Monday, June 17, 2019

பிருகுவும் அகத்தியரும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 99

Brighu and Agastya! | Anusasana-Parva-Section-99 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)


பதிவின் சுருக்கம் : மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன் குறித்த நஹுஷன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பிருகு முனிவருக்கும் அகஸ்தியருக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே, மலர்கள், நறுமணப்புகைப்பொருட்கள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களால் வெல்லப்படும் பலன்களை நான் கேட்டேன். பலி அளிப்பதில் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில் உள்ள பலன்களைக் குறித்தும் நான் கேட்டேன். ஓ! பாட்டா, இது குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(1) உண்மையில், ஓ! ஐயா, நறுமணப்புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக. இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தை} நோற்கும் மனிதர்களால் பலிகள் தரையில் இடப்படுவதேன்?" என்று கேட்டான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக நஹுஷன் {நகுஷன்}, அகஸ்தியர் மற்றும் பிருகு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) ஓ! ஏகாதிபதி, தவங்களையே செல்வமாகக் கொண்ட அரச முனி நஹுஷன், தன் நற்செயல்களின் மூலம் சொர்க்கத்தின் ஆட்சி உரிமையை அடைந்தான்.(4) ஓ! மன்னா, புலனடக்கத்துடன் சொர்க்கத்தில் வசித்த அவன், மனித மற்றும் தேவ இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்வதில் ஈடுபட்டு வந்தான்.(5) ஓ! மனிதர்களின் தலைவா, அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடமிருந்தே பல்வேறு வகை மனிதச் செயல்களும் {கர்மங்களும்}, பல்வேறு வகைத் தெய்வீகச் செயல்களும் தோன்றின.(6) ஓ! ஏகாதிபதி, வேள்வி நெருப்பு, புனித விறகு, குசப்புல் {தர்ப்பை}, மலர்கள் ஆகியவற்றைத் திரட்டுவது, (மாவாக்கப்பட்ட) நெற்பொரியால் அலங்கரிக்கப்பட்ட உணவைக் கொண்ட பலி அளிப்பு, நறுமணப்புகைப்பொருள் மற்றும் விளக்குகளைக் காணிக்கையளிப்பது போன்ற அனைத்துக்கும் தொடர்புடைய பல்வேறு சடங்குகள், அந்த உயர் ஆன்ம மன்னன் சொர்க்கத்தில் வசித்தபோது நாள்தோறும் உண்டானவையே ஆகும். உண்மையில், அவன் சொர்க்கத்தில் வசித்திருந்தாலும், யப {ஜப} வேள்வியையும் (அமைதியாக மந்திரங்களை ஓதுவதையும்), தியான வேள்வியையும் செய்து வந்தான்.(7,8)

ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, நஹஷன் {நகுஷன்}, தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும், பழங்காலத்தில் தான் செய்து வந்ததைப் போலவே உரிய சடங்குகள் மற்றும் விழாக்களுடன் தேவர்கள் அனைவரையும் அவன் வழிபட்டு வந்தான்.(9) சில காலம் கழிந்த பிறகுதான் நஹுஷன் தான் தேவர்களின் அனைவரின் தலைவன் என்ற நிலையை உணர்ந்தான். இதனால் அவன் செருக்கில் நிறைந்தான். அந்தக் காலம் முதல் (இங்குச் சொன்ன வகையிலான) அவனுடைய செயல்கள் {கர்மங்கள்} அனைத்தும் நின்று போயின.(10) தேவர்கள் அனைவரிடம் இருந்தும் தான் பேற்ற வரத்தின் விளைவால் ஆணவத்தில் நிறைந்திருந்த நஹுஷன், முனிவர்களையே தங்கள் தோள்களில் அவனைச் சுமக்கச் செய்தான். எனினும் அறச்சடங்குகள் அனைத்தையும் அவன் கைவிட்டதன் விளைவால் அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களில் முதன்மையானோரைத் தன் வாகனங்களைச் சுமக்கச் செய்வதைத் தொடரும் அளவுக்கு நஹுஷன் மிக நீண்ட காலம் செருக்கால் நிறைந்திருந்தான்.(12) அவன் முனிவர்களை அவமதிக்கும் வகையில் இந்த வேலைகளை அவர்களைச் செய்ய வைத்தான். ஓ! பாரதா, ஒரு நாள் அகஸ்தியர் அவனுடைய {நகுஷனுடைய} வாகனத்தைச் சுமக்கும் நாள் வந்தது.(13)

அந்தக் காலத்தில், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான பிருகு, ஆசிரமத்தில் அமர்ந்திருந்த அகஸ்தியரின் முன்பு சென்று அவரிடம்,(14) "ஓ! பெருந்தவசியே, தேவர்களின் தலைவனாகியிருக்கும் இந்தத் தீய ஆன்மா கொண்ட நஹுஷனால் நம்மீது இழைக்கப்படும் இத்தகைய கண்ணியமின்மைகளுக்கு நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று கேட்டார்.(15)

அகஸ்தியர் {முனிவர் பிருகுவிடம்}, "ஓ! பெரும் முனிவரே, நஹுஷனை சபிப்பதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? வரங்களை அளிப்பவரே {பிரம்மரே}, நஹுஷனுக்குச் சிறந்த வரங்களை எவ்வாறு கொடுத்தார் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.(16) சொர்க்கத்திற்கு வந்த நஹுஷனால் வேண்டப்பட்ட வரம், தன் பார்வையில் பட்ட அனைத்தும் அதன் சக்தியனைத்தையும் இழந்து தன் ஆளுகைக்குள் வர வேண்டும் என்பதாகும்.(17) சுயம்புவான பிரம்மன் இவ்வரத்தையே அவனுக்கு அளித்திருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே உம்மாலோ, என்னாலோ அவனை எரிக்க இயலவில்லை. முனிவர்களில் முதன்மையான வேறு யாராலும் அவனை எரிக்கவோ, அவனது உயர்ந்த நிலையில் இருந்து தள்ள இயலாததும் இந்தக் காரணத்தினாலேயே ஆகும்.(18) ஓ! தலைவரே, முன்பொரு சமயம் நஹுஷன் குடிப்பதற்காகப் பிரம்மனால் அமுதம் கொடுக்கப்பட்டது. இந்தக் காரணத்தினாலும் நாம் அவன் எதிரில் பலமற்றவர்களாகிறோம்.(19) அந்தப் பரமதேவன், உயிரினங்கள் அனைத்தையும் துயரத்திற்குள் மூழ்கடிக்கவே நஹுஷனுக்கு அவ்வரத்தை அளித்ததாகத்தெரிகிறது. மனிதர்களில் இழிந்தவனான அவன் பிராமணர்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறான்.(20) ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்வீராக. உமது அறிவுரைப்படியே நான் செயல்படுவேன் என்பதில் ஐயமில்லை" என்றார்{அகஸ்தியர்}.(21)

பிருகு {அகஸ்தியரிடம்}, "பெரும் சக்தி கொண்டவனும், ஆனால் விதியால் மயக்கப்பட்டிருப்பவனுமான நஹுஷனின் பலத்திற்கு எதிர்ச்செயல் செய்யும் நோக்கில் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலேயே நான் இங்கே வந்திருக்கிறேன்.(22) தேவர்களுக்குத் தலைவனாகியிருக்கும் தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன் இன்று உம்மையே அவனுடைய தேரில் பூட்டப் போகிறான். அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்ததன் விளைவாலும், என் சக்தியின் துணையுடனும் அவன் இந்திரனின் நிலையில் இருந்து என்னால் வீசியெறியப்படப் போகிறான்.(23) நான் இன்று உம் பார்வையிலேயே தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான நஹுஷனை இந்திரனின் இருக்கையில் இருந்து வீசியெறிந்து, நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனை அதில் அமர்த்தப் போகிறேன்.(24) தேவர்களின் தலைவனாக இருக்கும் அந்த நேர்மையற்றவன், விதியால் பீடிக்கப்படிருக்கும் அவனது புத்தியின் விளைவால் அவனது வீழ்ச்சியைக் கொண்டு வரும்பொருட்டு ஓர் உதையின் மூலம் இன்று உம்மை அவமதிக்கப் போகிறான்.(25)

அத்தகைய அவமதிப்பால் சினமடையும் நான், பிராமணர்களின் எதிரியும், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த இழிந்தவனிடம், "நீ ஒரு பாம்பாவாயாக" என்று இன்று சபிக்கப் போகிறேன்.(26) ஓ! பெருந்தவசியே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ச்சீ ச்சீ என்று சொல்லப்படுவதன் விளைவால் சக்தி அனைத்தையும் இழந்திருக்கும் தீய ஆன்மாகக் கொண்ட நஹுஷனை நான் இந்து பூமிக்கு வீசப் போகிறேன்[1].(27) உண்மையில், தலைமைத்துவம் மற்றும் சக்தியால் மயங்கியிருப்பவனும், நியாயமற்ற செயல்களைச் செய்யும் அற்பனுமான நஹுஷனை நான் இன்று வீசியெறியப் போகிறேன். ஓ! தவசியே, உமக்கு ஏற்புடையதென்றால் நான் இதைச் செய்வேன்" என்றார் {பிருகு}.(28)

[1] "கிருத யுகத்தில் குற்றவாளியை ச்சீ என்று சொல்வது மட்டுமே தண்டனை என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு பிருகுவால் சொல்லப்பட்டவரும், மித்ராவருணனின் மகனும், மங்கா மகிமையும் பலமும் கொண்ட அகஸ்தியர், உயர்ந்த நிறைவை அடைந்து அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டார்" என்றார் {பீஷ்மர்}.(29)

அநுசாஸனபர்வம் பகுதி – 99ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்