Saturday, June 22, 2019

ஜியேஷ்டகனிஷ்டர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 105

Elder and younger brothers! | Anusasana-Parva-Section-105 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)


பதிவின் சுருக்கம் : அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் நடந்து கொள்ளும் முறை; தந்தைக்குரிய மதிப்பு; தாயின் மகிமை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அண்ணன் தன் தம்பியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தம்பிகள் தங்கள் அண்ணனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, நீ எப்போதும் உன் தம்பிகளிடம் அண்ணனுக்குரிய முறையில் நடந்து கொள்வாயாக. இந்தச் சகோதரர்களுக்கிடையில் நீயே எப்போதும் மூத்தவனாக இருக்கிறாய். ஓர் ஆசான் தன் சீடர்களிடம் எப்போதும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த ஒழுக்கத்தையே நீ உன் தம்பிகளிடம் பின்பற்றுவாயாக.(2) ஓர் ஆசான் ஞானமில்லாதவராக இருந்தால், சீடன் மதிப்புமிக்க வகையிலோ, முறையான வழியிலோ அவரிடம் நடந்து கொள்ள மாட்டான். ஓ! பாரதா, அந்த ஆசான் தூய்மையையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் கொண்டவராக இருந்தால், அந்தச் சீடனும் அதே வகை ஒழுக்கத்தை அடைவதில் வெல்வான்.(3) மூத்த சகோதரன் சில வேளைகளில் தன் தம்பிகள் செய்யும் செயல்களைக் கண்டு குருடனாகவும், தான் ஞானம் கொண்டவனாக இருப்பினும் சில வேளைகளில் அவர்கள் செய்யும் செயல்களைப் புரிந்து கொள்ளாதவன் போலவும் இருக்க வேண்டும். தம்பிகள் வரம்புமீறி குற்றம் புரிந்தால் அண்ணன் மறைமுக வழிமுறைகளில் அவர்களைத் திருத்த வேண்டும்.(4) சகோதரர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து, அண்ணன் நேரடியாகவோ, வெளிப்படையான வழிமுறைகளிலோ தன் தம்பியைத் திருத்தினால், ஓ! குந்தியின் மகனே, அத்தகைய நல்ல புரிந்துணர்வைக் காண்பதால் கவலையில் பீடிக்கப்படும் பகைவர்கள், அவர்களுக்குள் வேற்றுமையை விளைவித்து, சகோதரர்களைப் பிரிப்பதில் தங்களை நிறுவிக் கொண்டு, அவர்களுக்கு ஒற்றுமையின்மை உண்டாக்க எப்போதும் முனைவார்கள்.(5)

ஓர் அண்ணனே, குடும்பத்தின் செழிப்பை அதிகரிக்கவோ, முற்றிலும் அழிக்கவோ செய்வான். அண்ணன் அறிவில்லாதவனாகவும், தீய நடத்தை கொண்டவனாகவும் இருந்தால், அவன் மொத்த குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டு வருவான்.(6) தம்பிகளுக்குத் தீங்கு செய்யும் அண்ணன் மூத்தவனாகக் கருதப்படாமல், தன் குடும்ப உடைமையில் உள்ள தன் பங்கை இழந்து, மன்னனால் அடக்கப்படத் தகுந்தவனாகிறான்.(7) வஞ்சகமாகச் செயல்படும் மனிதன், துன்பமும், அனைத்து வகைத் தீமைகளும் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதனின் பிறப்பு, பிரம்பு மலர்களைப் போலவே எந்தப் பயனுமில்லாததாகும்[1].(8) பாவம் நிறைந்த மனிதன் பிறக்கும் குடும்பமானது அனைத்து வகைத் தீமைகளுக்கும் ஆட்படுகிறது. அத்தகைய மனிதன் புகழ்க்கேட்டைக் கொண்டு வருகிறான், மேலும் அந்தக் குடும்பத்தின் நற்செயல்கள் அனைத்தும் மறைந்து போகும்.(9) தீச்செயல்களில் ஈடுபடும் சகோதரர்கள் குடும்ப உடைமையில் உள்ள தங்கள் பங்குகளை இழக்கிறார்கள். அத்தகைய வழக்கில், அண்ணனானவன் யௌதுக {தன் மனைவி குடும்பத்தின் மூலம் வந்த சீதன} உடைமையில் எந்தப் பங்கையும் தன் தம்பிகளுக்குக் கொடுக்காமல் மொத்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(10)

[1] "பிரம்பு மலர்களைத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப் பிடுங்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தந்தைவழி உடைமைகளைப் பயன்படுத்தாமல் ஓர் அண்ணன் தொலைவான இடத்திற்குச் செல்வதன் மூலம் எந்த உடைமையையும் ஈட்டினால் அவன் அத்தகைய உடைமைகளில் தன் தம்பிகளுக்கு எந்தப் பங்கையும் கொடுக்காமல் அவற்றைத் தன் சொந்த பயன்பாட்டுக்கே கொள்ளலாம்.(11) பிரியாத சகோதரர்கள், (தங்கள் தந்தையின் வாழ்நாள் காலத்திலேயே) குடும்ப உடைமைகளைப் பிரித்துக் கொள்ள விரும்பினால், தந்தையானவன் தன் மகன்கள் அனைவருக்கும் அவற்றைச் சமப் பங்குகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.(12) அண்ணன், பாவச்செயல்களைச் செய்பவனாகவும், எந்தச் சாதனைக்காகவும் பிரித்தறியப்பட முடியாதவனாகவும் இருந்தால் அவன் தன் தம்பிகளால் அவமதிக்கப்படுவான். மனைவியோ, தம்பியோ பாவம் நிறைந்தவர்களாக இருந்தாலும் அப்போதும் அவள் அல்லது அவனின் நலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.(13) அறத்தின் உச்சவினையை {பலாபலன்களை} அறிந்த மனிதர்கள் அறமே உயர்ந்த நன்மை என்று சொல்கிறார்கள். ஓர் உபாத்யாயர் {தலைமை ஆசிரியர்} பத்து ஆச்சார்யர்களைவிட {ஆசிரியர்களைவிட} உயர்ந்தவர். தந்தையானவர் பத்து உபாத்யாயர்களுக்கு இணையானவர்.(14) ஒரு தாயானவள், பத்து தந்தைக்கோ, மொத்த பூமிக்கோ இணையானவள். தாயினும் பெரியோர் யாருமில்லை. உண்மையில் அவள் தனக்கு உரிய மதிப்புகள் அனைத்தையும் கடந்திருப்பவள்[2].(15)

[2] "ஓர் ஆச்சார்யர் ஒரு சாதாரண ஆசிரியராவார். வேதங்களைக் கற்பிப்பவர் ஓர் உபாத்யாயர் என்றழைக்கப்படுகிறார். ஓர் உபாத்யாயர் பத்து ஆச்சாரியர்களைவிடப் பெரியவராவார். மேலும், ஒரு தந்தையானவர் உபாத்யாயரைவிடப் பத்து மடங்கு மதிக்கத்தகுந்தவராவார். தாயைப் பொறுத்தவரையில் தந்தைக்குரியதைவிடப் பெரிய மதிப்புக்குத் தகுந்தவள். ஒரு தாய் மொத்த பூமிக்கே இணையானவளாவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலும் மற்றொரு அடிக்குறிப்பில், "மனு சாத்திரம் 1:140,41ல் ஆச்சாரியர் என்பவர் ’கைம்மாறேதுமின்றி வேதங்கள் அனைத்தையும் கற்பிப்பவர்’ என்றும்,  மறுபுறம் ஓர் உபாத்யாயர் என்பவர் ’தன் வாழ்வுக்காக ஒரு குறிப்பிட்ட வேதத்தைக் கற்பிப்பவர்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறாயின் ஆச்சாரியரே உபாத்யாயரைவிட மேம்பட்டவர் என்றாகும். ஆனால் இங்கே மஹாபாரதத்தின் படி உபாத்யாயரே மேம்பட்டவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இதன் காரணமாகவே மக்கள் ஒரு தாயை அதிக மதிப்புக்குத் தகுந்தவளாகக் கருதுகிறார்கள். ஓ! பாரதா, தந்தை மூச்சை நிறுத்தியதும் அண்ணனே தந்தையாகக் கருதப்பட வேண்டும்.(16) அண்ணனே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து, அவர்களைப் பாதுகாக்கவும், பேணி வளர்க்கவும் வேண்டும். தம்பிகள் அனைவரும் அவனை வணங்கி அவனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.(17) உண்மையில் அவர்கள், தங்கள் தந்தை உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே அவனை {அண்ணனைச்} சார்ந்து வாழ வேண்டும். ஓ! பாரதா, தந்தையும், தாயுமே உடலைப் படைக்கின்றனர்.(18) எனினும், ஆச்சாரியார் விதிக்கும் பிறவியே உண்மையில் மங்காததாகவும், அழிவில்லாததாகவும், உண்மையான பிறவியாகவும் கருதப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அக்காள் {தமக்கை} ஒரு தாயைப் போன்றவளாவாள். குழந்தைப் பருவத்தில் பாலூட்ட {உணவூட்டக்} கூடியவளானதால் அண்ணனின் மனைவியும் {அண்ணியும்} ஒரு தம்பிக்குத் தாயைப் போன்றவளே ஆவாள்[3]" என்றார் {பீஷ்மர்}.(19)

[3] கும்பகோணம் பதிப்பில், "ஜ்யேஷ்ட சகோதரன் மனைவியும் அவன் குழந்தையாயிருக்கையில் அவளிடம் ஸ்தன்யபானம் செய்திருப்பானாயின் தாயைப் போலவேயாவாள்" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 105ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்