Sunday, June 30, 2019

பெறுபவர் அடையும் பலன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 121

The merit acquired by taker! | Anusasana-Parva-Section-121 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 121)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் பெருமை; தகாதோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கொடை கொடுத்தவனையும், பெறுபவனையும், உணவையும் கெடுப்பது ஆகியவற்றை வியாசருக்குச் சொன்ன மைத்ரேயர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், செயல்களை வழிபடுபவரும், பெருஞ்செழிப்புடைய குலத்தில் பிறந்தவரும், பெருங்கல்வி கொண்டவரும், ஞானியுமான மைத்ரேயர் இந்தச் சொற்களை அவரிடம் சொன்னார்.(1)


மைத்ரேயர் {வியாசரிடம்}, "ஓ! பெரும் ஞானியே, நீர் சொன்னதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பலமிக்கவரே, உமது அனுமதியுடன் நான் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.(2)

வியாசர் {மைத்ரேயரிடம்}, "ஓ! மைத்ரேயா, ஓ! பெரும் ஞானியே, நீ என்ன சொல்ல வேண்டுமோ, என்ன வழியில் சொல்ல வேண்டுமோ அதைச் சொல், நான் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்றார்.(3)

மைத்ரேயர் {வியாசரிடம்}, "கொடை குறித்து நீர் சொன்ன சொற்கள் குற்றமில்லாதவையும், தூய்மையுடையவையுமாகும். உமது ஆன்மா ஞானத்தாலும், தவத்தாலும் தூய்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.(4) உமது ஆன்மா தூய்மை அடைந்ததன் விளைவால் நான் அறுவடை செய்யும் பெரும் நன்மை இதுவே. என் புத்தியின் துணையால் உயர்ந்த தவங்களுடன் கூடியவராகவே நான் உம்மைக் காண்கிறேன்.(5) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் உம்மைப் போன்ற மனிதர்களைக் காண்பதன் மூலம் மட்டுமே செழிப்பை அடைகிறோம். உமது அருளாலும், நான் செய்த செயல்களின் இயல்பாலும் அது {செழிப்பு} உண்டாகிறது என்று நான் நினைக்கிறேன்.(6) தவங்கள், வேதஞானம், தூய குலத்தில் பிறப்பு ஆகிய காரணங்களாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ஒருவன் இந்த மூன்று குணங்களையும் வெளிப்படுத்தும்போதே அவன் மறுபிறப்பாளனாக அழைக்கப்படுகிறான்.(7)

பிராமணர்கள் நிறைவடைந்தால், பித்ருக்களும், தேவர்களும் நிறைவடைகின்றனர். வேதமறிந்த பிராமணனை விட உயர்ந்தது வேறேதும் இல்லை.(8) பிராமணன் இல்லாவிட்டால் மொத்தமும் இருளாகவே இருக்கும். எதையும் அறிய முடியாது. நான்கு வகையும் {வர்ணங்களும்} நீடித்திருக்காது. அறம் மறம், வாய்மை பொய்மை, ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு மறைந்து போகும்.(9) நன்கு உழப்பட்ட நிலத்தை {பண்பட்ட நிலத்தை} மனிதர்கள் காணும்போது அவர்கள் அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். அதேபோல, பெருங்கல்வி படைத்த பிராமணனுக்குக் கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்பலனை அறுவடை செய்கிறான்.(10) கொடைகளை ஏற்க வேத அறிவும், நல்லொழுக்கமும் கொண்ட பிராமணன் இல்லாவிட்டால் செல்வந்தர்கள் கொண்ட செல்வத்திற்குப் பயனேதும் இல்லை.(11)

அறியாமை கொண்ட பிராமணன், தனக்கு அளிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம், (கொடுத்தவனுக்கு எந்தப் பலனையும் உண்டாக்காததால்) தான் உண்டதை அழிக்கிறான். உண்ணப்பட்ட உணவானது (உண்பவன் தனக்கு அளிக்கப்பட்டதை உண்டதன் மூலம் பாவத்தை ஈட்டுவதால்) உண்டவனை அழிக்கிறது. தகுந்த மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதே உண்ணத்தகுந்தது என்று முறையாக அழைக்கப்படும், மற்ற வழக்குகள் அனைத்திலும், அதைப் பெறுபவன் கொடையாளியின் கொடையைக் கெடுத்து, முறையில்லாமல் உண்பதன் மூலம் தானே அழிவையும் அடைகிறான்[1].(12)

[1] கும்பகோணம் பதிப்பில், "இப்படியே ஞானமில்லாதவன் அன்னத்தைக் கெடுக்கிறான். அந்த அன்னமும் ஞானமில்லாதவனைக் கெடுக்கிறது. தெரியாதவன் எந்த அன்னத்தைப் புஜித்துக் கெடுக்கிறானோ அந்த அன்னம் மற்றொருவனாகிய அன்னம் போடுகிறவனையும் கெடுக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அறியாமை கொண்ட பிராமணன் உண்ணும்போது அவன் தான் உண்ணும் உணவையும் அழிக்கிறான், அதைக் கொடுத்த கொடையாளியையும் அழிக்கிறான். அத்தகைய அறியாமை கொண்டவன், உணவையும் அழிக்கிறான். உண்பவனையும் அழிக்கிறான்" என்றிருக்கிறது.

கல்விமானான பிராமணன் தான் உண்ணும் உணவை வசப்படுத்துபவன் ஆகிறான் {செரிக்கிறான்}. அதை உண்ட பிறகு அவனே வேறு உணவைத் தோற்றுவிக்கிறான் {உணவைப் பெருகச் செய்கிறான்}. எவனுடைய உணவு, பிள்ளைகளின் பெற்றோர்களை அவர்களை ஈன்றெடுக்க இயன்றவர்களாக்கியதோ அவனே அவர்களுக்குரியவன் {அந்தப் பிள்ளைகளுக்குரியவன்} என்பதால் அறியாமை கொண்டவன் தனக்கு அளிக்கப்படும் உணவை உண்பதன் மூலம் தான் ஈன்றெடுக்கும் பிள்ளைகளிடம் உள்ள தன் உரிமையை இழக்கிறான். அடுத்தவரின் உணவை உண்பவர்கள், அந்த உணவை வெல்லும் பலமற்றவர்களாகும்போது இந்த நுட்பமான களங்கம் ஏற்படுகிறது[2].(13) கொடையளிப்பதன் மூலம் ஒரு கொடையாளி அடையும் பலனானது, உணவை ஏற்பதன் மூலம் அதைப் பெற்றுக் கொள்பவன் அடையும் பலனுக்கு ஈடானதாகும். கொடையாளியும், ஏற்பவனும் இணையான அளவில் ஒருவரையொருவர் சாந்தவர்களாக இருக்கிறார்கள். இதையே முனிவர்களும் சொல்லியிருக்கின்றனர்.(14)

[2] கும்பகோணம் பதிப்பில், "வித்வான் அன்னத்தைப் புஜித்தால் அவன் மறுபடியும் அதை விருத்தி செய்யுந்திறமையுள்ளவனென்று சொல்லுகின்றனர். அவனும் அந்த அன்னத்தினால் விருத்தியாகிறான். ஆதலால், இந்த வேறுபாடு நுட்பமானது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கல்விமானான ஒரு தலைவன் உணவைச் செரிக்கிறான் அத்தலைவன் அதை மீண்டும் உற்பத்தி செய்கிறான். கல்வியறிவில்லாத போது அந்த உணவு மீண்டும் உண்டாக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு நுட்பமானதாகும்" என்றிருக்கிறது.

வேத அறிவும், ஒழுக்கமும் கொண்ட பிராமணர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே இருக்கும் மக்கள் கொடைகளின் புனிதக் கனிகளை ஈட்ட இயன்றவர்களாகவும், இம்மையிலும், மறுமையிலும் அவற்றை அனுபவிக்கத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(15) தூய குலத்தில் பிறந்தவர்களும், தவங்களில் பேரர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், கொடையளிப்பவர்களும், வேதங்கற்பவர்களுமான மனிதர்கள் பெரும் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.(16) அந்த நல்லோரே ஒருவன் மயங்காமல் நடக்கக்கூடிய பாதையை அமைத்தவர்கள் ஆவர். அந்த மனிதர்களே பிறரைச் சொர்க்கத்திற்கு வழிநடத்தக்கூடியவர்களாவர். வேள்விச் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு நித்தியமாக வாழ்ந்து வருபவர்கள் அம்மனிதர்களே" என்றார் {மைத்ரேயர்}".(17)

அநுசாஸனபர்வம் பகுதி – 121ல் உள்ள சுலோகங்கள் : 17

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்