Friday, March 29, 2019

பிரம்ம விதி! - அநுசாஸனபர்வம் பகுதி – 35

The ordinace of the creator! | Anusasana-Parva-Section-35 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 35)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் சிறப்பு; அவர்களுக்கான விதிகளைப் பிரம்மன் சொன்னது; பிராமணர்களின் சக்தி ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! அருளப்பட்ட மன்னா, ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே அனைத்து உயிரினங்களால் துதிக்கப்படும் தகுதியையும், சமைக்கப்பட்ட உணவின் முதல் பங்கை உண்ணும் விருந்தினரெனும் தகுதியையும் அடைகிறான்.(1) (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) பெரும் நோக்கங்கள் அனைத்தும் அவர்களில் இருந்தே உண்டாகின்றன. அவர்கள் {பிராமணர்கள்} அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாவர். மேலும் (அவர்களின் வாயில் ஊற்றப்படும் உணவை தேவர்களே உண்பதால்) அவர்கள் தேவர்களின் வாயாகவும் இருக்கின்றனர். மதிப்புடன் வழிபட்டப்படும் அவர்கள், மங்கலம் நிறைந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் செழிப்படையும்படி வாழ்த்துகின்றனர்.(2) நம் எதிரிகளால் அலட்சியம் செய்யப்படும் அவர்கள், தங்களை எதிர்ப்பவர்களிடம் {எதிரிகளிடம்} சினம்கொண்டு, கடும் சாபங்களை இட்டுத் அவர்களுக்குத் தீமையை விரும்பட்டும்[1].(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்கள் எல்லாருக்கும் அன்பர்கள்; நல்ல மனமும், வாக்குமுள்ளவர்கள். பிராம்மணர்கள் கோபித்தால், எல்லாரையும் கொன்றுவிடுவார். அவர்கள் பூஜிக்கப்பெற்றால் மங்களமான சொற்களினால் ஆசீர்வதிப்பார். அப்பா, பிராம்மணர்கள் பூஜிக்கப்படாமற் போனால் கோபங்கொண்டு கொடுஞ்சொற்களினால் அவர்களைப் பகைக்கும் நம்மனைவரையும் கொன்றுவிடுவார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் சிறந்த மனங்களையும், வாய்களையும் கொண்டவர்களாவர். அவர்கள் வழிபடப்படும்போது நன்மை நிறைந்த மங்கலச் சொற்களைச் சொல்வார்கள். ஓ! மகனே, பிராமணர்களை வெறுத்து, அவர்களது பிறப்பு வகையை அவமதிப்போரும் உள்ளனர். அவர்கள் முறையாக வழிபடப்படவில்லையென்றால், இவர்கள் மீது அவர்கள் கொடுஞ்சாபங்களைப் பயன்படுத்த வேண்டும்" என்றிருக்கிறது. மூன்று பதிப்புகளும் இந்த ஸ்லோகத்தை வெவ்வேறு வகையில் விளக்கியிருக்கின்றன. மூன்றையும் படித்தால் தான் ஒரு சித்திரம் கிடைக்கிறது.

பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள், பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களையும், அவர்களது கடமைகளைப் படைத்தபோது சொன்ன பின்வரும் பழைய ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {அந்த ஸ்லோகங்கள்}, "ஒரு பிராமணன், தனக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது. பாதுகாப்பை அடைந்திருக்கும் அவர்கள், பிறரைப் பாதுகாக்க வேண்டும். இவ்வழியில் நடப்பதால் அவர்கள் தங்களுக்கு உயர்ந்த பயனைத் தரும் கதியை நிச்சயம் அடைவார்கள்.(5) தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் நிச்சயம் பிரம்ம செழிப்பை அடைவார்கள். நீங்களே அனைத்து உயிரினங்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளங்களாகவும் இருப்பீர்கள்.(6) கல்விமானான ஒரு பிராமணன், சூத்திரர்களுக்காக விதிக்கப்பட்டவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் தகுதியை இழக்கிறான். வேத கல்வியின் மூலம் அவன் செழிப்பையும், புத்தியையும், சக்தியையும், அனைத்தையும் எரிக்கவல்ல சக்தியையும், மிக மேலான மகிமையையும் அவன் நிச்சயம் அடைவான்.(8) தேவர்களுக்குத் தெளிந்த நெய் ஆகுதிகளைக் காணிக்கையாக அளிப்பதன் மூலம் உயர்ந்த அருளை அடையும் பிராமணர்கள், பிரம்ம செழிப்புடன் சமைக்கப்படும் அனைத்து வகை உணவுகளையும் குழந்தைகளுக்கு முன்பே உண்ணக் கூடிய தகுதியைப் பெறுகிறார்கள்[2].(9) அனைத்து உயிரினங்களிடமும் கருணையால் நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாடு மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் கூடியவர்களுமான நீங்கள் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவீர்கள்.(10) மனிதர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, தேவர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும், தவங்கள் மற்றும் அறிவின் துணையுடனும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பதன் மூலமும் {உங்களால்} அடையப்படும்" {என்று சொல்கின்றன}.(11) ஓ! பாவமற்றவனே, பிரம்மனால் பாடப்பட்ட ஸ்லோகங்களையே நான் இவ்வாறு உனக்கு உரைத்தேன். உயர்ந்த நுண்ணறிவையும் ஞானத்தையும் கொண்ட படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களிடம் கொண்ட கருணையின் மூலம் இவற்றை விதித்தான்.(12)

[2] "இந்நாட்டில், இந்த நாள் வரையும், வீட்டிற்கு வரப்போகும் விருந்தாளிக்காகச் சமைக்கப்படும் உணவை தேவர்களுக்குக் காணிக்கையளிக்காமல், குறிப்பிட்ட விருந்தாளிகளுக்குக் கொடுக்காமல் ஒரு பகுதியைக் கூட வேறு எவருக்கும் கொடுக்க மாட்டார்கள். எனினும், குழந்தைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. இந்த ஸ்லோகம் சொல்வது என்னவென்றால், நல்ல பிராமணன் அந்தப் பிள்ளைகள் உண்பதற்கும் முன்பு உண்ணலாம் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவர்களில் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்தோரின் பலம், மன்னர்களின் வலிமைக்கு நிகரானதாகும். அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாகவும், சீற்றமிக்கவர்களாகவும், மின்னலின் வேகத்தைக் கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை மிக விரைவாகச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) அவர்களில் சிங்கத்தின் வலிமையைக் கொண்டவர்களும், புலியின் வலிமையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். காட்டுப்பன்றியின் பலத்தைக் கொண்ட சிலரும், மான் மற்றும் முதலைகளின் பலங்களைக் கொண்ட சிலரும் இருக்கின்றனர்.(14) கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சிலரும், சுறாக்களுக்கு ஒப்பாகக் கடிக்கும் {சுறாக்களின் கடிக்கு ஒப்பான வலியைத் தரும்} சிலரும் இருக்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்களைத் தங்கள் வாக்கால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும், தங்கள் கண்களின் பார்வையால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும் இருக்கிறார்கள்.(15) ஏற்கனவே சொல்லப்பட்டது போலக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலச் சிலரும், மிக மென்மையான மனநிலை கொண்ட சிலரும் இருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள் பல்வேறு மனோநிலைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(16)

மேகலர்கள், திராவிடர்கள் {திரமிடர்கள்}[3], லாடர்கள், பௌண்டரர்கள், கொன்வசிரர்கள், சௌண்டிகர்கள், தரதர்கள், தார்வர்கள், சௌரர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள்,(17) கிராதர்கள், யவனர்கள் மற்றும் எண்ணற்ற க்ஷத்திரிய இனக்குழுக்கள், பிராமணர்களின் கோபத்தின் மூலம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்திருக்கிறார்கள்[4].(18) பிராமணர்களை அலட்சியம் செய்ததன் விளைவால் அசுரர்கள் ஆழ்கடலைத் தஞ்சமாகக் கொள்ளும் நிலையை அடைந்தனர். பிராமணர்களுடைய அருளில் மூலமே தேவர்களும் சொர்க்த்தின் இன்பலோகவாசிகளாகும் நிலையை அடைந்தன்ர.(19)

[3] கங்குலியில் "திராவிடர்கள்" என்றிருப்பது, பிபேக்திப்ராயின் பதிப்பில், "திரமிடர்கள்" என்றிருக்கிறது. அநுசாஸன பர்வம் பகுதி 33 ஸ்லோகம் எண்.22ல் உள்ள "திராவிடர்கள்" என்ற சொல், கும்பகோணம் பதிப்பில், "திரவிடர்கள்" என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில், "திரமிளர்கள்" என்றும் இருக்கிறது.

[4] கும்பகோணம் பதிப்பில், "மேகலர்,... யவனர் முதலான க்ஷத்ரிய ஜாதியர்களெல்லாரும் பிராம்மணர்களைக் காணாமல் சூத்ரராயினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தங்களுக்கு மத்தியில் பிராமணர்கள் இல்லாததனால் மேக்கலர்கள்.... ...யவனர்கள் முதலிய க்ஷத்திரிய இனக்குழுக்கள் விருஷலர்களின் நிலைக்குத் தாழ்ந்தனர்" என்றிருக்கிறது.

வெளி, அல்லது ஆகாயமென்ற பூதம் தீண்டப்பட முடியாதது. இமய மலைகள் தங்கள் நிலைகளில் இருந்து அசைக்கப்பட முடியாதன. கங்கையின் நீரோட்டம் அணைக்கு அடங்காதது. பிராமணர்கள் அடக்கப்பட இயலாதவர்களாவர்.(20) பிராமணர்களின் நல்விருப்பங்களை விளைவிக்காத {பேணி வளர்க்காத} க்ஷத்திரியர்கள் எவரும் பூமியை ஆள இயலாதவர்களாவர் {ஆளும் தகுதியற்றவர்களாவர்}. பிராமணர்கள் உயர் ஆன்மா கொண்டவர்களாவர் {மகாத்மாக்களாவர்}. அவர்கள் தேவர்களுக்கே தேவராவர்.(21) கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியின் அரசுரிமையை நீ உண்மையில் அனுபவிக்க விரும்பினால், கொடைகளாலும், கீழ்ப்படிந்த தொண்டுகளாலும் அவர்களை {பிராமணர்களை} எப்போதும் வழிபடுவாயாக.(22) ஓ! பாவமற்றவனே, பிராமணர்கள்  கொடைகளை ஏற்பதன் விளைவால், அவர்களது சக்தியும், வலிமையும் குன்றுகின்றன. ஓ!மன்னா, கொடைகளை ஏற்க விரும்பாத பிராமணர்களிடம் இருந்து நீ உன் குலத்தைப் பாதுகாத்துக் கொள்வாயாக" {என்றார் பீஷ்மர்}.(23)

அநுசாஸனபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்