Friday, May 17, 2019

கோதானம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 69

Gift of kine! | Anusasana-Parva-Section-69 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 69)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க பசுக்கொடை, நிலக்கொடை ஆகியவற்றைக் குறித்து மீண்டும் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, கொடைகள் குறித்த சிறப்பு விதிகளையும், முக்கியமாக நிலக்கொடை குறித்தும் எனக்கு மீண்டும் சொல்வீராக.(1) அறச்செயல்களைச் செய்யும் பிராமணனுக்கு ஒரு க்ஷத்திரியன் நிலக்கொடை அளிக்க வேண்டும். அத்தகைய பிராமணன் உரிய சடங்குகளுடன் அக்கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், க்ஷத்திரியனைத் தவிர வேறு எவனும் நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல.(2) இப்போது, பலனை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த மனிதர்கள் கொடையளிக்ககூடிய பொருட்கள் யாவை என்பதைச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியம் குறித்து வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மூன்று கொடைகள் ஒரே பலன்களை உண்டாக்கவல்லவையாக, ஒரே பெயரைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. உண்மையில் அம்மூன்றும் அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கவல்லவையாகும். அத்தகைய குணங்களைக் கொண்டவை பசு, நிலம் மற்றும் அறிவு {கல்வி} என்ற மூன்று பொருட்கள் ஆகும்.(4) வேதங்களில் இருந்து பெறப்பட்ட அறச் சொற்களைத் தன் சீடர்களுக்குச் சொல்லும் மனிதன், நிலம் மற்றும் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டுவதற்கு இணையான பலனை அடைகிறான்.(5) அதே போல, பசுக்களும் (கொடைக்குத்தகுந்த பொருட்களாக) புகழப்படுகின்றன. அவற்றைவிட உயர்ந்த கொடையாக வேறு எந்தப் பொருளும் இருப்பதில்லை. பசுக்கள் உடனே பலனை அளிக்கவல்லவையாக இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய கொடை பெரும்பலனுக்கு வழிவகுக்குமேயன்றி வேறில்லை.(6) பசுக்கள் அனைத்து உயிரினங்களுக்கு அன்னைகளாகின்றன. அவை அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அளிக்கின்றன. தன் செழிப்பை விரும்பும் ஒருவன் எப்போதும் பசுக்கொடையளிக்க வேண்டும்.(7) எவனும் பசுவை உதைக்கவோ, பசுக்களுக்கு மத்தியில் செல்லவோ கூடாது. பசுக்கள், மங்கல இல்லங்களான தேவிகளாக இருக்கின்றன. இதன் காரணமாகவே எப்போதும் அவை வழிபடத்தகுந்தவையாக இருக்கின்றன.(8)

[1] "பசு, பூமி மற்றும் வாக்கு ஆகியன {சம்ஸ்கிருதத்தில்} கோ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பழங்காலத்தில தேவர்கள் ஒரு வேள்வியைச் செய்வதற்காக நிலத்தை உழுதபோது கலப்பையில் பூட்டப்பட்ட இளங்காளைகளைத் தாக்க சாட்டையைய்ப பயன்படுத்தினர். எனவே, அத்தகைய நோக்கத்திற்கு நிலத்தை உழும்போது, காளைகள் மீது சாட்டையைப் பயன்படுத்துவது நிந்தனையையோ, பாவத்தையோ ஈட்டாது. எனினும், வேறு செயல்களில் காளைகள் ஒருபோதும் சாட்டையால் தாக்கப்படக்கூடாது.(9) பசுக்கள் மேயும்போதோ, கிடக்கும்போதோ எவரும் எவ்வழியில் அவற்றை எரிச்சலூட்டக்கூடாது. தாகமாக இருக்கும் பசுக்களுக்குத் தண்ணீர் கிட்டாதபோது, (அவை குளத்திற்கோ, தடாகத்திற்கோ, ஆற்றுக்கோ செல்வதைத் தடுப்பதன் விளைவாக) {அவற்றை எரிச்சலூட்டும்} அத்தகைய மனிதனை வெறுமனே பார்ப்பதன் மூலமே அவற்றால் அவனையும், அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிட முடியும்.(10) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சிராத்தங்களில் அல்லது தேவர்களை வழிபடும் இடங்களில் உள்ள பீடங்களே கூடப் பசுஞ்சாணம் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதப்படுத்தப்படுகின்றன எனும்போது பசுவை விடப் புனிதமான விலங்குகள் வேறு எவை இருக்கக்கூடும்?(11) தான் உண்பதற்கு முன்பாக, வேறு ஒருவனுக்குச் சொந்தமான பசுவுக்குக் கைப்பிடி நிறையப் புல்லைக் கொடுக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கும் நோன்பை நோற்பவனாகக் கருதப்படுகிறான்.(12) அத்தகைய ஒருவன் பிள்ளைகளையும், புகழ், செலவம், செழிப்பு ஆகியவற்றையும் அடைந்து, அனைத்துத் தீமைகளையும், தீய கனவுகளையும் விலக்குகிறான்" என்றார் {பீஷ்மர்}.(13)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கொடையளிக்கத்தகுந்த பசுக்களுக்கான குறியீடுகள் என்னென்ன? கொடைகளாகக் கொடுக்கக்கூடிய பசுக்கள் என்னென்ன? பசுக்கொடை கொடுக்கப்பட வேண்டிய மனிதர்களின் குணங்கள் என்னென்ன? மேலும், யார் யாருக்கெல்லாம் பசுக்கள் கொடுக்கப்படக்கூடாது?" என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒழுக்கத்தில் நேர்மையற்ற ஒருவனுக்கோ, பாவம் நிறைந்தவனுக்கோ, பேராசை நிறைந்தவனுக்கோ, வாக்கில் பொய்மை கொண்டவனுக்கோ, பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்குக் காணிக்கையளிக்காதவனுக்கோ பசுவை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(15) வேதங்களைக் கற்றவனும், உலகம்சார்ந்த செல்வத்தில் வறியவனும், பல பிள்ளைகளைக் கொண்டவனும், இல்லற நெருப்பைக் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16) ஒரு மனிதன், வேறு ஒருவரிடம் இருந்து கொடையாகப் பெற்றதைத் துணையாகக் கொண்டு பலன் நிறைந்த செயல் எதைச் செய்யும்போதும், அச்செயலால் உண்டாகும் பலனில் ஒரு பகுதியானது, எவனுடைய செல்வத்தைக் கொண்டு அச்செயல் செய்யப்பட்டதோ அவனுக்குரியதாகிறது.(17) ஒருவனை உற்பத்தி செய்தவன் {தந்தை}, ஒருவனைக் காப்பாற்றியவன், ஒருவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியவன் ஆகியோர் மூன்று தந்தைமாராகக் கருதப்படுகிறார்கள்.(18) ஆசானுக்குக் கடமையுணர்வுடன் செய்யும் தொண்டு பாவத்தை அழிக்கிறது. செருக்கானது பெரும்புகழையும் அழித்துவிடும். மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது பிள்ளையில்லாப் பழியை அழிக்கிறது, பத்துப் பசுக்களை உடைமையாக்கிக் கொள்வது வறுமைப் பழியை அகற்றுகிறது.(19)

வேதாந்தத்தில் அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் கல்வியைக் கொண்டவனும், ஞானம் நிறைந்தவனும், புலன்களில் முழுக்கட்டுப்பாடு கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவனும், உலகம் சார்ந்த அனைத்துப் பற்றுகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களிடமும் இனிமையான சொற்களைச் சொல்பவனும், பசியால் உந்தப்பட்டாலும் ஒருபோதும் தீச்செயல் ஏதும் செய்யாதவனும், மென்மையானவனும், அமைதியான மனநிலையைக் கொண்டவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனுமான ஒரு பிராமணனுக்கு, அதே நடத்தைகளைக் கொண்டவனும், பிள்ளைகள் மற்றும் மனைவிகளைக் கொண்டவனுமான ஒரு மனிதன் வாழ்வாதாரங்களைக் கொடுக்க வேண்டும்.(20,21) தகுந்த மனிதனுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் எவ்வளவு பலன் கிட்டுமோ, அதே அளவு பாவம் ஒரு பிராமணனுக்கு உரியதைக் களவாடுவதன் மூலம் கிட்டுகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிடுவது தவிர்க்கப்பட வேண்டும், அவனது மனைவிகள் தொலைவில் வைக்கப்பட வேண்டும்[2]" என்றார் {பீஷ்மர்}.(22)

[2] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகும் இன்னும் சொல்லப்பட்டிருக்கிறது, அது பின்வருமாறு, "பிராம்மணன் மனைவியும், பொருளும் அபகரிக்கப்பட்டபோது, சக்தியினால் காப்பாற்றினவர்களுக்கும் அதற்காக உயிர்விட்டவர்களுக்கும் நமஸ்காரஞ்செய்கிறேன். அவர்கள் துன்பஞ்செய்யப்படும்போது, காப்பாற்றாதவரைச் சூரியன் புத்திரனான யமன் எக்காலமும் தண்டித்துக் கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் நரகத்திலிருந்து விடுவதில்லை. அப்படியே கோக்களைக் காப்பதிலும், பீடிப்பதிலும் நன்மையும், தீமையும் முறையே வருகின்றன. பிராம்மணர்களின் கோக்களையும், மனைவிகளையும் ரக்ஷிப்பதில் விசேஷ புண்ணியம் உண்டாகிறது" என்றிருக்கிறது. கங்குலியின் பதிப்பில் எங்கு நிறைவடைந்ததோ, அங்கேயே பிபேக்திப்ராயின் பதிப்பிலும் நிறைவடைந்துவிடுகிறது. கும்பகோணம் பதிப்பில் உள்ள அதிகப்படியான இந்த வரிகள் இல்லை.

அநுசாஸனபர்வம் பகுதி – 69ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்