Saturday, June 01, 2019

கோமயம் மற்றும் கோமியத்தில் ஸ்ரீதேவி! - அநுசாஸனபர்வம் பகுதி – 82

Sree in cow dung & urine! | Anusasana-Parva-Section-82 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 82)


பதிவின் சுருக்கம் : ஸ்ரீதேவிக்கும் பசுக்களுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பசுக்களின் சாணத்திலும், சிறுநீரிலும் அந்த ஸ்ரீதேவியே வசிப்பது குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்},[1] "பசுக்களின் சாணத்தில் ஸ்ரீ {லட்சுமி} இருக்கிறாள் என நான் கேட்டிருக்கிறேன். அஃது எவ்வாறு என்பதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, என் ஐயங்களை நீர் அகற்ற வேண்டும்" என்று கேட்டான்.(1)


[1] கும்பகோணம் பதிப்பில், இந்தக் குறிப்பிட்ட அத்யாயத்திற்கு முன்பு, "கோலோகம் அனைத்திற்கும் மேலிருப்பதன் காரணம்; சுரபியின் வழித்தோன்றல்கள்; இந்திரன் சுரபியின் பாலைக் குடித்ததால் இறவாமை முதலியவற்றை அடைந்தது; இந்திரன் வரம்பெற்று எல்லாத் தேவர்களோடும் கோக்களிடம் வசித்தது; யார் யார் கோக்களின் எந்தெந்த அங்கங்களில் வசிக்கின்றனர் என்றது; ஸுமித்ரர் பேனபரென்னும் பெயர் பெற்றது; ஸுமித்ரர் பசுக்கள் அவரைக் கொல்ல நிச்சயித்தது; கபிலைகள் பசுக்களுள் சிறப்புற்றது; கோமாதாக்கள் ஸுமித்ரரைக் கோலோகத்துக்குக் கொண்டு சென்றது; அவர் பசுக்கள் அவருடைய உடலை நசுக்கியது; பசுக்கள் சாபம் பெற்றது; ரந்திதேவன் வேள்வியில் பசுக்கள் சென்று பயன்பட்டது; உடன்பாட்டின்படி வேள்வி நிறுத்தப்பட்டது; பசுக்களின் சிறப்பைப் பற்றி வியாசருக்கும், சுகருக்கும் இடையில் நடந்த உரையாடல்; கபிலையைத் துன்புறுத்துபவர் அடையும் தீங்கு; பசுக்கள் கபில நிறம் பெற்று மேன்மையுற்றது; கபிலைகளின் உடற்குறியீடுகள்; அவற்றைத் துன்புறுத்துபவர் அடையும் கெட்ட கதி" ஆகியவை குறித்து 12 அத்தியாயங்களில், 20 அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கங்குலியின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் விடுபட்டிருக்கின்றன. ரந்திதேவன் வேள்வியில் பசுக்கள் பலியிட்ட கதையும் இதில் அடங்கியிருப்பதால் ஏதோ முக்கியச் செய்தியை விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பிறகு வாய்ப்பு ஏற்படுகையில், பசுக்கொடை குறித்த தனி மின் புத்தகம் செய்யும்போது இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் இதை நினைவூட்டிக் கொள்ளவே இக்குறிப்பை இங்கே இடுகிறேன்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாகப் பசுக்களுக்கும், ஸ்ரீக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் ஸ்ரீதேவி {லட்சுமி தேவி}, ஓர் அழகிய வடிவை ஏற்றுக் கொண்டு ஒரு பசுமந்தைக்குள் நுழைந்தாள். அவளது அழகெனும் செல்வத்தைக் கண்ட பசுக்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(3)

பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, "ஓ! தேவி, நீ யார்? பூமியில் ஒப்பற்ற இவ்வழகை நீ எங்கிருந்து பெற்றாய்? ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட தேவியே, உன் அழகெனும் செல்வத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்தால் நிறைகிறோம்.(4) நீ யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உண்மையில், நீ யார்? நீ எங்கே செல்லப் போகிறாய்? ஓ! மிக மேன்மையான ஒளிமிக்க நிறத்தைக் கொண்டவளே, நாங்கள் அறிய விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக" என்றன.(5)

ஸ்ரீ {பசுக்களிடம்}, "நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நான் உயிரினங்கள் அனைத்தின் அன்புக்குரியவள் ஆவேன். உண்மையில் நான் ஸ்ரீ என்ற பெயரால் அறியப்படுகிறேன். என்னால் கைவிடப்பட்ட தைத்தியர்கள் என்றென்றும் கெட்டுப் போனார்கள்.(6) இந்திரன், விவஸ்வத் {விவஸ்வான்}, சோமன், விஷ்ணு, வருணன், அக்னி ஆகிய தேவர்கள் என்னை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.(7) உண்மையில், முனிவர்களும், தேவர்களும் தங்களிடம் என்னைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூடப்படுகின்றனர். பசுக்களே, எந்த உயிரினங்களுக்கு மத்தியில் நான் நுழையவில்லையோ அங்கே அழிவு நேருகிறது.(8) அறம், பொருள், இன்பம் ஆகியவை என்னுடன் சேர்ந்திருக்கும்போது மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பசுக்களே, நான் அத்தகைய சக்தியைக் கொண்டவள் என்பதை அறிவீராக.(9) நான் உங்களில் ஒவ்வொருவரிடமும் வசிக்க விரும்புகிறேன். நானே முன்வந்து உங்களை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஸ்ரீ உள்ளவர்களாவீராக" என்றாள்.(10)

பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, "நீ நிலையற்றவளாகவும், ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். மேலும் நீ பலரால் அனுபவிக்கப்படுபவளாகவும் இருக்கிறாய் {நீ பலருக்குப் பொதுவானவளாக இருக்கிறாய்}. நாங்கள் உன்னைக் கொள்ள விரும்பவில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(11) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் நல்வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது? நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. (எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்ததன் மூலம்) நீங்கள் ஏற்கனவே எங்களை மிகவும் நிறைவடையச் செய்துவிட்டாய்" என்றன.(12)

ஸ்ரீ, "பசுக்களே, நீங்கள் என்னை வரவேற்காதது முறையா? நான் அடைதற்கரிதானவள். என்னை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்?(13) சிறந்த நோன்புகளைக் கொண்ட உயிரினங்களே, வேண்டாமல் மற்றொருவரிடம் செல்லும் ஒருவன் அவமதிக்கப்படுவது நிச்சயம் என்ற உலகமறிந்த இப்பழமொழி உண்மை என்றே தெரிகிறது.(14) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள் ஆகியோர் மிகக் கடுந்தவங்களைச் செய்தபிறகு மட்டுமே என்னை அடைவதில் வெல்கிறார்கள்.(15) இத்தகைய சக்தியைக் கொண்ட நீங்கள் என்னை ஏற்பீராக. இனியவர்களே, அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும் ஒருபோதும் எவராலும் நான் அவமதிக்கப்படுவதில்லை" என்றாள்.(16)

பசுக்கள், "ஓ! தேவி, நாங்கள் உன்னை அவமதிக்கவில்லை. நாங்கள் உன்னை அவதூறு செய்யவும் இல்லை. நீ நிலையற்றவளாகவும், இதயத்தில் ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக மட்டுமே நாங்கள் உன்னை விடுகிறோம்.(17) அதிகம் பேச என்ன இருக்கிறது? நீ தேர்ந்தெடுக்கும் இடத்திற்குச் செல்வாயாக. நாங்கள் அனைவரும் சிறந்த வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஓ! பாவமற்றளவே, உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது?" என்று கேட்டன.(18)

ஸ்ரீ, "கௌரவங்களை அளிப்பவர்களே, இவ்வகையில் உங்களால் கைவிடப்படும் நான் நிச்சயம் உலகமெங்கும் அவமதிப்புக்குரியவளாக இருப்பேன். எனக்கு அருள் புரிவீராக.(19) நீங்கள் அனைவரும் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்களிடம் பாதுகாப்பை நாடுவோரைப் பாதுகாக்க எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை வேண்டியே நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னிடம் குற்றமேதுமில்லை. (இந்நிலையில் இருந்து) என்னைக் காப்பீராக.(20) நான் எப்போதும் உங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்பதை அறிவீராக. உங்கள் உடலில் உள்ள இழிவான பகுதி ஒன்றிலாவது நான் வசிக்க விரும்புகிறேன். உண்மையில், நான் உங்கள் குதத்திலாவது வசிக்க விரும்புகிறேன்.(21) பாவமற்றவர்களே, நீங்கள் புனிதமானவர்களாகவும், உயர்ந்த அருளைப் பெற்றவர்களாகவும் இருப்பதால் உங்கள் உடலில் யாதொரு பாகத்தையும் அருவருக்கத்தக்கதாகக் கருதவில்லை. எனினும், என் வேண்டுதலை அருள்வீராக. உங்கள் உடல்களில் எந்தப் பகுதியில் நான் வசிக்க வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டாள்".(22)

பீஷ்மர் தொடர்ந்தார், "ஸ்ரீயால் இவ்வாறு சொல்லப்பட்டவையும், எப்போதும் மங்கலமாக இருப்பவையும், தங்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களிடம் அன்பு பாராட்டுபவையுமான பசுக்கள், ஓ! மன்னா, ஒன்றோடொன்று ஆலோசித்து, ஸ்ரீயிடம் இந்தச் சொற்களைச் சொல்லின.(23)

பசுக்கள், "ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நாங்கள் உன்னைக் கௌரவிக்க வேண்டும் என்பது நிச்சயம் விரும்பத்தக்கதே. நீ எங்களது சிறுநீரிலும், சாணத்திலும் வாழ்வாயாக. ஓ! மங்கல தேவியே, இவை இரண்டும் புனிதமானவையே" என்றன.(24)

ஸ்ரீ, " உதவ விரும்பி எனக்கு நீங்கள் அருள் புரிந்தது என் நற்பேறே. நீங்கள் சொன்னவாறே ஆகட்டும். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. மகிழ்ச்சியை அளிப்பவர்களே, நான் உண்மையில் உங்களால் கௌரவிக்கப்பட்டேன்" என்றாள்".(25)

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதா, பசுக்களுடன் இந்த உடன்படிக்கையைச் செய்து கொண்ட ஸ்ரீ, அங்கேயே, அப்போதே அந்தப் பசுக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைக் காட்சியில் இருந்து மறைத்துக் கொண்டாள்.(26) ஓ! மகனே, இவ்வாறே நான் பசுஞ்சாணத்தின் மகிமை குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். பசுக்களின் மகிமை குறித்து மீண்டுமொருமுறை உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக" {என்றார் பீஷ்மர்}.(27)

அநுசாஸனபர்வம் பகுதி – 82ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்