Wednesday, June 26, 2019

அன்னதானம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 112

Gift of food! | Anusasana-Parva-Section-112 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 112)


பதிவின் சுருக்கம் : பாவத்தைப் போக்கும் வழிமுறைகள்; அறத்தின் துணையுடன் அடையப்படும் கதிகள்; அன்னதானத்தின் சிறப்பு; அறத்தின் ஆறு வாயில்கள் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, மறம் அல்லது பாவத்தின் கதியென்ன? என எனக்குச் சொன்னீர். ஓ! பேசுபவர்களின் முதன்மையானவரே, அறத்தின் கதியென்ன? என இப்போது கேட்க விரும்புகிறேன்.(1) பல்வேறு பாவச் செயல்களைச் செய்தபின் எந்தச் செயல்களின் மூலம் மக்கள் இவ்வுலகில் {இம்மையில்} மங்கல கதியை அடைகிறார்கள்? எந்தச் செயல்களின் மூலம் மக்கள் சொர்க்கத்திலும் {மறுமையிலும்} மங்கல கதியை அடைகிறார்கள்?" என்று கேட்டான்.(2)


பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "பிறழ்மனத்துடன் பாவம்நிறைந்த செயல்களைச் செய்த ஒருவன் மறத்தின் ஆளுகைக்கு வசப்பட்டு அதன் விளைவாக நரகத்திற்குச் செல்கிறான்.(3) மனத்தின் அறியாமையால் பாவச்செயல்களைச் செய்த மனிதன், மனந்திருந்தி வேதனையடைந்து தன் இதயத்தை (தேவர்களை) தியானிப்பதில் நிறுவினால், அவன் தன் பாவங்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதில்லை.(4) ஒருவன் எந்த அளவுக்கு {தான் செய்த பாவத்தைக் குறித்து நினைத்து} வருந்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(5) ஓ! மன்னா, பாவத்தை இழைத்த மனிதன், கடமைகளை அறிந்த பிராமணர்களின் முன்னால் அவற்றை அறிவித்தால் அந்தப் பாவங்களில் இருந்து எழும் அவதூறுகளிலிருந்து உடனே அவன் தூய்மையடைகிறான்.(6) இதன்படி ஒருவன் முழுமையாகவோ, வேறு வகையிலோ தன் பாவங்களைக் குவிந்த மனத்துடன் அறிக்கையிட்டால் அவன் பழைய சட்டையில் இருந்து விடுபெறும் பாம்பைப் போல அந்தப் பாவத்தில் இருந்து முழுமையாகவோ, வேறுவகையிலோ விடுபடுகிறான்.(7) குவிந்த மனத்துடன் ஒரு பிராமணனுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை அளித்து, (தேவனிடம்) மனதைக் குவிப்பதன் மூலம் ஒருவன் மங்கல கதியை அடைகிறான்.(8)

ஓ! யுதிஷ்டிரா, பாவச்செயல்களை இழைத்த குற்றவாளியாகவே இருந்தாலும் எக்கொடைகளை அளித்தால் அவன் பலன் கொண்டவனாகிறான் என்பதைச் சொல்லப் போகிறேன்.(9) கொடைகள் அனைத்திலும் உணவுக்கொடையே {அன்னதானமே} சிறந்ததெனக் கருதப்படுகிறது. பலனை அடைய விரும்பும் ஒருவன் நேர்மையான இதயத்துடன் உணவுக்கொடையளிக்க வேண்டும்.(10) உணவே மனிதர்களுக்கு உயிர் மூச்சுகளை அளிக்கிறது. அதிலிருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே உணவு மெச்சப்படுகிறது.(11) தேவர்கள், முனிவர்கள், பித்ருகள் மற்றும் மனிதர்கள் அனைவரும் உணவைப் புகழ்கின்றனர். பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததற்காகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(12)

நியாயமாக அடையப்பட்ட நல்ல உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கொடுக்க வேண்டும்.(13) ஓராயிரம் பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் உணவைக் கொடையளித்த மனிதன் இடைநிலை வகையில் {விலங்கு, பறவை, பூச்சிகளாக} ஒருபோதும் பிறக்க மாட்டான்.(14) ஓ! மனிதர்களின் தலைவா, பத்தாயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டிய ஒருவன், மறத்தில் {அதர்மத்தில்} இருந்து தூய்மையடைந்து யோக நடைமுறைகளில் அர்ப்பணிப்புள்ளவன் ஆகிறான்.(15)

வேதங்களை அறிந்த ஒரு பிராமணன், பிச்சையில் தனக்குக் கிடைத்த உணவை வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒரு பிராமணனுக்குக் கொடையளித்தால் இம்மையில் {இவ்வுலகில்} மகிழ்ச்சியடைவதில் வெல்கிறான்.(16)

ஒரு க்ஷத்திரியன், எந்தப் பிராமணனின் உடைமைகளையும் அபகரிக்காமல், தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பலத்தைப் பயன்படுத்தி அடைந்த உணவை வேத அறிவு கொண்ட முதன்மையான பிராமணர்களுக்குக் கொடையளித்தால், ஓ! பாண்டுவின் மகனே, ஓ! அற ஆன்மாவே, அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் அவன் தான் செய்த பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17,18)

ஒரு வைசியன், தன் களத்தின் {வயலின்} விளைச்சலை ஆறு சமமான பங்குகளாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை பிராமணர்களுக்குக் கொடுத்தால், அவன் அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(19)

ஒரு சூத்திரன், கடும் உழைப்பாலும், உயிரைப் பணயம் வைத்தும் ஈட்டப்பட்ட உணவைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(20)

உடல் பலத்தைப் பயன்படுத்தி, எந்த உயிரினத்திற்கும் எத்தீங்கையும் செய்யாமல் ஈட்டிய உணவை பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் தனக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதில் வெல்கிறான்.(21) நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகமாகக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) அறத்தின் பாதையில் நடப்பதன் மூலம் ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். பெருஞ்சக்தியைக் கொடுக்க வல்ல உணவைக் கொடையளிப்பவன் பெருஞ்சக்தி கொண்டவனாகிறான்.(23) ஈகையாளர்களால் அமைக்கப்பட்ட பாதையிலேயே ஞானம் கொண்டவர்கள் எப்போதும் நடக்கிறார்கள். உணவு கொடையளிப்பவர்கள் உயிரைக் கொடையளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய கொடையின் மூலம் அவர்கள் அடையும் பலன் நித்தியமானதாகும்.(24) எனவே ஒருவன் அனைத்துச் சூழ்நிலைகளிலும், நியாயமான முறைகளில் உணவை ஈட்ட முனைந்து, அவ்வாறு ஈட்டப்பட்டவற்றைத் தகுந்த மனிதர்களுக்கு எப்போதும் கொடையளிக்க வேண்டும். உயிரினங்களின் உலகிற்கு உணவே பெரும்புகலிடமாகும்.(25)

உணவுக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் ஒருபோதும் நரகத்திற்குப் போக மாட்டான். எனவே, ஒருவன் நியாயமான வழிமுறைகளில் ஈட்டப்பட்ட உணவை எப்போதும் கொடையளிக்க வேண்டும்.(26) ஓர் இல்லறத்தான் ஒரு பிராமணனுக்கு உணவுக் கொடையளித்தபிறகே எப்போதும் உண்ண வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உணவுக் கொடையளிப்பதன் மூலம் அந்த நாளை கனிநிறைந்ததாக்க வேண்டும்.(27) ஓ! மன்னா, கடமைகள் {தர்மங்கள்}, சாத்திரங்கள் மற்றும் புனித வரலாறுகளை அறிந்தவர்களான ஆயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டும் மனிதன்,(28) நரகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, இவ்வுலகில் மீண்டும் திரும்பும் வகையில் மறுபிறவியை அடைவதுமில்லை. அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அடையும் அவன் மறுமையில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(29) அக்கதைய பலனை அடையும் அவன், கவலையில் இருந்து விடுபட்டு, வடிவ அழகு, பெரும்புகழ் மற்றும் செல்வத்தை அடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(30) இவ்வாறு உணவுக் கொடையின் உயர்ந்த பலன்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். {வேற எந்த} அறம், பலன்கள் மற்றும் கொடைகள் அனைத்தின் வேராகவும் இதுவே இருக்கிறது" என்றார் {பிருஹஸ்பதி}.(31)

அநுசாஸனபர்வம் பகுதி – 112ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்