Friday, April 12, 2019

விபுலரின் கதி! - அநுசாஸனபர்வம் பகுதி – 43

The state attained by Vipula! | Anusasana-Parva-Section-43 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 43)


பதிவின் சுருக்கம் : விபுலர் செய்த வரம்புமீறலை விளக்கிச் சொன்ன தேவசர்மன்; ஆசானால் மீட்கப்பட்ட விபுலர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, பெருஞ்சக்திமிக்கவரான தேவசர்மன், பணி செய்து திரும்பி வந்த தமது சீடரைக்{விபுலரைக்} கண்டு சொன்ன சொற்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1)


தேவசர்மன், "ஓ! விபுலா, ஓ! சீடா, பெருங்காட்டில் நீ பயணித்தபோது கண்டதென்ன? ஓ! விபுலா, நீ யாவரைக் காண்டாயோ அவர்கள் உன்னை அறிவர். ருசியைப் பாதுகாக்கும் காரியத்தில் நீ எவ்வாறு செயல்பட்டாய் என்பதை நானும், என் மனைவியான ருசியும் அறிவோம்" என்றார்.(2)

விபுலர், "ஓ! மறுபிறப்பாள முனிவரே, நான் முதலில் கண்ட அந்த இருவர் யாவர்? அதற்கடுத்து நான் கண்ட அறுவர் யாவர்? அவர்கள் யாவரும் என்னை அறிந்திருந்தனர். உண்மையில், உமது பேச்சினூடாகக் குறிப்பாகச் சொல்லும் அவர்கள் யாவர்?" என்று கேட்டார்.(3)

தேவசர்மன் {விபுலரிடம்}, "ஓ! மறுபிறப்பாளா, நீ முதலில் கண்ட இருவர் பகலும், இரவும் ஆவர். அவர்கள் இடையறாமல் ஒரு வட்டத்தைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் உன் குற்றத்தின் வரம்புமீறலை அறிவார்கள்.(4) ஓ! கல்விமானான பிராமணா, உற்சாகமாகப் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக (எண்ணிக்கையில் அறுவராக) நீ கண்ட வேறு மனிதர்கள் பருவ காலங்களாவர் {ருதுக்களாவர்}. அவர்களும் உன் வரம்புமீறல்களை அறிந்திருக்கின்றனர்.(5) கமுக்கத்தில் பாவமிழைத்த எந்தப் பாவியும், தன் வரம்புமீறலைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும், வேறு எவரும் அறியவில்லை என்பதாகவும் ஓர் உறுதியான எண்ணத்தை வளர்க்கக்கூடாது.(6) ஒரு மனிதன் கமுக்கத்தில் செய்யும் பாவச் செயலை பருவகாலங்களும் {ருதுக்களும்}, பகலும், இரவும் எப்போதும் காண்கின்றன.(7)

(நீ செய்த காரியத்திற்கு) பாவிகளுக்கான உலகமே உனதாகும். நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்லவில்லை. உன் பாவத்தை யாரும் அறியவில்லை என்பதே உன் நம்பிக்கையாக இருந்தது, அந்தத் தீர்மானமே உன்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(8) நீ உன் ஆசானிடம் மொத்த உண்மையையும் சொல்லவில்லை; ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரிடம் மறைத்தாய். நீ கேட்கும் வகையில் இவ்வாறு பேசிய பருவகாலங்களும், பகலும், இரவும், இந்த உன் வரம்புமீறலை உனக்கு நினைவூட்டுவது முறை என நினைத்தன.(9) பகல், இரவு மற்றும் பருவகாலங்கள், ஒரு மனிதன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் எப்போதும் அறிபவையாக இருக்கின்றன.(10) ஓ! மறுபிறப்பாளா, தவறு செய்ததாக அஞ்சி நீ என்னிடம் சொல்லத் துணியாததை முழுதும் அறிந்தவர்களாக இருந்ததால் அவர்கள் இவ்வழியில் உன்னிடம் பேசினார்கள்.(11) இதன் காரணமாகப் பாவிகளுக்கான உலகங்களே உனதாகும். நீ செய்ததை என்னிடம் நீ சொல்லவில்லையே.(12)


ஓ! மறுபிறப்பாளா {விபுலா}, இயற்கையாகவே பாவம் நிறைந்த இயல்பைக் கொண்ட என் மனைவியைப் பாதுகாக்க முழு வல்லமையுடன் நீ இருந்தாய். நீ செய்த காரியத்தில் பாவமேதும் இல்லை. இதனாலேயே நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன்.(13) ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நீ தீச்செயலேதும் செய்திருந்தால் எத்தாமதமுமின்றி உன்னை மொத்தமாகச் சபித்திருப்பேன்.(14) பெண்கள் ஆண்களுடன் கலக்கிறார்கள். ஆண்கள் இத்தகைய கலவியை மிகவும் விரும்புகின்றனர். எனினும், நீ வேறுபட்ட ஆவலுடன் {பாதுகாக்கும் நோக்கத்துடனே} என் மனைவியைப் பாதுகாத்தாய்[1]. நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் ஒரு சாபம் கிட்டியிருக்கும். இதையே நான் நினைக்கிறேன்.(15) ஓ! மகனே, நீ என் மனைவியைப் பாதுகாத்தாய். நீ செய்த விதமும், நீ சொல்லியிருந்தால் எவ்வாறு அறிவேனோ அவ்வாறே என்னால் அறியப்பட்டது. ஓ! மகனே, நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விட்டு நீ சொர்க்கத்திற்குச் செல்வாயாக" என்றார் {தேவசர்மன்}.(16)

[1] கும்பகோணம் பதிப்பில், "நீ பிழையொன்றும் செய்யவில்லை. அதனால் உன்னிடத்தில் அன்புள்ளவனாயிருக்கிறேன். மனத்தில் குற்றமற்றவர்களுக்குப் பாவம் வராது. உனக்கும் அப்படியேதான். மனைவி வேறுவிதமான சிநேகத்தினால் தழுவிக் கொள்ளப்படுகிறாள். மகள் மற்றொருவித சிநேகத்தினால் தழுவிக் கொள்ளப்படுகிறாள். ஒரு பெண்ணின் உருவத்தில் ஸந்யாஸிக்கும் காமுகனுக்கும் எண்ணங்கள் வெவ்வேறு மனத்தையடக்காமையினால்தான் பெரும்பாலும் ஜனங்கள் மோசம் போகின்றனர். உலகத்தில் வாய் உமிழ் நீரை எச்சிலென்று அருவருப்பதும், பெண் வாயிலுள்ள கள்ளுக்கு ஆசைப்படுவதும் இருக்கின்றன. கட்டப்படாத கெட்ட மனமுள்ளவர்களுக்கு மந்திரமுமில்லை; ஆத்மாவுமில்லை; தெய்வமுமில்லை. பெண்ணாசை, எனது என்னும் பற்று, பொருளாசைகளினால் கண்மூடப்பட்டுக் கருமம் செய்பவர்களுக்கு அந்தப் பெரும்பலன் கிடைக்காது. உள்ளே களங்கமில்லாமல் பரிசுத்தனான நீ ருசியினுள் பிரவேசித்ததனால் கெடுக்கப்படவில்லை. பிராம்மணோத்தமனே, நீ கெட்ட நடையுள்ளவன் என்று கண்டிருப்பேனாயின் உன்னைக் கோபத்தினால் சபித்திருப்பேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பெண்கள் ஆண்களுடன் கலவிபுரிகிறார்கள், ஆண்களும் அதைச் சிறந்த காரியமாகக் காண்கிறார்கள். எனினும், உன் நோக்கம் அவளைப் பாதுகாப்பதாக இருந்தது. வேறு வகையில் இருந்தால் சாபம் பெறும் கதியை நீ அடைந்திருப்பாய். ஓ மகனே, நீ அவளைப் பாதுகாத்தாய், நான் அதை அறிந்திருக்கிறேன். ஓ மகனே, நான் உன்னிடம் நிறைவை அடைந்தேன்" என்றிருக்கிறது.

பெரும் முனிவரான தேவசர்மன், விபுலரிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தமது மனைவியுடனும், தமது சீடருடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார்.(17) ஓ! மன்னா, இந்த வரலாற்றை முன்னொரு சந்தர்ப்பத்தில் கங்கைக்கரையில் வைத்து ஓர் உரையாடலின் போக்கில் பெரும் தவசியான மார்க்கண்டேயர் எனக்குச் சொன்னார்.(18) எனவே, நான் இஃதை உனக்குச் சொன்னேன். (அனைத்தை வகை மயக்கங்கள் மற்றும் வாய்ப்புகளில் இருந்தும்) பெண்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களில் அறம் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்கள் என்ற இருவகையினரும் காணப்படுகின்றனர்.(19)

அறம் சார்ந்த பெண்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர். (உயிரினங்கள் அனைத்தையும் எங்கும் பேணி வளர்ப்பதால்) அவர்களே இந்த அண்டத்தின் தாய்மார் {லோகமாதாக்கள்} ஆவர். நீர்நிலைகள் மற்றும் காடுகளோடு கூடிய இந்தப் பூமியைத் தாங்குபவர்கள் அவர்களே.(20) பாவம் நிறைந்தோரும், தீய நடத்தை கொண்டோரும், குலத்தை அழிப்போரும், பாவம் நிறைந்த செயல்களையே செய்யத் துணிந்தோருமான பெண்களை அவர்களின் உடல்களில் தோன்றி வெளிப்படும் தீய குறியீடுகளை {துர்லக்ஷணங்களைக்} கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.(21) உயர் ஆன்ம மனிதர்களாலும் இவ்வாறே பெண்களைப் பாதுகாக்க முடியும். ஓ! மன்னர்களில் புலியே, வேறு எந்த வகையிலும் அவர்களைப் பாதுகாக்க முடியாது.(22) ஓ! மனிதர்களின் தலைவா, பெண்கள் கொடியவர்களாவர். அவர்கள் கொடிய ஆற்றலைக் கொண்டவர்கள். அவர்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவர்களைவிட, அவர்களின் அன்புக்கோ, விருப்பத்திற்கோ உரியவர்கள் வேறு எவருமில்லை.(23) பெண்கள், உயிருக்கே அழிவை ஏற்படுத்தும் (அதர்வண) மந்திரங்களைப் போன்றவர்களாவர். ஒருவனோடு வாழ்வதாக உடன்பட்ட பிறகும், பிறரோடு செல்ல அவர்கள் அவனைக் கைவிடத் தயாராக இருப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே, எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒரே ஒருவனிடம் ஒருபோதும் அவர்கள் நிறைவடைவதில்லை.(24)

மனிதர்கள் அவர்களிடம் அன்பேதும் உணர வேண்டியதில்லை. ஓ! மன்னா அவர்களிடம் பகைமையும் பாராட்ட வேண்டியதில்லை. அறத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் துணையைத் தயக்கத்துடனும், பற்றில்லாமலும் அனுபவிக்க வேண்டுமேயன்றி ஊக்கத்துடனும், பற்றுடனும் {அனுபவிக்கக்}கூடாது.(25) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வேறுவகையில் செயற்படும் ஒரு மனிதன் நிச்சயம் அழிவையே அடைவான். ஓ! மன்னர்களில் புலியே, அனைத்துக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறிவே மதிப்பிற்குரியதாக இருக்கிறது.(26) பெண்ணைப் பாதுகாப்பதில் வென்ற ஒரே மனிதர் விபுலர் மட்டுமே. ஓ! மன்னா, மூவுலகிலும் பெண்களைப் பாதுகாக்கவல்லவர்களென வேறு எவரும் இல்லை" என்றார் {பீஷ்மர்}.(27)

அநுசாஸனபர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்