Friday, June 28, 2019

சூத்திரச் செல்வந்தன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 117

A Sudra possessed of great wealth! | Anusasana-Parva-Section-117 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 117)


பதிவின் சுருக்கம் : ஒரு புழுவைக் கண்ட வியாசர்; புழுவின் முற்பிறவிக் கதை; முற்பிறவியில் பெருந்தனம் படைத்த சூத்திரனாய் இருந்தது; அந்தப் புழுவுக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இறக்க விரும்பியோ, வாழ விரும்பியோ பல மனிதர்கள் தங்கள் உயிர்களை (போர் எனும்) பெரும் வேள்வியில் விடுகின்றனர். ஓ! பாட்டா, அவர்கள் அடையும் கதியென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) போரில் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கவலை நிறைந்த ஒன்றாகும். ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, செழிப்பாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கடினமானது என்பதை நீர் அறிவீர். நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பது என் கருத்தாகும். இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக" என்றான்.(2,3)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, செழிப்பிலோ, வறுமையிலோ, மகிழ்ச்சியிலோ, துக்கத்திலோ இவ்வுலகிற்கு வரும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கேற்றபடியே வாழ்கின்றன[1].(4) அதன் காரணத்தைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி சிறப்பானதாகும்.(5) ஓ! மன்னா, இது தொடர்பாகத் தீவில் பிறந்த முனிவருக்கும் {வியாசருக்கும்}, தவழும் புழுவுக்கும் இடையில் முற்காலத்தில் நடந்த ஒரு பழைய உரையாடலை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(6) பழங்காலத்தில் கல்விமானான பிராமணரும், தீவில் பிறந்தவரும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவருமான கிருஷ்ணர் {வியாசர்} உலகில் திரிந்து கொண்டிருந்த போது, தேர்கள் கடந்து செல்லும் சாலையில் ஒரு புழு வேகமாகச் செல்வதைக் கண்டார்.(7) அந்த முனிவர் ஒவ்வொரு உயிரினத்தின் நடைமுறையையும், ஒவ்வொரு விலங்கின் மொழியையும் அறிந்தவராவார். அனைத்தையும் அறிந்த அவர் அந்தப் புழுவின் இச்சொற்களைச் சொன்னார்.(8)

[1] கும்பகோணம் பதிப்பில், "செல்வம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஸுகமிருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த ஸம்ஸாரத்தில் ஜனித்த பிராணிகளெல்லாம் எந்த எண்ணத்தினால் ஆசை வைத்திருக்கின்றன என்பதற்குக் காரணத்தை என்னிடம் கேள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செழிப்பிலோ, வறுமையிலோ, நன்மையிலோ தீமையிலோ இவ்வாழ்வுச்சுழலில் பிறக்கும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தைப் பின்பற்றுகின்றன" என்றிருக்கிறது.

வியாசர், "ஓ! புழுவே, பேரச்சத்துடன் நீ மிக விரைவாகச் செல்வதாகத் தெரிகிறது. நீ எங்கே ஓடுகிறாய், எதைக் கண்டு அஞ்சுகிறாய் என்பதை எனக்குச் சொல்" என்றார்.(9)

அந்தப் புழு {வியாசரிடம்}, "பெருந்தேர் ஒன்றின் சடசடப்பொலியைக் கேட்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அதன் முழக்கம் கடுமையாக இருக்கிறது. அது கிட்டத்தட்ட {அருகில்} வந்துவிட்டது. ஒலி கேட்கிறது. அஃது என்னைக் கொல்லாதா? இதற்காகவே நான் தப்பி ஓடுகிறேன். காளைகளின் ஒலியை மிக அருகில் கேட்கிறேன். அவை சாரதியின் சாட்டையின் கீழ் கடும் மூச்சு விட்டுக் கொண்டே கடும் சுமையைச் சுமந்து வருகின்றன. அந்தக் காளைகளைச் செலுத்தும் மனிதர்கள் வெளியிடும் பல்வேறு ஒலிகளையும் நான் கேட்கிறேன்.(12) புழு வகையில் பிறந்திருக்கும் எங்களைப் போன்ற உயிரினங்களால் அவ்வொலிகள் கேட்கத்தகாதனவாகும். இதன் காரணமாகவே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்தச் சூழ்நிலையில் இருந்து நான் தப்பிச் செல்கிறேன்.(13) அனைத்து உயிரினங்களும் வலிநிறைந்த மரணத்தை உணர்கின்றன. வாழ்வு என்பது அடைதற்கரிய உடைமையாகும். எனவே, மகிழ்ச்சியான நிலையில் இருந்து துன்ப நிலைக்குச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே நான் அச்சத்தால் தப்பி ஓடுகிறேன்" என்றது".(14)

பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டதும், தீவில் பிறந்தவரான வியாசர், "ஓ! புழுவே, நீ எங்கே மகிழ்ச்சியாக இருப்பாய்? நீ இடைநிலை வகையைச் சார்ந்த உயிரினமாக இருக்கிறாய். மரணம் உனக்கு மகிழ்ச்சி நிறைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(15) ஓ! புழுவே, ஒலி, தீண்டல், சுவை, மணம், மற்றும் பல்வேறு வகையான சிறந்த இன்பங்களை நீ அறியமாட்டாய். மரணம் உனக்கு நன்மையானது என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.(16)

புழு {வியாசரிடம்}, "ஓர் உயிரினம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அதில் பற்றுக் கொள்கிறது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, இந்த வகைப் பிறப்பிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்.(17) இந்தச் சூழ்நிலையிலும் என் உடல் தேவைகளுக்கு ஏற்ற இன்பங்கள் இருக்கின்றன. மனிதர்களும், அசைவற்ற {உயிரற்ற} பொருட்களில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் வெவ்வேறு இன்பங்களைக் கொண்டிருக்கின்றனர்.(18) என் முந்தைய பிறவியில் நான் மனிதனாக இருந்தேன். ஓ! பலமிக்கவரே, நான் செல்வம் நிறைந்த ஒரு சூத்திரனாக இருந்தேன். நான் பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இல்லை. நான் கொடூரனாகவும், ஒழுக்கத்தில் இழிந்தவனாகவும், அநியாய வட்டிக்குப் பணம் தருபவனாகவும் இருந்தேன்.(19) நான் பேச்சில் கடுமை மிகுந்தவனாகவும் இருந்தேன். வஞ்சிப்பதையே ஞானமாகக் கருதினேன். அனைத்து உயிரினங்களையும் நான் வெறுத்தேன். எனக்கும் பிறருக்கும் இடையில் உண்டான உடன்படிக்கைகளில் உள்ள சாக்குபோக்குகளைப் பயன்படுத்திப் பிறருக்குச் சொந்தமானவற்றை எப்போதும் அபகரித்து வந்தேன்.(20)

கொடியவனான நான், பசித்ததும் என் வயிற்றை நிறைத்துக் கொண்டு, பணியாட்களுக்கும், என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.(21) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம்பிக்கையுடனும், மதிப்புடனும் அவர்களுக்கு எந்த உணவையும் ஒருபோதும் அர்ப்பணிக்காத பேராசைக்காரனாக நான் இருந்தேன்.(22) பாதுகாப்பை நாடி அச்சத்துடன் என்னிடம் வந்த மனிதர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்காமல் திசைமாற்றிச் செல்ல வைத்தேன். தங்கள் அச்சத்தை விலக்க வேண்டி என்னிடம் வந்தவர்களுக்கு நான் எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை.(23) வேறு மக்களுக்குச் சொந்தமான செல்வம், தானியங்கள், மனைவிகள், அவர்களது அன்புக்குரியவை, பருகும் பானங்கள், நல்ல மாளிகைகள் ஆகியவற்றைக் கண்டு காரணமேயில்லாமல் அவர்களிடம் பொறாமை கொள்வேன்.(24) அவர்களுக்கு வறுமையையே நான் விரும்பினேன். என் ஆசைகளைக் கனியும் நிலையால் மகுடம் சூட்ட உறுதி அளித்த அந்த ஒழுக்கத்தையே பின்பற்றி, மற்றவர்களின் அறம், பொருள் மற்றும் இன்பங்களை அழிக்க முனைந்தேன்.(25)

என்னுடைய அந்த முற்பிறவியில் பெரிய கொடுமைகளையும், அதே போன்ற ஆசைகளை நிறைவேற்றும் செயல்களையும் செய்தேன். அந்தச் செயல்களை நினைவுகூரும் நான் அன்புக்குரிய மகனை இழந்து துயரப்படும் ஒருவனைப் போல வருத்தத்திற்கும் துன்பத்திலும் நிறைகிறேன்.(26) என்னுடைய இந்தச் செயல்பாடுகளின் விளைவால் நற்செயல்கள் என்ன கனிகளைத் தரும் என்பதை அறிந்தவனாக நான் இல்லை. எனினும், நான் வயது முதிர்ந்த என் தாயை வழிபட்டு வந்தேன், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிராமணரையும் வழிபட்டேன்.(27) {நல்ல} பிறவியையும், சாதனைகளையும் கொண்ட அந்தப் பிராமணர், ஒருமுறை தமது பயணங்களின் போது என் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். நான் அவரை மதிப்புடனும், விருந்தோம்பலுடனும் வரவேற்றேன். அந்தச் செயலுக்கான பலனின் விளைவால் என் நினைவு என்னைக் கைவிடாதிருக்கிறது.(28) என்னுடைய அந்தச் செயலின் விளைவால் மீண்டும் நான் மகிழ்ச்சியை மீட்டெடுப்பேன் என நினைக்கிறேன். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். என் நன்மைக்கானது என்ன என்பதை அன்புடன் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டது.(29)

அநுசாஸனபர்வம் பகுதி – 117ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்