Tuesday, March 12, 2019

அஷ்டவக்கிரர் திருமணம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 21

The marriage of Ashtavakra! | Anusasana-Parva-Section-21 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 21)


பதிவின் சுருக்கம் : அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறிய வட திசை தேவி...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அஷ்டவக்கிரர் பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும் அந்தப் பெண் அஷ்டவக்கிரரின் சாபத்திற்கு ஏன் அஞ்சவில்லை என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் அஷ்டவக்கிரர் அந்த இடத்தில் இருந்து திரும்பி வந்தது எவ்வாறு?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அஷ்டவக்கிரர் அவளிடம், "நீ இவ்வாறு உன் வடிவை மாற்றிக் கொண்டது எவ்வாறு? உண்மையற்ற எதையும் நீ சொல்லக்கூடாது. இதை நான் அறிய விரும்புகிறேன். ஒரு பிராமணன் முன்பு உண்மையைப் பேசுவாயாக" என்றார்.(2)

அந்தப் பெண், "ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சொர்க்கத்திலோ, பூமியிலோ எங்கு நீர் வசித்தாலும், {எங்கும்} பாலினங்களுக்கிடையிலான கலவி ஆசை காணப்படுகிறது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, இவை யாவும் என்ன என்பதைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(3) ஓ! பாவமற்றவரே, நீர் சரியாக இருக்கிறீரா என்பதைச் சோதிக்க நான் வகுத்த சோதனையிது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, உமது மனோபலத்தால் உலகங்கள் அனைத்தையும் நீர் ஆடக்கிவிட்டீர்.(4) நான் வட திசைப்புள்ளியின் உடல் வடிவம் என்பதை அறிவீராக. நீர் பெண்மையின் மென்மையைக் கண்டீர். முதிய பெண்களும் கூடக் கலவியாசையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.(5) பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறார்கள். சிறப்புமிக்கவரான நீர் இங்கு வந்த நோக்கத்தை நான் அறிவேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமக்கான மணப்பெண்ணின் தந்தையும், முனிவருமான வாதன்யர், நான் உமக்குப் போதிக்கும் வகையில் உம்மை இங்கே அனுப்பி வைத்தார். அம்முனிவரின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் ஏற்கனவே உமக்குப் போதித்துவிட்டேன்[1].(7) நீர் பாதுகாப்பாக இல்லம் திரும்புவீர். நீர் திரும்பிப் பயணிக்கையில் உமக்குச் சிரமமேற்படாது. நீர் தேர்ந்தெடுத்த பெண்ணையே நீர் மனைவியாக அடைவீர். அவள் உமக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(8) ஆசையினாலே நான் உம்மை வேண்டினேன். நீர் எனக்குச் சிறந்த பதிலைக் கொடுத்தீர். பாலினக்கலவியாசையானது மூவுலகிலும் கடக்கப்பட முடியாததாகும்[2].(9) இத்தகைய தகுதியை அடைந்த நீர் உமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வீராக. (என்னிடம் இருந்து) வேறு என்ன கேட்க விரும்புகிறீர்? ஓ! அஷ்டவக்கிரரே, வாய்மைக்குப் பொருந்தும் வகையில் அதை நான் உமக்குச் சொல்வேன்.(10) ஓ! மறுபிறப்பாள தவசியே, உம் நிமித்தமாக முனிவர் வதான்யரால் நான் முதலில் நிறைவடையச் செய்யப்பட்டேன் {வதான்யரால் நான் வேண்டிக் கொள்ளப்பட்டேன்}. அவரைக் கௌரவிக்கவே இவை யாவற்றையும் நான் உமக்குச் சொன்னேன்" என்றாள் {வடதிசைதேவி}".(11)

[1] கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பின்னர், "பெண்ணானவள் ஸுகத்தில் மிகப் பற்றுள்ளவள்; இன்சொல்லினாலும் விட்டுப் பிரியாமலிருப்பதனாலும் சிறந்த ஆடை முதலியவற்றினாலும் அதிகமாக நெருங்காமலிருப்பதானாலும், ஒற்றுமையினாலும் காப்பாற்றப்படுகிறாள். புண்ணியத் திதிகள் இல்லாத போதும் சாஸ்திரத்தினால் விலக்கப்படாத இரவுகளிலும், ருது காலமில்லாவிடினும் சேரலாம். இராத்திரி காலத்தில் அதிக நியமம் வேண்டாம். நியமத்தை முழுதும் விடவும் கூடாது. நீர் க்ஷேமமாக உமது இல்லம் செல்லலாம்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணரே, அந்தக் கன்னிகையை நீர் அடையப் போகிறீர். அவள் புத்ரஸந்ததியுள்ளவளாவாள். நீர் என்னைச் சபதத்தோடு கேட்டீர். அதனால், உமக்குப் பெண்களின் இயற்கையைப் பற்றிய இந்த மறுமொழி நான் சொன்னேன். பிராம்மணன் மேலாணையானது இம்மூவுலகங்களிலுமுள்ள எவரும் எக்காலமும் தாண்டக்கூடாதது. நீர் செல்லலாம். உமது காரியமாயிற்று" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மறுபிறப்பாளருமான அஷ்டவக்கிரர் மதிப்புமிக்க மனோநிலையில் தமது கரங்களைக் கூப்பினர். பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தாம் திரும்பிச் செல்வதற்கான அனுமதியைக் கேட்டார். வேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவர் தமது ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றார்.(12) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, அவர் தமது இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, தம் உற்றார் உறவினரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பிராமணரான வதான்யரை நோக்கி முறையான வழியில் சென்றார்.(13) வழக்கமான விசாரிப்புகளுடன் வதான்யரால் நல்வரவு கூறப்பட்ட முனிவர் அஷ்டவக்கிரர், (தாம் வடக்கே பயணம் மேற்கொண்டிருந்தபோது) கண்ட அனைத்தையும் நன்கு நிறைவடைந்த இதயத்துடன் உரைத்தார்.(14)

அவர், "உம்மால் ஆணையிடப்படியே நான் கந்தமாதன மலைகளுக்குச் சென்றேன். அம்மலைகளுக்கு வடக்கே கிடக்கும் பகுதியில் மிக மேன்மையான தேவி ஒருத்தியைக் கண்டேன்.(15) அவள் அன்போடு என்னை வரவேற்றாள். நான் கேட்க அவள் உமது பெயரைச் சொன்னாள், மேலும் பல்வேறு காரியங்களில் போதனையும் செய்தாள். ஓ! தலைவரே, நான் அவள் சொன்னதைக் கேட்ட பிறகு அங்கிருந்து திரும்பி வந்தேன்" என்றார்.(16)

இவ்வாறு சொன்ன அவரிடம் {அஷ்டவக்கிரரிடம்} வதான்யர், "நல்ல நட்சத்திர நாளில் உரிய சடங்குகளுடன் என் மகளின் கரத்தைப் பெறுவாயாக. என் பெண்ணுக்கு மணமகனாக நீயே தகுந்தவனாவாய்" என்றார்".(17)

பீஷ்மர் தொடர்ந்தார், "அஷ்டவக்கிரர், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அந்தப் பெண்ணின் கரத்தை ஏற்றார். உண்மையில், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அந்த நீதிமிக்க முனிவர் இன்பத்தால் நிறைந்தார்.(18) அந்த அழகிய கன்னிகையைத் தம் மனைவியாக அடைந்த அம்முனிவர், அனைத்து வகை (மன) நோயிலிருந்தும் விடுபட்டவராகத் தமது ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்" {என்றார் பீஷ்மர்}[3].(19)

[3] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பகுதியின் முடிவில் இக்கதையின் நோக்கம் சொல்லப்படுகிறது. அது பின்வருமாறு: "ஒரு புருஷன் ஸ்திரீயை நல்லொழுக்கம் தவறாமலிருக்கும்படி காப்பதற்குச் சொன்ன வழியை அனுசரித்ததால் அந்த ஸ்திரீ சரியாக நடப்பவள். அப்படிப்பட்டவன் தான் நல்ல கதி பெறுவதுடன் தனது மனையாட்டியையும் நல்ல கதியிற்சேர்ப்பான். புருஷனோடு ஒத்திருப்பதைத் தவிரத் தனித்து வேறு தர்மம் பெண்ணுக்கில்லையென்பதினாலேதான் அவளை ஸஹதர்மையென்பது. கற்புள்ள பெண் ஒருவன் ஸுகத்திற்கும், தர்மத்திற்கும் இன்றியமையாத்துணை. ஆசார்யன் சிஷ்யனைச் சீர்திருத்துவது போலத் தன் துணையான மனைவியைச் சீர்திருத்தி நல்வழியில் நடத்துவது கணவன் கடமை என்னும் ஸமாதானத்தை இந்தக் கதையில் கண்டு கொள்க".

அநுசாஸனபர்வம் பகுதி – 21ல் சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்