Sunday, April 21, 2019

சியவனரும் மீன்களும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 50

The fishes and Chyavana! | Anusasana-Parva-Section-50 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 50)


பதிவின் சுருக்கம் : தோழமையினால் ஏற்படும் கருணை குறித்துச் சொல்வதற்காக சியவனரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பனிரெண்டு வருடம் நீரில் தவமிருந்த சியவனர்; நீர்வாழ் உயிரினங்களுடன் அவருக்கு இருந்த தோழமை; மீன்பிடித்த மீனவர்கள்; இறந்த மீன்களைக் கண்டு துயருற்ற சியவனர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அடுத்தவர் துயரத்தைக் கண்டு உணரும் கருணை, அல்லது பரிதாப உணர்வின் இயல்பென்ன? ஒருவன் மற்றவனுடன் தோழமையுடன் வாழ்வதன் விளைவால் அந்த மற்றவனிடம் அவன் கொள்ளும் கருணை, அல்லது பரிவு உணர்வின் இயல்பென்ன? பசுக்கள் தொடர்புடைய உயர்ந்த அருளின் (அளவென்ன?) இயல்பென்ன? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இதுதொடர்பாக ஒரு பழங்கதையில் நஹுஷனுக்கும், முனிவர் சியவனருக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில், பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவருமான பெரும் முனிவர் சியவனர், உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைச் சில காலத்திற்கு வாழ விரும்பி அதன் படியே வாழவும் தொடங்கினார்.(3) செருக்கு, கோபம், இன்பதுன்பங்கள் ஆகியவற்றைக் கைவிட்ட அந்தத் தவசி அந்நோன்பு நோற்கும் உறுதியேற்றுக் கொண்டு, உதவாஸ விதிகளின் படி பனிரெண்டு ஆண்டுகள் வாழத் தொடங்கினார்[1].(4) அம்முனிவர் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதேபோலவே அவர் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அந்தப் பலமிக்கத் தவசி அனைவரும் நடந்து கொள்ளும் நடத்தையால் நிலவுக்கு ஒப்பானவராக இருந்தார்.(5)

[1] கும்பகோணம் பதிப்பில், "ப்ருகு வம்சத்தவரான ச்யவன மகரிஷி நீருக்குள் வஸித்துக் கொண்டு பெருந்தவம் செய்யத் தொடங்கினார். அம்முனிவர் கர்வத்தையும், கோபத்தையும், மகிழ்ச்சியையும், துயரத்தையும் ஒழித்துப் பன்னிரண்டு வருஷ காலம் ஜலத்தில் வஸித்துக் கொண்டு தவம் செய்தார்" என்றிருக்கிறது.

தேவர்கள் அனைவரையும் வணங்கி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தம்மைத் தூய்மை செய்து கொண்ட அவர், கங்கையும், யமுனையும் கலக்கும் இடத்தில் உள்ள நீரில் நுழைந்து, உயிரற்ற ஒரு மரக்கட்டையைப் போல அங்கே நின்று கொண்டிருந்தார்.(6) காற்றுக்கு ஒப்பான வேகத்தைக் கொண்டவையும், சீற்றத்துடன் முழங்கி வருபவையுமான அவ்விரு ஆறுகளின் நீரோட்டத்தை எதிர்த்து அஃதை அவர் தமது தலையில் தாங்கினார்.(7) பிரயாகையில் கலக்கும் கங்கை, யமுனை, பிற ஆறுகள், தடாகங்கள் ஆகியன அந்த முனிவரைப் பீடிக்காமல் (அவருக்கான மதிப்பைக் காட்டி) அவரைக் கடந்து சென்றன.(8) ஒரு மரக்கட்டையின் தன்மையை அடைந்த அந்தப் பெரும் முனிவர் சில வேளைகளில் அந்த நீரிலேயே கிடந்து சுகமாக உறங்கினார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சில வேளைகளில் அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி நிமிர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.(9) அந்த நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஏற்புடையவராக அவர் இருந்தார். இவை யாவும் சிறு அச்சமேதுமில்லாமல் அந்த முனிவரின் உதடுகளை முகர்ந்து பார்த்தனர்.(10)

அந்தப் பெரும் நீர்ச் சங்கமத்தில் அம்முனிவர் இவ்வழியிலேயே நெடுங்காலம் இருந்தார். ஒரு நாள், சில மீனவர்கள் அங்கே வந்தனர்.(11) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, அம்மனிதர்கள் கைகளில் வலைகளுடன் அம்முனிவர் இருந்த இடத்திற்கு வந்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்கள் அனைவரும் மீன் பிடிக்க விரும்பினர்.(12) நல்ல உடற்கட்டு, அகன்ற மார்பு, பெரும் பலம் தன்னுத் துணிவைக் கொண்டவர்களும், நீருக்கஞ்சி ஒருபோதும் திரும்பாதவர்களும், தங்கள் வலைகளின் மூலம் ஈட்டுவதைக் கொண்டு வாழ்பவர்களுமான அம்மனிதர்கள், மீன்பிடிக்கத் தீர்மானித்தனர்.(13) ஓ! பாரதர்களின் தலைவா, பல மீன்களைக் கொண்ட அந்த நீர்நிலைக்கு வந்த அந்த மீனவர்கள், தங்கள் வலைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டினர்.(14) மீனை விரும்பியவர்களும், எண்ணிக்கையில் பலராக இருந்தவர்களுமான அந்தக் கைவர்தர்கள் {செம்படவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் வலைகளுடன் கங்கை மற்றும் யமுனையின் நீரில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டனர்.(15)

உண்மையில் அவர்கள், புதுக் கயிறுகளால் அமைக்கப்பட்டதும், போதுமான அளவுக்கு நீள அகலங்களுடன் கூடிய ஒரு பெரிய இடத்தைக் கவரவல்லதுமான தங்கள் வலையை நீரில் வீசினர்.(16) நீருக்குள் இறங்கிய அவர்கள் அனைவரும், மிகப் பெரியதும், ஒரு பெரிய இடத்தில் நன்கு பரவியிருந்ததுமான தங்கள் வலையைப் பெரும்பலத்துடன் இழுக்கத் தொடங்கினர்.(17 அவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், ஒருவர் சொல்வதை மற்றவர் செய்ய முழுமையாகத் தீர்மானித்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வலைக்குள் சிக்க வைப்பதில் வென்றனர்.(18) ஓ! மன்னா, அவ்வாறு அவர்கள் தங்கள் வலையை இழுத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மீன்களுடன் சேர்த்து பிருகுவின் மகனான சியவனரையும் எளிதாக இழுத்தனர்.(19) அவரது உடலில் ஆற்றுப் பாசிகள் அதிகம் வளர்ந்திருந்தன. அவரது தாடியும், சடாமுடியும் பச்சைநிறத்தில் இருந்தன. அவரது மேனி முழுவதும் சங்குகளும், தலைகளுடன் கூடிய வேறு மெல்லுடலிகளும் {பன்றிமுட்களும்} காணப்பட்டன.(20)

வேதங்களை நன்கறிந்தவரான அம்முனிவர் நீரில் இருந்து இவ்வாறு இழுக்கப்பட்டதைக் கண்ட அந்த மீனவர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் நின்று, நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்தும், மீண்டும் மீண்டும் தலைவணங்கினர்.(21) வலையில் அகப்பட்ட மீன்கள், வலை இழுக்கப்பட்டதன் மூலம் உண்டான அச்சம் மற்றும் துன்பத்தினாலும், நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாலும், தங்கள் உயிரை விட்டன.(22) மீன்களுக்கு நேர்ந்த இந்தப் பெரும் படுகொலையைக் கண்ட அந்தத் தவசி, கருணையால் நிறைந்து மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டார்.(23)

மீனவர்கள், "அறியாமையின் மூலம் நாங்கள் (புனிதமானவரான உம்மை நீரில் இருந்து இழுத்து) இப்பாவத்தை இழைத்துவிட்டோம். எங்களிடம் நிறைவடைவீராக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் எது? ஓ !பெருந்தவசியே, எங்களுக்கு ஆணையிடுவீராக" என்று கேட்டனர்".(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தம்மைச் சுற்றிலும் மீன்குவியல்களுக்கு மத்தியில் இருந்த சியவனர், "நான் மிகவும் விரும்பும் விருப்பத்தைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக.(25) நான் இந்த மீன்களோடு இறக்கப் போகிறேன், அல்லது என்னை இவற்றோடு சேர்த்து விற்று விடுவீராக. நான் இவற்றோடு சேர்ந்து நீரில் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். இத்தகைய நேரத்தில் நான் இவற்றைக் கைவிட விரும்பவில்லை" என்றார் {சியவனர்}.

அவர் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னதும், அந்த மீனவர்கள் பெரும் அச்சமடைந்தனர். வெளிறிய முகங்களுடன் கூடிய அவர்கள் மன்னன் நஹுஷனிடம் சென்று, நடந்தது அனைத்தையும் தெரிவித்தனர்" {என்றார் பீஷ்மர்}.(27)

அநுசாஸனபர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்