Monday, June 03, 2019

சுரபிக்காக உண்டான கோலோகம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 83

Goloka for Surabhi! | Anusasana-Parva-Section-83 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)


பதிவின் சுருக்கம் : சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் கொடுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்...


பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)


ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பெரும்பாட்டனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(6) தேவர்கள் வீழ்த்தப்பட்டு மூவுலகங்களின் தலைவனாகச் சக்ரன் ஆன பிறகு, அனைத்து உயிரினங்களும் செழிப்பில் வளர்ந்து, உண்மை அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவையாக மாறின.(7) அப்போது ஒரு சந்தரப்பத்தில், ஓ! குரு குலத்தின் காளையே, முனிவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், அசுரர்கள், சிறகு படைத்த உயிரினங்கள், பிரஜாபதிகள் என அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனைத் துதித்தனர். அங்கே நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹா-ஹுஹு ஆகியோர்,(8,9) அந்த அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனைத்} துதித்து தெய்வீகத் தொனியில் பாடிக்கொண்டிருந்தனர். காற்றின தேவன் அங்கே தெய்வீக மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தான்.(10)

உடல்வடிவங்களுடன் கூடிய பருவகாலங்களும், தெய்வீக இசையின் துணையுடன் தெய்வீகக் கன்னியர் ஆடிப் பாடிக் கொண்டிருந்த தேவர்களின் கூட்டத்திற்கு மலர்களின் குறிப்பிட்ட நறுமணங்களைத் தனித்தனியாகச் சுமந்து வந்தன. அந்தச் சபைக்கு மத்தியில் தேவர்களின் தலைவனிடம் {பிரம்மனிடம்} தலைவணங்கிய இந்திரன், அவனிடம்,(11,12) "ஓ! பெரும்பாட்டா, ஓ! புனிதமானவரே, உலகங்கள் அனைத்தின் தலைவர்களான தேவர்களின் உலகத்தைவிடக் கோலோகம் ஏன் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.(13) ஓ! தலைவா, பசுக்கள் செய்த எந்தத் தவம் அல்லது எந்தப் பிரம்மச்சரியத்தின் விளைவால் அவை தேவர்களைவிட உயர்ந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வசிக்கவல்லவையாக இருக்கின்றன?" என்று கேட்டான் {இந்திரன்}.(14)

இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட பிரம்மன் அந்தப் பலனைக் கொன்றவனிடம், "ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, நீ எப்போதும் பசுக்களை அவமதித்திருக்கிறாய்.(15) எனவே, உன்னால் பசுக்களின் மகிமையை முன்கூட்டியே அறிய முடியவில்லை. ஓ! பலமிக்கவனே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்களின் மகிமையையும் பெருஞ்சக்தியையும் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பசுக்கள் வேள்வியின் அங்கங்களாகச் சொல்லப்படுகின்றன. ஓ! வாசவா அவை வேள்விக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவை இல்லாமல் வேள்வி ஏதும் இருக்க முடியாது.(17) அவற்றின் பால், அதனிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றால் அவை அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன.(18) அவற்றில் ஆண் கன்றுகள் உழவுக்குத் துணை செய்வதன் மூலம் நெல் முதலிய தானியங்களை விளைவிக்கன்றன.(19) அவற்றில் இருந்தே வேள்விகளும், ஹவ்யகவ்யங்களும், பால், தயிர் மற்றும் நெய்யும் உண்டாகின்றன. எனவே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்கள் புனிதமானவையாக இருக்கின்றன. பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்படும் அவை பல்வேறு சுமைகளைச் சுமக்கின்றன.(20)

பசுக்கள் முனிவர்களை ஆதரிக்கின்றன. அவை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன. ஓ! வாசவா, பசுக்கள் தங்கள் நடத்தையில் வஞ்சனையற்றவையாகும். அத்தகைய நடத்தையின் விளைவாலும், நன்கு செய்யும் செயல்களின் விளைவாலும் அவை நம்மை விட உயர்ந்த உலகங்களில் எப்போதும் வாழ்கின்றன.(21) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பசுக்கள் ஏன் தேவர்களை விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன என்பதை நான் இன்று உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(22) ஓ! வாசவா, பல சிறந்த பல வடிவங்களைக் கொண்ட பசுக்களே (பிறருக்கு) வரங்களை அளிப்பவையாகவும் இருக்கின்றன. அவை சுரபிகள் என்றழைக்கப்படுகின்றன. புனிதமான செயல்பாடுகளையும், மங்கலக் குறிகள் பலவற்றையும் கொண்ட அவை புனிதப்படுத்துவனவற்றில் உயர்ந்தவையாக இருக்கின்றன.(23) ஓ! பலனைக் கொன்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, சுரபியின் பிள்ளைகளான பசுக்கள் ஏன் பூமிக்கு இறங்கிச் சென்றன என்ற காரணத்தை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(24)

ஓ! மகனே, பழங்காலத்தில் தேவயுகத்தில் உயர் ஆன்ம தேவர்கள் மூவுலகங்களின் தலைவர்களாக இருந்தபோது, அதிதி கடுந்தவங்களைச் செய்து (அதன் வெகுமதியாகத்) தன் கருவறையில் விஷ்ணுவைக் கொண்டாள். உண்மையில், ஓ! தேவர்களின் தலைவா, அவள் ஒரு மகனை விரும்பி நீண்ட பல வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(25,26) பெருந்தேவியான அதிதி இவ்வாறு கடுந்தவங்களைச் செய்வதைக் கண்டவளும், தக்ஷனின் மகளும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவளும், சிறப்புமிக்கவளுமான சுரபியும், அவளைப் போலவே தேவர்களும், கந்தர்வர்களும் செல்லும் அழகிய கைலாச மலைகளின் சாரலில் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினாள்.(27,28) உயர்ந்த யோகத்தில் நிறுவப்பட்ட அவள், பதினோராயிரம் {11,000} வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(29) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் நாகர்கள் அனைவரும் அவளது தவங்களால் கடுமையாகச் சுடப்பட்டனர். என்னுடன் சேர்ந்து வந்த அவர்கள் அனைவரும் அந்த மங்கலத் தேவியைத் துதிக்கத் தொடங்கினர்.(30)

அப்போது நான், "ஓ! தேவி, ஓ! களங்கமற்ற ஒழுக்கம் கொண்டவளே, எக்காரியத்திற்காக நீ இத்தகைய கடுந்தவங்களைச் செய்கிறாய்?(31) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஓ! அழகானவளே, உன் தவங்களால் நான் நிறைவடைந்தேன். ஓ! தேவி, நீ வரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் எதையும் நான் தருவேன்" என்றேன். ஓ! புரந்தரா, இவையே நான் சுரபியிடம் சொன்ன சொற்களாகும்.

என்னால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எனக்குப் பதிலளிக்கும் வகையில் சுரபி, "ஓ! பெரும்பாட்டனே, எனக்கு வரங்கள் தேவையில்லை. ஓ! பாவமற்றவரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததே எனக்குக் கிட்டிய பெரும் வரமாகும்" என்றாள்.(33)

ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, இச்சொற்களை என்னிடம் சொன்ன அந்தச் சிறப்புமிக்கச் சுரபியிடம் நான்,(34) "ஓ! தேவி, ஓ! அழகிய முகம்படைத்தவளே, ஆசை மற்றும் பேராசையில் இருந்து விடுப்பட்ட உனது வெளிப்பாட்டிலும், நீ செய்த தவங்களிலும் நான் மிகையான நிறைவை அடைந்தேன். எனவே நான் உனக்கு இறவாமையை வரமாகத் தருகிறேன்.(35) என் அருளின் மூலம் மூவுலங்களிலும் உயர்ந்த இடத்தில் உள்ள உலகத்தில் நீ வசிப்பாயாக. அந்த உலகம் கோலோகம் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படப் போகிறது.(36) எப்போதும் நற்செயல்களையே செய்யும் உன் சந்ததி, மனிதர்களின் உலகில் இருக்கட்டும். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, உண்மையில் உன் மகள்கள் அங்கே வசிக்கப் போகிறார்கள்.(37) தெய்வீக மற்றும் மானுட இன்பங்கள் அனைத்தும் நீ நினைத்த மாத்திரத்தில் உனதாகும். ஓ! அருளப்பட்டவளே, சொர்க்கத்தில் இருக்கும் இன்பம் எதுவும் உனதே ஆகும்" என்று பதிலளித்தேன்.(38)

ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, சுரபியின் உலகங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவடையச் செய்ய வல்லவையாகும். மரணமோ, முதுமையோ, நெருப்போ அங்கே வசிப்பவர்களைத் தாக்காது.(39) ஓ! வாசவா, தீயூழேதும் அங்கே ஏற்படாது. இனிய காடுகள் பலவும், இனிய ஆபரணங்கள் மற்றும் அழகிய பொருட்கள் யாவும் அங்கே காணப்படுகின்றன.(40) ஓ! வாசவா, சிறப்பான ஆயத்தங்களுடன் கூடியவையும், செலுத்துபவரின் விருப்பத்திற்கேற்பச் சொல்லக்கூடியவையுமான பல அழகிய தேர்களும் அங்கே இருக்கின்றன. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மச்சரியம், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு, கொடைகள், பல்வேறு வகை அறச்செயல்கள், புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்ளல் ஆகியவற்றாலும், உண்மையில், கடுந்தவங்கள், நன்றாகச் செய்யப்பட்ட அறச்செயல்கள் ஆகியவற்றாலும் மட்டுமே ஒருவன் கோலோகத்தை அடைய முடியும்.(41,42) ஓ! சக்ரா, நீ கேட்டவை அனைத்திற்கும் நான் முழுமையாகப் பதிலளித்துவிட்டேன். ஓ! அசுரர்களைக் கொல்பவனே, ஒருபோதும் பசுக்களை அவமதியாதே" என்றான் {பிரம்மன்}".(43)

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, சுயம்புவான பிரம்மனின் இச்சொற்களைக் கேட்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான சக்ரன், அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பசுக்களை வழிபடவும், அவற்றுக்குப் பெரும் மதிப்பளிக்கவும் தொடங்கினான்.(44) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக்களின் புனிதத்தன்மை குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இவ்வாறே, ஓ!மனிதர்களின் தலைவா, ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல பசுக்களின் புனிதத்தன்மை, முன்சிறப்புகள் மற்றும் மகிமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். பிற பொருட்களில் இருந்து புலன்விலக்கம் பெற்ற மனிதன், ஹவ்யகவ்யங்கள் காணிக்கையளிக்கப்படும் தருணங்கள், அல்லது வேள்விகளிலோ, பித்ருக்களைத் துதிக்கும் தருணங்களிலோ இதைக் குறித்துப் பிராமணர்களுக்குச் சொன்னால் அவன் தன் மூதாதையர்களின் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(45-47)

பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான். உண்மையில், பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட பெண்களும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(48) மகன்களைப் பெற விரும்புபவன் மகன்களை அடைகிறான். மகள்களைப் பெற விரும்புபவன் மகள்களைப் பெறுகிறான். செல்வத்தை விரும்புபவன், செல்வத்தை அடைவதில் வெல்கிறான், அறத்தகுதியை விரும்புபவன் அறத்தகுதியை ஈட்டுவதில் வெல்கிறான்.(49) அறிவை விரும்புபவன் அறிவை அடைகிறான். இன்பத்தை விரும்புபவன், இன்பத்தை அடைவதில் வெல்கிறான். உண்மையில், ஓ! பாரதா, பசுக்களிடம் அர்ப்பணிப்புள்ள ஒருவனால் அடைய முடியாதது ஏதுமில்லை" {என்றார் பீஷ்மர்}.(50)

அநுசாஸனபர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 50

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்