Wednesday, May 29, 2019

கோமதி மந்திரம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 78

Gomati Mantra! | Anusasana-Parva-Section-78 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 78)


பதிவின் சுருக்கம் : பசுக்களின் சிறப்புகளையும், கோமதி மந்திரத்தையும் சௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பழங்காலத்தில், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் சௌதாசன்[1], தன் குடும்பப் புரோகிதரும், முனிவர்களில் முதன்மையானவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், எங்கும் செல்ல வல்லவரும், பிரம்மத்தின் கொள்ளிடமும், நித்திய வாழ்வை {மரணமற்ற வாழ்வைக்} கொண்டவருமான வசிஷ்டரை அணுகி அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(1,2)


[1] இவனுக்குக் கல்மாஷபாதன் மற்றும் மித்ரஸகன் என்ற பெயர்களும் உண்டு. ஆதிபர்வம் பகுதி 178ல் இவனது கதை சொல்லப்பட்டிருக்கிறது.  மேலும் இக்கதை அநுசாஸன பர்வம் 6ம் பகுதியிலும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

சௌதாசன் {வசிஷ்டரிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, மூவுலகங்களில் புனிதமானது எது? எப்போதும் உரைப்பதால் ஒரு மனிதனை உயர்ந்த பலனை அடையச் செய்வதும் எது?" என்று கேட்டான்".

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், " தம் முன்பு தலைவணங்கி நின்ற மன்னன் சௌதாசனிடம் கல்விமானான வசிஷ்டர், முதலில் பசுக்களை வணங்கி (உடலாலும், மனத்தாலும்) தம்மைத் தூய்மைசெய்து கொண்டு, அனைவருக்கும் உயர்ந்த நன்மைகளை விளைவிக்கும் பசுக்கள் குறித்த புதிரைக் குறித்து உரையாடினார்.(4)

வசிஷ்டர், "பசுக்கள் எபோதும் நறுமணமிக்கவை. குங்கிலியம் கசிவதன் மூலம் தோன்றும் நறுமணம் அவற்றின் உடலில் இருந்து வெளிப்படுகிறது. பசுக்களே அனைத்து உயிரினங்களின் பெரும்புகலிடமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்துக்குமான அருள் ஊற்றாக அமைகின்றன.(5) பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன. பசுக்களே வளர்ச்சியின் நித்திய ஊற்றாக இருக்கின்றன. பசுக்களே செழிப்பின் வேராக இருக்கின்றன. பசுக்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் தொலைந்து போவதில்லை.(6) பசுக்களே உயர்ந்த உணவாக அமைகின்றன. அவையே தேவர்களுக்குச் சிறந்த ஹவியாக இருக்கின்றன. ஸ்வாஹா மற்றும் வஷட் என்றழைக்கப்படும் மந்திரங்கள் பசுக்களிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கின்றன.(7) பசுக்கள வேள்விக்கனிகளாக அமைகின்றன. வேள்விகள் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன, அவற்றைச் சார்ந்தே வேள்விகளும் இருக்கின்றன.(8) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஹோமத்தில் பயன்படுத்தப்படும் ஹவியை முனிவர்களுக்குப் பசுக்களே காலையும், மாலையும் தருகின்றன.(9) ஓ! பெரும்பலம் கொண்டவனே, பசுக்களைக் கொடையளிப்போர், தாங்கள் இழைத்த பாவங்கள் அனைத்தையும் தாங்கள் வீழ நேரும் அனைத்து வகைத் துன்பங்களையும் கடக்கின்றனர்.(10)

தான் கொண்ட பத்துப் பசுக்களில் ஒரு பசுவைக் {10%} கொடையளிப்பவனும், நூறு பசுக்களில் பத்தைக் {10%} கொடையளிப்பவனும், ஆயிரம் பசுக்களில் நூறைக் {10%} கொடையளிப்பவனும் ஒரே அளவு பலனையே ஈட்டுகின்றனர்.(11) நூறு பசுக்களைக் கொண்டிருந்தாலும், நாள்தோறும் வழிபடுவதற்காக இல்லற நெருப்பை நிறுவாதவன், ஆயிரம் பசுக்களைக் கொண்டிருந்தாலும் வேள்விகளைச் செய்யாதவன், செல்வத்தைக் கொண்டிருந்தாலும் (கொடையளிக்காமல், விருந்தோம்பல் கடமைகளைச் செய்யாமல்) கஞ்சனாகச் செயல்படுபவன் ஆகிய மூவரும் மதிப்பெதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்,(12) தீமையற்றவையும், துணிகளால் மறைக்கப்பட்டவையுமான கபிலைப்பசுக்களைக் கன்றுகளுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்களுடனும் கொடையளிக்கும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைகிறார்கள்.(13) பலமிக்கப் புலன்களைக் கொண்டதும், நூற்றுக்கணக்கான மந்தையில் முதன்மையானதாகக் கருதப்படுவதும், (பொன் அல்லது வெள்ளியிலான) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடியதுமான இளங்காளையை வேத கல்வி கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள், இவ்வுலகில் பிறப்பெடுக்கும்போதெல்லாம் பெருஞ்செழிப்பையும், செல்வாக்கையும் அடைவதில் வெல்கிறார்கள்.(14,15)

ஒருவன் பசுக்களின் பெயர்களை உரைக்காமல் ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாது. அதே போல, காலையில் பசுக்களின் பெயர்களைச் சொல்லாமல் ஒருபோதும் படுக்கையில் இருந்து எழவும் கூடாது. அவன் காலையும், மாலையும் பசுக்களிடம் மதிப்புடன் தலைவணங்க வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(16) பசுக்களின் சிறுநீர் மற்றும் சாணத்தில் அவன் ஒருபோதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அவன் ஒருபோதும் பசு இறைச்சி உண்ணக்கூடாது. இதன் காரணமாக அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(17) ஒருவன் எப்போதும் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அவன் ஒருபோதும் எவ்வகையிலும் பசுக்களை அவமதிக்கக்கூடாது. கெட்ட கனவுகளைக் கண்டால் மனிதர்கள் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(18) எப்போதும் பசுஞ்சாணம் பயன்படுத்தி நீராட வேண்டும். காய்ந்த பசுஞ்சாணத்திலே அமர வேண்டும். அவன் ஒருபோதும் பசுஞ்சாணத்தில் மலமும், சிறுநீரும் கழிக்கக்கூடாது, உமிழவும் கூடாது. அவன் ஒருபோதும் பசுவின் வழியில் தடங்கலேற்படுத்தக்கூடாது.(19) ஒருவன், நீரில் நனைத்துத் தூய்மை செய்யப்பட்ட பசுத்தோலில் அமர்ந்து, மேற்கு நோக்கிக் கண்களைச் செலுத்தி உண்ண வேண்டும். பேச்சை அடக்கி, வெறும் மண்ணை உணவாக்கி {தரையையே பாத்திரமாக்கி} அவன் நெய்யுண்ண வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் பசுக்களையே தோற்றுவாயாகக் கொண்ட செழிப்பை அடைவான்[2].(20)

[2] நீரில் நனைத்துத் தூய்மையாக்கப்பட்ட பசுத்தோலே ஈரமான பசுத்தோல் என உரையாசிரியர் விளக்குகிறார். "பௌமௌ" என்று சொல்லப்படுவது, பாத்திரங்களையோ, வெண்கலக் குடுவைகளையோ, வேறு உலோகங்களையோ தவிர்த்து பூமியையே பாத்திரமாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. "கவாம் புஷ்டிம்" என்பது பசுவினால் கிட்டும் செழிப்பு என நான் புரிந்து கொள்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நனைக்கப்பட்ட பசுத்தோலில் மேற்குமுகமாக உட்கார்ந்து கொண்டு மௌனமாக நெய்யுடன் தரையிலுண்பவன் பசுக்கள் நிறைந்திருத்தலை எப்போதும் அடைவான்" என்றிருக்கிறது.

ஒருவன் நெய்யைப் பயன்படுத்தி நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் நெய்யைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அவன் நெய்க்கொடையளிக்க வேண்டும். அவன் நெய்யை உண்ணவும் வேண்டும். அத்தகைய செயல்களுக்கான வெகுமதியாக அவன் பசுக்கள் அழிக்கும் செழிப்பை நிச்சயம் அடைவான்.(21) கோமதி என்ற பெயரில் அழைக்கப்படும் வேத மந்திரங்களைச் சொல்லி எள்ளினாலான பசு வடிவத்தைச் செய்து, அனைத்து வகை ரத்தினங்களாலும் அஃதை அலங்கரித்துக் கொடையளிப்பவன், தான் செய்த செயல்கள் மற்றும் தவிர்த்த செயல்களின் காரணமாக எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(22) "பெரும் அளவில் பாலைத் தருபவையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையும், சுரபியின் மகள்களுமான பசுக்கள், பெருங்கடலை அணுகும் ஆறுகளைப் போலவே என்னை அடையட்டும்.(23) நான் எப்போதும் பசுக்களைக் காண்பேன். பசுக்களும் என்னைப் பார்க்கட்டும். பசுக்கள் எங்களுக்குரியவை. நாங்கள் அவற்றுக்குரியவர்கள் பசுக்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் இருப்போம்"(24) என்று {மேற்கண்ட கோமதி மந்திரத்தைப்}[3] பேரச்சம் நேரும் வேளைகளில் இரவிலோ, பகலிலோ, இன்பத்திலோ, துன்பத்திலோ ஒரு மனிதன் சொல்ல வேண்டும். இத்தகைய சொற்களைச் சொல்வதன் மூலம் அவன் நிச்சயம் அனைத்து அச்சங்களில் இருந்து விடுபடுவான்" என்றார் {வசிஷ்டர்}.(25)

[3] 22ம் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் கோமதி மந்திரமே 23 மற்றும் 24ம் ஸ்லோகங்களில் வருகிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 78ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்