Saturday, March 30, 2019

கொடைபெறத் தகுந்தவர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 37

Best people for making gifts! | Anusasana-Parva-Section-37 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 21)


பதிவின் சுருக்கம் : கொடைபெறத் தகுந்தவர் யாரென்பது குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அந்நியர் ஒருவர், அல்லது நீண்டகாலம் உடன் வாழ்ந்த ஒருவர், அல்லது தொலைவில் இருந்து வரும் ஒருவர் எனக் கொடையாளியின் முன் தோன்றும் மூவரில் கொடைபெறத் தகுந்தவராக எவரைக் கருத வேண்டும்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவர்கள் அனைவரும் சம தகுதி கொண்டவர்களே. வேள்விகள் செய்வதற்கோ, ஆசானுக்கான கட்டணத்தை {தட்சணையை} வழங்குவதற்கோ, மனைவி மக்களைப் பராமரிப்பதற்கோ பிச்சையெடுப்பதால் சிலர் தகுதி பெறுகின்றனர். பூமி முழுதும் திரிந்து, ஒருபோதும் எதையும் வேண்டாமல் இருந்து, கொடுக்கப்படுவதைப் பெற்றுக் கொள்ளும் நோன்பைப் பின்பற்றுவதால் சிலர் கொடைபெறும் தகுதியைப் பெறுகின்றனர். மேலும், ஒருவன் வேண்டுவதை நாம் கொடுக்க வேண்டும்.(2) எனினும், நம்மைச் சார்ந்திருப்பவர்கள் துன்பமடையாத வகையில் நாம் கொடையளிக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் ஒருவன் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறான்.(3) முதல் முறையாக வந்திருக்கும் அந்நியனும் உரிய கொடைக்குத் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும். தெரிந்தவரும், நன்கறியப்பட்டவரும், கொடையாளியுடன் வாழ்ந்து வருபவருமான ஒருவரும் அதே வகையிலேயே கருதப்பட வேண்டும். தொலையில் இருந்து வருபவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்றும் ஒரு கல்விமான் அறிவான்" என்றார் {பீஷ்மர்}.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எவருக்கும் தீங்கிழைக்காமலும், சாத்திர விதிகளுக்கு முரண்படாமலும் கொடையளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், கொடை பெறுவதற்குத் தகுந்தவர் எவர் என்பதை ஒருவன் சரியாக உறுதி செய்ய வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கொடைக்குக் குறைவேற்படாத வகையில் அவன் இருக்க வேண்டும்" என்றான்[1].(5)

[1] "தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும்போது உணவோ, பிற பொருட்களோ குறைவடைகின்றன என்று சொல்லப்படுகிறது. கொடை பெறுவதற்குச் சரியான தகுந்த மனிதன் யார் என்பதே யுதிஷ்டிரனின் கேள்வி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ரித்விஜர், புரோஹிதர், ஆசான், ஆச்சாரியர், சீடன், (திருமண உறவின் மூலமான) உற்றார் உறவினர் ஆகியோர் கல்விமான்களாகவும், வன்மமற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களை மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் தகுந்தவர்களாக மதிக்க வேண்டும்.(6) அத்தகைய குணங்கள் அற்றவர்களைக் கொடைகளுக்கோ, விருந்தோம்பலுக்கோ தகுந்தவராக ஒருபோதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் தன்னோடு தொடர்பு கொள்ளும் மனிதர்களை எச்சரிக்கையுடன் ஆராய்ந்தறிய வேண்டும்.(7) கோபமின்மை, வாக்கில் வாய்மை, தீங்கிழையாமை, நேர்மை, அமைதி நிறைந்த நடத்தை, செருக்கின்மை, பணிவு, துறவு, தற்கட்டுப்பாடு, ஆன்ம நிறைவு அல்லது ஆன்ம அமைதி ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவனும், தீய செயல்கள் ஏதுமற்றவனுமான ஒருவனே {கொடைபெறத்} தகுதியுடையவனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனே கௌரவிக்கப்படத் தகுந்தவன்.(8,9)

ஒருவன் நற்கறியப்பட்டவனாகவோ, தெரிந்தவனாகவோ இருந்தாலும், ஒருவன் புதியவனானாலும், ஏற்கனவே காணப்படாதவனானாலும் இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அவன் கௌரவங்களுக்கும், விருந்தோம்பலுக்கும் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும்.(10) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவன், அல்லது சாத்திரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று காட்ட முனைபவன், அல்லது சமூகத்தில் உள்ள நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுவதை அங்கீகரிப்பவன் எவனும் வெறுமனே தனக்கான அழிவையே கொண்டு வருகிறான் (அவனைக் கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருத முடியாது).(11)

கல்வியை வீணாக்குபவனும், வேதங்களைப் பழித்துப் பேசுபவனும், பயனற்ற சர்ச்சைகளின் அறிவியலில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,(12) நல்லோரின் சபையில் (சச்சரவுகளில்) வெற்றியை ஈட்ட விரும்பி அறம் மற்றும் நெறிகளுக்கான காரணங்களை மறுத்து, அனைத்தையும் விதியின் மேல் சாத்துபவனும், மனிதர்கள் அனைவரிடமும் ஐயுணர்வு கொண்டவனும், மூடனும், தீர்மானம் கொள்ள இயலாதவனும், வாக்கில் கசந்தவனுமான ஒரு பிராமணன் வெறுப்பு நிறைந்த நாயாக அறியப்பட வேண்டும்.(14) நாயானது, குரைத்துக் கொண்டே கடிக்க முனைவதைப்போலவே, இத்தகைய மனிதனும் தன் மூச்சை வீணாகச் செலவழித்து, சாத்திரங்கள் அனைத்தின் அதிகாரங்களையும் அழிக்க முனைகிறான்.(15)

சமூகத்தை ஆதரிக்கும் நடைமுறைகள், அறம் சார்ந்த கடமைகள், சுயத்திற்கு நன்மையை உண்டாக்கவல்ல அனைத்துச் செயல்கள் ஆகியவற்றையும் ஒருவன் செய்ய வேண்டும். இவற்றைச் செய்து வாழும் மனிதன், காலத்தால் எப்போதும் நீடித்திருக்கும் அளவு செழிப்பில் வளர்கிறான்.(16) வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்கும், வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்கும், பிள்ளைகளைப் பெறுவதன் மூலம் பித்ருக்களுக்கும், கொடைகளை அளிப்பதன் மூலம் பிராமணர்களுக்கும், உணவூட்டுவதன் மூலம் விருந்தினர்களுக்கும் பட்ட கடனைத் தூய நோக்கத்துடனும், சாத்திர விதிகளின் படியும் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தாசிரமவாசி} அறத்தில் {தர்மத்தில்} இருந்து ஒருபோதும் வீழமாட்டான்" என்றார் {பீஷ்மர்}.(17,18)

அநுசாஸனபர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்