Monday, April 15, 2019

பெண்களை மதிப்பீராக! - அநுசாஸனபர்வம் பகுதி – 46

Honour women! | Anusasana-Parva-Section-46 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 46)


பதிவின் சுருக்கம் : பெண்களுக்குப் பொருள் கொடுத்தல் மற்றும் அவர்களை அன்போடு நடத்தல் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிம்}, "பழைய வரலாறை அறிந்தவர்கள், பிரசேதஸின் மகனான தக்ஷனின் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்கிறார்கள். "எந்தக் கன்னிகையைப் பொறுத்தவரையில், அவளது உறவினர்களால் மணக்கொடையின் வடிவில் ஏதும் பெறப்படவில்லையோ, அவளை விற்பனை செய்யப்பட்டவளாகச் சொல்ல முடியாது" {என்பதே அந்த ஸ்லோகம்}[1].(1) திருமணத்தில் கரம்பற்றப்படும் கன்னிகையை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தி, ஏற்புடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும்.(2) அவளது தந்தை, சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் {கணவனின் சகோதரர்கள்} ஆகியோர் நன்மையை அறுவடை செய்யும் விருப்பம் கொண்டவர்களாக இருந்தால், அவளை அனைத்து வகையிலும் மதித்து, ஆபரணங்களால் அவளை அலங்கரிக்க வேண்டும். அத்தகைய நடத்தை அவர்களைப் போதுமான மகிழ்ச்சிக்கும், நன்மைக்கும் வழிநடத்திச் செல்லும்.(3)


[1] "அந்தக் கன்னிகையே நேரடியாக ஆபரணங்களை ஏற்றுக் கொள்ளலாம். அஃது இந்தப் பரிவர்த்தனையை விற்பனையாக மாற்றிவிடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலோ, இத்தகைய விருப்பமின்மை மற்றும் இன்பமில்லாமையால் {அவள்} அவனை மகிழ்ச்சியடையச் செய்யத் தவறினாலோ, அந்தக் கணவன் தன் குலத்தைப் பெருக்க ஒருபோதும் சந்ததியைப் பெறக்கூடாது.(4) ஓ! மன்னா, பெண்கள் எப்போதும் வழிபடப்பட்டு, அன்புடன் நடத்தப்பட வேண்டும். எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தேவர்களே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(5) எங்கே பெண்கள் வழிபடப்படவில்லையோ, அங்கே செயல்கள் அனைத்தும் கனியற்றவையாகின்றன. ஒரு குடும்பத்திலுள்ள பெண்கள், தாங்கள் நடத்தப்படும் விதத்தால் துன்பத்தை அடைந்து கண்ணீர் விட்டால், அந்தக் குடும்பம் விரைவில் அழிந்து போகும்.(6)

பெண்களால் சபிக்கப்படும் வீடுகள், ஏதோ அதர்வணச் சடங்கால் எரிக்கப்பட்டதைப் போல அழிந்து, நிர்மூலமடையும். அத்தகைய வீடுகள் தங்கள் ஒளியை இழக்கும். ஓ! மன்னா, அவற்றின் வளர்ச்சியும், செழிப்பும் இல்லாமல் போகும்.(7) மனு, தாம் சொர்க்கத்திற்குச் செல்லுமுன், "பெண்கள் பலமில்லாதவர்கள், ஆண்களின் கவர்ச்சிமிக்க மயக்கும் தந்திரங்களுக்கு எளிதில் இரையாகிறவர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் அன்பை ஏற்கும் இயல்புடையவர்கள், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்கள்" என்று சொல்லி ஆண்களின் பாதுகாப்பின்கீழ் அவர்களைக் கொண்டு வந்தார்.(8) அவர்களுக்கு மத்தியிலேயே வன்மம் நிறைந்தவர்களும், கௌரவங்களில் பேராசை கொண்டோரும், கொடிய மனம் கொண்டவர்களும், அன்பற்றவர்களும், ஊடுருவ முடியாத அறிவைக் கொண்டவர்களுமான சிலரும் இருக்கின்றனர். எனினும், பெண்கள் மதிக்கத் தகுந்தவர்களாவர். மனிதர்களே அவர்களை மதிப்பீராக.(9)

ஆண்களின் அறம் பெண்களையே சார்ந்திருக்கிறது. இன்பங்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் முற்றிலும் அவர்களையே சார்ந்திருக்கின்றன. நீங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்து, அவர்களை வழிபடுவீராக. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவர்களின் முன்னிலையில் தளர்த்துவீராக.(10) சந்ததியைப் பெறுதல், ஏற்கனவே பிறந்த பிள்ளைகளைப் பேணி வளர்த்தல், சமூகத்திற்குத் தேவையான அனைத்துச் செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பெண்களையே தங்களுக்கான காரணமாகக் கொண்டிருக்கின்றன.(11) பெண்களைக் கௌரவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நோக்கங்கள் அனைத்தும் கனியும் நிலையை நிச்சயம் அடைவீர்கள்.

இது தொடர்பாக, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகனின் வீட்டைச் சார்ந்த ஓர் இளவரசி {சீதை} பாடிய ஸ்லோகம் ஒன்றிருக்கிறது. அது பின்வருமாறு:(12) "பெண்களுக்கென விதிக்கப்பட்ட வேள்விகள் ஏதுமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய சிராத்தங்கள் ஏதுமில்லை. அவர்கள் நோற்க வேண்டிய நோன்புகள் ஏதுமில்லை. அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதும், விருப்பத்துடன் கீழ்ப்படிருந்திருப்பதும் மட்டுமே அவர்களுடைய ஒரே கடமையாகும். அந்தக் கடமையைச் செய்வதன் மூலமே அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(13) குழந்தைப் பருவத்தில் தந்தை அவளைப் பாதுகாக்கிறான். இளமையில் கணவன் அவளைப் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். அவளது வாழ்வின் எக்காலத்திலும் பெண்ணானவள் விடுதலை பெறத் தகுந்தவளல்ல.(14) செழிப்பின் தேவிகள் பெண்களே. செல்வாக்கையும், செழிப்பையும் விரும்பும் மனிதன் அவர்களைக் கௌரவிக்க வேண்டும். ஓ! பாரதா, பெண்களைப் பேணிக் காப்பதன் மூலம் ஒருவன் செழிப்பின் தேவியையே பேணி வளர்க்கிறான் என்றும், அவளைப் பீடிப்பதன் மூலம் அவன் செழிப்பின் தேவியைத் துன்புறுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது" என்றார் {பீஷ்மர்}.(15)

அநுசாஸனபர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்