Saturday, May 04, 2019

குளமும், மரங்களும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 58

Tanks and Trees! | Anusasana-Parva-Section-58 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 58)


பதிவின் சுருக்கம் : மரங்களை நடுதல் மற்றும் குளம் வெட்டல் ஆகியவற்றால் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! குருக்களில் சிறந்தவரே, மரங்களை நடுதல் {தோட்டம் வைத்தல்} மற்றும் குளங்களைத் தோண்டுதல் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களை நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பார்வைக்கு இனிமையானதும், வளமிக்கதும், பல்வேறு வகை உலோகங்களால் அலங்கரிக்கப்பட்ட {காவிக் கற்களினால் விளங்கிக் கொண்டு} இனிமை நிறைந்த காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருப்பதும், அனைத்து வகை உயிரினங்கள் வசிப்பதுமான ஒரு நிலமே முதன்மையான இடமாகக் கருதப்படுகிறது.(2) அத்தகைய நிலத்தில ஒரு குறிப்பிட்ட பகுதியே ஒரு குளத்தைத் தோண்டத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்வேறு வகைக் குளங்களை முறையான வரிசையில் நான் உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும் (அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நீரைப் பெருகச் செய்யும் நோக்கில்) குளங்களைத் தோண்டுவதால் உண்டாகும் பலன்களையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஒரு குளத்தைத் தோண்டச் செய்யும் மனிதன் மூவுலகங்களிலும் மதிப்புக்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவனாகிறான்.(4) நீர் நிறைந்த ஒரு குளமானது, ஒரு நண்பனின் வீட்டைப் போல ஏற்புடையதும், நன்மையானதும் ஆகும். அது சூரியனையே நிறைவடையச் செய்வதாகும். தேவர்களின் வளர்ச்சியிலும் அது பங்காற்றுகிறது. (தோண்டச் செய்பவனின்) புகழுக்கு வழிவகுக்கும் பொருட்கள் அனைத்திலும் அதுவே {குளம் வெட்டுதலே} முதன்மையானதாகும்.(5)

குளம் வெட்டுதல், அறம், பொருள், இன்பம் என்ற முத்தொகைக்கும் பங்காற்றுகிறது[1]. மதிப்பிற்குரிய மனிதர்கள் வசிக்கும் நிலத்தில் ஏற்படுத்தப்படுவதையே முறையாகத் தோண்டப்பட்ட குளமாக ஞானிகள் சொல்கின்றனர். உயரினங்களுக்குத் தேவையான நான்கு காரியங்களுக்கும் தொண்டாற்றுவதே ஒரு குளம் என்று சொல்லப்படுகிறது. மேலும், குளங்களே ஒரு நாட்டின் மிகச் சிறந்த எழிலாக அமைகின்றன.(6,7) தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், உரகர்கள், ராட்சசர்கள், மேலும் அசைவற்ற உயிரினங்களும் கூட நீர் நிறைந்த ஒரு குளத்தையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(8) எனவே, குளங்களால் உண்டாகும் பயன்களையும், அவற்றைத் தோண்டச் செய்த மனிதர்களுக்குக் கிட்டும் பலன்களையும் குறித்துப் பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(9)

[1] கும்பகோணம் பதிப்பில், "தடாகம் செய்வதினாலுண்டாகும் புண்ணியம் தர்மார்த்தகாமங்களென்னும் மூன்று புருஷார்த்தங்களின் பலனையும் தருவதென்று அறிஞர் கூறுகின்றனர்" என்றிருக்கிறது.

மழைக்காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்த பலனை அறுவடை செய்கிறான் என்று ஞானிகள் சொல்கின்றனர்.(10) கூதிர்காலத்திலும் {சரத்காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், ஆயிரம் பசுக்களைக் கொடையளித்தவன் இம்மையில் அறுவடையச் செய்த பலனை அடைகிறான்.(11) குளிர் காலத்தில் {ஹேமந்த காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், அபரிமிதமான தங்கத்தைக் கொடையளித்து வேள்வி செய்தவனின் பலனை அடைகிறான்.(12) பனிக்காலத்தில் {சிசிரருது காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன், ஓர் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(13) வசந்த காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் அதிராத்ர வேள்வியைச் செய பலனை அடைகிறான்.(14) கோடைக்காலத்திலும் {க்ரீஷ்மகாலத்திலும்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான் என்று முனிவர்கள் சொல்கிறார்கள்.(15)

எவன் செய்த குளத்தில் பசுக்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வது காணப்படுகிறதோ, எதிலிருந்து அறவோர் நீர் எடுக்கின்றனரோ அந்த மனிதன் தன் குலம் முழுவதையும் காக்கிறான்.(16) எவனுடைய குளத்தில் பசுக்களும், பிற விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றனரோ அந்த மனிதன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(17) ஒருவனுடைய குளத்தில் இருந்து எவ்வளவு நீர் குடிக்கப்படுகிறதோ, நீராடுவதற்காகப் பிறரால் எவ்வளவும் நீர் எடுக்கப்படுகிறதோ, அவ்வள்ளவும் குளத்தைத் தோண்டியவனின் நன்மைக்காகச் சேமிக்கப்பட்டு, மறுமையில் அவன் முடிவிலாத நாட்களுக்கு அவற்றை அனுபவிக்கிறான்.(18) ஓ! மகனே, நீரானது, குறிப்பாக மறுமையில் அடைவதற்கரிதானதாக இருக்கும். நீரைக் கொடையளிப்பது நித்திய மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.(19) இங்கே எள்ளைக் கொடையளிப்பாயாக. நீரைக் கொடையளிப்பாயாக. விளக்குகளைக் கொடையளிப்பாயாக. உயிரோடு இருக்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும் நீ உறவினர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பாயாக. மறுமையில் இச்செயல்களை உன்னால் செய்யவே இயலாது.(20)

ஓ! மனிதர்களின் தலைவா, அனைத்துக் கொடைகளையும்விட நீரைக் கொடையளிப்பது உயர்ந்ததாகும். பலனைப் பொறுத்தவரையில் இது பிற கொடைகள் அனைத்திலும் மேலானதாக இருக்கிறது. எனவே, நீ நீரைக் கொடையளிப்பாயாக.(21) இவ்வாறே குளங்கள் வெட்டுவதில் கிட்டும் உயர்ந்த பலன்களை முனிவர்கள் அறிவித்திருக்கின்றனர். இப்போது மரங்களை நடுதல் {தோட்டம் அமைத்தல்} குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(22) ஆறு வகை அசைவற்ற பொருட்கள் {தாவரங்கள்} சொல்லப்படுகின்றன. அவை விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்}, லதைகள் {கொடிகள்}, வள்ளிகள் {செடிகள்}, த்வக்ஷாரங்கள் {மூங்கில்}, பல்வேறு வகைத் திரினங்கள் {புற்பூண்டுகள்} ஆகியனவாகும்.(23) இவையே பல்வேறு வகைக் காய்கறிகள் {தாவரங்கள்}. அவற்றை நடுவதால் ஏற்படும் பலனை இப்போது கேட்பாயாக. மரங்களை நடுவதன் மூலம் ஒருவன், மனிதர்களின் உலகில் புகழையும், மறுமையில் மங்கலப் பலன்களையும் அடைகிறான்.(24) அத்தகைய மனிதன், பித்ருக்களின் உலகில் மெச்சி மதிக்கப்படுகிறான். அத்தகைய மனிதன் தேவர்களின் உலகில் வசிப்பவனாக மாறினாலும் அவனுடைய பெயர் மறையாது.(25)

மரங்களை நடும் மனிதன், தனது தந்தை வழி மற்றும் தாய் வழிகளில் உள்ள மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ மரங்களை நடுவாயாக.(26) ஒரு மனிதன் நடும் மரங்களே அவனுடைய பிள்ளைகளாகின்றன. இதில் ஐயமேதும் இல்லை. அத்தகைய மனிதன் இந்த உலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்திற்கு உயர்கிறான். உண்மையில், நித்தியமான அருள் உலகங்கள் பலவும் அவனுடையவை ஆகின்றன.(27) மரங்கள் தங்கள் மலர்களால் தேவர்களையும், தங்கள் கனிகளால் பித்ருக்களையும், தாங்கள் தரும் நிழலால் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன.(28) கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் மரங்களையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(29)

மலர்களையும், கனிகளையும் சுமக்கும் மரங்கள் மனிதர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன. மரங்களை நடுபவன், பிள்ளைகளால் மீட்கப்படும் ஒரு தந்தையைப் போல மறுமையில் மரங்களால் காக்கப்படுவான்.(30) எனவே, தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், குளக்கரைகளில் மரங்களை நட்டுத் தன் பிள்ளைகளைப் போலவே அவற்றை வளர்க்க வேண்டும். அறிவு மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டின்படியும் ஒரு மனிதன் நடும் மரங்கள், அவற்றை நடுபவனின் பிள்ளைகளே ஆகின்றன.(31) ஒரு குளத்தை வெட்டும் பிராமணன், மரங்களை நடுபவன், வேள்விகளைச் செய்பவன் ஆகியோர் அனைவரும் வாக்கில் வாய்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைப் போலவே சொர்க்கத்தில் வழிபடப்படுகிறார்கள்.(32) எனவே, ஒருவன் குளங்களை வெட்டச் செய்து, மரங்களை நடச் செய்து, பல்வேறு வேள்விகளில் தேவர்களை வழிபட்டு வாய்மை பேச வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(33)

அநுசாஸனபர்வம் பகுதி – 58ல் உள்ள சுலோகங்கள் : 33

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்