Tuesday, April 30, 2019

குசிகனிடம் நிறைவடைந்த சியவனர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 54

Chyavana gratified with Kusika! | Anusasana-Parva-Section-54 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 54)


பதிவின் சுருக்கம் : மாய மாளிகையையும், பல அற்புதக் காட்சிகளையும் கண்ட மன்னன் குசிகன்; தன் மனைவியிடம் முனிவரின் பெருமைகளைச் சொன்னது; குசிகனின் எண்ணங்களை மனத்தால் அறிந்த சியவனர் அவனுக்கு ஒரு வரமளிக்க முன்வந்தது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த இரவு கடந்ததும், விழித்தெழுந்த அந்த உயர் ஆன்ம மன்னன் {குசிகன்} தன் காலைச் சடங்குகளைச் செய்தான். தன் வசிப்பிடமாக முனிவரால் {சியவனரால்} தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காட்டுக்கு அவன் தன் மனைவியின் துணையுடன் சென்றான்.(1) அங்கே வந்ததும் அந்த ஏகாதிபதி {குசிகன்}, முற்றிலும் பொன்னாலானதும் அரண்மனை போன்றதுமான ஒரு மாளிகையைக் கண்டான். ரத்தினங்களாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் ஆன ஆயிரம் தூண்களைக் கொண்ட அது {மாளிகை} கந்தர்வர்களின் நீர்மாடக்கூடம் போல இருந்தது[1].(2) குசிகன், அந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீக வடிவமைப்புக்கான சான்றுகளைக் கண்டான். மேலும் அவன் அழகிய பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைகளையும், தாமரைகளுடன் கூடிய தடாகங்களையும் அங்கே கண்டார்;(3) ஓ! பாரதா, விலைமதிப்புமிக்க, ஆச்சரியகரமான பொருட்கள் நிறைந்தவையும், வாயில்கள் மற்றும் தோரணங்களோடு கூடியவையுமான மாளிகைகளையும் கண்டான். பொன்வயல்களுக்கு ஒப்பான வகையில் செழித்து வளர்ந்த புற்களுடன் கூடிய திறந்தவெளிகளையும், இடங்களையும் அங்கே கண்டான்.(4)


[1] "எப்போதும் மாறிக் கொண்டிருப்பவையும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நொடிக்கும் ஒரு வடிவத்தை வெளிப்படுத்துபவையும், பிற்பகலிலும், மாலையிலும் தோன்றுபவையுமான அழகிய மேகத்திரள்களே கந்தர்வர்களின் வசிப்பிடங்கள் அல்லது மாடமாளிகைகள் என்று கருதப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஹகாரங்கள் {ஒட்டுமாமரங்கள்}, கேதகங்கள் {தாழைகள்}, உத்தாலகங்கள் {குறும்பலா}, தவங்கள், அசோகங்கள், மலரும்நிலையில் உள்ள குந்தங்கள் {குறுக்கத்தி மரங்கள்}, அதிமுகங்களையும் {முல்லைக்கொடிகள்} அவன் கண்டான்.(5) சம்பகங்கள் {சண்பக மரங்கள்}, திலகங்கள் {திலகமரங்கள்}, பவ்யங்கள் {பலா மரங்கள்}, பனசங்கள் {மகிழ மரங்கள்}, வியாஞ்ஜுலங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணீகாரங்களையும் {கொன்றைமரங்கள்} அவன் அங்கே கண்டான்.(6) அழகாக வளர்ந்திருக்கும் சியாமங்கள், வாரணபுஷ்பங்கள் அஷ்டபடிகம் என்றழைக்கப்படும் கொடிகள் பலவற்றையும் மன்னன் கண்டான்.(7) மேலும் அம்மன்னன், பல்வேறு வகைத் தாமரங்களைப் பேரழகுடன் மலரும் மரங்களையும் (!), ஒவ்வொரு பருவகாலத்திற்கும் உரிய மலர்களையும் சுமக்கும் சில மரங்களையும் அங்கே கண்டான்[2]. தெய்வீகத்தேர்களையோ, அழகிய மலைகளையோ போலத் தெரிந்த பல மாளிகைகளையும் அவன் கவனித்தான்.(8)

[2] கும்பகோணம் பதிப்பில், "எக்காலத்திலும் பூத்திருக்கும் தாமரைக் குளங்களையும், கருநெய்தல் குளங்களையும், தேவவிமானங்களுக்கும், மலைகளுக்கும் ஒப்பான மாளிகைகளையும் கண்டான்" என்றிருக்கிறது.

ஓ! பாரதா சில இடங்களில் குளிர்ந்த நீர் நிறைந்த தடாகங்களும், வேறு சில இடங்களில் வெண்ணீர் நிறைந்த தடாகங்களும் இருப்பதைக் கண்டான். பல்வேறு வகைச் சிறந்த இருக்கைகளும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளும்,(9) பொன் மற்றும் இரத்தினங்களால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையும், மதிப்புமிக்கவையுமான துணிகள் மற்றும் போர்வைகள் விரிக்கப்பட்டவையுமான கட்டில்களும் அங்கே இருந்தன. நன்கு சமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு ஆயத்தமாக உணவு வகைகளும், பானங்களும் அங்கே இருந்தன.(10) பேசும் கிளிகள், பெண் கிளிகள், பிரிஞ்சராஜங்கள் {வண்டுகள்}, கோகிலங்கள் {குயில்கள்}, சதபத்ரங்கள் {மரங்குத்திகள்}, கோயஷ்டிகங்கள் {நாரைகள்}, குக்குபங்கள் {காட்டுக் கோழிகள்},(11) மயில்கள், சேவல்கள், தாத்யுஹங்கள் {குருட்டுக் காக்கைகள்}, ஜீவஜீவகங்கள் {கவுதாரிகள்}, சக்கோரங்கள், குரங்குகள், அன்னங்கள், சாரசங்கள் {கொக்குகள்}, சக்கரவாகங்கள் {வாத்துகள்} ஆகியன அங்கே இருந்தன.(12)

ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியாக இருக்கும் அப்சரஸ்களும், மகிழ்ச்சியான கந்தர்வக்கூட்டங்களும் ஆங்காங்கே இருப்பதை அவன் கண்டான்.(13) வேறு சில கந்தர்வர்கள் தங்கள் அன்புக்குரிய மனைவிகளுடன் அங்கே விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். மன்னன் சில வேளைகளில் இந்தக் காட்சிகளைக் கண்டான், சில வேளைகளில் அவனால் காண முடியவில்லை (ஏனெனில் அவை அவனது கண்களுக்கு முன்னால் தோன்றி மறைபவையாக இருந்தன).(14) மென்மையான குரலிசைகளையும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களைத் தங்கள் சீடர்களுக்கு எடுத்துரைக்கும் ஆசான்களின் இனிய குரல்களையும் அந்த ஏகாதிபதி கேட்டான். தடாகங்களில் விளையாடும் வாத்துகளின் இணக்கமான கொக்கரிப்புகளையும் கேட்டான்.(15)

இத்தகைய அழகிய காட்சிகளைக் கண்ட மன்னன் தனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினான், "இது கனவா? இவை யாவும் என் மனத்தின் மயக்கத்தால் ஏற்படுகின்றனவா? அல்லது இவையனைத்தும் உண்மைதானா?(16) ஓ!, நான் என் பூலோகவாசத்தைக் கைவிடாமலேயே சொர்க்கத்தின் இன்பத்தை அடைந்துவிட்டேன். ஒருவேளை இஃது உத்தரக் குருக்களின் புண்ணிய நாடா? அல்லது அமராவதி என்றழைக்கப்படும் தேவர்த்தலைவனின் வசிப்பிடமா?(17) ஓ! காண்பதற்கினிய அற்புதக் காட்சிகளைப் பார்க்கிறேன்" {என்று நினைக்கத் தொடங்கினான்}. இவ்வகையில் நினைத்த அந்த ஏகாதிபதி இறுதியாக அந்த முதன்மையான முனிவரை {சியவனரைக்} கண்டான்.(18) ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அமைக்கப்பட்ட தூண்களுடன் கூடிய அந்தப் பொன்மாளிகையில் ஒரு விலைமதிப்புமிக்கச் சிறந்த படுக்கையில் பிருகுவின் மகன் {சியவனர்} கிடந்தார்.(19) தன் மனைவியுடன் கூடிய மன்னன், மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் முனிவர் கிடந்த படுக்கைக்குச் சென்றான். எனினும், சியவனர் தாம் கிடந்த படுக்கையுடன் சேர்ந்து விரைவில் மறைந்துபோனார்.(20)

மன்னன் காட்டின் மற்றொரு பகுதியில், அம்முனிவர் குசப்புல்லாலான விரிப்பில் {தர்ப்பாஸனத்தில்} அமர்ந்து கொண்டு, மனத்தில் சில உயர்ந்த மந்திரங்களை உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(21) இவ்வாறே அம்முனிவர் தமது யோக சக்தியால் மன்னனை மலைப்படையச் செய்தார். அந்தக் கணத்திலேயே அந்த இனிய காட்டில் இருந்த அப்சரஸ் கூட்டங்களும், கந்தர்வக்கூட்டங்களும், அந்த அழகிய மரங்கள் அனைத்தும் மறைந்தன.(22) கங்கையின் கரை எப்போதும் போன்ற அமைதியை அடைந்து, குசப்புற்களாலும், எரும்புப்புற்றுகளாலும் மறைந்திருக்கும் பழைய தன்மையை அடைந்தது.(23) மன்னன் குசிகன், அந்த அற்புதக் காட்சியையும், உடனே அது மறைந்து போனதையும் தன் மனைவியுடன் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(24)

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்கூடிய அம்மன்னன் தன் மனைவியிடம், "ஓ! இனியவளே, எங்கும் காண முடியாத இனிமையான காட்சிகள் பலவற்றை நாமிருவரும் கண்டோம்.(25) இவையனைத்தும் பிருகு மகனின் {சியவனரின்} அருளாலும், அவருடைய தவப் பலத்தாலும் நடைபெறுகிறது. ஒருவன் தன் கற்பனையில் காணும் அனைத்தையும் தவங்களின் மூலம் அடைய முடிகிறது.(26) மூவுலகங்களின் ஆட்சியுரிமையைவிடத் தவங்கள் மேன்மையானவை. நன்கு செய்யப்பட்ட தவங்களின் மூலம் விடுதலையையே {முக்தியையே} அடைய முடியும். உயர் ஆன்மா கொண்டவரும், தெய்வீகமானவருமான முனிவர் சியவனருடைய தவங்களின் வலிமையைப் பார். அவர் விரும்பினால் (இப்போது இருப்பதைத் தவிர இன்னும்) வேறு உலகங்களையும் உண்டாக்க முடியும்.(27,28) புனிதமான வாக்கு, புத்தி மற்றும் செயல்களை அடைவதற்காக மட்டுமே இவ்வுலகில் பிராமணர்கள் பிறக்கிறார்கள். சியவனரைத் தவிர வேறு யாரால் இவை அனைத்தையும் செய்ய முடியும்?(29) அரசுரிமையை எளிதில் அடைந்துவிடலாம். ஆனால் பிராமண நிலையானது அடைய முடியாததாகும். ஒரு பிராமணரின் பலத்தின் மூலமே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகளைப் போல நாம் ஒரு தேரில் பூட்டப்பட்டோம்" என்றான்.(30)

மன்னனின் மூளையில் தோன்றிய இந்நினைவுகளைச் சியவனர் அறிந்தார். மன்னனின் சிந்தனைகளை உறுதி செய்து கொண்ட முனிவர் அவனிடம் {குசிகனிடம்} "விரைவாக இங்கே வா" என்று சொன்னார்.(31)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும், ராணியும் பெரும் தவசியை அணுகி வழிபாட்டுக்குத்தகுந்த அவரிடம் தலைவணங்கி நின்றனர்.(32) ஓ! மனிதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு ஆசிகூறி அம்மன்னனுக்கு ஆறுதல் அளித்து, "இந்த இருக்கையில் அமர்வாயாக" என்றார்.(33)

இதன் பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பிருகுமகன் {சியவனர்} எவ்வகை வஞ்சனையோ, பொய்மையோ இன்றி மென்மையான சொற்கள் பலவற்றால் மன்னனை நிறைவடையச் செய்து,(34) "ஓ! மன்னா, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட அறிவுப்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும் நீ முற்றிலும் அடக்கியிருக்கிறாய். அதன் காரணமாகவே நான் உனக்காகத் தயாரித்த கடுஞ்சோதனைகளில் இருந்து சிறுதீங்குமின்றி நீ வெளியேறியிருக்கிறாய்.(35) ஓ! மகனே, வாக்குடைய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டுத் துதிக்கப்பட்டேன். உன்னிடம் எப்பாவமும் இல்லை, மிகச் சிறிய பாவமும் உன்னிடம் இல்லை.(36) ஓ! மன்னா, எனக்கு விடை கொடுப்பாயாக, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே இப்போது திரும்பிச் செல்லப் போகிறேன். ஓ! ஏகாதிபதி, நான் உன்னிடம் பெரும் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குத் தரத் தயராக இருக்கும் வரத்தை ஏற்பாயாக" என்றார்.(37)

குசிகன் {சியவனரிட, "ஓ! புனிதமானவரே, நெருப்புக்கு மத்தியில் வசிப்பவனைப் போலவே நான் உமது முன்னிலையில் இருந்தேன். ஓ! பிருகு குலத்தின் தலைவரே, நான் இன்னும் எரியாமல் இருப்பதே போதுமானதாகும்.(38) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, இதுவே நான் அடைந்த உயர்ந்த வரமாகும். ஓ! பாவமற்றவரே, ஓ! பிராமணரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததும், நானும் என் குலம் அழியாமல் மீட்டதும் என் வழக்கில் சிறந்த வரங்களாகும்.(39) ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளுக்கான குறிப்பிடத்தகுந்த சான்றாக இதை நான் கருதுகிறேன். என் வாழ்வின் இலக்கு நிறைவேறியது. என் அரசுரிமைக்கான கதியாகவும் இதையே நான் கருதுகிறேன். என் தவங்களின் உயர்ந்த கனியாகவும் நான் இதையே கருதுகிறேன்.(40) ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, நீர் என்னிடம் நிறைவடைந்திருந்தால் என் மனத்தில் உள்ள ஐயங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(41)

அநுசாஸனபர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 41

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்