Wednesday, May 01, 2019

சியவனர் அருளிய வரம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 55

Boon granted by Chyavana! | Anusasana-Parva-Section-55 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 55)


பதிவின் சுருக்கம் : தன் மனத்தில் இருந்த ஐயங்கள் அனைத்தையும் சியவனரிடம் கேட்ட குசிகன்; தமது செயல்பாடுகளுக்கான காரணங்களைக் குசிகனுக்கு விளக்கிச் சொல்லி அவனுக்கு வரமளித்த சியவனர்...


சியவனர் {மன்னன் குசிகனிடம்}, "நீ என்னிடம் இருந்து ஒரு வரத்தை ஏற்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, உன் மனத்தில் இருக்கும் ஐயம் என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" என்றார்.(1)


குசிகன் {முனிவர் சியவனரிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! பிருகுவின் மகனே, நீர் என்னிடம் நிறைவடைந்தீரானால், என் அரண்மனையில் சில காலம் நீர் வசித்த நோக்கத்தை எனக்குச் சொல்வீராக, அதை நான் கேட்க விரும்புகிறேன். என்னால் உமக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் பக்கம் திரும்பாமல் இருபத்தோரு நாட்கள் உறங்கியதில் உமது நோக்கம் என்ன?(2) மேலும், ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த அறையை விட்டுச் சென்றது ஏன்?(3) மேலும், வெளிப்படையான காரணம் ஏதும் இல்லாமல் ஏன் மறைந்தீர்? பிறகும் மீண்டும் ஏன் மறைந்தீர்? ஓ! கல்விமானான பிராமணரே, முன்பைப் போலவே மீண்டும் இருபத்தோரு நாட்கள் ஏன் படுக்கையில் கிடந்து உறங்கினீர்?(4) உமது நீராட்டத்திற்காக உம் மீது நாங்கள் எண்ணெய் பூசியதும் என்ன காரணத்தினால் நீர் சென்றுவிட்டீர்? பல்வேறு வகையான உணவு வகைகளை என் அரண்மனையில் திரட்டச் செய்துவிட்டு, அதன்பிறகு தீயின் துணையுடன் அவற்றை ஏன் எரித்தீர்?(5)

திடீரென என் தேரில் என் நகரில் நீர் செய்த பயணத்திற்கான காரணம் என்ன? அவ்வளவு செல்வத்தைக் கொடையளித்ததில் உமது நோக்கம் என்ன? உமது யோக பலத்தால் உண்டான காட்டில் உள்ள அதிசயங்களை எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(6) உண்மையில், ஓ! பெருந்தவசியே, பொன்னாலான மாட மாளிகைகள் பலவற்றையும், ரத்தினங்கள் மற்றும் கற்களாலான சட்டங்களால் தாங்கப்படும் படுக்கைக்ள பலவற்றையும் எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(7) அந்த அதிசயங்கள் அனைத்தும் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போனது ஏன்? இவை யாவற்றின் காரணங்களையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ!பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, உமது செயல்கள் இவ்வளவையும் நினைத்து நான் மீண்டும் மீண்டும் திகைப்படைகிறேன்.(8) உம்மில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையும் நான் காணத்தவறுகிறேன். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, உமது செயல்கள் அனைத்தையும் குறித்த உண்மைகளை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {குசிகன்}.(9)

சியவனர் {மன்னன் குசிகனிடம்}, "நான் செய்த இச்செயல்கள் அனைத்தையும் என்னைச் செய்யத் தூண்டிய காரணங்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, உன்னால் கேட்கப்பட்டுப் பிறகு உன்னைத் தெளிவடையச் செய்ய என்னால் மறுக்க முடியாது.(10) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் தேவர்கள் அனைவரும் கூடியிருந்தபோது, பெரும்பாட்டனான பிரம்மன் சில வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மன்னா, நான் அவற்றைக் கேட்டேன், அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(11) {பிரம்மன்}, "பிரம்ம, க்ஷத்திரிய சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் விளைவால் என் குலத்தில் கலப்பு நேரப் போகிறது" {என்றான் பிரம்மன்}[1]. ஓ! மன்னா, உன் பேரன் பெரும் சக்தியும் பலமும் கொண்டவனாக இருப்பான்.(12) இதைக் கேட்டதும், உன் குலத்தை அழிக்கும் தீர்மானத்துடன் நான் இங்கே வந்தேன். ஓ! குசிகா, உண்மையில் உன் குலத்தை முற்றாக அழித்து, உன் வழித்தோன்றல்கள் அனைவரையும் சாம்பலாக்கவே நான் வந்தேன்[2].(13) ஓ! ஏகாதிபதி, இந்நோக்கத்தால் தூண்டப்பட்டு உன் அரண்மனைக்கு வந்த நான் உன்னிடம், "நான் ஒரு நோன்பை நோற்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டு கடமையுணர்வுடன் தொண்டு செய்வாயாக" என்றேன்.(14) எனினும் உன் வீட்டில் நான் வசித்திருந்தபோது, உன்னிடம் நான் எந்தக் களங்கத்தையும் காணத் தவறினேன். ஓ! அரசமுனியே, அந்தக் காரணத்தினால்தான் நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். இல்லையெனில் இறந்தோருடன் நீ ஏற்கனவே கணக்கிடப்பட்டிருப்பாய்.(15)

[1] "பிருகுவின் குலத்தில் யாரோ ஒருவன் க்ஷத்திரியனாகப் போகிறான் என்றும், மேலும் குசிகனின் குலத்தில் இருந்து வரும் களங்கத்தின் விளைவால் அந்நிகழ்வு ஏற்படும் என்பதையும் சொல்கிறான். இதுவே இங்குச் சொல்லப்படும் முழுமையான மறைகுறிப்பாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில், "முன்னம் தேவர்களின் கூட்டத்தில் பிரம்மா பேசினதை நான் கேட்டிருந்தேன். அதை நான் சொல்லுகிறேன்; கேள். பிராம்மணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் பகை நேர்ந்து இவ்விரு குலங்களுக்கும் கலப்பு நேரிடப்போகிறதாம். ராஜனே, உன் பேரன் பிரம்ம தேஜஸும் பராக்கிரமமுமுள்ளவனாக உண்டாகப் போகிறானாம். இதைக் கேட்ட பின் என் குலத்தைக் காப்பதற்காகக் குசிக வம்சத்தையழிக்கக் கருதி உன் குலத்தையெரிக்க எண்ணங்கொண்டு உன்னிடம் நான் வந்தேன்" என்றிருக்கிறது.

இந்தத் தீர்மானத்துடன், நானே எழுவதற்கு முன் யாராவது என்னை விழிப்படையச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இருபத்தோரு நாட்கள் உறங்கினேன்.(16) எனினும், நீயும் உன் மனைவியும் என்னை விழிப்படையச் செய்யவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன்.(17) படுக்கையில் இருந்து எழுந்து உங்களிடம் ஏதும் பேசாமலேயே நான் அந்த அறையை விட்டு வெளியே சென்றேன். ஓ! ஏகாதிபதி, நீ என்னைக் கேட்பாய், அதனால் உன்னைச் சபிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே நான் அதைச் செய்தேன்.(18) பிறகு நான் என்னை மறைத்துக் கொண்டு, உன் அரண்மனையின் ஓர் அறையில் மீண்டும் என்னை வெளிப்படுத்திக் கொண்டு மீண்டும் இருபத்தோரு நாட்கள் யோகத்துயில் கொண்டேன்.(19) என்னைத் தூண்டிய நோக்கம் இதுதான். பசியாலும், களைப்பாலும் கோபமடையும் நீங்கள் இருவரும் நான் விரும்பாததைச் செய்வீர்கள் என்று நினைத்தேன். இந்த நோக்கத்துடன்தான் நான் உன்னையும் உன் மனைவியையும் பசியால் பீடிக்கச் செய்தேன்.(20)

எனினும், ஓ! மன்னா, உன் இதயத்தில் சிறு கோப உணர்ச்சியோ, எரிச்சலோ எழுவில்லை. ஓ! ஏகாதிபதி இதனால் நான் உன்னிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.(21) பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுவரச் செய்து, அவற்றுக்குத் தீ மூட்டியபோது, அதைக் கண்டு நீயும் உன் மனைவியும் கோபமடைவீர்கள் என்று நினைத்தேன். எனினும், என்னுடைய அந்தச் செயலையும் நீங்கள் பொறுத்தீர்கள்.(22) பிறகு, ஓ! ஏகாதிபதி, தேரில் ஏறிக் கொண்டு உன்னிடம், "நீயும், உன் மனைவியும் என்னைச் சுமப்பீராக" என்றேன். ஓ! மன்னா, நான் சொன்னதை நீங்கள் சிறு தயக்கமுமின்றிச் செய்தீர்கள். இதனால் நான் மகிழ்ச்சியால் நிறைந்தேன். நான் கொடுத்த செல்வக் கொடைகளும் உங்கள் கோபத்தைத் தூண்டவில்லை.(23,24) ஓ! மன்னா, உன்னிடம் நிறைவடைந்த நான், நீயும் உன் மனைவியும் இங்கே கண்ட அந்தக் காட்டை என் யோக பலத்தின் உதவியால் உண்டாக்கினேன். ஓ! ஏகாதிபதி, நான் கொண்டிருந்த நோக்கத்தைக் கேட்பாயாக.(25)

உன்னையும், உன் ராணியையும் நிறைவடையச் செய்வதற்காக உன்னை நான் சொர்க்கத்தில் ஒரு பார்வை காணச் செய்தேன். ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டில் நீ கண்ட அனைத்துப் பொருட்களும் சொர்க்கத்தின் முன்சுவையாகும்.(26) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீயும் உன் மனைவியும் பூமிசார்ந்த உடல்களைக் கொண்டிருந்தாலும், உங்களைச் சில காலம் சொர்க்கத்தின் காட்சிகள் சிலவற்றைக்  காணும்படி செய்தேன்.(27) தவங்களின் பலத்தையும், அறத்திற்காகச் சேமிப்பில் இருக்கும் வெகுமதியையும் காட்டுவதற்காகவே இவை யாவும் செய்யப்பட்டன. ஓ! ஏகாதிபதி, அந்த இனிமைநிறைந்த பொருட்களைக் கண்டதும் உன் இதயத்தில் எழுந்த ஆசையை நான் அறிவேன்.(28) ஓ! பூமியின் தலைவா, பூமியின் அரசுரிமையையும், சொர்க்கத்தின் அரசையும் அலட்சியம் செய்து, பிராமணத் தன்மையையும், தவங்களின் தகுதியையும் நீ அடைய விரும்பினாய்.(29) ஓ! மன்னா, இதையே நீ நினைத்தாய். பிராமண நிலையை அடைவது மிகக் கடினமாகும்; பிராமணனான பிறகு, ஒரு முனிவரின் நிலையை அடைவது மிகக் கடினமாகும்; முனிவரான பிறகு ஒரு தவசியாவது மிகக் கடினமாகும்.(30)

நான் உனக்குச் சொல்கிறேன், உன் ஆசை நிறைவடையும். ஓ! குசிகா, உன் பெயரால் {கௌசிகர் [விஷ்வாமித்ரர்] என்று} அழைக்கப்படும் பிராமணன் ஒருவன் உன்னில் இருந்து எழுவான். உன்னிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவன் பிராமண நிலையை அடைவான்.(31) ஓ! ஏகாதிபதி, உன் பேரன், பிருகுக்களின் சக்தியின் மூலம் நெருப்பின் காந்தியுடன் கூடிய ஒரு தவசியாக இருப்பான்.(32) அவன் மனிதர்கள் அனைவருக்கும், மூவுலகங்களில் வசிப்போருக்கும் எப்போதும் அச்சத்தை ஊட்டுவான். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(33) ஓ! அரச முனியே, உன் மனத்தில் இப்போது இருக்கும் அந்த வரத்தை ஏற்பாயாக. நான் விரைவில் புனித நீர்நிலைகள் அனைத்திற்கும் பயணம் புறப்பட {தீர்த்த யாத்திரை செல்ல} இருக்கிறேன். காலம் கடந்து போகிறது" என்றார் {சியவனர்}.(34)

குசிகன், "ஓ! பெருந்தவசியே, என் வழக்கில் நீர் என்னிடம் நிறைவடைந்திருப்பதே எனக்கு உயர்ந்த வரமாகும். நீர் சொன்னது நடக்கட்டும். ஓ! பாவமற்றவரே, என் பேரன் ஒரு பிராமணனாகட்டும்.(35) உண்மையில், ஓ! புனிதமானவரே, பிராமணத்வ நிலை என் குலத்தைப் பற்றட்டும். நான் இந்த வரத்தையே கேட்கிறேன். ஓ! புனிதமானவரே, மீண்டும் நான் உம்மை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(36) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, பிராமணத்வ நிலை எவ்வழியில் என் குலத்தைப் பற்றும்? எவன் என் நண்பனாக இருப்பான்? என் அன்பையும், மதிப்பையும் எவன் பெறுவான்?[3]" என்று கேட்டான் {குசிகன்}.(37)

[3] "பிருகு குலத்தைச் சார்ந்த எந்த மனிதன் தன் குலத்துக்கான இந்த உயர்ந்த நன்மையை அளிப்பார் என்பதை அறிய குசிகன் விரும்புவதாகவே இதன் பொருள் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "என் குலத்திற்குப் பிராம்மணத்வம் எப்படி வரும்? எவன் என்னுடைய குலத்தில் பிறக்கப் போகிறான்? உம்மால் பிராமணனென்று நினைக்கப்படுகிறவன் எவனென்பதை மறுபடியும் நீர் விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "என் குலம் பிராமணத்வ நிலையை எவ்வாறு அடையும்? எவன் என் உறவினனாவான்? நான் எவரைக் கௌரவிப்பேன்?" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்