Saturday, June 29, 2019

ஜென்மங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 118

Re-births! | Anusasana-Parva-Section-118 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 118)


பதிவின் சுருக்கம் : புழுவானது அடுத்தடுத்து வெவ்வேறு பிறவிகள் அடைந்ததைக் கண்ட வியாசர்...


வியாசர், "ஓ! புழுவே, ஒரு புண்ணியச் செயலின் விளைவாலேயே இடைநிலை உயிரின வகையில் பிறந்திருந்தாலும் நீ மதிமயங்காமலிருக்கிறாய். ஓ! புழுவே, நான் செய்த அந்தச் செயலின் விளைவாலேயே நீ மதிமயங்காமலிருக்கிறாய்[1].(1) என் தவ வலிமையின் விளைவாலேயே நானும் குற்றமுள்ள ஓர் உயிரினத்திற்கு என்னைக் காணச் செய்து அதைக் காக்க இயன்றவனாயிருக்கிறேன். தவ வலிமையைவிடப் பலமிக்க வலிமை வேறேதும் இல்லை.(2) ஓ! புழுவே, நீ உன் முற்பிறவியில் செய்த தீச்செயல்களின் மூலமே புழுக்களின் வகையில் பிறப்பெடுத்திருக்கிறாய் என்பதை அறிவேன். எனினும், நீ அறத்தையும், தகுதியையும் ஈட்ட நினைத்தால் உன்னால் அவற்றை அடைய முடியும்.(3) தேவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், இந்தச் செயற்களத்தில் தங்களால் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறார்கள். மனிதர்களுக்கு மத்தியிலும் அறச்செயல்கள் செய்யப்படும்போது கனியின் மேல் உள்ள விருப்பத்தாலேயே அவை செய்யப்படுகின்றன (கனியை விரும்பாமலல்ல). ஒருவன் அடைய நினைக்கும் சாதனையானது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்ற விருப்பத்தாலேயே வேண்டப்படுகிறது.(4)


[1] "அந்தப் புழுவால் ஏதோ ஒரு புண்ணியச் செயலின் விளைவாகவே முற்பிறவி நிகழ்வுகளை நினைவுகூர இயல்கிறது என இந்தத் தவசி {வியாசர்} சொல்ல வருகிறார். அந்தப் புண்ணியச் செயலானது, நற்பேறு பெற்ற அந்தப் புழுவால் இந்தத் தவசியைக் காண முடிந்ததுதான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புழுவே, நீ திர்யக்ஜாதியிலிருந்தும் நல்ல கர்மத்தினால் பூர்வஜன்மஞானம் தவறாமலிருக்கிறாய். நீ தவறாமலிருப்பது என் காரியம்தான். நான் என் தவ வன்மையால் பார்ப்பதனாலேயே உன்னைக் காப்பாற்றுகிறேன்" என்றிருக்கிறது.

(முற்பிறவியில்) கல்விமானாகவோ, அறியாமையுடன் கூடிய உயிரினமாகவோ, பேச்சும், புத்தியும், கைகளும், கால்களும் அற்றிருப்பது உண்மையில் அனைத்துமற்றிருப்பதே ஆகும்.(5) ஒரு மேன்மையான பிராமணன் ஆகிறவன், வாழும்போது புனித மந்திரங்களைச் சொல்லி சூரியன் மற்றும் சந்திர தேவர்களைத் துதிக்கிறான். ஓ! புழுவே, நீ அந்த நிலையை அடைவாய்.(6) அந்த நிலையை அடைந்ததும் நீ இன்ப நுகர்பொருட்களாக மாற்றப்பட்ட பூதங்கள் அனைத்தையும் அனுபவிப்பாய். நீ அந்த நிலையை அடையும்போது நான் உனக்குப் பிரம்மத்தைப் போதிப்பேன். அல்லது, நீ விரும்பினால் உனக்கு வேறெந்த நிலையையும்  நான் அளிப்பேன்" என்றார் {வியாசர்}.(7)

வியாசரின் சொற்களை ஏற்றுக் கொண்ட அந்தப் புழு சாலையை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தது. அதே வேளையில், அந்தத் திசையில் வந்து கொண்டிருந்த பெரிய வாகனம் அந்த இடத்திற்கு வந்தது.(8) அந்தப் புழு, சக்கரங்களின் தாக்குதலில் துண்டுகளாகக் கிழிந்து தன் உயிர்மூச்சை விட்டது. இறுதியாக அளவிலா பலம் கொண்ட வியாசரின் அருள் மூலம் க்ஷத்திரிய வகையில் பிறந்த அது {அந்தப் புழு}(9) அந்தப் பெரும் முனிவரைக் காணச் சென்றது. அது க்ஷத்திரியனாவதற்கு முன், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான், பறவை,(10) சண்டாளன், சூத்திரன் மற்றும் வைசியன் என்ற பல்வேறு வகைகளில் பிறந்திருந்தது. உண்மையைச் சொல்லும் முனிவரிடம் தன் பல்வேறு வடிவமாற்றங்களைக் குறித்துச் சொல்லி, முனிவர் தன்னிடம் காட்டிய கருணையை நினைவுகூர்ந்த அந்தப் புழு (இப்போது க்ஷத்திரியனாக மாறியிருப்பது) தன் கரங்களைக் கூப்பி அந்த முனிவரின் கால்களில் விழுந்து தன் தலையால் அவற்றைத் தீண்டியது {அந்த க்ஷத்திரியன் தன் தலையால் அம்முனிவரின் பாதங்களைத் தீண்டினான்}.(11)

அந்தப் புழு, "அனைவராலும் விரும்பப்படுவதும், நன்கறியப்பட்ட பத்துக் குணங்களைக் கொண்டிருந்தால் அடையக்கூடியதுமான உயர்ந்த நிலையில் இப்போது நான் இருக்கிறேன்[2]. உண்மையில், முன்பு ஒரு புழுவாக இருந்த நான் இவ்வாறே ஒரு இளவரசனின் நிலையை அடைந்திருக்கிறேன்.(12) பெரும்பலம் கொண்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் என்னைத் தங்கள் முதுகுகளில் சுமந்து செல்கின்றன. என் தேர்களில் உயர்ந்த வகையைச் சார்ந்த காம்போஜ குதிரைகள் பூட்டப்படுகின்றன.(13) ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட எண்ணற்ற வாகனங்களும் என்னைச் சுமக்கின்றன. நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் இறைச்சியுடன் கூடிய உணவை உண்கிறேன்.(14) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, அனைவராலும் வழிபடப்படும் நான் இனிமையற்ற காற்று வீச முடியாத இனிமை நிறைந்த அறைகளில் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் நான் உறங்குகிறேன்.(15) ஒவ்வொரு இரவிலும் கொஞ்ச நேரம், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனை இனிமையாகப் புகழ்வதைப் போலவே என்னைப் புகழ்கிறார்கள்.(16) முன்பு புழுவாக இருந்த நான், வாய்மையில் உறுதியுள்ளவரும், அளவிலா சக்தி கொண்டவருமான உமது அருளின் மூலம் இப்போது அரச வகையில் பிறந்திருக்கிறேன்.(17) ஓ! பெரும் ஞானியே, நான் உமக்குத் தலைவணங்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவீராக. உமது தவப் பலத்தின் மூலம் விதிக்கப்பட்டே இந்த மகிழ்ச்சியான நிலை இப்போது எனதாகியிருக்கிறது" என்றது {க்ஷத்திரியனாக மாறியிருந்த அந்தப் புழு}.(18)

[2] கும்பகோணம் பதிப்பில், "நான் புழுவாக இருந்து ராஜபுத்திரனானேனே, இது நான் விரும்பின ஒப்பற்ற நிலைமை. இது பத்துத் தடவைகளால் எனக்குக் கிடைத்தது" என்றிருக்கிறது.

வியாசர், "ஓ! மன்னா, மதிப்பை வெளிப்படுத்தும் பல்வேறு சொற்களால் நீ இன்று என்னை வழிபட்டாய். புழுவாக மாறியிருந்த உன் நினைவு மறைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவே இப்போது தோன்றியிருக்கிறது[2].(19) நீ முற்பிறவியில் ஈட்டிய பாவம் இன்னும் அழிக்கப்படவில்லை. முற்பிறவியில் சூத்திரனாக இருந்தபோது செல்வத்தில் பேராசை கொண்டவனும், நடத்தையில் கொடூரனும், பிராமணர்களுக்குப் பகைவனுமாக இருந்து அந்தப் பாவங்களை ஈட்டினாய்.(20) உன்னால் என்னைப் பார்க்க முடிந்தது. அது நீ புழுவாக இருந்தபோது செய்த செயலுக்கான பலனே ஆகும். என்னை வணங்கி வழிபட்டதன் விளைவாக, பசுக்களுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போர்க்களத்தில் உன் உயிர்மூச்சைவிட்டு, நீ மேலும் உயர்ந்தெழுந்து க்ஷத்ததிரிய வகையில் இருந்து பிராமண நிலையை அடைவாய்.(21,22) ஓ! இளவரசே, அதிக இன்பத்தை அனுபவித்தும், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தும் சொர்க்கத்தை அடைந்து, நித்திய பிரம்மம் ஆவாய். அந்த முற்றான இன்ப நிலையே உனதாகும்.(23) இடைநிலை வகைகளில் (விலங்குகளாகப்) பிறப்பவர்கள் (எழும்போது) சூத்திரர்களாகிறார்கள். சூத்திரன் வைசியன் என்ற நிலைக்கு உயர்ந்தெழுகிறான்; வைசிய் க்ஷத்திரியனாகிறான். தன் வகைக்கான கடமைகளை வெளிப்படுத்துவதில் செருக்கு கொள்ளும் க்ஷத்திரியன், பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான். அறவொழுக்கத்தைப் பின்பற்றும் பிராமணன், பேரின்பம் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்" என்றார் {வியாசர்}".(24)

[2]  கும்பகோணம் பதிப்பில், "இப்போது நீ உன் வாக்குகளினால் இஷ்டப்படி என்னைப் பூஜித்தாய். அருவருக்கத்தக்க புழு ஜன்மத்தையடைந்த ஞாபகம் இப்போது உனக்கிருக்கிறதே" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 118ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்