Saturday, June 29, 2019

நற்கதி! - அநுசாஸனபர்வம் பகுதி – 119

Meritorious end! | Anusasana-Parva-Section-119 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 119)


பதிவின் சுருக்கம் : வியாசரால் நற்கதியடைந்த புழுவைப் போலவே, குருக்ஷேத்திரத்தில் மடிந்த க்ஷத்திரியர்க்ள அனைவரும் நற்கதியையே அடைந்ததாக யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, புழு நிலையைக் கைவிட்டு பெருஞ்சக்தியைக் கொண்ட க்ஷத்திரியனாகப் பிறந்த மனிதன், தன் முந்தைய வடிவ மாற்றங்களை நினைவு கூர்ந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(1) அறம் மற்றும் செல்வத்தை நன்கறிந்த க்ஷத்திரியன் செய்த கடுந்தவங்களைக் கண்டவரும், தீவில் பிறந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் சென்றார்.(2)

வியாசர், "ஓ! புழுவே, க்ஷத்திரிய வகைக்கான தவம் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். க்ஷத்திரிய வகையின் இந்தக் கடமைகளையே உனக்கு விதிக்கப்பட்ட தவமாக நீ கருதுவாயாக. அதன்பிறகு நீ பிராமண நிலையை அடைவாய்.(3) எது சரி, எது தவறு என்பதை உறுதி செய்து, உன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டு, அனைத்து உயிரினங்களையும் முறையாகப் பேணி வளர்த்துப் பாதுகாத்து, நல்ல ஆசைகள் அனைத்தையும் நியாயமாக நிறைவேற்றி, புனிதமற்ற அனைத்தையும் திருத்துவாயாக.(4) தூய்மையடைந்த ஆன்மாவாகவும், மனநிறைவுள்ளவனாகவும் இருந்து கொண்டு அறப் பயிற்சியில் அர்ப்பணிப்புடன் இருப்பாயாக. இவ்வழியில் உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீ உன் உயிர் மூச்சை விடும்போது ஒரு பிராமணனாவாய்" என்றார்".(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, அவன் காடுகளுக்குச் சென்று ஓய்ந்திருந்தாலும், பெரும் முனிவரின் சொற்களைக் கேட்ட பிறகு தன் குடிமக்களை அறம்சார்ந்து பேணி வளர்க்கவும், பாதுகாக்கவும் தொடங்கினான்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிறகு அந்தப் புழுவானவன், தன் குடிமக்களைப் பாதுகாத்தக் கடமையின் விளைவாக க்ஷத்திரிய உடலைக் கைவிட்டு ஒரு பிராமணனானான்.(7) அவன் பிராமணனானதைக் கண்டவரும், கொண்டாடப்பட்ட முனிவரும், பெரும் ஞானம் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் வந்தார்.(8)

வியாசர் {புழுவானவனிடம்}, "ஓ! பிராமணர்களின் தலைவா, ஓ! அருளப்பட்டவனே, (மரணத்தில் உள்ள அச்சத்தால்) வருந்தாதே. அறம்சார்ந்து செயல்படுபவன் மதிப்புமிக்கப் பிறவியை அடைகிறான். மறுபுறம் நியாயமில்லாமல் செயல்படுபவன் தாழ்ந்த மற்றும் இழிந்த பிறவியை அடைகிறான். ஓ! அறமறிந்தவனே, ஒருவன் செய்யும் பாவத்தின் அளவுக்குத் தகுந்த துன்பத்தையே ஒருவன் அடைகிறான்.(9) எனவே, ஓ! புழுவானவனே, மரணத்தில் உள்ள அச்சத்தினால் வருந்தாதே. அறம் இழப்பு குறித்தது மட்டுமே நீ அஞ்ச வேண்டிய ஒன்றாகும். எனவே நீ அறம் பயில்வதைத் தொடர்வாயாக" என்றார்.(10)

புழுவானவன் {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, உமது அருளால் நான் மகிழ்ச்சிக்கு மேலான இன்பநிலைகளை அடைந்தேன். அறத்தில் தன் வேர்களைக் கொண்ட செழிப்பை நான் அடைந்திருப்பதால் என் பாவங்கள் ஒழிந்து விட்டதாக நினைக்கிறேன்" என்றான்".(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தப் புனித முனிவரின் ஆணையின் பேரில் அடைதற்கரிய பிராமண நிலையை அடைந்த அந்தப் புழுவானவன், ஆயிரம் வேள்வித்தூண்களால் {யாகஸ்தம்பங்களால்} பூமியில் சுவடுகளை உண்டாக்கினான்(12) பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன், பிரம்மலோகத்திலேயே தன் வசிப்பிடத்தை அடைந்தான். உண்மையில், ஓ! பிருதையின் மகனே, அந்தப் புழுவானவன், வியாசரின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் செயல்களின் விளைவால் உயர்ந்த நிலையான நித்திய பிரம்மத்தையே அடைந்தான்.(13) சக்தியுடன் முயன்று, (குருக்ஷேத்திரக் களத்தில்) தங்கள் உயிர்மூச்சுகளை விட்ட க்ஷத்திரியக் காளைகள் அனைவரும் பலன்மிக்க {புண்ணியமான} கதிகளையே அடைந்தனர். எனவே, ஓ! மன்னா, நீ அவர்களுக்காக வருந்தாதே" என்றார் {பீஷ்மர்}.(14)

அநுசாஸனபர்வம் பகுதி – 119ல் உள்ள சுலோகங்கள் : 14

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்