Sunday, March 31, 2019

பஞ்சசூடை! - அநுசாஸனபர்வம் பகுதி – 38

Panchachuda! | Anusasana-Parva-Section-38 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 38)


பதிவின் சுருக்கம் : பெண்களின் இயல்பு குறித்து நாரதரிடம் பேசிய பஞ்சசூடையின் உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பெண்களின் மனோநிலை {இயல்பைக்} குறித்து நீர் உரையாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். தீமைகள் அனைத்திற்கும் வேராகப் பெண்களே சொல்லப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமானவர்களாகவே கருதப்படுகிறார்கள்" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக தெய்வீக முனிவர் நாரதருக்கும், (தேவலோக) அரசவை மங்கை {வேசி} பஞ்சசூடைக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்த போது, பிரம்மலோகத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டவளும், குற்றமற்ற அழகைக் கொண்ட அப்ஸரஸுமான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்தார்.(3) உடலின் ஒவ்வொரு அங்கமும் பேரழகுடன் இருக்கக்கூடிய அந்த அப்சரஸைக் கண்ட அந்தத் தவசி, அவளிடம், "ஓ! கொடியிடையாளே, என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது. அதை எனக்கு விளக்கிச் சொல்வாயாக" என்று கேட்டார்".(4)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அம்முனிவரால் {நாரதரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த அப்சரஸ் அவரிடம், "{நீர் கேட்கும்} காரியம் நான் அறிந்ததாக இருந்தால், நான் அதைக் குறித்துப் பேசத் தகுந்தவள் என்று நீர் நினைத்தால், நிச்சயம் என் மனத்தில் இருப்பதை நான் சொல்வேன்" என்றாள்.(5)

நாரதர் {பஞ்சசூடையிடம்}, "ஓ! இனியவளே, உன் தகுதிக்கு அப்பாற்பட்ட எந்தப் பணியிலும் நிச்சயம் நான் உன்னை ஈடுபடுத்த மாட்டேன். ஓ! அழகிய முகம் கொண்டவளே, பெண்களின் மனோநிலையை {இயல்பை} நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்" என்றார்".(6)

பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தத் தெய்வீக முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான அப்சரஸ் {பஞ்சசூடை}, அவரிடம், "நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்களைக் குறித்துத் தவறாகப் பேச இயலாதவளாக இருக்கிறேன்.(7) பெண்கள் என்னவாக இருக்கிறார்கள், அவர்கள் எத்தகைய இயல்புடன் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர். ஓ! தெய்வீக முனிவரே, இத்தகைய பணியில் என்னை ஈடுபடுத்துவது உமக்குத் தகாது" என்று மறுமொழி கூறினாள்.(8)

அவளிடம் அந்தத் தெய்வீக முனிவர், "ஓ! கொடியிடையாளே, அஃது உண்மைதான். பொய் பேசுவதன் மூலமே ஒருவர் குற்றமிழைத்தவராகிறார். எனினும், உண்மையைச் சொல்வதில் எக்குற்றமும் இருக்க முடியாது" என்றார்.(9)

அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அப்சரஸ் பஞ்சசூடை, நாரதரின் கேள்விக்குப் பதிலளிக்க உடன்பட்டாள். பெண்களிடம் நித்தியமாக {எப்போதும்} உள்ள உண்மையான குற்றங்களை அவள் சொல்லத் தொடங்கினாள்.

பஞ்சசூடை {நாரதரிடம்}, "பெண்கள், உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும், அழகுடன் கூடியவர்களாக இருந்தாலும், பாதுகாவலர்களை {கணவர்களைக்} கொண்டிருந்தாலும், அவர்கள் {பெண்கள்} தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறவே விரும்புகிறார்கள். ஓ! நாரதரே, இக்குற்றம் உண்மையில் அவர்களைக் களங்கப்படுத்துகிறது.(11) பெண்களைவிடப் பாவம் நிறைந்தது வேறு எதுவுமில்லை. உண்மையில் பெண்களே குற்றங்கள் அனைத்தின் வேராக இருக்கிறார்கள். ஓ! நாரதரே, அதை நிச்சயம் நீர் அறிவீர்.(12) பெண்கள், புகழுடனும், செல்வத்துடனும், அழகிய பண்புகளுடனும், முற்றிலும் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உள்ள கணவர்களைப் பெற்றிருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களை அவமதிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்[1].(13) ஓ! பலமிக்கவரே, அடக்கத்தைக் கைவிட்டு, பாவம் நிறைந்த பழக்கவழக்கங்களையும், நோக்கங்களையும் கொண்ட மனிதர்களின் தோழமையை {துணையை} வளர்ப்பது, பெண்களாகிய நாங்கள் கொண்டுள்ள பாவம் நிறைந்த மனோநிலையாகும் {இயல்பாகும்}[2].(14) பெண்கள் தங்கள் முன்னிலையில் வந்து சிறிதளவு மதிப்புடன் பேசும் மனிதர்களையும் விரும்புகிறார்கள்.(15)

[1] கும்பகோணம் பதிப்பில், "பெண்கள் விருப்பம் வந்தபோது, ஐசுவரியமும், அழகுமுள்ளவர்களும் தங்களுக்குட்பட்டிருப்பவர்களுமான கணவர்களைத் தெரிந்து கொள்ளும்படி பொறுத்துப் பரிசோதிக்கத் திறமையற்றவர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புகழ்பெற்றவனாகவும், செழிப்பானவனாகவும், அழகானவனாகவும், கீழ்ப்படிபவனாகவும் ஒரு கணவன் இருக்கலாம். அப்போதும் பெண்ணானவள் அவனை அவமதிக்கக் காத்திருக்கிறாள்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "மிக்கப் பாவிகளான புருஷர்களையும் நாங்கள் வெட்கத்தைவிட்டு அடைகிறோம். பெண்களாகிய எங்களிடத்திலுள்ள பெரிய அதர்மம் இது." என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "பெண்கள் தீமைக்கும் அதர்மத்திற்கும் உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் வெட்கத்தைக் கைவிட்டு தீய மனிதர்களை ஈர்க்கிறோம்" என்றிருக்கிறது.

கட்டுப்பாடுகள் எதையும் இயல்பாகவே பொறுத்துக் கொள்ளாத பெண்களும், வேறு பாலினத்தைச் சேர்ந்தவரால் {ஆண்களால்} வேண்டப்படாததாலோ, உறவினர்களிடம் கொண்ட அச்சத்தாலோ தங்களுக்காக விதிக்கப்பட்டவற்றை {கட்டுப்பாடுகளை} மீறாமல் தங்கள் கணவர்களிடமே உள்ளனர்.(16) தங்கள் உதவிகளுக்காக {விருப்பங்களுக்காக} அனுமதிக்க இயலாதவர்கள் என அவர்களுக்கு எவரும் இல்லை. அவர்கள் யாருக்கு உதவத் தயாராக இருக்கிறார்களோ, அந்த மனிதனின் வயதை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவன் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவனாக மட்டும் இருந்தாலே பெண்கள் அவனது துணையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.(17) பாவத்தில் கொண்ட அச்சம், அல்லது கருணை, அல்லது செல்வம், அல்லது உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகளுக்காகத் தங்கள் நெஞ்சங்களில் எழும் அன்பு ஆகியவற்றுக்காகப் பெண்கள் தங்கள் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதில்லை.(18) மதிப்பிற்குரிய குடும்பங்களின் மத்தியில் வாழும் பெண்களும் {குலப் பெண்களும் கூட}, இளமையானவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், விடுதலையுடன் கூடிய வாழ்வை நோற்பவர்களுமான தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {வேசிகளின்} நிலையைக் கண்டு பொறாமை கொள்கின்றனர்.(19) கணவர்களால் காதலிக்கப்படுபவர்களும், பெரும் மதிப்புடன் நடத்தப்படுபவர்களுமான பெண்களும் கூட, கூனர்கள், குருடர்கள், மூடர்கள், அல்லது குள்ளர்களுக்கும் தங்கள் உதவிகளை அளிப்பது {அவர்களோடு சேர்வதும்} காணப்படுகிறது.(20)

நகரும் சக்தியை இழந்த மனிதர்கள் {முடவர்கள்}, அல்லது அழகற்ற இழிமனிதர்களின் துணையையும் பெண்கள் விரும்புவது காணப்படுகிறது. ஓ! பெரும் முனிவரே, பெண்கள், தங்களுக்குத் துணையாகக் கொள்ளத் தகாதவன் எனக் கருதப்படுபவன் இவ்வுலகில் எவனுமில்லை.(21) எனினும், பெண்கள் தங்கள் கணவனுக்காகக் காத்திராமல் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக, தங்களுக்குள்ளேயே ஒருவரோடொருவர் தவறாகக் கலக்க முற்படுவார்கள்[3].(22) எதிர் பாலினத்தவனை அடைய இயலாமை, அல்லது உறவினர்களிடம் கொண்ட அச்சம், அல்லது மரணம் மற்றும் சிறைவாசம் குறித்த அச்சம் ஆகியவற்றின் மூலமே பெண்கள் தங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் நிலைத்திருக்கிறார்கள்.(23) எப்போதும் புதிய துணைகளிடம் மிகுந்த விருப்பம் கொண்டவர்களான அவர்கள் {துருதுருவென} மிகவும் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத தங்கள் இயல்பின் விளைவால் அவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் கீழ்ப்படியச் செய்ய முடியாது. மீறும் எண்ணம் கொண்டிருக்கும்போது கட்டுபடுத்த முடியாதவர்களாகவே அவர்களது இயல்பு இருக்கிறது. உண்மையில் பெண்கள், ஞானிகளால் சொல்லப்படும் சொற்களைப் போன்றவர்களாவர்[4].(24) விறகால் நெருப்பு ஒருபோதும் தணிவடைவதில்லை. ஆறுகளின் நீரால் பெருங்கடல் ஒருபோதும் நிறைவை அடைவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதால் யமன் தணிவடைவதில்லை. அதே போலவே, பெண்களும் ஆண்களால் ஒருபோதும் தணிவடைவதில்லை.(25)

[3] கங்குலியின் புத்தகப்பதிப்பில் இந்த ஸ்லோகம் லத்தீன் மொழியில் "Si autem hominum societatem obstinere non possint, maritum longius exspectare nolentes, inter sese alia aliam petit" என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நமது தமிழ் மொழிபெயர்ப்பும் புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமாகவே இருக்கும். இணையப் பதிப்பில் இந்த ஸ்லோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "புருஷர்களை அடைவது எவ்வகையிலும் சரிப்படாமல் போகும்போது, பெண்களே ஒருவரிடம் ஒருவர் பிரவிருத்திக்கிறார்கள்; கணவர்களிடத்தில் கட்டுப்பட்டு நிற்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓர் ஆணை எவ்வழியிலாவது அடைய முடியும் எனும்போது ஒரு பெண் ஒருபோதும் தன் கணவனுடன் இருப்பதில்லை" என்றிருக்கிறது.

[4] "அஃதாவது, அத்தகைய சொற்களை அளவிட முடியாது, மேலும் அவற்றின் பொருள் ஆழத்தைப் புரிந்து கொள்ளவும் முடியாது. அதே போலவே பெண்களும் அளவிடமுடியாதவர்களாகவும், புரிந்து கொள்ளப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! தெய்வீக முனிவரே, இது பெண்களுடன் தொடர்புடைய மற்றொரு புதிராகும். அவர்கள், அழகானவனாகவும், அழகிய பண்புகளைக் கொண்டவனாகவும் ஒரு மனிதனைக் கண்டால், அவர்களின் மேனியில் நிறைவில்லா ஆசையின் குறியீடுகள் தோன்றுகின்றன[5].(26) தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர்களும், தங்களுக்கு ஏற்புடையவற்றை எப்போதும் செய்பவர்களும், ஆபத்து மற்றும் தேவைகளின் போது அவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருக்கும் கணவர்களுக்குக் கூட அவர்கள் போதுமான மதிப்பை ஒருபோதும் காட்டுவதில்லை.(27) பெண்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {ஆண்களின்} துணையைப் போல விருப்பத்திற்குரிய பொருட்களின் நிறைவையோ, ஆபரணங்களையோ, இனிய வகை உடைமைகளையோ கூட ஒருபோதும் உயர்வாகக் கருதுவதில்லை[6].(28) யமன், காற்று தேவன் {வாயு}, காலன், பாதாள லோகம், பெருங்கடலில் திரியும் இடையறாத நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரை வாய் {வடவாமுகம்}, கூரிய கத்தி, கடும் நஞ்சு, பாம்பு, நெருப்பு போன்ற இவை அனைத்தும் பெண்ணோடு கலந்திருக்கும் நிலையில் அவளோடு இருக்கின்றன.(29) ஐம்பெரும்பூதங்கள் எங்கிருந்து இருப்பில் உதித்தனவோ, படைப்பாளனான பிரம்மன் எங்கிருந்து அண்டத்தை விதித்தானோ, மனிதர்கள் எங்களிருந்து உதித்தனரோ அதே நித்திய பிரம்மத்தில் இருந்துதான் பெண்களும் இருப்பில் உதித்தனர். ஓ நாரதரே, பெண்கள் படைக்கப்பட்டபோதே, நான் பட்டியலிட்ட இந்தக் குற்றங்களும் அவர்களுக்குள் விதைக்கப்பட்டன" என்றாள் {பஞ்சசூடை}.(30)

[5] கும்பகோணம் பதிப்பில், "வேறு புருஷனைக் கண்டவுடன் பெண்களின் மனம் வேறுபடுகிறது"என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில் "மூலத்தில் வேறு விதமாய் இருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு பெண் ஓர் ஆணைக் கண்டவுடன் அவளது யோனி {பெண்குறி} ஈரமாகிறது" என்றிருக்கிறது.

[6] கும்பகோணம் பதிப்பில், "புணர்ச்சியினாலுண்டான ஸுகத்தை விரும்புவது போல மிக்க விருப்பமான பொருள் நிரம்பியிருப்பதையும், அலங்காரங்களையும், பொருட்குவியலையும், மதிப்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பெண்கள், பாலினக் கலவியில் ஈடுபாடு கொள்வதைப் போல, இன்பப் பொருட்கள், பல ஆபரணங்கள் மற்றும் பெரிய உடைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்