Saturday, March 30, 2019

சோம விதி! - அநுசாஸனபர்வம் பகுதி – 36

The ordinance of Soma! | Anusasana-Parva-Section-36 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 36)


பதிவின் சுருக்கம் : இந்திரனிடம் சம்பாசுரன் சொன்ன பிராமண மகிமை; சம்பரனின் தந்தை மற்றும் சோமனுக்கு இடையில் இது குறித்து நடந்த உரையாடல் ஆகியவற்றைக் யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகச் சக்ரனுக்கும், சம்பரனுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் சக்ரன் {இந்திரன்}, தலையில் சடாமுடி தரித்து உடல் முழுவதும் சாம்பலை {திருநீற்றைப்} பூசிக் கொண்டும் ஒரு தவசியின் வேடத்தை ஏற்றுக் கொண்டு, கோரமான தேரொன்றைச் செலுத்திக் கொண்டு அசுரன் சம்பரனின் முன்னிலையை அடைந்தான்.(2)

[1] சம்பரன் என்ற பெயரில் இரு அசுரர்கள் இருந்திருக்கின்றனர். முதலாமவன் கசியபருக்கும், தக்ஷனின் மகளான தனுவுக்கும் பிறந்தவனாவான். அவன் தஸ்யுக்களின் தலைவனாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறான். இவன் சிவனால் கொல்லப்பட்டவன். மற்றொரு சம்பரன், ஹிரண்யாக்ஷனின் மகனாகச் சொல்லப்படுகிறான். அவன் பிரத்யும்னனால் கொல்லப்பட்டவன். இங்கே சொல்லப்படுவது முதலாமவனாக இருக்க வேண்டும்.

கசியபரும், தக்ஷனின் மகள்களான அவரது 13 மனைவியரும்
சக்ரன் {அசுரன் சம்பரனிடம்}, "ஓ! சம்பரா, எந்த ஒழுக்கத்தின் மூலம் நீ உன் குலத்தின் தலைவனானாய்? எந்தக் காரணத்தினால் மக்கள் உன்னை அனைவருக்கும் மேம்பட்டவனாகக் கருதுகிறார்கள்? இதை நீ எனக்கு உண்மையாகவும், விரிவாகவும் சொல்வாயாக" என்று கேட்டான்.(3)

சம்பரன் {சக்ரனிடம்}, "பிராமணர்களிடம் நான் ஒரு போதும் தீய உணர்வுகளை வளர்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் எந்தப் போதனையையும் கேள்வி கேட்காத மதிப்புடன் அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். பிராமணர்கள் சாத்திரங்களை விளக்க முற்படும்போது, பெரும் மகிழ்ச்சியோடு நான் அதைக் கேட்கிறேன்.(4) அவர்களது விளக்கங்களைக் கேட்ட பிறகு நான் ஒருபோதும் அவர்களை அலட்சியம் செய்ததில்லை. அல்லது பிராமணர்களுக்கு எதிராக எவ்வகையான குற்றமும் இழைத்ததில்லை. புத்தியுள்ள பிராமணர்களை நான் எப்போதும் வழிபடுகிறேன். அவர்களிடம் இருந்தே செய்திகளை எப்போதும் நான் நாடுகிறேன். நான் எப்போதும் அவர்களது பாதங்களை வழிபடுகிறேன்.(5) அவர்கள் நம்பிக்கையுடன் என்னை அணுகி, எப்போதும் என்னிடம் அன்புடன் பேசி, என் நலத்தை விசாரிக்கின்றனர். அவர்கள் கவனமற்றிருந்தாலும் நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன். அவர்கள் உறங்கினாலும், நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன்.(6)

சாத்திரங்களால் சுட்டிக்காட்டப்படும் பாதையிலும், பிராமணர்களிடமும் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வன்மம் மற்றும் தீய ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவனுமான நான், தேனீக்கள் தங்கள் கூட்டின் அடைகளை {தேனடைகளைத்} தேனால் நிறைப்பதைப் போல, என் ஆசான்களாக இருப்பவர்களும், என்னை ஆள்பவர்களுமான பிராமணர்கள், ஞானமெனும் அமுதத்தால் எப்போதும் என்னை நிறைக்கிறார்கள்.(7) உற்சாகமிக்க இதயங்களுடன் அவர்கள் சொல்லும் எதையும், நினைவு மற்றும் புத்தியின் துணையுடன் நான் எப்போதும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கையில் எப்போதும் கவனமாக இருக்கிறேன், மேலும், அவர்களை விட எவ்வாறு தாழ்ந்திருக்கிறேன் என்பதையும் எப்போதும் நினைக்கிறேன்.(8) அவர்களது நாவின் நுனியில் வசிக்கும் அமுதத்தை எப்போதும் பருகுவதன் காரணத்தால், நட்சத்திரங்கள் அனைத்தையும் விஞ்சியிருக்கும் நிலவைப் போல நான் என் குலத்தில் உள்ள பிறர் அனைவரையும் விட மேலான நிலையை அடைந்திருக்கிறேன்.(9) பிராமணர்களின் உதடுகளில் இருந்து விழும் சாத்திர விளக்கங்களையும், உலகின் ஞானிகள் ஒவ்வொருவரின செயல்களையும் கேட்பதே உலகத்தின் அமுதமாகவும், குறிப்பிடத்தகுந்த சிறப்பாகவும் கருதப்பட வேண்டும்.(10) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைக் கண்டும், பிராமணர்கள் சொன்ன போதனைகளின் பலத்தைப் புரிந்து கொண்டும் என் தந்தை {கசியப முனிவர்} மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் நிறைந்தார்.(11) உயர் ஆன்ம பிராமணர்களின் பலத்தைக் கண்ட என் தந்தை, சந்திரமாஸிடம் {சந்திரனிடம்}, "பிராமணர்கள் எவ்வாறு வெற்றியை அடைகின்றனர்?" என்று கேட்டார்.(12)

சோமன்{சந்திரன் முனிவர் கசியபரிடம்}, "பிராமணர்கள் தவங்களின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றனர். வாக்கே அவர்களது பலமாக அமைகிறது. அரச வகையைச் சார்ந்தோரின் ஆற்றல் அவர்களின் கரங்களில் {தோள்களில்} இருக்கிறது. எனினும் பிராமணர்கள், வாக்கையே தங்கள் பலமாகக் கொண்டுள்ளனர்.(13) ஒரு பிராமணன், வசதியேதுமில்லாத தன் ஆசானின் இல்லத்தில் வசித்து, வேதங்களையோ, குறைந்தது பிரணவத்தையோ கற்க வேண்டும். அவன் கோபத்தில் இருந்து விடுபட்டு, உலகம் சார்ந்த பற்றுகளைத் துறந்து, அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைப் பெற்று ஒரு யதியாக வேண்டும்.(14) ஒருவன் தன் தந்தையின் வசிப்பிடத்திலேயே வேதங்கள் அனைத்திலும் திறம்பெற்று, மரியாதைக்குறிய நிலையை அடையுமளவுக்குப் பெரும் ஞானத்தை ஈட்டினாலும், பயணிக்காதவன், அல்லது வீட்டில் வளர்ந்தவன் {ஸாமான்யன்} என்றே மக்கள் அவனை நிந்திப்பார்கள்.(15) பூமியானது, போரிட விரும்பாத மன்னன், இல்லத்தைவிட்டுச் சென்று ஞானம் அடைய விரும்பாத பிராமணன் ஆகிய இருவரையும் எலிகளை விழுங்கும் ஒரு பாம்பைப் போல விழுங்குகிறது {அவர்கள் புகழின்றிப் போகிறார்கள்}.(16) செருக்கானது சிறுமதி கொண்டோரின் செழிப்பை அழிக்கிறது. {மணமாகாத} ஒரு கன்னிகை கருவுறுவதால் களங்கமடைகிறாள் {கெட்டுப் போகிறாள்}. ஒரு பிராமணன் வீட்டிலேயே இருப்பதால் நிந்திக்கத்தகுந்தவனாகிறான் {கெட்டுப் போகிறான்}" {என்றான் சோமன்}.(17)

அற்புதத்தன்மை நிறைந்த சோமனிடமிருந்து என் தந்தை இதைக் கேட்டறிந்தார். இதன் விளைவால் என் தந்தை பிராமணர்களை மதிக்கவும், வழிபடவும் தொடங்கினார். நான் அவரைப் போலவே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பிராமணர்கள் அனைவரையும் வழிபடுகிறேன்" என்றான் {சம்பரன்}".(18)

பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தத் தானவ இளவரசனின் {சம்பரனின்} வாயில் இருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், பிராமணர்களை வழிபடத் தொடங்கி, அதன் விளைவாக அவன் தேவர்களின் தலைமையிடத்தை அடைவதில் வென்றான்" {என்றார் பீஷ்மர்}.(19)

அநுசாஸனபர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்