Thursday, May 23, 2019

நோன்புகளும், நியமங்களும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 75

Vows and observances! | Anusasana-Parva-Section-75 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 75)


பதிவின் சுருக்கம் : நோன்பு, நியமம், கற்றல், அடக்கம், வேதம் மறவாமை, கற்பித்தல், உரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்தல் முதலியவற்றின் பலன் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பலமிக்கவரே, கடமைகளைக் குறித்து என்னிடம் நீர் சொல்வதன் மூலம் எனக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டாகிறது. எனினும், நான் கொண்டுள்ள சில ஐயங்களைச் சொல்கிறேன். ஓ! பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன? ஓ! பெரும் காந்தி கொண்டவனே, வேறு வகை நியமங்களை நோற்பதற்குண்டான பலன்களின் இயல்பென்ன? மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன?[1](2) கொடைகளின் பலன்கள் என்ன? வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன? வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.(3)


[1] "விரதங்கள் என்பன குறிப்பிட்ட நடைமுறைகளைச் செய்வது அல்லது தவிர்ப்பதுடன் சேர்த்து சில வழிபாடுகளையும் சேர்ந்ததாகும். நியமம் என்பது வெறும் செயல் அல்லது தவிர்த்தல் மட்டுமே ஆகும். இதுவே இவை இரண்டுக்குள் உள்ள வேறுபாடு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! பாட்டா, இவ்வுலகில் கொடைகளை ஏற்காமல் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன?(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன? தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன?(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன?(6) ஓ! பாட்டா, ஓ!சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரே, இவை யாவற்றையும் உண்மையாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இதில் நான் கொண்டிருக்கும் ஆவல் பெரியதாகும்" என்று கேட்டான்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு விரதத்தை (நோன்பை) முறையாகத் தொடங்கி ஒரு தடையும் இல்லாமல் அதைச் சாத்திரங்களின் படி நிறைவடையச் செய்யும் ஒருவன் நித்திய இன்ப உலகங்களைத் தனதாகக் கொள்கிறான்.(8) ஓ! மன்னா, நியமங்களின் பலன்கள் இம்மையிலேயே காணக்கிடைக்கின்றன. நீ வென்றுள்ள இந்த வெகுமதிகள் அனைத்தும் நியமங்கள் மற்றும் வேள்விகளுக்குரியவையாகும்.(9) வேத கல்வியின் பலன்கள் இம்மையிலும், மறுமையிலும் காணப்படுகின்றன. வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் இவ்வுலகத்திலும், பிரம்மலோகத்திலும் இன்பமாகத் திளைத்திருப்பதே காணப்படுகிறது.(10)

ஓ! மன்னா, தற்கட்டுப்பாட்டின் பலன்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக. தற்கட்டுப்பாடு கொண்டவர்கள் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தற்கட்டுப்பாடுடையவர்கள், ஆசையற்றதனால் அல்லது ஆசையை அடக்குவதனால் உண்டாகும் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.(11) தற்கட்டுப்பாடுடையவர்கள் பகைவர்கள் அனைவரையும் அழிக்கவல்லவர்களாவர். தற்கட்டுப்பாடுடையவர்கள் தாங்கள் நாடும் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தற்கட்டுப்பாடுடையவர்கள் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைகிறார்கள். தவங்கள் மற்றும் (கர) வலிமையின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தில் இன்புறும் மகிழ்ச்சியானது தற்கட்டுப்பாடும், மன்னிக்கும் தன்மையும் கொண்டோரின் உடைமையாகிறது.(13) கொடையை விடத் தற்கட்டுப்பாடே பலன்மிக்கதாகும். ஒரு கொடையாளி, பிராமணர்களுக்கு ஒரு கொடையை அளித்தபிறகு கோபவசப்படக்கூடும். எனினும், தற்கட்டுப்பாடுடைய மனிதன் ஒருபோதும் கோபவசப்பட மாட்டான். கோபவசப்படாமல் கொடையளிக்கும் மனிதனே நித்திய இன்பலோகங்களை அடைவதில் வெல்கிறான். கோபமானது கொடையின் பலனை அழிக்கிறது. எனவே தற்கட்டுப்பாடே கொடையைவிட மேன்மையானதாகும். (14-16)

ஓ! ஏகாதிபதி, சொர்க்கத்தில் பத்தாயிரக்கணக்கில் கண்ணுக்குத்தெரியாத பல்வேறு இடங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தில் உள்ள இந்த இடங்கள் யாவும் முனிவர்களுக்கு உரியனவாகும். இவ்வுலகை விட்டு அகலும் மனிதர்கள் அவற்றை அடைந்து, தேவர்களாக மாறுகிறார்கள்.(17) ஓ! மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ! மன்னா, (வேதங்களைக் கற்பிப்பதற்காக) ஆசானாக ஆகிறவனும், நெருப்பை முறையாக வழிபடுபவனுமான மனிதன், இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மலோகத்தில் வற்றாத இன்பநிலையை அனுபவிப்பான்.(19) வேதங்களைக் கற்று, அறம்சார்ந்த சீடர்களுக்கு அந்த அறிவைக் கற்பித்தவனும், தன் ஆசானின் செயல்களைப் புகழ்பவனுமான மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(20)

வேத கல்வி கற்பவனும், வேள்விகளைச் செய்பவனும், கொடையளிப்பவனும், போரில் பிறரின் உயிர்களைக் காப்பவனுமான ஒரு க்ஷத்திரியனும் அதே போன்ற பெரும் கௌரவங்களைச் சொர்க்கத்தில் அடைகிறான்.(21) தன் வகைக்கான கடமைகளை நோற்பவனும், கொடைகளை அளிப்பவனுமான ஒரு வைசியன், மகுடம் சூடும் வெகுமதியாக அக்கொடைகளுக்கான பலன்களை அறுவடை செய்கிறான். தன் வகைக்கான கடமைகளை (மூன்று வகையினருக்கான தொண்டுகளை) முறையாக நோற்பவனான ஒரு சூத்திரன் தன் தொண்டுகளுக்கான வெகுமதியாகச் சொர்க்கத்தை வெல்கிறான்.(22)

(சாத்திரங்களில்) பல்வேறு வகை வீரர்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் அடைந்த வெகுமதிகள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. வீர குலத்தைச் சார்ந்த ஒரு வீரனுக்கு வெகுமதிகள் நிலையானவையே.(23) வேள்வி வீரர்கள், தற்கட்டுப்பாட்டு வீரர்கள், வாய்மை வீரர்கள், வீரன் என்ற பெயருக்குத் தகுந்த பிறர் என்று பலர் இருக்கின்றனர். போர்க்கள வீரர்கள், மனிதர்களுக்கு மத்தியில் கொடைவீரர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.(24) சாங்கிய நம்பிக்கை கொண்ட வீரர்கள் என்றழைக்கப்படும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், யோக வீரர்கள் என்றழைக்கப்படும் வேறு பலரும் இருக்கிறார்கள். காட்டு {வானப்பிரஸ்த} வாழ்வில், வீட்டு {கிருஹஸ்த} வாழ்வில், துறவு (அல்லது சந்நியாச) வாழ்வில் என வீரர்களாக வேறு சிலர் கருதப்படுகின்றனர்.(25)

அதே போலவே புத்திவீரர்கள் மற்றும் பொறுமைவீரர்கள் என்றழைக்கப்படுவோரும் உண்டு. அமைதிநிலையில் வாழ்பவர்களும், அறவீரர்களாகக் கருதப்படும் பிற மனிதர்களும் இருக்கிறார்கள்.(26) பல்வேறு வகை நோன்புகளையும், நியமங்களையும் பயிலும் பல்வேறு வகை வீரர்களும் இருக்கிறார்கள். வேதகல்வி வீரர்கள், அதையே கற்பிப்பதில் அர்ப்பணிப்புள்ள வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.(27) மேலும், அர்ப்பணிப்புடன் ஆசான்களுக்குத் தொண்டாற்றுவதில் வீரர்கள், தங்கள் தந்தைமாரை மதிப்பதில் வீரர்கள் எனவும் சில மனிதர்கள் கருதப்படுகிறார்கள். தாய்க்குக் கீழ்ப்படிவதில் வீரர்கள், தாங்கள் நோற்கும் பிச்சைக்கார வாழ்வில் வீரர்களும் இருக்கிறார்கள்.(28) காட்டுத்துறவியாக {வானப்ரஸ்தராக} அல்லது இல்லறவாசியாக {கிருஹஸ்தராக} வாழ்ந்தாலும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பும் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்காக வெகுமதியையும் அடையும் வகையில் மேன்மையான இன்ப உலகங்களை அடைகிறார்கள்.(29)

வேதங்கள் அனைத்தையும் நினைவில் கொள்வது, அல்லது புனித நீர்வெளிகள் அனைத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்வது ஆகியவை, ஒருவன் நாள்தோரும் வாய்மை பேசுவதற்கு இணையானவையாகவோ அல்லாதவையாகவோ இருக்கலாம்.(30) ஒரு காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் ஒரே தராசில் எடைபார்க்கப்பட்டன. அப்போது வாய்மையே ஓராயிரம் குதிரைவேள்விகளைவிட எடைமிக்கதாகத் தெரிந்தது.(31) வாய்மையினாலேயே சூரியன் வெப்பத்தைத் தருகிறான்; வாய்மையாலேயே நெருப்புச் சுடர்விடுகிறது; வாய்மையாலேயே காற்று வீசுகிறது; உண்மையில் அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(32)

தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களை வாய்மையே நிறைவடையச் செய்கிறது. வாய்மையே உயர்ந்த கடமையெனச் சொல்லப்படுகிறது. எனவே எவனும் ஒருபோதும் வாய்மையெனும் வரம்பை மீறக்கூடாது.(33) முனிவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஆற்றல் வாய்மையைச் சார்ந்தே இருக்கிறது. அவர்கள் வாய்மையின் மூலமே உறுதியேற்கிறார்கள். எனவே வாய்மையே மேன்மையானதாகும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வாய்மை நிறைந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வாய்மையின் மூலமே சொர்க்கத்தை அடைவதில் வென்று, அங்கே இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.(34) வாய்மை தரும் வெகுமதியே தற்கட்டுப்பாடாகும். நான் முழு இதயத்துடன் அதுகுறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். தற்கட்டுப்பாடுடையவனும், எளிய இதயம் கொண்டவனுமான மனிதன், நிச்சயம் சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளை அடைகிறான்.(35)

ஓ! பூமியின் தலைவா, பிரம்மச்சரியத்தின் பலன்களை உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன் இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ! மன்னா, ஒரு பிராமணனால் பிரம்மச்சரிய நோன்பு முறையாக நோற்கப்பட்டால் அவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்துவிடுவான். அந்தப் பிராமணன் சுடர்மிக்க நெருப்பெனச் சொல்லப்படுகிறான். தவங்களில் அர்ப்பணிப்புள்ள அந்தப் பிராமணர்களில் நெருப்பு தேவன் {அக்னி} காணப்படுகிறான்.(38,39) ஒரு பிரம்மசாரியானவன் சிறு கோபத்தை அடைந்தாலும் தேவர்களின் தலைவனே அச்சத்தில் நடுங்குவான். இதுவே முனிவர்களால் நோற்கப்படும் பிரம்மச்சரிய நோன்பில் காணப்படும் பலனாகும்.(40)

ஓ! யுதிஷ்டிரா, தந்தை தாயை வழிபடுவதில் உள்ள பலனைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! மன்னா, எதனிலும் குறுக்கிடாமல் தன் தந்தைக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றும் ஒருவன், அதே போலத் தன் தாய்க்கோ, தன் அண்ணனுக்கோ, வேறு பெரியோருக்கோ, ஆசானுக்கோ தொண்டாற்றும் ஒருவன் ஆகியோர் சொர்க்கவாசத்தை ஈட்டுகிறார்கள் என்பது அறியப்பட வேண்டும். தூய்மையடைந்த ஆன்மைவைக் கொண்ட மனிதன், பெரியோர்களுக்குச் செய்யும் இத்தகைய தொண்டின் விளைவாக அவன் நரகை ஒருபோதும் காணவும் மாட்டான்" என்றார் {பீஷ்மர்}.(41,42)

அநுசாஸனபர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்