Tuesday, June 18, 2019

க்ஷத்ரபந்துவும், சண்டாளனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 101

Kshatrabandhu and a Chandala! | Anusasana-Parva-Section-101 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 101)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் பாவத்தைக் குறித்து க்ஷத்ரபந்துவுக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மனிதர்களின் தலைவரே, பிராமணர்களுக்குச் சொந்தமான பொருட்களைக் களவாடவோ, அபகரிக்கவோ செய்யும் மூடர்களும், அற்பர்களும், பாவம் நிறைந்தவர்களுமான மானிடர்கள் எங்கே செல்கிறார்கள்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக ஒரு சண்டாளனுக்கும், ஓர் இழிந்த க்ஷத்திரியனுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் குறிப்பிடப்படுகிறது[1].(2)

[1] "க்ஷத்ரபந்து என்பது தாழ்ந்த அல்லது இழிந்த க்ஷத்திரியனைக் குறிக்கும்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்களின் பொருளைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வது பாவங்களுள் பெரும்பாவம். அந்தச் சண்டாளர்கள் வம்சத்துடன் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து போவர். இந்த விஷயமாக க்ஷத்ரபந்துவென்னும் அரசனுக்கும் ஒரு சண்டாளனுக்கும் நடந்த ஸம்பாஷணையாகிய புராதன சரித்திரத்தைக் கூறுகின்றனர்" என்றிருக்கிறது. இங்கே இழிந்த க்ஷத்திரியன் க்ஷத்ரபந்து என்றில்லாமல் மன்னான க்ஷத்ரபந்து என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போன்றே இருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "க்ஷத்ரபந்து என்பது ஓர் இழிந்த க்ஷத்திரியனைக் குறிக்கும் அவன் பிறப்பால் க்ஷத்திரியனாக இருந்தாலும், செயலால் அவ்வாறல்லாதவன்" என்றிருக்கிறது.

அரச வகையைச் சார்ந்த அம்மனிதன் {க்ஷத்ரபந்து}, "ஓ! சண்டாளா, நீ வயதில் முதிர்ந்தவனாகத் தெரிந்தாலும், நடத்தையில் சிறுவனாகவே தெரிகிறாய். நாய்கள் மற்றும் கழுதைகளால் எழுப்பப்பட்ட புழுதியால் உன் உடல் பூசப்பட்டிருந்தாலும், அப்புழுதியைக் கவனத்தில் கொள்ளாமல், உன் உடலில் விழுந்த நோய்தடுக்கும் பாலின் சிறு துளிகளைக் குறித்துக் கவலைப் படுகிறாய்.(3) சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய செயல்கள் அறவோரால் நிந்திக்கப்படுக்கின்றன என்பது வெளிப்படை. உண்மையில், உன் உடலில் இருந்து பால்துளிகளை நீ ஏன் கழுவ முயல்கிறாய்?" என்று கேட்டான்[2].(4)

[2] "உனது உடலின் அத்தகைய பாகங்களை நீ ஏன் குளத்தில் நனைக்கிறாய் என்பது நேரடி சொற்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கோதூளியினால் கெடுக்கப்பட்ட அங்கத்தை ஜலத்தினால் கழுவுகிறாய். ஏன்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கால்நடையால் எழுப்பட்ட தூசியை மட்டுமே நீ ஏன் குளத்தின் நீரால் கழுவிக் கொள்கிறாய்?" என்றிருக்கிறது.

சண்டாளன் {க்ஷத்ரபந்துவிடம்}, "ஓ! மன்னா, முன்பொரு காலத்தில் ஒரு பிராமணருடைய குறிப்பிட்ட பசுக்கள் களவாடப்பட்டன. அவ்வாறு அவை அபகரிக்கப்படும் போது, அவற்றின் மடியில் இருந்து சிந்திய பால் சாலையோரத்தில் வளர்ந்த சில சோமக் கொடிகளில் விழுந்தது. பால்படிந்த அந்தச் செடிகளின் சாற்றைக் குடித்த பிராமணர்களும்,(5) அந்தச் சோமம் பருகப்பட்ட வேள்வியைச் செய்த மன்னனும் நரகில் மூழ்கினார்கள். உண்மையில், ஒரு பிராமணனுக்கு உரிய ஏதோவொன்றை அபகரித்தால் மன்னனும், அவனுக்குத் துணைபுரிந்த பிராமணர்கள் அனைவரும் நரகிற்குச் செல்ல வேண்டும்.(6) பிராமணனின் பசுக்களைக் களவு செய்த அரண்மனையில் உள்ள பால், நெய், தயிர் ஆகியவற்றைப் பருகிய மனிதர்க்ள அனைவரும், நரகத்தில் வீழ்வார்கள்.(7) களவு செய்யப்பட்ட பசுக்களும், தாங்கள் பெருங்கவனத்துடன் கவனிக்கப்பட்டாலும் தங்கள் உடல்களை அசைத்து, தங்களைக் களவு செய்தோரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளையும், மன்னன் மற்றும் ராணியையும் தங்கள் பாலால் கொன்றுவிடுகின்றன.(8) ஓ! மன்னா, என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்வாறு களவு செய்யப்பட்ட பசுக்களை வைத்திருந்த இடத்தில் பிரம்மச்சரிய நோன்பை நோன்று வாழ்ந்து வந்தேன். நான் இரந்து பெற்ற உணவில் அந்தப் பசுக்களின் பால் தெளிக்கப்பட்டது.(9) ஓ! அரச வகையைச் சார்ந்தவனே, அந்த உணவை உண்டதால் நான் இப்பிறவியில் சண்டாளனானேன். ஒரு பிராமணனின் பசுக்களைக் களவு செய்த மன்னனும் புகழ்க்கேட்டுக்குரிய கதியையே அடைந்தான்.(10)

எனவே, எவனும் பிராமணனுக்குச் சொந்தமான எதையும் களவிடவோ, அபகரிக்கவோ கூடாது. ஒரு பிராமணனுக்குச் சொந்தமான பால் தெளிக்கப்பட்ட உணவை உண்டதன் விளைவால் நான் என்ன நிலையை அடைந்திருக்கிறேன் என்பதைக் காண்பாயாக.(11) இதன் காரணமாகவே ஞானம் கொண்ட மனிதனால் சோமக் கொடிகள் {சோமலதை} விற்கப்படக்கூடாது. சோமச்செடியை {சோமலதை} விற்பவனை ஞானிகள் நிந்திக்கிறார்கள்.(12) உண்மையில், ஓ! மகனே, சோமத்தை விற்பனை செய்பவன், வாங்குபவன் ஆகிய இருவரும் இவ்வுலகத்தில் இருந்து அகன்று யமலோகம் செல்லும்போது, ரௌரவன் என்றழைக்கப்படும் நரகில் மூழ்குகிறார்கள்.(13) வேதஞானம் கொண்ட மனிதன், சோமத்தை முறையாக விற்றால் தன் அடுத்தப் பிறவியில் வட்டிக்கு விடுபவனாகப் பிறந்து விரைவில் அழிவைச் சந்திக்கிறான்.(14) முன்னூறு முறை நரகில் மூழ்கும் அவன், மனிதக் கழிவை உண்டு வாழும் ஒரு விலங்காகிறான். தாழ்ந்த, இழிந்த மனிதருக்குத் தொண்டாற்றுபவன், செருக்குடையவன், நண்பனின் மனைவியைக் கற்பழிப்பவன் ஆகியோர்(15) ஒரே தராசில் எதிரெதிராக எடை பார்க்கப்பட்டால், அது கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்த செருக்கே கனமானதாக இருப்பதைக் காட்டும். பாவம் நிறைந்ததும், ஏற்பில்லாத நிறமும் கொண்டதும், மெலிந்திருப்பதுமான இந்த நாயைப் பார்ப்பாயாக.(16) (இது முந்தைய வாழ்வில் மனிதனாக இருந்தது). செருக்கின் மூலமே உயிரினங்கள் இத்தகைய பரிதாபகரமான கதியை அடைகின்றன. என்னைப் பொறுத்தவரையில், எனது முற்பிறவி ஒன்றில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து,(17) அறிவின் அனைத்துக் கிளைகளிலும், அறிவியல்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவனாக இருந்தேன். இக்குற்றங்களின் ஆழத்தை அறிந்தவனாக இருந்தாலும், செருக்கின் வசப்பட்ட நான்,(18) குருட்டுத் தன்மையை அடைந்து, விலங்குகளின் முதுகெலும்பைப் பற்றியிருக்கும் இறைச்சியை உண்டேன். அத்தகைய நடத்தை மற்றும் அத்தகைய உணவின் விளைவால்,(19) நான் இந்நிலையை அடைந்தேன். காலம் கொண்டு வரும் நேர்மாறு நிலைகளைக் காண்பாயாக. ஆடையின் ஒரு முனையில் நெருப்புப் பற்றப்பட்ட மனிதனைப் போலவோ, வண்டுகளால் தொடரப்படுபவனைப் போலவோ,(20) புழுதி பூசப்பட்டு அச்சத்தால் நான் ஓடுவதைப் பார்.

இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள், வேத கல்வியின் மூலமும், ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பிற வகைக் கொடைகளின் மூலமும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுகிறார்கள். ஓ! அரச வகையைச் சார்ந்தவனே {க்ஷத்ரபந்துவே}, பாவம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு பிராமணன், அனைத்து வகைப் பற்றுகளையும் துறந்து, காட்டு வாழ்வுமுறையை {வானப்பிரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றினால் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுவான். ஓ க்ஷத்திரியர்களின் தலைவா, நான் இப்பிறவியில் பாவம் நிறைந்த வகையில் பிறந்திருக்கிறேன்.(21-23) அனைத்துப் பாவங்களில் இருந்தும் என்னைத் தூய்மையாக்கிக் கொள்வதில் எவ்வாறு வெல்லப்போகிறேன் என்பதை நான் தெளிவாகக் காணத் தவறுகிறேன். முற்பிறவியில் செய்த ஏதோவொரு தகுதிமிக்கச் செயலின் விளைவால், முற்பிறவிகளின் நினைவை நான் இழக்காமல் இருக்கிறேன்.(24) ஓ! மன்னா, உன் கருணைக்கே நான் என்னை விடுகிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். என் ஐயத்தை நீ தீர்ப்பாயாக. எந்த மங்கல ஒழுக்க வழிமுறையின் மூலம் நான் என் விடுதலையை {முக்தியை} அடைய விரும்ப வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, எந்த வழிமுறைகளின் மூலம் நான் சண்டாளன் என்ற என் நிலையைக் கைவிடுவதில் வெல்வேன்?" என்று கேட்டான்.(25)

அதற்கு அந்த அரச வகையினன், "ஓ! சண்டாளா, நீ விடுதலையை {முக்தியை} அடையக்கூடிய வழிமுறையை அறிவாயாக. ஒரு பிராமணனுக்காக உன் உயிர்மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விரும்பத்தக்க கதியை அடையலாம்.(26) ஒரு பிராமணனின் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் ஆகுதியாக, விலங்குகள் மற்றும் பறவைகளின் இரையாக உன் உடலை வீசுவதன் மூலம், உண்மையில் இவ்வாறு உயிர் மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விடுதலையை {முக்தியை} அடையலாம். வேறு எந்த வழிமுறையின் மூலமும் உன்னால் அதை அடைவதில் வெல்லமுடியாது" என்றான்".(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகைவர்களைச் சுடுபவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சண்டாளன், ஒரு பிராமணனின் செல்வத்தைக் காக்கும் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் தன் உயிர் மூச்சை ஆகுதியாக ஊற்றியதன் விளைவாக மிக விரும்பத்தக்க கதியை அடைந்தான்.(28) எனவே, ஓ! மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ நித்திய இன்பத்தையே கதியா அடைய விரும்பினால் பிராமணர்களின் உடைமைகளை நீ எப்போதும் பாதுகாக்க வேண்டும்" {என்றார் பீஷ்மர்}.(29)

அநுசாஸனபர்வம் பகுதி – 101ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்