Tuesday, June 25, 2019

விஷ்ணுவும், உபவாஸமும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 109

Vishnu and fasts! | Anusasana-Parva-Section-109 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 109)


பதிவின் சுருக்கம் : பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு பெயர்களால் விஷ்ணுவைத் துதிப்பதன் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, இவ்வுலகில் அனைத்து வகை உண்ணா நோன்புகளிலும் உயர்ந்ததும், நன்மையானதும், குறிப்பிடத்தக்கதுமான பலன் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஒருவன் எதைச் செய்வதன் மூலம் ஐயமில்லாமல் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான் என்பதைச் சுயம்புவே பாடியிருக்கிறான் கேட்பாயாக.(2)

மார்கசீரிஷம் {மார்கழி} என்றழைக்கப்படும் மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனைக், கேசவனாக {கேசவன் என்று சொல்லி} வழிபடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து கழுவப்பட்டு, ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(3)

அதே வகையில், பௌஷ {தை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை நாராயணனாக வழிபடும் மனிதன், உயர்ந்த வெற்றியை அடைந்து, வாஜபேய வேள்வியைச் செயத பலனை அடைகிறான்.(4)

மாக {மாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மாதவனாக வழிபடும் மனிதன், தன் குலத்தை (துன்பத்தில் இருந்து) மீட்டு, ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான்[1].(5)

[1] "அத்தகைய மனிதன், இறந்து போன தன் மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் தான் அடையும் பலனின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் மறுமையில் விடுவிப்பான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பால்குன {பங்குனி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை கோவிந்தனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகத்திற்குச் சென்று அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான்.(6)

சைத்ர {சித்திரை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை விஷ்ணுவாக வழிபடும் மனிதன், தேவர்களின் உலகிற்குச் சென்று, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான்.(7)

வைசாக {வைகாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} அதேபோன்ற உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மதுசூதனனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகிற்குச் சென்று அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(8)

ஜய்ஷ்ட (ஆனி) மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (பலியின் வேள்வியில்) அண்டத்தையே தன் மூன்று அடிகளால் மறைத்தவனாக {திரிவிக்கிரமனாக} வழிபடும் மனிதன், பெரும் மகிழ்ச்சியுடன் அப்சரஸ்களுடன் விளையாடிக் கொண்டு கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9)

ஆஷாத {ஆடி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (அசுர மன்னன் பலியியை வஞ்சித்த) வாமனனாக வழிபடும் ஒருவன், அப்சரஸ்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே, நரமேத வேள்வியின் பலன்களை அடைகிறான்[2].(10)

[2] "நரமேத வேள்வியில் ஒரு மனிதன் காணிக்கயளிக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சிரவண {ஆவணி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ஸ்ரீதரனாக வழிபடும் ஒருவன், தான் இன்பத்தில் விளையாடும் சொர்க்கத்தில் ஓர் அழகிய தேரை அடைந்து, பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(11)

பாத்ரபத {புரட்டாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ரிஷிகேசனாக {ஹ்ருஷீகேசனாக} வழிபடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்து, சௌத்ராமணி வேள்வி செய்த பலன்களை அடைவான்.(12)

அஸ்வினி {ஐப்பசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனைப் பத்மநாபனாக வழிபடும் ஒருவன், ஆயிரம் பசுக்கள் கொடையளிக்கப்பட்டும் செய்யப்பட்ட வேள்வியின் பலன்களை ஐயமில்லாமல் கொடுக்கும்.(13)

கார்த்திகா {கார்த்திகை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனை தாமோதரனாக வழிபடும் ஒருவன், அனைத்து வேள்விகளையும் செய்த மொத்த பலன்களையும் ஐயமில்லாமல் அடைகிறான்.(14)

இவ்வழியில் மொத்த வருடமும் கிருஷ்ணனை புண்டரீகாக்ஷனாகத் துதிப்பவன் பெரும் அளவினால தங்கத்தை அடைந்து, தன் முற்பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூரும் சக்தியை அடைகிறான்.(15)

அதேபோல, ஒவ்வொரு நாளும் கிருஷ்ணனை உபேந்திரனாக வழிபடும் ஒருவன் அவனோடு அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான். இவ்வழியில் கிருஷ்ணனை வழிபட்ட பிறகு, ஒருவன் தன் நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்து, எண்ணற்ற பிராமணர்களுக்கு உணவூட்டி, நெய்யாலான கொடைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(16)

புராதனமானவனும், சிறப்புமிக்கவனுமான விஷ்ணுவே, இவ்வகை உண்ணாநோன்புடன் தொடர்புடைய மேன்மையான பலன்களைக் கொண்ட  வேறு உண்ணாநோன்பு ஏதுமில்லை என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}".(17)

அநுசாஸனபர்வம் பகுதி – 109ல் உள்ள சுலோகங்கள் : 17

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்