Friday, May 03, 2019

தவமும் கொடையும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 57

Penances and gifts! | Anusasana-Parva-Section-57 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 57)


பதிவின் சுருக்கம் : தவம், கொடை ஆகியவற்றின் சிறப்புக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, உமது சொற்களைக் கேட்டு நான் திகைப்படைகிறேன். பெருஞ்செழிப்பைக் கொண்டிருந்த எண்ணற்ற மன்னர்கள் அனைவரும் இப்போது இந்தப் பூமியில் இல்லாததை நினைத்து என் இதயம் துயரால் நிறைகிறது.(1) ஓ! பாரதரே, ஓ! பாட்டா, நான் பூமியை வென்று, நூற்றுக்கணக்கான நாடுகளை அடைந்திருந்தாலும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருப்பதை நினைத்து துயரடைகிறேன்.(2) ஐயோ, எங்களால் கணவர்களையும், மகன்களையும், தாய்மாமன்களையும், சகோதரர்களையும் இழந்திருக்கும் முதன்மையான பெண்மணிகளின் அவலநிலை என்னவாக இருக்கும்?(3) எங்கள் உறவினர்களும், நண்பர்களும், நலன்விரும்பிகளுமான குருக்களைக் கொன்றதால் நாங்கள் தலைகீழாக நரகில் மூழ்கப் போகிறோம். இதில் ஐயமேதும் கிடையாது.(4) ஓ! பாரதரே, நான் என் உடலைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்த விரும்புகிறேன். ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கதியை நோக்கில் கொண்டு நான் உம்மிடம் இருந்து போதனைகளைப் பெற விரும்புகிறேன்" என்றான்".(5)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம பீஷ்மர், யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தம் புத்தியின் துணையுடன் அவை குறித்துக் கூர்மையாகச் சிந்தித்து யுதிஷ்டிரனுக்கு மறுமொழி கூறினார்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. அது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாகவும், பெரும் புதிராகவும் இருக்கிறது. உயிரினங்கள் செய்யும் குறிப்பிட்ட செயல்கள் அல்லது அவை பின்பற்றும் ஒழுக்க வழிகளின் வெகுமதியாக மரணத்திற்குப் பின்னால் அடையும் கதிகள் குறித்துச் சொல்லப் போகிறேன்.(7) ஒருவன் தவங்களின் மூலம் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் தவங்களின் மூலம் புகழை அடைகிறான். ஓ! பலமிக்க மன்னா, ஒருவன் தவங்களின் மூலம் நீண்ட வாழ்நாளையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்.(8) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவங்களின் மூலம் ஞானம், அறிவியல், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, மேனி அழகு, செழிப்பு, அருள் நிலை ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(9) தவங்களின் மூலம் ஒருவன் செல்வத்தை அடைகிறான். பேசாத அமைதி நோன்பை {மௌனவிரதம்} நோற்பதன் மூலம் ஒருவன் மொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறான். கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய அனைத்துவகைப் பொருட்களையும் அடைகிறான். தீக்ஷை சடங்கைச் செய்வதன் {வேள்விதீக்ஷை செய்வதன்} மூலம் ஒருவன் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(10)

(சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு தங்கள் வாழ்வைக் கழிப்பவர்கள் நாட்டையும், அரசு உரிமையையும் அடைவதில் வெல்கிறார்கள். செடி மற்றும் மரங்களின் இலைகளைத் தங்கள் உணவாக உண்டு வாழ்வோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) நீரை மட்டுமே உண்டு வாழும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறான். ஒருவன் தனது ஆசானுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் கல்வியை அடைகிறான். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாள்தோறும் சிராத்தங்கள் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகளை அடைகிறான்.(12) கீரை மற்றும் காய்கறிகளில் தீக்ஷை {சாக விரதம்} நோற்கும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களை அடைகிறான். புற்கள் மற்றும் துரும்புகளை உண்டு வாழ்பவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தேவையான சடங்குகளுடன் மும்முறை நீராடும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான மனைவிகளை அடைகிறான். வெறும் காற்றை மட்டுமே குடிக்கும் ஒருவன் பிரஜாபதியின் உலகவாசத்தை அடைகிறான்.(13)

ஒவ்வொரு நாளும் நீராடி, இரு சந்தி வேளைகளிலும் புனித மந்திரங்களை உரைக்கும் பிராமணன், தக்ஷனின் நிலையை அடைகிறான் {நெடுங்காலம் உயிர்வாழ்வான்}. காடு மற்றும் பாலைவனத்தில் உள்ள தேவர்களை வழிபடுவதன் மூலம் ஒருவன் நாட்டையோ, அரசுரிமையையோ அடைகிறான். நீண்ட உண்ணா நோன்பின் மூலம் உடலைக் கைவிடும் நோன்பை நோற்கும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(14) தவச் செல்வத்துடன் கூடிய ஒருவன் எப்போதும் தன் நாட்களை யோகத்தில் கடத்துவதால், நல்ல படுக்கைகள், இருக்கைகள் மற்றும் வாகனங்களை அடைகிறான். சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைவதன் மூலம் உடலைக் கைவிடும் ஒருவன், பிரம்மலோகத்தில் மதிப்பிற்குரிய பொருளாகிறான்.(15) கடினமாக உள்ள வெறுந்தரையில் {கட்டாந்தரையில்} கிடப்பவர்கள், வீடுகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளை உடுத்துபவர்கள் நல்ல ஆடை மற்றும் ஆபரணங்களை அடைகிறார்கள்.(16)

இனிமையான சுவைகள் பலவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பை ஈட்டுவதில் வெல்கிறான். இறைச்சி மற்றும் மீனைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைக் கொண்ட பிள்ளைகளைப் பெறுகிறான்.(17) {நீரில் வசிக்கும்} உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் சில காலம் கழிக்கும் ஒருவன் சொர்க்கத்தின் தேவனாகவே ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வாய்மை பேசும் மனிதன், தேவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதில் வெல்கிறான்.(18) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன், தனது உயர்ந்த சாதனைகளின் விளைவால் பெரும் புகழை ஈட்டுகிறான். கொடூரம் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைகிறான். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், அரசுரிமையையும், பிராமணன் என்ற உயர்ந்த நிலையையும் அடைகிறான்.(19) நீரையும், பிற பானங்களையும் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் உயர்ந்த சாதனையின் விளைவாக ஒருவன் நித்தியமான புகழை ஈட்டுகிறான். உணவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களை அடைகிறான்.(20)

(தீங்கிழைக்காமல் தவிர்ப்பதன் மூலம்) உயிரினங்கள் அனைத்திற்கும் அமைதியான நிலையைக் கொடுக்கும் ஒருவன் ஒவ்வொரு துயரத்தில் இருந்து விடுபடுகிறான். தேவர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், தெய்வீக அழகையும் அடைகிறான்.(21) மக்கள் அடிக்கடி செல்லக்கூடியவையும், இருளாக இருப்பவையுமான இடங்களுக்கு விளக்கை அளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல பார்வையை அடைகிறான். நல்ல மற்றும் அழகிய பொருட்களைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் நல்ல நினைவையும், புத்தியையும் அடைகிறான்.(22) நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் பெரும் பரப்பில் பரவியிருக்கும் புகழை அடைகிறான். தலைமுடி மற்றும் தாடிகளை மழிக்காமல் தவிர்ப்பவர்கள் சிறந்த பிள்ளைகளை அடைவதில் வெல்கிறார்கள்.(23) ஓ! பாரதா, நோன்புகள், தீக்ஷை மற்றும் நீராடல்களை (விதிப்படி) பனிரெண்டு ஆண்டுகள் நோற்கும் ஒருவன், திரும்பிவராத வீரர்களால் அடையப்படும் உலகத்தை விட மேன்மையான உலகத்தை அடைகிறான்.(24) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஒருவன் தன் மகளைத் தகுந்த மணமகனுக்குப் பிரம்ம வடிவத்தின் படி அளிப்பதன் மூலம் {திருமணம் செய்து கொடுப்பதன் மூலம்} அவன் ஆண், பெண் பணியாட்களையும், ஆபரணங்களையும், வயல்களையும், வீடுகளையும் அடைகிறான்.(25)

ஓ! பாரதா, வேள்விகள் செய்வது மற்றும் நோன்புகள் நோற்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். கனிகளையும், மலர்களையும் கொடையளிப்பவன் மங்கல ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(26) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய ஆயிரம் பசுக்களைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான். சொர்க்கத்தில் நடந்த தேவர்களின் கூட்டத்தில் இதுவே சொல்லப்பட்டது.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொண்டுகளுடன் கூடியதும், கன்றுடன் சேர்ந்ததுமான ஒரு கபிலைப் பசுவைப் பால் கறப்பதற்கான வெண்கலக் குடத்தோடு கொடையளிப்பவன் பல்வேறு சாதனைகளைச் செய்பவனாகி, அந்தப் பசுவிடம் இருந்து தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், தான் செய்த கொடையின் விளைவால், அந்தப் பசுவின் உடலில் உள்ள முடிகளுடைய எண்ணிக்கையின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து, மறுமையில் (நரகத் துன்பங்களிலிருந்து) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தன் குலத்தின் ஏழாம் தலைமுறை வரை மீட்கிறான்[1].(29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கொம்புளுடன் கூடிய பசுவையும், அதனுடன் சேர்த்து பால் கறப்பதற்கான வெங்கலக் குடத்தையும், தங்கத்தால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணியையும், எள்ளையும் {திலதேனுவையும்}, ஒரு தொகை பணத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் மனிதன் வசுக்களின் உலகை அடைகிறான்[2].(30)

[1] "ஏழு தலைமுறை மூதாதையர்களும், ஏழுதலைமுறை வழித்தோன்றல்களும் சேர்த்து மீட்கப்படுவார்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில், "பொன்னினால் அலங்கரிகப்பட்ட கொம்புள்ள பசுவைத் தக்ஷிணையோடும், கறக்கிற வெண்கலப் பாத்திரத்தோடும் விலைபெற்ற மேற்போர்வையோடும் பிராம்மணனுக்குக் கொடுப்பவனுக்கும், திலதேனுவை {பசுவின் வடிவிலான எள் குவியலைக்} கொடுப்பவனுக்கும் வஸுக்களின் லோகங்கள் எளிதில் கிடைக்கின்றன" என்றிருக்கிறது.

கடலில் மூழ்கும் மனிதனை ஒரு படகின் பாய்மரம் காற்றைப் பற்றிக் கொண்டு மீட்பதைப் போலவே, பசுவைக் கொடையளிப்பவன் மறுமையில் நரகத்தின் ஆழ்ந்த இருளில் வீழும்போது, இம்மையில் செய்த செயல்களால் அவன் தடுக்கப்படுவான்.(31) தன் மகளைப் பிரம்ம வடிவ திருமண முறையின்படி தகுந்த மனிதனுக்கு அளிக்கும் ஒருவன், அல்லது ஒரு பிராமணனுக்கு நிலத்தைக் கொடையாக அளிக்கும் ஒருவன், அல்லது உரிய சடங்குகளின்படி (ஒரு பிராமணனுக்கு) உணவைக் கொடையளிக்கும் ஒருவன் புரந்தரலோகத்தை அடைவதில் வெல்கிறான்.(32) அனைத்துவகை அறைகலன்களுடன் ஒரு வீட்டை, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அனைத்து வகைச் சாதனைகளையும், நல்லொழுக்கத்தையும் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் உத்தரக் குருக்களின் நாட்டில் ஒரு வசிப்பிடத்தை அடைவான்.(33) வண்டியிழுக்கும் காளைகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான். தங்கத்தைக் கொடையளிப்பது சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. பசும்பொன்னைக் கொடையளிப்பது இன்னும் பெரிய பலனுக்கு வழிவகுக்கிறது.(34) குடையைக் கொடையளிக்கும் ஒருவன் மாட மாளிகையை அடைகிறான். காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல வாகனங்களை அடைகிறான். துணிகளைக் கொடையளிப்பது மேனி அழகைத் தருகிறது, நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் நறுமணமிக்க மனிதனாகிறான்.(35)

ஒரு பிராமணனுக்கு மலர்கள், கனிகள், செடிகள் மற்றும் மரங்களைக் கொடையளிப்பவன், எந்த உழைப்பும் இல்லாமலேயே, அழகிய பெண்கள் மற்றும் அபரிமிதமான செல்வத்துடன் கூடிய மாட மாளிகையை அடைவான்.(36) பல்வேறு வகைச் சுவைகளுடன் கூடிய உணவு மற்றும் பானங்களையும், இன்பத்திற்குரிய பிற பொருட்களையும் கொடையளிப்பவன், அத்தகைய பொருட்களை அபரிமிதமாக அடைவதில் வெல்கிறான். வீடுகள் மற்றும் துணிகளைக் கொடையளிப்பவன் அதே வகைப் பொருட்களைப் பெறுவான். இதில் ஐயமேதும் கிடையாது.(37) மலர்மாலைகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள், களிம்புகள், நீராடலுக்குப் பிறகு மனிதர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், மலர் வளையங்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டு, மேனி அழகையும் அடைந்து, பெரும் மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்ட உலகத்தில் இன்பமாக விளையாடுவான்.(38) ஓ! மன்னா, தானியம் சேமித்து வைக்கப்பட்டதும், படுக்கைகள் அமைக்கப்பட்டும், செல்வங்கள் நிரம்பியதும், மங்கலமானதும், இனிமை நிறைந்ததுமான ஒரு வீட்டை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அரண்மனை போன்ற வசிப்பிடத்தை அடைகிறான்.(39) நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டதும், சிறந்த போர்வை விரிக்கப்பட்டதும், தலையணைகளுடன் கூடியதுமான ஒரு நல்ல படுக்கையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளும், இனிமையான குணங்களைக் கொண்டவளுமான ஓர் அழகிய மனைவியை எந்த முயற்சியுமின்றி அடைவதில் வெல்வான்.(30) போர்க்களத்தில் வீரனின் படுக்கையை {வீரசயனம்} ஏற்கும் மனிதன், பெரும்பாட்டனான பிரம்மனுக்கு இணையானவனாவான். இதைவிட உயர்ந்த கதி வேறேதும் இல்லை. இதையே பெரும் முனிவர்கள் அறிவித்திருக்கிறார்கள்" என்றார் {பீஷ்மர்}".(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன், தன் பாட்டனின் சொற்களைக் கேட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் கதியை விரும்பினாலும், ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதில் எந்த அருவருப்பையும் அதற்கு மேலும் வெளிக்காட்டவில்லை[3].(42) ஓ! மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு பாண்டுவின் பிற மகன்களிடம் பேசிய யுதிஷ்டிரன், "நமது பாட்டன் சொன்ன சொற்கள் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்" என்றான்.(43) இதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களுக்கு மத்தியில் இருந்த புகழ்பெற்ற திரௌபதியும் யுதிஷ்டிரனின் சொற்களை மெச்சி, "சரி" என்று சொன்னார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(44)

[3] கும்பகோணம் பதிப்பில், "அவருடைய அந்தச் சொல்லைக் கேட்டு மனமகிழ்ந்த யுதிஷ்டிரர் வீர மார்க்கத்திலேயே விருப்பமுற்றவராகிக் காட்டில் ஆஸ்ரமத்தில் வஸிப்பதைக் கருதவில்லை" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 44

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்