Saturday, June 29, 2019

தானத்தின் சிறப்பு! - அநுசாஸனபர்வம் பகுதி – 120

The Excellence of gifts! | Anusasana-Parva-Section-120 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 120)


பதிவின் சுருக்கம் : ஞானம், தவம், தானம் ஆகியவற்றின் சிறப்பைக் குறித்து மைத்ரேயருக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஞானம், தவங்கள் மற்றும் கொடைகள் என்ற மூன்றில் எது மேன்மையானது? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக மைத்ரேயருக்கும், தீவில் பிறந்தவரான கிருஷ்ணருக்கும் {வியாசருக்கும்} இடையில் நடந்த உரையால் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! மன்னா, ஒரு காலத்தில் தீவில் பிறந்தவரான கிருஷ்ணன் {வியாசர்}, யாருக்கும் தெரியாமல் உலகில் திரிந்து கொண்டிருந்த போது, வாராணசிக்கு {காசிக்குச்} சென்று முனிவர்களின் குலத்தில் பிறந்தவரான மைத்ரேயரிடம் பணி செய்தார்.(3) முனிவர்களில் முதன்மையான மைத்ரேயர், வியாசர் வருவதைக் கண்டு, அவரை முறையான சடங்குகளுடன் வழிபட்டபிறகு, அவருக்கு ஓர் இருக்கையை அளித்து, சிறந்த உணவையும் அவருக்கு உண்ணக் கொடுத்தார்.(4) உயர் ஆன்மக் கிருஷ்ணர் {வியாசர்}, உடலுக்கு நலந்தருவதும், அனைத்து வகை நிறைவையும் உண்டாக்குவதுமான அந்த நல்ல உணவை உண்ட பிறகு அங்கே அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக உரக்கச் சிரித்தார்.(5)

கிருஷ்ணர் {வியாசர்} சிரிப்பதைக் கண்ட மைத்ரேயர், "ஓ! அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன? நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன? உமது உயர்ந்த அருள் என்ன?(7) நான் செய்யும் செயல்கள் நீர் செய்வதில் இருந்து வேறுபட்டனவாகும். நீர் உயிர் மூச்சைக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே முக்தியடைந்தவராவீர். எனினும், நான் இன்னும் விடுதலை அடையவில்லை. இவ்வளவு இருந்தாலும் எனக்கும் உமக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் பிறப்பாலும் வேறுபடுகிறேன்" என்றார்[1].(8)

[1] இங்கே சொல்லப்படும் பிருதக ஆத்மன் என்பது உபாதிகளுடன் கூடிய ஆத்மா கொண்டவரைக் குறிக்கும். சுகாத்மன் என்பது உபாதிகள் அனைத்தையும் கடந்த ஆத்மா கொண்டவரைக் குறிக்கும். கும்பகோணம் பதிப்பில், "உமக்குத் தவப் பாக்யமும், எனக்குச் சுகபாக்யமுமிருக்கின்றன. ஐயா, மஹானுபாவரே, தவச் செல்வத்திற்கும், ஸுகத்தைத் தரும் பொருட்செல்வத்திற்கும் தனித்தனிச் செய்கைகளிருக்கின்றன. தனித்தனி நடைத்தைகளாகிய இவ்விரண்டிற்குமுள்ள வித்தியாஸம் சிறிதென்று நான் நினைக்கிறேன். தவச்செல்வம் எல்லா நன்மைகளையும் சேர்ப்பதனால் சிறந்ததென்றும் நினைக்கிறேன்" என்றிருக்கிறது.

வியாசர் {மைத்ரேயரிடம்}, "என்னை நிறைத்திருக்கும் இந்த ஆச்சரியம், மிகைப்படச் சொல்வது போலத் தெரியும் ஒரு விதியில் இருந்தும், மக்கள் புரிந்து கொள்ளும் முரண்பட்ட கூற்றிலிருந்தும் எழுகிறது. வேதங்களின் அறிக்கை உண்மையில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால் வேதங்கள் ஏன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்?[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்புகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ! பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். ஓ! மகனே, கொடையானது, புனித நீர்நிலைகளில் தூய்மைச் சடங்குகளைச் செய்வதையும், அனைத்து வேத நோன்புகளை நிறைவேற்றுவதையும் விட மேன்மையானதாகும்.(15)

[2] "கைநிறைய நீரைக் கொடையடிப்பதால் கூட ஒருவன் நூறு வேள்விகள் செய்தவன் அடையும் இடத்தை அடைந்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது. மிகைப்படச் சொல்லப்படுவது போலத் தெரியும் இந்த விதியும், அதற்கு முரணாகத் தெரியும் வேத ஆசிரியர்களின் கூற்றுகளும் என்னை ஆச்சரியத்தால் நிறைக்கின்றன. வேதங்கள் நூறு வேள்விகளைச் செய்யாமல் அத்தகைய இடத்தை ஒருவனால் அடைய முடியாது என்று சொல்கின்றன. மக்கள் தகுந்த மனிதர்களுக்கு உரிய நேரங்களில் அளிக்கும் சிறிய கொடைகளாலும் அதை அடைகின்றனர் என்பதால் இது பொய்யாகத் தெரிகிறது எனப் பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பொருளை மிகுதியாகச் செலவழித்ததனாலும், மிகுதியாக இன்சொற்சொன்னதனாலும் எனக்கு நகையுண்டாயிற்று. வேத வாக்கியம் பொய்யாமா? வேதம் ஏன் பொய் சொல்லும்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

உண்மையில், ஓ! பிராமணா {மைத்ரேயா}, கொடையானது, புனிதச் செயல்கள் அனைத்திலும் மங்கலமிக்கதாகும். அனைத்துப் புனிதச் செயல்களையும் விட அது பலன்மிக்கதாக இல்லாதிருந்தால், அதன் மேன்மை குறித்த கேள்வியே இருந்திருக்க முடியாது.(16) நீ மெச்சும் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தும் கொடைக்கருகில் நிற்காது. கொடையானது ஐயமில்லாமல் உயர்ந்த பலன் நிறைந்தது என நான் கருதுகிறேன்.(17) கொடையளிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பாதையே ஞானிகள் நடக்கும் பாதையாக இருக்கிறது. கொடையளிப்பவர்கள் உயிர்மூச்சையே கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அறமாக அமையும் கடமைகள் அவற்றிலேயே {கொடைகளிலேயே} நிறுவப்பட்டுள்ளன.(18) வேதங்களை நன்கு கற்பதும், புலன்களை அடக்குவதும், அண்டந்தழுவிய துறவறம் கொள்வதும் போலவே கொடையும் மிக மேன்மையான பலனைக் கொண்டதாகும்.(19) ஓ! மகனே, கொடையளிக்கும் கடமையை நீ செய்ததன் விளைவால் மகிழ்ச்சியில் இருந்து பெரும் மகிழ்ச்சியை அடைவாய். (இந்தக் கடமையைப் பயிலும்) புத்தியுள்ள மனிதன் நிச்சயம் மகிழ்ச்சியில் இருந்து உயர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(20)

நாம் இது போன்ற நேரடி நிகழ்வுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. செழிப்புடன் கூடிய மனிதர்கள் செல்வத்தை அடைவதிலும், கொடைகளை அளிப்பதிலும், வேள்விகளைச் செய்வதிலும் அதன் மூலம் விளையும் மகிழ்ச்சியை ஈட்டுவதிலும் வெல்கின்றனர்.(21) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும், துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் இயற்கையாக நடைபெறுவதே எப்போதும் காணப்படுகிறது[3].(22) ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் மனிதர்களுக்கு மூன்றுவகை ஒழுக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சிலர் அறவோராகவும்; சிலர் பாவம் நிறைந்தவர்களாகவும்; சிலர் அறவோராகவும் அல்லாமல், பாவிகளாகவும் அல்லாமல் இருக்கின்றனர்.(23) பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள மனிதனின் ஒழுக்கம் இரண்டாகவும் கருதப்படுவதில்லை. அவனது பாவங்கள் பாவங்களாகவே கருதப்படுவதில்லை. தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதனும் (அந்தக் கடமைகளை நோற்பதால்) அறவோனாகவோ, பாவியாகவோ கருதப்படுவதில்லை.(24)

[3] "உடல் சார்ந்த இன்பங்களில் ஈடுபடுபவர்கள் இறுதியாகத் துன்பத்தை அடைகின்றனர். கடுந்தவங்களைப் பயில்பவர்கள் தங்கள் வெகுமதியாக இன்பத்தைச் சந்திக்கின்றனர் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வேள்விகள், கொடைகள், தவங்கள் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களே அறவோராகக் கருதப்படுகின்றனர். எனினும், இவர்களில் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பவர்களும், அவற்றுடன் நட்பற்றவர்களும் பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.(25) சில மனிதர்கள் பிறர் உடைமைகளை அபகரிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நரகில் விழுந்து, துன்பத்தைச் சந்திப்பார்கள். ஈடுபாடில்லாமல் {அக்கறையில்லாமல்} மனிதர்கள் செய்யும் பிற செயல்கள் அனைத்தும் அறமாகவோ, பாவமாகவோ கருதப்படுவதில்லை.(26) நீ விளையாடுவாயாக, வளர்வாயாக, உற்சாகமாயிருப்பாயாக, கொடையளிப்பாயாக, வேள்விகளைச் செய்வாயாக. ஞானிகளோ, தவசிகளோ உன்னைவிடச் சிறந்தவராகமாட்டார்" என்றார் {வியாசர்}.(27)

அநுசாஸனபர்வம் பகுதி – 120ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்