனிவருக்குத் தேவலோகத்திய உபசாரங்களை முறைப்படி செய்தாள். மிக்க ஸுகஉஷ்ணமான வெந்நீராலும், அவள் கைபட்ட ஸுகத்தினாலும் உண்டான நித்திரையினால் அவ்விரவு முழுவதும் கடந்து போனதையும் அம்மகாமுனிவர் அறியாமற்போனார். பிறகு, அவர் எழுந்து மிக்க ஆச்சர்யத்துடன் கீழ்த்திசையில் ஆகாயத்தில் ஸூர்யன் உதயமாயிருந்ததைக் கண்டார்" என்றிருக்கிறது.

இதனால் ஆச்சரியமடைந்த அவர், தமக்குள்ளேயே, "இஃது உண்மையா? என் புத்திமயக்கமா?" எனக் கேட்டுக் கொண்டார்.(7) அம்முனிவர் ஆயிரங்கதிர் தேவனை {சூரியனை} முறையாக வழிபட்டார். அது முடிந்ததும், தாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அந்த முதிய பெண்மணி, அமுதத்தின் சுவைக்கு ஒப்பான சுவைமிக்க உணவை அம்முனிவருக்குப் படைத்தாள்.(8) உணவு சுவைமிக்கதாக இருந்ததன் விளைவால் முனிவரால் அதிகம் உண்ண முடியவில்லை. அவர் சிறிதளவே உட்கொண்டாலும் பகல் கடந்து மாலை வந்தது.(9) அப்போது அந்த முதிய பெண்மணி படுக்கைக்குச் சென்று உறங்கும்படி முனிவரிடம் கேட்டுக் கொண்டாள். முனிவருக்கு ஒரு சிறந்த படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, மற்றொரு படுக்கையில் அவள் படுத்துக் கொண்டாள்.(10) முதலில் முனிவரும், அந்த முதிய பெண்ணும் வெவ்வேறு படுக்கையில் படுத்திருந்தாலும், நள்ளிரவில் அந்தப் பெண் தன் படுக்கையைவிட்டு எழுந்து முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(11)

அஷ்டவக்கிரர், "ஓ! அருளப்பட்ட பெண்ணே, மாற்றான் மனைவியுடன் பாலினக் கலவியில் ஈடுபட என் மனம் மறுக்கிறது. உத்தமியே, என் படுக்கையைவிட்டுச் செல்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக, நீயே விரும்பி இதிலிருந்து விலகுவாயாக" என்றார்[2].(12)

[2] "இறுதி சொற்களுக்கு, ‘உன் படுக்கைக்குசென்று படுப்பாயாக’ என்றும் பொருள் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்தப் பெண், "ஓ! கல்விமானான பிராமணரே, நான் ஆசையால் {காமத்தால்} கொடுமைப்படுத்தப்படுகிறேன் {காமக்கொடுமையிலிருக்கிறேன்}. என் அர்ப்பணிப்பை {பக்தியைக்} குறித்துக் கொள்வீராக. என்னை அன்புடன் அழைக்க மறுப்பதால் நீர் பாவத்தை இழைக்கிறீர்" என்றாள்.(15)

அஷ்டவக்கிரர், "தான்விரும்பியபடி செயல்படும் மனிதன் பல்வேறு பாவங்கள் இழுத்துச் செல்லும். என்னைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாட்டின் மூலம் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவல்லவனாக இருக்கிறேன். உத்தமியே, உன் படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக" என்றார்.(16)

அந்தப் பெண், "நான் உமக்குத் தலைவணங்குகிறேன். எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும். ஓ பாவமற்றவரே, நான் உம்முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறேன், நீர் எனது புகலிடமாவீராக.(17) உண்மையில், உமது துணைவியாக இல்லாத ஒருத்தியுடன் கலவியில் ஈடுபடுவதைப் பாவமாகக் கண்டீரெனில், நான் என்னை உமக்குக் கொடுக்கிறேன். ஓ! மறுப்பிறப்பாளரே, திருமணத்திற்காக என் கரத்தை நீர் ஏற்பீராக.(18) நீர் எப்பாவமும் இழைத்தவராக மாட்டீர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். நானே எனக்கு அதிகாரி என்பதை அறிவீராக.[3] இதில் பாவமேதும் இருந்தால், அஃது என்னை மட்டுமே சேரட்டும். நீர் என்னை ஏற்பீராக" என்றாள்.(19)

[3] கும்பகோணம் பதிப்பில், "எனக்குக் கணவனில்லாமல் நானே ஸ்வதந்திரமாயிருப்பவளென்றறியும். அப்படிப்பட்டவளுக்கு எது தர்மமோ அது எனக்கிருக்கட்டும். நான் உம்மிடத்தில் மனம் வைத்தவளாகவும், யாருக்கும் உட்படாதவளாகவும் இருக்கிறேன். என்னை நீர் அடையலாம்" என்றிருக்கிறது.

அஷ்டவக்கிரர், "ஓ! உத்தமியே, நீயே உனக்கு அதிகாரியாக இருப்பது எவ்வாறு? இதன் காரணத்தை எனக்கு நீ சொல்வாயாக. மூவுலகிலும் தனக்குத்தானே தலைவியாகக் கருதத்தக்க ஒரு பெண்ணாவது இல்லையே.(20) கன்னிகையாக இருக்கும்போது அவளைத் தந்தை பாதுகாக்கிறார். இளமையில் இருக்கும்போது அவளைக் கணவன் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். பெண்கள் தாங்கள் வாழுங்காலம் வரை ஒரு போதும் சார்பற்றவர்களாக {சுதந்திரமானவர்களாக} இருப்பதில்லை" என்றார்[4].(21)

[4] கும்பகோணம் பதிப்பில் இதற்கு மேலும் அஷ்டவக்கிரர் பேசுவதாக நீள்கிறது. அது பின்வருமாறு: "கிழவியாயிருப்பவளைக் கன்னிகையென்று நான் நம்பவில்லை. குற்றமற்றவளே. எனக்கு உன் மேல் ஆசையுமில்லை" என்று முடிகிறது.

அந்தப் பெண், "கன்னிப்பருவத்தில் இருந்தே நான் பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகிறேன். இதில் ஐயமேதும் கொள்ளாதீர். நான் இன்னும் கன்னியாகவே இருக்கிறேன். என்னை உமது மனைவியாக்கிக் கொள்வீராக. ஓ! பிராமணரே, நான் உம்மிடம் கொண்ட இந்த அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொன்றுவிடாதீர் {என் ஆசையைக் கெடாதீர்}" என்றாள்.(22)

அஷ்டவக்கிரர், "நீ என்னை விரும்புவதைப் போலவே நானும் உன்னை விரும்புகிறேன். எனினும், தீர்க்க வேண்டிய இந்தக் கேள்வியுமிருக்கிறது. என் விருப்பங்களுக்கு நான் வசப்படுவதால், முனிவரின் {வதான்யரின்} விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டவனாகக் கருதப்படுவேனா?(23) இஃது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. இது நன்மைக்கு வழிவகுக்குமா?". {இந்தக் கணத்தில் கிழவி குமரியாகிறாள்}.

{அஷ்டவக்கிரர் தமக்குள்ளேயே}, "இதோ அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னி இருக்கிறாள்.(24) இவள் பேரழகுடன் இருக்கிறாள். இவ்வளவு காலம் இவளது அழகை ஏன் முதுமை மறைத்திருந்தது? தற்போது ஓர் அழகிய கன்னியாகத் தெரிகிறாளே. இதன் பிறகு இவள் என்ன வடிவத்தை ஏற்கப்போகிறாள் என்பதை அறிய முடியாது[5].(25) ஆசைகள் மற்றும் விருப்பங்களிடம் நான் கொண்டுள்ள கட்டுப்பாட்டையோ, நான் ஏற்கனவே அடைந்திருக்கும் மனநிறைவிலிருந்தோ நான் ஒருபோதும் பிறழமாட்டேன். அத்தகைய பிறழ்வு நன்மையானதாகத் தெரியவில்லை. நான் வாய்மையுடனே என்னை ஒருங்கிணைத்துக் கொள்வேன்" {என்றார்}[6] {என்றார் பீஷ்மர்}.(26)

[5] "எனக்கெது சிறந்ததாக இருக்கும்? வதான்யரின் மகளை விரும்பலாமா? இந்தப் பெண்ணை எடுத்துக் கொள்ளலாமா? என உரையாசிரியர் விளக்குகிறார். இக்கருத்து வலிந்து பெறப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] கும்பகோணம் பதிப்பில், "இவள் சிறந்த ஆபரணங்களும், உடைகளுமுள்ள கன்னிகையாகவே என்னிடம் வந்திருக்கிறாள். ஆனால், இவளுடைய இந்தச் சிறந்த ரூபம் மூப்பையடைந்திருந்ததெப்படி? இப்போது திரும்பவும் இப்படிப்பட்ட கன்னிகை வடிவம் வந்திருக்கிறது. இதற்கு மேலென்னாகுமோ? எவ்வகையிலும் நியமம் தவறுவதில் எனக்கு இஷ்டமில்லை. நான் ஸத்யமாகவே இவளை க்ரஹிக்க வேண்டும்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார் என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் :26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்