Tuesday, June 25, 2019

சரீரத்தீர்த்தங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 108

Tirthas in the body! | Anusasana-Parva-Section-108 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 108)


பதிவின் சுருக்கம் : தீர்த்தங்களும், தூய்மைகளும் எவை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தீர்த்தங்கள் அனைத்திலும் எது முதன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், எந்தத் தீர்த்தத்தால் பெருந்தூய்மை உண்டாகிறது என்பதையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)


[1] "தீர்த்தம் என்ற சொல் புனித நீர் என்ற பொருளைக் கொண்டது என ஏற்கனவே (சாந்தி பர்வத்தில்) விளக்கப்பட்டிருக்கிறது. நீரில்லாமல் தீர்த்தமோ, ஆறோ, தடாகமோ, கிணறோ இருக்க முடியாது. எனினும், பீஷ்மர் இந்தச் சொல்லுக்கு வேறு பொருளைக் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்துத் தீர்த்தங்களும் பலன்கொண்டவையே என்பதில் ஐயமில்லை. எனினும், ஞானம் கொண்ட மனிதர்களுக்குத் தீர்த்தமும், தூய்மையும் எது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) நித்திய வாய்மையைப் பின்பற்றும் ஒருவன், ஆழங்காண முடியாததும், களங்கமற்றதும், தூய்மையானதும், வாய்மையையே நீராகக் கொண்டதும், புத்தியையே தடாகமாகக் கொண்டதுமான மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும்[2].(3) ஒருவன் இத்தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் தூய்மையின் வடிவில் அடையப்படும் கனிகளே {பயன்களே}, பேராசையிலிருந்து விடுதலை, நேர்மை, வாய்மை, (நடத்தையில்) மென்மை, கருணை, எந்த உயிரினத்துக்கும் தீங்கிழையாமை, தற்கட்டுப்பாடு மற்றும் அமைதி {மன அடக்கம்} ஆகியவையாகும்.(4) பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள், செருக்கற்றவர்கள், (இன்பதுன்பம், புகழ்பழி, வெப்பம்குளிர் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவர்கள், மனைவி, பிள்ளைகள், வீடுகள், தோட்டங்கள் முதலியவை இல்லாதவர்கள், தூய்மையுடன் கூடியவர்கள், பிறரால் கொடுக்கப்படும் பிச்சையில் மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் தீர்த்தங்களாகக் கருதப்படுகிறார்கள்.(5)

[2] "இம்மொழி குறீயீடுகள் நிறைந்ததாகும். ‘மானஸம்’ என்ற சொல்லின் மூலம் உயர்ந்ததும், புனிதமானதும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்களை ஈர்ப்பதுமான இமாலயத் தடாகத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இங்கே பயன்படுத்தப்படும் அந்தச் சொல் ஆன்மாவைக் குறிப்பிடுகிறது. எவராலும் அதன் மூலத்தைக் காண முடியாத விளைவால் அஃது ஆழங்காண முடியாததாக இருக்கிறது. அஃது இயல்பாகவே தூய்மையானதாகவும், களங்கமற்றதாகவும் இருக்கிறது. வாய்மையை நீராகவும், புத்தியைத் தடாகமாகவும் கொண்டிருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது. ஒருவேளை வாய்மையை நீராகக் கொண்ட புத்தியானது, {மானஸம் என்ற} அந்தப் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தத்தின் ஒரு பகுதியாகப் புஷ்கரம் இருப்பதைப் போலவே இந்தத் தீர்த்தத்தின் ஒரு பகுதியாக அமைகிறது என்று சொல்லப்படுவதாகப் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸத்யமென்னும் துறையும், தைரியமென்னும் மடுவுமாகவுள்ள ஆழமும், பரிசுத்தமும், தெளிவுமான மனமென்னும் தீர்த்தத்தில் அழியாத ஸத்வகுணத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

அனைத்துப் பொருட்களின் உண்மையை அறிந்தவனும், நான், எனது என்ற {அகங்காரக்} கருத்தில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் உயர்ந்த தீர்த்தமாகச் சொல்லப்படுகிறான்[3]. தூய்மைக்கான குறியீடுகளைத் தேடும்போது உன் பார்வை இந்தக் குணங்களில் (அஃதாவது இந்தக் குணங்கள் இருக்கும் இடத்தில் தூய்மை இருக்கும், இல்லாத இடத்தில் தூய்மை இல்லை என்று கொள்வதற்காக) எப்போதும் செலுத்தப்பட வேண்டும்.(6) சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் கழுவப்பட்ட ஆன்மாவைக் கொண்டோர், (புறத்) தூய்மை மற்றும் தூய்மையின்மைகளைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு முன்மொழிந்து கொண்ட முடிவுகளைப் பின்தொடர்பவர்கள்,(7) அனைத்தையும் துறந்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள், அண்டப் பார்வை கொண்டவர்கள், தூய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் தூய்மை செய்யும் சக்தி படைத்த தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றனர்.(8) அங்கங்கள் நீரில் நனைந்ததால் மட்டுமே ஒரு மனிதன் கழுவப்பட்டவனாகக் கருதப்படமாட்டான். மறுபறம் அவன் தன்மறுப்பால் தன்னைக் கழுவிக் கொண்டால் அவன் கழுவப்பட்டவனாகக் கருதப்படுவான். அத்தகைய மனிதனே அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(9) கடந்த காலத்தைக் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதவர்கள், உண்மையில், ஆசையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் உயர்ந்த தூய்மையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(10)

[3] "நான் எனது என்ற கருத்தில் இருந்து விடுபட்ட ஒருவன் தன்னை அனைத்து உயிரினங்களுடன் அடையாளம் காண்கிறான். தான் என்ற கருத்து அவனுள் அழிந்து விடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அறிவே தனிச்சிறப்புள்ள உடல்தூய்மையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. அதே போல ஆசையில் இருந்து விடுதலையும் மன உற்சாகமும் அவ்வாறே சொல்லப்படுகிறது.(11) ஒழுக்கத்தூய்மையானது, மனத்தூய்மையில் அடங்கியிருக்கிறது. புனித நீர்நிலைகளில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகளால் ஒருவன் அடையும் தூய்மை தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.(12) சுடர்மிக்க மனத்துடன், பிரம்ம அறிவு என்ற நீரில், மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் ஒருவனால் செய்யப்படும் தூய்மைச்சடங்குகளே வாய்மையறிந்தோருக்கு உண்மையான தூய்மைச்சடங்குகளாகும்.(13) உண்மையான ஒழுக்கத்தூய்மை கொண்டவனும், அனைவரிடமும் முறையான அணுகுமைறையைப் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவுனும், உண்மையில் (தூய) குணங்களும் தகுதியும் கொண்டவனுமான மனிதனே உண்மையில் தூய்மையானவனாகக் கருதப்படுகிறான்.(14) நான் சொன்ன இவையே உடலில் உள்ள தீர்த்தங்களாகச் சொல்லப்படுகின்றன. பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தீர்த்தங்களையும் சொல்கிறேன் கேட்பாயாக.(15)

உடலின் தனிச்சிறப்புள்ள குணங்கள் புனிதமானவையாகச் சொல்லப்படுவதைப் போலவே, பூமியில் உள்ள குறிப்பிட்ட இடங்களும், குறிப்பிட்ட நீர்நிலைகளும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(16) தீர்த்தங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், அங்கே தூய்மைச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், அவ்விடங்களில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிப்பதன் மூலமும் ஒருவனுடைய பாவங்கள் கழுவப்படுகின்றன.. உண்மையில், இவ்வாறு பாவங்கள் கழுவப்பட்ட மனிதன், இவ்வுலகை விட்டுச் செல்லும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17) அறவோரின் தொடர்புடையதன் விளைவாகவும், அந்த இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நீர்நிலைகளில் உள்ள பூமியின் சிறப்புத்திறன்களின் மூலமும், பூமியில் குறிப்பிட்ட பகுதிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(18) மனோதீர்த்தங்கள் பூமியில் உள்ளவற்றைக் காட்டிலும் தனியானவையும், வேறுபட்டவையுமாகும். இரண்டிலும் நீராடும் மனிதன் தாமதமில்லாமல் வெற்றியை அடைகிறான்.(19) முயற்சியில்லாத பலம், அல்லது பலமில்லாத முயற்சி ஆகியவற்றால் தனியாக எதையும் நிறைவேற்ற முடியாமல், இவை சேர்ந்திருக்கும்போதே அனைத்தையும் நிறைவேற்ற முடிவதைப் போலவே,(20) உடலில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதும், பூமியில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதுமான தூய்மையுடன் கூடிய ஒருவன் உண்மையில் தூய்மையடைந்து வெற்றியை அடைகிறான். இரண்டு மூலங்களில் இருந்தும் பெறப்படும் தூய்மையே சிறந்ததாகும்" என்றார் {பீஷ்மர்}.(21)

அநுசாஸனபர்வம் பகுதி – 108ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்