Monday, July 01, 2019

தவத்தின் சிறப்பு! - அநுசாஸனபர்வம் பகுதி – 122

The specialty of penance! | Anusasana-Parva-Section-122 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 122)


பதிவின் சுருக்கம் : தவத்தின் சிறப்பு மற்றும் இல்லறக் கடமைகளை நோற்பதன் அவசியம் ஆகியவற்றை மைத்ரேயருக்குச் சொன்ன வியாசர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் புனிதமானவர் {வியாசர்}, மைத்ரேயருக்குப் பதிலளிக்கும் வகையில், "நீ ஞானத்துடன் இருப்பது நற்பேறே. உன் புத்தி இவ்வகையில் இருப்பதும் நற்பேறே.(1) நல்லோர் எப்போதும் அறம் சார்ந்த குணங்கள் அனைத்தையும் உயர்வாகவே மெச்சுகின்றனர். தனிப்பட்ட அழகு, இளமை மற்றும் செழிப்பு ஆகியவை உன் நற்பேறின் காரணமாகவே உன்னை மூழ்கடிக்காமல் இருக்கின்றன.(2) தேவர்கள் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக இதை உனக்குச் செய்திருக்கின்றனர். கொடையை விட (திறனில்) மேன்மையானதைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இருக்கும் சாத்திரங்கள் மற்றும் அறம் சார்ந்த உடன்படிக்கைகள் எதுவும், உலகில் காணப்படும் (அற) நாட்டங்கள் எதுவும் வேதங்களின் வழிகாட்டலுக்கு இணங்க முறையான வரிசைப்படி உண்டாகின்றன.(4)


அவற்றைப் பின்பற்றியே நான் கொடையை {தானத்தை} மெச்சுகிறேன். நீயோ தவங்களையும், வேத ஞானத்தையும் புகழ்கிறாய். தவங்கள் புனிதமானவையே. ஒருவன் வேதங்களையும், சொர்க்கத்தையும் அடையும் வழிமுறைகளாகத் தவங்கள் இருக்கின்றன.(5) தவம் மற்றும் அறிவின் துணையுடன் ஒருவன் நாம் கேள்விப்பட்டிருக்கும் உயர்ந்த கனிகளை அடைகிறான். தவங்களின் மூலமே ஒருவன் தன் பாவங்களையும், தீமைகள் அனைத்தையும் அழிக்கிறான்.(6) எந்த நோக்கத்துடன் ஒருவன் தவம் செய்தாலும் அவன் தவங்களின் விளைவால் அதற்கான கனியை அடைகிறான் என நாம் கேள்விப்படுகிறோம்.(7) நிறைவேற்றக் கடினமான எதையும், வெல்லக் கடினமான எதையும், அடைவதற்கு அரிதான எதையும், கடப்பதற்கு அரிதான எதையும் தவங்களின் உதவியுடன் அடையலாம். அனைத்திலும் தவங்களே மிக மேன்மையான வலிமையைக் கொண்டிருக்கின்றன.(8)

மது அருந்துபவனோ, பிறரின் உடைமைகளை வலுக்கட்டாயமாக அபகரிப்பவனோ, கருவைக் கொன்ற குற்றவாளியோ, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவனோ எவனும் தவத்தின் உதவியால் அவற்றைக் கடப்பதில் வெல்கிறான். உண்மையில் ஒருவன் தவங்களின் மூலம் இந்தப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(9) ஞானங்கள் அனைத்துடன் கூடிய உண்மையான பார்வையைக் கொண்டவன் ஒருவனும், எவ்வகையைச் சார்ந்த தவசி ஒருவரும் நிகரானவரே. ஒருவன் இவர்கள் இருவரையும் எப்போதும் வணங்க வேண்டும்.(10) வேதங்களையே தங்கள் செல்வமாகக் கொண்ட மனிதர்கள் அனைவரும் வழிபடப்பட வேண்டும். அதே போலத் தவங்களுடன் கூடிய மனிதர்கள் அனைவரும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. கொடையாளிப்பவர்கள் மறுமையில் மகிழ்ச்சியையும், இம்மையில் பெருஞ்செழிப்பையும் அடைகின்றனர்.(11) இவ்வுலகின் அறவோர், உணவுக் கொடை அளிப்பதன் மூலம் இவ்வுலகையும், மேன்மையான இன்ப நிலைகளைக் கொண்ட பிரம்மலோகம் முதலிய பிற உலகங்களையும் அடைகிறான்.(12)

அனைவராலும் துதிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைத் துதிக்கின்றனர். எங்கும் கௌரவிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைக் கௌரவிக்கின்றனர். கொடையாளி எங்குச் சென்றாலும் புகழப்படுகிறான்.(13) செயல்களைச் செய்பவனும், அவற்றைத் தவிர்ப்பவனும், செய்யும் செயல்களுக்கும், செய்யாதவற்றுக்கும் தகுந்த அளவில் பலனை அடைகிறார்கள். ஒருவன் மேலுலகத்தில் வசித்தாலும், பாதாள லோகத்தில் வசித்தாலும் அவன் எப்போதும் தன் செயல்களுக்குத் தகுந்த இடங்களையே அடைகிறான்.(14) உன்னைப் பொறுத்தவரையில், நீ புத்தி, நற்பிறப்பு, வேத ஞானம் மற்றும் கருணை கொண்டவனாக இருப்பதால் நீ விரும்பும் உணவு மற்றும் பானம் எதையும் நிச்சயம் அடைவாய்.(15) ஓ! மைத்ரேயா, நீ இளைஞனாக இருக்கிறாய். நோன்புகளை நோற்கிறாய். அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய். நீ முதலில் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை என்னிடம் இருந்து அறிந்து கொள்வாயாக.(16)

தான் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவாக இருக்கும் கணவனைக் கொண்டதும், தன் கணவனிடம் நிறைவாக உள்ள மனைவியைக் கொண்டதுமான வீட்டில் எல்லா மங்கல விளைவுகளும் உண்டாகும்.(17) உடலில் உள்ள புழுதி நீரால் கழுவப்படுவதைப் போலவே நெருப்பின் காந்தியால் இருள் விலகுவதைப் போலவே, கொடைகள் மற்றும் தவங்களால் பாவம் கழுவப்படுகிறது.(18) ஓ! மைத்ரேயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. நான் சொன்னதை உன் மனத்தில் கொள்வாயாக. அப்போது நீ பலன்கள் பலவற்றை அறுவடை செய்வாய்" என்றார் {வியாசர்}.(19)

அப்போது மைத்ரேயர் சிறப்புமிக்கவரான தமது விருந்தினரை {வியாசரை} வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி, தன் கரங்களை மதிப்புடன் கூப்பி, "ஓ! புனிதமானவரே, நீரும் அருளப்பட்டிருப்பீராக" என்றார்".(20)

அநுசாஸனபர்வம் பகுதி – 122ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்