Saturday, April 20, 2019

இருபது வகை மகன்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 49

Twenty types of sons! | Anusasana-Parva-Section-49 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 49)


பதிவின் சுருக்கம் : இருபது வகை மகன்ளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, வகைகள் {வர்ணங்கள்} மற்றும் வகுப்புகள் {கலப்பு சாதிகள்} ஆகியவற்றைத் தனித்தனியாகவும், எவ்வகைப் பெண்களிடம் எவ்வகை மகன் பெறப்படுகிறான்? மகன்களாக எவரை உரிமை கொண்டாடலாம்? என்னென்ன வகை மகன்கள் இருக்கின்றனர்? என்பவை குறித்தும் எங்களுக்குச் சொல்வீராக.(1) மகன்களைப் பொறுத்தவரையில் சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன. ஓ! மன்னா, எங்கள் மனத்தைப் பீடிக்கும் ஐயங்களைப் போக்குவதே உமக்குத் தகும். உண்மையில், இக்காரியத்தில் நாங்கள் கலக்கத்தில் {தெளிவற்ற நிலையில்} இருக்கிறோம்" என்றான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் மடியில் பிறந்த பிள்ளையாக {அனந்தராஜனாக}{1} ஒருவனுடைய சுயமே கருதப்படுகிறது {தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் ஔரஸன் என்றழைக்கப்படுகிறான்}.

பிள்ளை பெறும் பணிக்காகத் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவன் மூலம் தன் மனைவியிடம் பிறந்த மகன் நிருக்தஜன்{2} என்றழைக்கப்படுகிறான்.

தன் மனைவியிடம் தன் அனுமதி இல்லாமல் வேறு எவராலோ பெறப்பட்ட மகன் பிரஸ்ருதஜன்{3} ஆவான்[1].(3)

தன் நிலையின் இருந்து வீழ்ந்தவிட்ட மனிதன் மூலம் தன் மனைவியிடம் பெறப்பட்ட மகன் பதிதஜன்{4} என்றழைக்கப்படுகிறான்.

கொடுக்கப்பட்டவன், ஆக்கப்பட்டவன் என மேலும் இரு மகன்களும்{5,6} இருக்கின்றனர்.

அத்யுதன்{7} என்றழைக்கப்படும் மற்றொருவனும் இருக்கிறான்[2].(4)

ஒரு கன்னிகையுடைய தந்தையின் இல்லத்தில் பிறந்த மகன் கானீனன்{8} என்றழைக்கப்படுகிறான்.

இவை தவிர்த்து அபத்வம்ஸஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறுவகை மகன்களும்{9....14},

அபஸதர்கள் என்றழைக்கப்படும் மேலும் அறுவரும்{15....20} இருக்கின்றனர்.

ஓ! பாரதா, சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு வகை மகன்கள் இவர்களே ஆவர் என்பதை அறிவாயாக" என்றார் {பீஷ்மர்}[3].(5)

[1] கும்பகோணம் பதிப்பில், "மந்திரத்தினால் நிஷேகஸம்ஸ்காரம் பெற்ற தனது மனைவியிடத்தில் தனக்குண்டாகும் புத்ரன் முதன்மையாக விதிக்கப்பட்ட ஔரஸபுத்ரனென்று அறிய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நியுக்தம் மூலம் அடையப்பட்ட மகன் பிரஸ்ரிதஜன் என்றழைக்கப்படுகிறான் என அறிவாயாக" என்றிருக்கிறது.

[2] "கணவன் முறையில்லாத ஒருவன் மூலம் ஒரு கன்னிகையிடம் அவளது திருமணத்திற்குப் பிறகு பெறப்பட்ட மகன், அவனுக்குச் சொந்தமாகாமல், அவளது கணவனுக்கே உரிய மகனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] ஆதிபர்வம் பகுதி 120ல் ஏற்கனவே பனிரெண்டு வகை மகன்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதில் இங்கே சொல்லப்படும் கானீனன் என்றொரு வகையும் இருக்கிறது.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அபத்வம்ஸஜர் என்றழைக்கப்படும் அறுவர் யாவர்? மேலும் அபஸதர்கள் என்பவர்கள் யாவர்? இவை யாவையும் விரிவாக எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தாழ்ந்த மூன்று வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு பிராமணனால் பெறப்படும் மகன்கள் {மூவர்}, தாழ்ந்த இரு வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு க்ஷத்திரியனால் பெறப்படும் மகன்கள் {இருவர்}, ஓ! பாரதா, தாழ்ந்த ஒரு வகையைச் சார்ந்த மனைவியிடம் ஒரு வைசியனால் பெறப்படும் மகன் {ஒருவன்} ஆகியோரே {இந்த அறுவரே} அபத்வம்ஸஜர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறே ஆறு வகைகளாக விளக்கப்படுகின்றனர். இப்போது அபஸதர்கள் யார் என்பதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(8)

ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு சூத்திரன் பெறும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் சூத்திர வகையைச் சார்ந்த ஒருவன் பெறும் மகன் விராத்யன் என்றழைக்கப்படுகிறான். வைசியப் பெண்ணிடம், ஒரு சூத்திரத் தந்தை பெறும் மகன் வைத்யன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவகை மகன்களும் அபஸதர் என்று அழைக்கப்படுகின்றனர்.(9)

ஒரு வைசியன் பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் கலப்பதன் மூலம் மாகதன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான், அதே வேளையில் க்ஷத்திரியப் பெண்ணிடம் வாமகன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான்.

க்ஷத்திரியனால் மேன்மையான வகைப் பெண்ணிடம் ஒரு வகை மகனைப் பெற முடியும்.(10) உண்மையில் ஒரு க்ஷத்திரியனால், ஒரு பிராமணப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் சூதன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவரும் கூட அபஸதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஓ! மன்னா, இந்த ஆறு வகை மகன்களும் மகன்களல்ல என்று சொல்ல முடியாது" என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவனுடைய நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனே அவனுடைய மகன் என்று சிலர் சொல்கின்றனர். மறுபுறம், ஒருவனுடைய வித்தில் இருந்து பெறப்பட்டவனே ஒருவனுடைய மகன் என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த இரு வகை மகன்களும் சமமானவர்கள்தானா? மேலும், அந்த மகன் யாருடையவன்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவனுடைய வித்தில் இருந்து பிறந்தவன் அவனுடைய மகனே. எனினும், வித்துக்குச் சொந்தக்காரன் அதில் இருந்து பிறக்கும் மகனைக் கைவிட்டால், அத்தகைய மகன் எவனுடைய மனைவியிடம் பெறப்பட்டானோ அவனுடையவனாவான். அத்யுதன் என்றழைக்கப்படும் மகனுக்கும் இதே விதியே பொருந்தும். அவன் எந்த மனிதனின் வித்திற்குப் பிறந்தானோ அவனுக்கே உரியவனாவான். இருப்பினும், வித்துக்குச் சொந்தக்காரன் அவனைக் கைவிட்டால், அவன் தன் தாயின் கணவனுடைய மகனாகிறான். சட்டம் இதையே அறிவிக்கிறது என்பதை அறிவாயாக" என்றார்.(13)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவன் எவனுடைய வித்தில் பிறக்கிறானோ அவனுக்கு மகனாகிறான் என்பதை நாம் அறிவோம். அந்த மகனை ஈன்றெடுக்கும் பெண்ணின் கணவன் அவனிடம் {அந்த மகனிடம்} உரிமையைப் பெறுவது எவ்வாறு? அதே போல அத்யுதன் என்றழைக்கப்படும் மகன், எவனுடைய வித்தில் இருந்து பிறந்தானோ அவனது மகனாகவே அறியப்பட வேண்டும். உரிமையும் வளர்ப்பும் முறிந்து போனதன் விளைவால் அவன் பிறரின் மகனாவது எவ்வாறு?" என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் தன் மடியில் பிறந்த மகனை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கைவிட்டால், உயிர் வித்து மட்டுமே மகன் என்ற நிலையை உண்டாக்க முடியாது என்பதால், அவனை அத்தகைய மகனின் தந்தையாகக் கருத முடியாது. நிலத்தை {மனைவியை} உரிமையாகக் கொண்ட மனிதனுக்கு உரியவனாகவே அத்தகைய மகன் கருதப்பட வேண்டும்.(15) ஒரு மனிதன் ஒரு மகனைப் பெற விரும்பி, கருவுற்றிருக்கும் பெண்ணை மணக்கும்போது, தன் மனைவிக்குப் பிறந்த மகனானவன், தன் நிலத்தில் விளைந்த கனியே என்பதால் அவனுக்கே உரியவனாவான். எந்த மனிதனின் உயிர்வித்தில் அந்த மகன் பிறந்தானோ, அவன் அத்தகைய மகனிடம் எந்த உரிமையும் கொள்ள முடியாது.(16) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒருவனது நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனும், தன்னால் பெறப்படாதவனுமான மகன், தன்னை உண்மையில் பெற்ற தந்தையின் அடையாளங்கள் அனைத்தையும் சுமக்கிறான் (தன் தாயின் கணவனுடைய அடையாளங்களைச் சுமப்பதில்லை). இவ்வாறு பிறக்கும் மகன், உடற்குறி அளிக்கும் சான்றுகளை மறைக்க முடியாது. அவன் கண் பார்வையிலேயே (மற்றொருவனுக்குரியவன் என்று) அறியப்படுவான்[4].(17) ஆக்கப்பட மகனைப் பொறுத்தவரையில், அவன் சில வேளைகளில் ஆக்கியவரின் பிள்ளையாகவும், வளர்த்தவரின் பிள்ளையாகவும் {கிருத்ரிமபுத்ரனாகக்} கருதப்படுகிறான். அவனது வழக்கில், மகன்தன்மைக்கான காரணமாக உயிர்வித்தோ, பிறந்த நிலமோ இருப்பதில்லை" என்றார்.(18)

[4] "அத்தகைய மகன் தாயின் கணவனுடைய உடைமையாவானேயன்றி பெற்றவனின் உடைமையாகமாட்டான். எனினும், பெற்றவன் அவனை உரிமைகொள்ளவும், வளர்க்கவும் விரும்பினால், அவன் பெற்றவனுக்குரியவனாகவே கருதப்பட வேண்டும். பெற்றவன் தன்னை மறைத்துக் கொண்டு, அவனைப் பெற விரும்பவில்லையெனில் தாயின் கணவன் அந்தப் பிள்ளைக்கு உரியவன் என்பதே கோட்பாடு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மகனாக ஆக்கப்பட்டவனும், எடுத்து வளர்க்கப்பட்டதன் காரணமாக மகன் என்ற நிலை உண்டானவனும், உயிர்வித்தையோ, பிறந்த நிலத்தையோ மகன் என்ற நிலைக்குக் காரணமாகக் கொள்ளாதவனுமான மகன் எவ்வகை மகனாவான்?" என்று கேட்டான்.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தந்தை மற்றும் தாயால் சாலையில் கைவிடப்பட்ட ஒரு மகனை ஒருவன் எடுத்து வளர்க்கும்போது, அவ்வாறு எடுத்து வளர்ப்பவன், பெற்றோரைத் தேடியும் காணத்தவறும்போது, அவனே அத்தகைய மகனின் தந்தையாகிறான், பின்னவனும் ஆக்கப்பட்ட மகன் {கிருத்ரிமபுத்ரன்} என்று அழைக்கப்படுகிறான்.(20) சொந்தங்கொள்ள எவரும் இல்லாதபோது அவன் தன்னை வளர்ப்பவருக்கு உரிமையாகிறான். மேலும் அத்தகைய மகன், தன்னை வளர்ப்பவர் சார்ந்த வகைக்கு உரியவனாகவே கருதப்படுகிறான்" என்றார்.(21)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அத்தகைய ஒருவனின் தூய்மைசெய் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எவருக்கு எத்தகைய சடங்குகள் செய்யப்பட வேண்டும்? அவன் எந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும்? ஓ!பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெற்றோரால் கைவிடப்பட்ட மகன், தன்னை எடுத்து வளர்த்தவரின் வகையையே அடைவதால், தன்னை எடுத்து வளர்ப்பவரின் வழக்கத்திற்கு இசைவாகவே அத்தகைய மகனின் {உபநயனம் முதலிய} தூய்மைச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.(23) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உண்மையில், அத்தகைய மகனை வளர்ப்பவன், தன் சொந்த குல மற்றும் உறவுகளின் நடைமுறைப்படி அவனுக்குண்டான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அத்தகைய மகனுக்குத் திருமணத்தில் அளிக்கப்படும் பெண்ணைப் பொறுத்தவரையிலும்கூட, அவள், அவனை வளர்ப்பவனின் வகையைச் சார்ந்தவளாகவே இருக்க வேண்டும்.(24) ஒரு மகனின் உண்மைத் தாயை உறுதி செய்ய முடியாதபோது மட்டுமே இவை யாவும் செய்யப்பட வேண்டும். மகன்களுக்கு மத்தியில், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவனும் {கானீனனும்}, திருமணத்திற்கு முன்பே கருவுற்ற தாய்க்குப்பிறந்து அதையடுத்து {திருமணத்திற்குப் பிறகு அவளால்} வளர்க்கப்பட்டு வருபவனும் {ஸஹோடனும்} மதிப்பற்றவர்களாகவும், மிக இழிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(25) எனினும், சட்டப்படியான திருமணத்தின் மூலம் தந்தையால் பெறப்பட்ட மகன்களுக்கு விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளையே இவர்கள் இருவரும் பெற வேண்டும். தந்தையின் வித்தில் பிறந்ததன் விளைவால் தந்தையின் மகனாகுபவன் {க்ஷேத்ரஜன்}, அபஸதர்கள் என்றழைக்கப்படும் மகன்கள், கன்னிப்பருவத்தில் மனைவியால் பெறப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு வளர்க்கப்படுபவர்கள் {ஸகோடர்கள்} ஆகியோரைப் பொறுத்தவரையில்,(26) பிராமணர்களும், பிறரும் தங்கள் தங்கள் வகைக்குரிய அதே தூய்மைச் சடங்குகளையே அவர்களுக்கும் செய்ய வேண்டும். பல்வேறு வகை மகன்கள் பொறுத்தவரையில் சாத்திரங்களில் காணப்படும் தீர்மானங்கள் இவையே. உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்?" என்று கேட்டார் {பீஷ்மர்}.(27)

அநுசாஸனபர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்