Friday, April 12, 2019

விபுலரின் வரம்புமீறல் ! - அநுசாஸனபர்வம் பகுதி – 42

The transgression of Vipula! | Anusasana-Parva-Section-42 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 42)


பதிவின் சுருக்கம் : பதிவின் சுருக்கம்: கடுந்தவங்களைச் செய்த விபுலர்; ருசி தேவிக்குக் கிட்டிய தெய்வீக மலர்கள்; சம்பையில் உள்ள தன் சகோதரியின் வசிப்பிடத்திற்குச் சென்ற ருசி; சகோதரி அம்மலர்களை விரும்பவே ஆசானின் ஆணையின் பேரில் மலர் கொணரச் சென்ற விபுலர்; மலர் கொணர்ந்து திரும்புகையில் விபுலர் கண்ட காட்சிகளும், கேட்ட உறுதிமொழிகளும்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "விபுலர், தமது ஆசானின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, மிகக் கடும் தவங்களைச் செய்தார். பெரும் சக்தியைக் கொண்ட அவர் இறுதியாகப் போதுமான தவத்தகுதியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார்.(1) தாம் செய்திருக்கும் சாதனையில் செருக்கடைந்த அவர், ஓ! ஏகாதிபதி, தமது சாதனைக்கான பெரும் புகழால் அனைவராலும் மதிக்கப்பட்டு அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் உலகத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(2) அந்தப் பலமிக்கப் பார்க்கவர், தமது சாதனையாலும், கடுந்தவங்களாலும் இம்மையையும், மறுமையையும் தாம் வென்றுவிட்டதாகக் கருதினார்.(3)


ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சில காலம் கடந்ததும், ருசியின் சகோதரி செய்ய வேண்டிய கொடையளிக்கும் விழாவுக்கான {ஆதான விழாவுக்கான} தருணம் வந்தது. அபரிமிதமான செல்வமும், தானியங்களும் அதில் கொடுக்கப்பட வேண்டும்[1].(4) அதே வேளையில், பேரழகுடன் கூடிய ஒரு தெய்வீகக் காரிகை வானத்தினூடே சென்று கொண்டிருந்தாள்.(5) அவள் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது அவளது உடலில் இருந்து சில மலர்கள் பூமியில் விருந்தன. தெய்வீக நறுமணம் கமழ்ந்த அந்த மலர்கள் ருசியின் கணவருடைய {தேவர்சர்மனுடைய} ஆசிரமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் விழுந்தன.(6) தரையில் சிதறிக் கிடந்த அந்த மலர்கள், அழகிய கண்களைக் கொண்ட ருசியால் எடுக்கப்பட்டன. விரைவில் அங்க நாட்டில் இருந்து ருசிக்கு ஓர் அழைப்பு வந்தது {தூதன் வந்தான்}.(7)

[1] "ஆதானம்" என்றழைக்கப்படும் விழாவானது, அந்த விழாவைச் செய்பவர்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் கொடையளிக்க வேண்டிய சடங்கைக் கொண்டதாகும். புனிதநூல் தரிப்பது, திருமணம், ஆறு அல்லது ஒன்பதாம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு ஆகியன அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தவையே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ருசிதேவியை அவள் ஸகோதரி மிகுதியான தனங்களையும், தான்யங்களையும் கொடுத்து அழைத்தாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ருசிதேவியின் ஸஹோதரியின் கிருகத்தில் தனதான்யங்கள் மிகுதியுள்ள விவாகம் வந்தது என்பது பழைய உரை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செல்வங்கள் மற்றும் தானியங்களை ருசியின் சகோதரிக்குக் கொடையளிக்க வேண்டிய தருணம் வந்தது" என்றிருக்கிறது.

மேற்குறிப்பிடப்பட்ட ருசியின் சகோதரியுடைய பெயர் பிரபாவதியாகும். அவள் அங்கர்களின் ஆட்சியாளனான சித்திரரதனின் மனைவியாக இருந்தாள்[2].(8) மிக மேன்மையான நிறத்தைக் கொண்டவளான ருசி, அந்த மலர்களைத் தன் கூந்தலில் சூடிக் கொண்டு, தான் அழைக்கப்பட்ட அங்கர்களின் மன்னனுடைய அரண்மனைக்குச் சென்றாள்.(9) அவளது கூந்தலில் இருந்த மலர்களைக் கண்டவளும், அழகிய கண்களைக் கொண்டவளுமான அங்கர்களின் ராணி, தன் சகோதரியிடம் தனக்கும் சிலவற்றைத் தருமாறு கேட்டாள்.(10)

[2] இந்தச் சகோதரிகளில் ஒருவர் பிராமணரையும், மற்றொருவர் க்ஷத்திரியரையும் திருமணம் செய்திருக்கின்றனர்.

அழகிய முகத்தைக் கொண்ட ருசி, தன் சகோதரியின் கோரிக்கையைத் தன் கணவனிடம் {தேவர்சர்மனிடம்} விரைவாகத் தெரிவித்தாள். முனிவர் தமது மனைவின் சகோதரியுடைய {கொழுந்தியுடைய} வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.(11) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மன், தமது சீடரான விபுலரைத் தம் முன் அழைத்து, "செல், செல்வாயாக" என்று சொல்லி அவரிடம் அதே வகையைச் சார்ந்த சில மலர்களைக் கொண்டு வரச் சொன்னார்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் தமது ஆசானின் ஆணையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெருந்தவசியான விபுலர், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்துவிட்டு, ருசி தேவி தனது சகோதரி ஆசைப்பட்ட மலர்களை எங்கிருந்து எடுத்திருந்தாளோ அதே இடத்திற்குச் சென்றார்.(13) ஆகாயத்தில் இருந்து மலர்கள் விழுந்த (ருசியால் எடுக்கப்பட்ட மலர்கள் விழுந்த) இடத்திற்கு வந்த விபுலர், அங்கே இன்னும் சில மலர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். அந்த மலர்கள் அனைத்தும், தாங்கள் வளர்ந்த செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்பட்டவை போல இருந்தன. அவற்றில் எதுவும் கொஞ்சம்கூட வாடாமல் இருந்தன.(14)

அவர் பேரழகுடைய அந்தத் தெய்வீக மலர்களை எடுத்துக் கொண்டார். ஓ! பாரதா, தெய்வீக நறுமணத்தைக் கொண்ட அம்மலர்களைத் தமது கடும் தவங்களின் விளைவால் விபுலர் அடைந்தார்.(15) தமது ஆசானின் ஆணைகளை நிறைவேற்றி, அவற்றை அடைந்த அவர் பெரும் மகிழ்ச்சியுடன் சம்பக மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சம்பை {சம்பா} நகரத்திற்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.(16) அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் இரண்டு மனிதர்கள் தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு வட்டமாக வலம் வந்து கொண்டிருந்தனர்.(17) அவர்களில் ஒருவன் அடிகளை வேகமாக வைத்து, அந்த இயக்கத்தின் இசைவைக் கெடுத்தான். ஓ மன்னா, இதன் காரணமாக அவர்களுக்குள் ஒரு சச்சரவு நேர்ந்தது.(18)

உண்மையில் அவர்களில் ஒருவன், "நீ வேகமாக அடி எடுத்து வைத்தாய்" என்று அடுத்தவனைக் குற்றஞ்சாட்டினான். மற்றவனோ, "இல்லை" என்றான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ஒவ்வொருவனும் அடுத்தவர் மறுத்ததை உறுதி செய்தும், அடுத்தவர் உறுதி செய்ததை மறுத்தும், தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தான்.(19) இவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் அவர்களுக்குள் சச்சரவு நடந்து வந்தபோது, அவர்களுக்கு மத்தியில் ஓர் உறுதிமொழி கேட்கப்பட்டது. உண்மையில், அவர்களில் ஒவ்வொருவனும் திடீரென விபுலரின் பெயரைச் சென்னான்.(20) அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இதுதான்: "நம்மிருவரில் எவன் பொய் சொல்கிறானோ, அவன் மறுமையில் மறுபிறப்பாளனான விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்" என்றனர்.(21)

அவர்களுடைய இச்சொற்களைக் கேட்டதும் விபுலரின் முகம் உற்சாகத்தை இழந்தது. அவர் தமக்குள், "நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். இந்த இருவருக்கிடையிலான சச்சரவு கடுமையாக இருக்கிறது. மேலும் இஃது எனக்குத் துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. உயிரினங்கள் அனைத்திற்காகவும் மறுமையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மிகவும் துன்பம் நிறைந்த கதியை நான் அடைவேன் என்று இவர்கள் இருவரும் குற்றஞ்சுமத்தும் வகையில் நான் என்ன பாவம் செய்தேன்?" என்று நினைத்தார்.(22,23) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, விபுலர், இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே, தமது தலையைத் தொங்கவிட்டு, உற்சாகமிழந்த மனத்துடன் தாம் என்ன பாவம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத் தொடங்கினார்.(24)

அவர் தமது வழியில் சிறிது தொலைவைக் கடந்து சென்றதும் தங்கம் மற்றும் வெள்ளியாலான பகடைக் காய்களைக் கொண்டு சூதாடிக் கொண்டிருக்கும் ஆறு மனிதர்களைக் கண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் ஏற்பட்டிருக்கும் மயிர்ச் சிலிர்ப்புடன் ஆவலோடு சூதாடுபவர்களாகத் தெரிந்தனர். (அவர்களுக்கு மத்தியில் சச்சரவு ஏற்பட்ட போது) அவர்களும் ஏற்கனவே முதல் இருவர் ஏற்ற உறுதிமொழியைப் போலவே ஏற்பதை விபுலர் கேட்டார். உண்மையில், அவர்களது சொற்களும் விபுலரை அதே வகையிலேயே குறிப்பிட்டன.(25,26) {அவர்கள்}, "நம்மில் எவன் பேராசையால் வழிநடத்தப்பட்டு முறையற்ற வழியில் செயல்படுகிறானோ அவன் மறுமையில் விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்" {என்றனர்}.(27)

எனினும், ஓ! குருகுலத்தோனே, எவ்வளவுதான் முயன்று நினைவுகூர்ந்தாலும், தமது சிறு வயதில் இருந்து கூடத் தாம் அத்துமீறலேதும் செய்ததாக விபுலரால் நினைவுகொள்ள முடியவில்லை.(28) உண்மையில், நெருப்புக்கு மத்தியில் உள்ள மற்றொரு நெருப்பைப் போல அவர் எரியத் தொடங்கினார். அந்தச் சாபத்தைக் கேட்டு அவரது மனம் துயரால் எரிந்தது.(29) இத்துன்ப நிலையிலேயே நீண்ட நேரம் கடந்து சென்றது. இறுதியாக, இந்திரனின் சதியில் இருந்து தமது ஆசானின் மனைவியைப் பாதுகாக்கத் தாம் மேற்கொண்ட வழிமுறைகளை நினைவுகூர்ந்தார்.(30) {அவர்}, "அங்கத்தோடும் அங்கமும், முகத்தோடு முகமும் வைத்து நான் அந்தப் பெண்ணின் உடலில் ஊடுருவினேன். இவ்வழியில் நான் செயல்பட்டிருந்தாலும் நான் இந்த உண்மையை என் ஆசானிடம் சொல்லவில்லையே" {என்று நினைத்தார்}.(31)

ஓ! குரு குலத்தோனே, விபுலர் தம்மிடம் கண்ட வரம்புமீறல் இதுவே. உண்மையில், ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி, அதுதான் அவர் செய்த அத்துமீறல் என்பதில் ஐயமில்லை.(32) அவர் சம்பை நகரத்திற்குத் திரும்பி தமது ஆசானிடம் மலர்களைக் கொடுத்தார். மூத்தோரிடமும், பெரியோரிடமும் அர்ப்பணிப்புமிக்க அவர், தமது ஆசானை முறையான வடிவில் வழிபட்டார்" என்றார் {பீஷ்மர்}.(33)

அநுசாஸனபர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்