Monday, June 17, 2019

தீபதானமும், நஹுஷனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 100

Nahusha, the giver of light! | Anusasana-Parva-Section-100 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 100)


பதிவின் சுருக்கம் : அகஸ்தியரின் சடையில் மறைந்திருந்த பிருகு; அகஸ்தியரைக் காலால் தாக்கிய நஹுஷன்; நஹுஷனைச் சபித்த பிருகு; தான் அளித்த கொடைகளால் சாபத்தில் இருந்து மீண்ட நஹுஷன்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நஹுஷன் எவ்வாறு துன்பத்தில் மூழ்கினான்? அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான்? உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிருகு மற்றும் அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் இருவரும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நஹுஷன் முதலில் தேவர்களின் தலைவனான போது நல்ல வழியிலேயே செயல்பட்டான் என்பதை ஏற்கனவே சொன்னேன். உண்மையில் மனித மற்றும் தெய்வீக இயல்புடைய அனைத்துச் செயல்களும் அந்த உயர் ஆன்ம அரச முனியிடமிருந்தே உண்டாகின.(2) விளக்குகள் கொடை மற்றும் அதே வகைச் சடங்குகள் அனைத்தும், பலிகளை முறையாக அளிப்பது, குறிப்பாகப் புனித நாட்களில் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும்(3) என இவை யாவும் தேவர்களின் அரசுரிமையில் அமர்ந்த உயர்ந்த ஆன்ம நஹுஷனால் முறையாக நோற்கப்பட்டன. பக்திச் செயல்பாடுகள் அனைத்தும் ஞானம் கொண்ட மனிதர்களாலேயே மனிதர்களின் உலகிலும், தேவர்களின் உலகிலும் எப்போதும் நோற்கப்படுகின்றன. உண்மையில், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய செயல்பாடுகள் நோற்கப்பட்டால், இல்லறவாசிகள் எப்போதும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அடைவதில் வெற்றி அடைகிறார்கள். தேவர்களுக்கு விளக்குகள், நறுமணப்புகைப்பொருட்களைக் கொடையளிப்பதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் அவ்விளைவுகளையே ஏற்படுத்தும்.(4,5)

உணவு சமைக்கப்படும்போது, அதன் முதல் பகுதியானது ஒரு பிராமணருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பலி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட காணிக்கைகள் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அத்தகைய கொடைகளால் நிறைவடைகின்றனர்.(6) அத்தகைய காணிக்கைகளால் தேவர்கள் எவ்வளவு நிறைவடைகிறார்களோ அதற்கு நூறு மடங்களவுக்குப் பெரிதாக அந்த இல்லறவாசியைப் பதிலுக்கு அவர்கள் நிறைவடையச் செய்வார்கள்.(7) பக்தியும் ஞானமும் கொண்ட மனிதர்கள் நறுமணப்புகைப் பொருட்களையும், விளக்குகளையும் கொடையளித்து நெடுஞ்சாண்கிடையாக வணங்கவும் செய்வார்கள். அத்தகைய செயல்கள் அவற்றைச் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், செழிப்பையும் எப்போதும் கொண்டு வரும்.(8) தூய்மைச் சடங்குகளின் போது, நீரின் உதவியுடன் தேவர்களுக்குப் பணிந்து செய்யப்படும் சடங்குகள் யாவும் தேவர்களை நிறைவடையச் செய்யவே உதவுகின்றன.(9) முறையான சடங்குகளுடன் வழிபடப்படும்போது உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்களும், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும், வீட்டில் வசிக்கும் தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(10)

தேவர்களின் அரசுரிமையை அடைந்தபோது, இத்தகைய கருத்துகளால் நிறைந்திருந்த பெரும் மன்னன் நஹுஷன், பெரும் மகிமையால் நிறைந்த இந்தச் சடங்குகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் பின்பற்றினான்.(11) சில காலம் கழித்து நஹுஷனின் நற்பேறு தேய்வடைந்ததன் விளைவாக அவன் இந்த நோன்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, நான் ஏற்கனவே சொன்னவாறு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செயல்படத் தொடங்கினான்.(12) நறுமணப் புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் காணிக்களிப்பதில் உள்ள விதிகளை நோற்காமல் தவிர்த்ததன் விளைவாகத் தேவர்களின் தலைவனான அவனிடம் சக்தி குன்றத்தொடங்கியது.(13) அவனுடைய வேள்விச் சடங்குகளும், கொடைகளும் ராட்சசர்களால் தடுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் அவன் முனிவர்களில் முதன்மையானவரான அகஸ்தியரைத் தன்தேரில் பூட்டினான்.(14) பெரும்பலம் கொண்ட நஹுஷன், சிரித்துக்கொண்டே, சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்து (தான் குறிப்பிட்ட இடத்திற்கு) வாகனத்தைச் சுமக்க அந்தப் பெருமுனிவருக்கு ஆணையிட்டு, அவரை அந்தப் பணியில் நிறுவினான்.

அந்நேரத்தில, பெருஞ்சக்தி கொண்ட பிருகு, மித்ராவருணனின் மகனிடம் {அகஸ்தியரிடம்),(15) "நான் உமது தலையில் உள்ள சடாமுடிக்குள் நுழைவது வரை நீர் உமது கண்களை மூடிக் கொள்வீராக" என்றார். மங்கா மகிமை கொண்டவரும், வலிமையும், சக்தியும் கொண்டவருமான பிருகு இதைச் சொல்லவிட்டு, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நஹுஷனை வீசி எறிவதற்காக, மரக்கட்டையைப் போல அசையாமல் நின்றிருந்த அகஸ்தியரின் சடாமுடிக்குள் நுழைந்தார். விரைவில் நஹுஷன், தன் வாகனத்தைச் சுமக்க வரும் அகஸ்தியரைக் கண்டான்.(16,17)

தேவர்களின் தலைவனான அவனைக் கண்ட அகஸ்தியர், அவனிடம், "தாமதமில்லாமல் என்னை உன் வாகனத்தில் பூட்டுவாயாக. நான் உன்னை எந்த இடத்திற்குச் சுமந்து செல்ல வேண்டும்.(18) ஓ! தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்" என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ! பாரதா, அப்போது மன்னன் நஹுஷன் தன் அங்குசத்தைக் கொண்டு அகஸ்தியரைத் தூண்டினான். அந்த உயர் ஆன்ம முனிவர் அப்போதும் கோபவசப்படாமல் இருந்தார். தேவர்களின் தலைவன் கோபமடைந்தவனாகத் தன் இடதுகாலால் அகஸ்தியரின் தலையைத் தாக்கினான்.

அம்முனிவர் இவ்வாறு தலையில் தாக்கப்பட்ட போது, அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு,(22,23) சினத்தால் தூண்டப்பட்டவராக, பாவம் நிறைந்த ஆன்மாவான நஹுஷனைச் சபிக்கும் வகையில், "இந்தப் பெரும் முனிவரின் தலையை உன் காலால் நீ தாக்கியதால்,(24) ஓ! தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக" என்றார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ! ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ! மன்னா, அவன் பூமியில் வீசப்பட்டால் தன் நினைவை இழக்காமல் இருப்பதில் வென்றான். அப்போது அவன் சாபத்தில் இருந்து வெளியே வரும் நோக்கில் பிருகுவை அமைதிப்படுத்தினான்.(28) கருணையில் நிறைந்த அகஸ்தியரும் சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர பிருகுவை அமைதிப்படுத்துவதில் நஹுஷனுடன் சேர்ந்து கொண்டார். இறுதியாக நஹுஷனிடம் கருணை கொண்ட பிருகு, அந்தச் சாபத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொன்னார்.(29)

பிருகு {நஹூஷனிடம்}, " குரு குலத்தின் முதன்மையானவனாக யுதிஷ்டிரன் என்ற பெயரில் (பூமியில்) ஒரு மன்னன் தோன்றுவான். அவனே உன்னை இந்தச் சாபத்தில் இருந்து விடுவிப்பான்" என்றார். இதைச் சொன்ன அம்முனிவர் நஹுஷனின் பார்வையில் இருந்து மறைந்தார்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட அகஸ்தியரும், நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனின் காரியத்தில் இவ்வாறு ஈடுபட்டு, மறுபிறப்பாள வகையினர் அனைவராலும் வழிபடப்பட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(31)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயே பிருகுவின் சாபத்தில் இருந்து நஹுஷனை மீட்டாய். உண்மையில் உன்னால் விடுவிக்கப்பட்ட அவன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரம்மலோகத்திற்கு உயர்ந்தான்.(32) நஹுஷனை பூமியில் வீசியெறிந்த பிருகு பிரம்மலோகத்திற்குச் சென்று பெரும்பாட்டனிடம் அதைச் சொன்னார்.(33)

இந்திரனைத் திரும்ப அழைத்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களிடம், "தேவர்களே, நான் கொடுத்த வரத்தின் மூலம் நஹுஷன் சொர்க்கத்தின் அரசுரிமையை அடைந்தான்.(34) எனினும், சினம் கொண்ட அகஸ்தியரால் அரசுரிமையை இழந்த அவன் பூமியில் வீசப்பட்டான். தேவர்களே, ஒரு தலைவன் இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாது.(35) எனவே, நீங்கள் மீண்டும் இந்திரனையே சொர்க்கத்தின் அரசுரிமையில் நிறுவுவீராக" என்றான்.

ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மகிழ்ச்சியால் நிறைந்த தேவர்கள் தங்களிடம் இவ்வாறு சொன்ன பெரும்பாட்டனிடம் மறுமொழியாக "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார்கள். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தெய்வீகப் பிரம்மனும் சொர்க்கத்தின் அரசுரிமையில் இந்திரனை நிறுவினான். மீண்டும் தேவர்களின் தலைவனான வாசவன், அழகிலும், பிரகாசத்திலும் ஒளிரத்தொடங்கினான். பழங்காலத்தில் நஹுஷனின் வரம்புமீறலால் நேர்ந்தது இதுவே.(36-38) எனினும், நான் குறிப்பிட்ட வகையிலான செயல்களின் மூலம் அடைந்த பலன்களால் இழந்த தன் நிலையை மீண்டும் அடைவதில் நஹுஷன் வென்றான். எனவே, மாலை வந்ததும், இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள் ஒளிக்கொடையளிக்க வேண்டும்.(39) ஒளியைக் கொடையளிப்பவன் நிச்சயம் மரணத்திற்குப் பிறகு தெய்வீகப் பார்வையை அடைவான். உண்மையில், ஒளியைக் கொடையளிப்பவர்கள் முழு நிலவைப் போலப் பிரகாசமடைவார்கள்.(40) ஒளிக்கொடையளிப்பவர்கள், எத்தனை இமைப்பொழுதுகள் அவ்விளக்குகள் எரியுமோ அவ்வளவு வருடங்கள் வடிவு அழகுடன் கூடியவர்களாக, பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்" என்றார் {பீஷ்மர்}.(41)

அநுசாஸனபர்வம் பகுதி – 100ல் உள்ள சுலோகங்கள் : 41

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்