Thursday, May 30, 2019

கோதானப் பலன்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 79

The merits attached to gifting of a cow! | Anusasana-Parva-Section-79 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 79)


பதிவின் சுருக்கம் : பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...


வசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}, "முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ! பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, "இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத்தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்" என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)


[1] கும்பகோணம் பதிப்பில், "நம்முடைய சாணத்தைக் கொண்டு ஸ்நாநம் செய்வதனால் ஜனங்கள் எப்போதும் பரிசுத்தராகக் கடவர். தேவர்களும், மனிதர்களும் ஜங்கமங்களும், தாவரங்களுமாகிய பிராணிகளெல்லாம் நமது சாணத்தினாலேயே சுத்தியைச் செய்து கொள்ளக் கடவன. நம்மைத் தானம் செய்பவர் நமது உலகங்களை அடையக்கடவர்" என்றிருக்கிறது.

அவற்றின் தவங்கள் நிறைவடையும் தருணத்தில் அவற்றின் முன் தோன்றிய பலமிக்கப் பிரம்மன், அவை வேண்டிய வரங்களைக் கொடுத்து, "நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும். நீங்கள் உலகங்கள் அனைத்தையும் (இவ்வாறு) காப்பீராக" என்றான்.(5)

கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அன்னையரான அவை அனைத்தும், தங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு எழுந்தன. ஒவ்வொரு காலை வேளையிலும் மக்கள் மதிப்புடன் பசுக்களை வணங்க வேண்டும். இதன் விளைவாக அவர்கள் நிச்சயம் செழிப்பை வெல்வார்கள்.(6) ஓ! ஏகாதிபதி, பசுக்களின் தவங்கள் நிறைவடைந்தபோது அவை உலகின் புகலிடங்களாகின. இதன் காரணமாகவே பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்திலும் முதன்மையானவையாகவும் சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே பசுக்கள் அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(7)

தனக்கு ஒப்பான கன்றுகளுடன் கூடியதும், அபரிமிதமான அளவில் பாலைக் கொடுப்பதும், தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி பிரம்மலோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(8)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு சிவப்பு நிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சூரிய லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(9)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு பலவண்ணப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சோம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(10)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு வெண்ணிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இந்திர லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(11)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கருநிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அக்னி லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(12)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும், புகைவண்ணத்துடன் கூடியதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் யம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(13)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், நீர் நுரையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வருணலோகத்தை அடைகிறான்.(14)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், காற்றில் பறக்கும் தூசியின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் காற்றுதேவனின் உலகத்தில் {வாயுலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(15)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், பழுப்புநிறக் கண்களுடன் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், பொன் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் குபேரலோகத்தில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(16)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வைக்கோல் புகையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பித்ருக்களின் உலகத்தில் {பிதிருலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(17)

கன்றுடன் கூடியதும், தொண்டைச் சதை தொங்கும் ஒரு பருத்த பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எளிதாக விஸ்வேதேவர்களின் உயர்ந்த உலகத்தை அடைகிறான்.(18)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பாலைத் தருவதும், அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும்மான ஒரு கௌரி பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான்.(19)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வெண்கம்பளி நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சாத்தியர்களின் உலகை அடைகிறான்.(20)

ஓ! மன்னா {சௌதாசா}, உயர்ந்த திமிலைக்கொண்டதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(21)

வயதால் முழுமையாக வளர்ந்ததும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் நீல நிறமாக இருப்பதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களை அடைகிறான்.(22)

தொண்டைச் சதை தொங்குவதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிரஜாபதிக்கே சொந்தமான உலகங்களை அடைகிறான்.(23)

ஓ! மன்னா, பசுக்கொடை அளிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு தேரில் மேகங்களின் ஊடாகத் துளைத்துச் சென்று சொர்க்கத்தை அடைந்து அங்கே காந்தியுடன் ஒளிர்கிறான்.(24)

பசுக்கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்ட மனிதன் மனிதர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்லும்போது, அழகிய இடைகளைக் கொண்டவர்களும், அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் தெய்வீகக் காரிகையரால் அவன் வரவேற்கப்படுகிறான். இப்பெண்கள் அங்கே அவனுக்குப் பணிவிடை செய்து, அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.(25) அமைதியாக அங்கே உறங்கும் அவன், அந்த மான்விழி மங்கையரின் வீணை இசையாலும், அவர்களுடைய வல்லகிகளின் மென்மையான சுரத்தாலும், நுபரங்களின் {காற்சிலம்புகளின்} இனிய கிண்கிணி ஒலியாலும், அவர்களுடைய சிரிப்பிசையாலும் விழிப்படைகிறான்[2].(26) பசுக்கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தில் வசிக்கிறான்; தான் கொடுக்கும் பசுக்களின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் அங்கே கௌரவிக்கப்படுகிறான். (புண்ணியம் தீர்ந்து) சொர்க்கத்தில் வீழ நேரும் அத்தகைய மனிதன் மனித வகையிலேயே பிறப்பெடுக்கிறான்; உண்மையில் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மேம்பட்ட குடும்பத்திலேயே பிறப்பெடுக்கிறான்" என்றார் {வசிஷ்டர்}.(27)

[2] "வல்லகி என்பது இந்திய யாழாகும். நுபுரம் என்பது கணுக்காலில் அணியும் ஆபரணமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அநுசாஸனபர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்