Wednesday, June 05, 2019

தாரக வதம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 86

Taraka's slaughter! | Anusasana-Parva-Section-86 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 86)


பதிவின் சுருக்கம் : குமரனுக்கு முலையுண்ணக் கொடுத்த கார்த்திகைப் பெண்கள்; தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் குமரனுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள்; தாரகன் கொல்லப்பட்டது...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, வேத கேள்வியில் குறிப்பிடப்படுவதும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடையதுமான பொற்கொடையால் உண்டாகும் பலன்களைக் குறித்து விரிவாகச் சொன்னீர்.(1) பொன்னின் தோற்றம் குறித்தும் நீர் சொன்னீர். இப்போது தாரகனின் அழிவு குறித்து எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, அந்த அசுரன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான் என நீர் சொன்னீர். அவனுடைய அழிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விரிவாக எனக்குச் சொல்வீராக.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, தாரகன் கொல்லப்பட்டதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன். அதைக் கேட்பதில் என் ஆவல் பெரிதாக இருக்கிறது" என்றான்.(4)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, (தாரகனின் ஆற்றல் மூலமும், கங்கை அக்னியின் வித்தைக் கைவிட்ட நடத்தையின் மூலமும்) பெரும் துன்பத்தில் இருந்த தேவர்களும், முனிவர்களும், கிருத்திகை அறுவரிடமும் அந்தப் பிள்ளையை வளர்க்கத் தூண்டினர்.(5) தெய்வீக மங்கையரில் (அவர்களைத் தவிர வேறு) எவரும் அக்னியின் வித்தைத் தங்கள் கருவறையில் தாங்கும் சக்தி கொண்டவர்களாக இல்லை.(6) பெரும் சக்தி கொண்ட அக்னியின் வித்தைக் கைவிட்ட பிறகு அதைத் தாங்கத் தயாராக இருந்த அந்தத் தேவிகளிடம் நெருப்பின் தேவன் பெரும் நிறைவடைந்திருந்தான்.(7) ஓ! மன்னா, அக்னியின் சக்தி ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (கருவறைக்குச் செல்லும்) வழியில் வைக்கப்பட்டபோது, கிருத்திகைகள் அறுவரும், தங்கள் கருவறையில் கொண்ட ஒவ்வொரு பகுதியையும் பேணி வளர்க்கத் தொடங்கினர்.(8)

எனினும், உயர் ஆன்மக் குமாரன் அவர்களின் கருவறைகளில் வளரத் தொடங்கியபோது, அவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்ட அவர்களது உடல்கள் (சொர்க்கத்திலோ, பூமியிலோ) எங்கும் அமைதியைக் காணத் தவறின.(9) அவர்களது உடல்களால் சக்தியால் நிறைக்கப்பட்டு ஈனும் காலமும் இறுதியாக வந்தது. ஓ! மனிதர்களின் இளவரசே, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கருவை ஈன்றனர்.(10) ஆறு வெவ்வேறு கருவறைகளில் தாங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதிகள் அனைத்தும் வெளியே வந்ததும் ஒன்றாகின. பூமாதேவி அப்பிள்ளையை, பொற்குவியலில் இருந்து எடுத்தாள்.(11) உண்மையில், சிறந்த வடிவத்தில் இருந்த அந்தப் பிள்ளை, நெருப்பின் தேவனை {அக்னியைப்} போலக் காந்தியுடன் சுடர்விட்டான். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், காண்பதற்கினிய நாணற்காடுகளில் வளரத் தொடங்கினான்.(12)

காந்தியில் காலைச் சூரியனைப் போல இருந்த அவர்களது பிள்ளையைக் கிருத்திகைகள் கண்டனர். அன்பால் நிறைந்தவர்களாக, உண்மையில் அவனிடம் அதிக அன்புடன் கூடிய அவர்கள் தங்கள் முலைகள் உண்ணக் கொடுத்து அவனை வளர்க்கத் தொடங்கினர்.(13) கிருத்திகைகளுக்குப் பிறந்து அவர்களாலேயே வளர்க்கப்பட்டதால் மூவுலகங்களிலும் அவன் கார்த்திகேயன் என்று அறியப்படலானான். ருத்திரனிடமிருந்து விழுந்த வித்தில் உதித்த அவன் ஸ்கந்தன் எனப் பெயரிடப்பட்டான், தனிமையான நாணற்காட்டில் பிறந்ததால் அவன் குஹன் (ரஹஸ்யமாகப் பிறந்தவன்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.(14) முப்பத்து மூன்று தேவர்கள், (உடல்வடிவங்களுடன் கூடிய) திசைப்புள்ளிகள், அவற்றுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {திக்பாலர்கள்}, ருத்திரன், தாத்ரி {தாதா}, விஷ்ணு, யமன், பூஷன், அர்யமன், பகன்,(15) அம்சன், மித்திரன், ஸாத்தியர்கள், வாசவன் {இந்திரன்}, வசுக்கள், அசுவினிகள், நீர், காற்று, ஆகாயம், சந்திரமாஸ், நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், சூரியன்,(16] உடல்வடிவத்தோடு கூடிய ரிக், சாமம், யஜுஸ்கள் அனைத்தும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய {அக்னியுடைய} மகனான அந்த அற்புதமான பிள்ளையைக் காண அங்கே வந்தனர்.(17)

ஆறு தலைகளைக் கொண்டவனும், பனிரெண்டு கண்களைக் கொண்டவனும், பிராமணர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனும், குமாரன் என்றழைக்கப்படுபவனுமான அந்தப் பிள்ளையின் புகழை முனிவர்களும், கந்தர்வர்களும் பாடினர்.(18) அவனது தோள்கள் அகலமாக இருந்தன, அவனுக்குப் பனிரெண்டு கரங்கள் இருந்தன, அவனுடைய காந்தி நெருப்புக்கும், ஆதித்தியனுக்கும் ஒப்பானதாக இருத்தது. நாணற்புதரில் நீண்டு கிடக்கும் அக்குழந்தையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும்,(19) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, அந்தப் பேரசுரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினர். தேவர்கள் அவனுக்கு உற்சாகமூட்ட பல்வேறு வகைகளிலான பொம்மைகளையும், பொருட்களையும் கொண்டு வந்தனர்.(20) அவன் குழந்தையைப் போல விளையாடியபோது, அவனுக்குப் பல்வேறு வகைப் பொம்மைகளும், பறவைகளும் கொடுக்கப்பட்டன. சிறந்த இறகுகளைக் கொண்டவனான கருடன், பலவண்ண தோகைகளை உடைய தன் பிள்ளையான மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(21)

ராட்சசர்கள் அவனுக்குப் பன்றியையும், எருமையையும் கொடுத்தனர். அருணன் அவனுக்கு, கடுங்காந்தியைக் கொண்ட சேவலொன்றைக் கொடுத்தான்.(22) சந்திரமாஸ் செம்மறியாட்டையும், ஆதித்தியன் தன் பளபளக்கும் கதிர்களையும் கொடுத்தனர். பசுக்கள் அனைத்தின் தாயான சுரபி அவனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுத்தாள்.(23) அக்னி அவனுக்குப் பல நற்குணங்களைக் கொண்ட வெள்ளாடு ஒன்றைக் கொடுத்தான். ஐலன் அவனுக்குப் பெரும் அளவிலான மலர்களையும் கனிகளையும் கொடுத்தான். சூதன்வான் அவனுக்கு ஒரு வண்டியையும், அளவிலாத கூபரம் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான்.(24) வருணன் கடலில் விளையும் பல சிறந்த மங்கலப் பொருட்களைஉம், சில யானைகளையும் கொடுத்தான். தேவர்களின் தலைவன், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வகைப் பறவைகள்,(25) இரைதேடும் பயங்கர விலங்குகள், மற்றும் பல்வேறு வகைக் குடைகள் பலவற்றையும் கொடுத்தான். பெரும் கூட்டங்களாக இருந்த ராட்சசர்களும், அசுரர்களும் அந்தப் பலமிக்கப் பிள்ளையின் பின்னால் அணிவரிசையில் நடக்கத் தொடங்கினர்.(26)

அக்னியின் மகன் வளர்வதைக் கண்ட தாரகன், பல்வேறு வகைகளில் அவனை அழிக்க முயன்றாலும் அந்தப் பலமிக்கத் தேவனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.(27) சரியான நேரத்தில் தேவர்கள் தனிமையில் (நாணற்காட்டில்) அக்னிக்குப் பிறந்த மகனை தங்கள் படைத்தலைவனாக நிறுவினர். அசுரன் தாரகன் தங்களை ஒடுக்கு வருவது குறித்தும் அவனுக்குச் சொன்னார்கள்.(28) தேவர்களின் படைத்தலைவன் வளர்ந்ததும், பெரும் பலத்தையும், சக்தியையும் கொண்டவனாக இருந்தான். காலத்தில் அந்தக் குஹன் தன் தடுக்கப்பட முடியாத ஈட்டியை {வேலைக்} கொண்டு தாரகனைக் கொன்றான்.(29) உண்மையில், குமரன் அந்த அசுரனை விளையாட்டு போல எளிமையாகக் கொன்றான். தாரகனைக் கொன்ற பிறகு அவன் தேவர்களின் தலைவனை மூவுலகங்களின் அரசாட்சியில் மீண்டும் நிறுவினான்.(30)

வலிமையும், ஆற்றலும் கொண்ட அந்தத் தேவர் படைத்தலைவன் அழகிலும், காந்தியிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தான். பலமிக்க ஸ்கந்தன், தேவர்களின் பாதுகாவலனாகி, சங்கரனுக்கு ஏற்புடையதைச் செய்தான்.(31) பாவகனின் சிறப்புமிக்க மகன், தங்க வடிவம் கொண்டவனாக இருந்தான். உண்மையில் குமாரனே எப்போதும் தேவர்களின் படைத்தலைவனாக இருந்தான்.(32) நெருப்பு தேவனுடைய பலமும், சக்தியுமாக இருந்த தங்கம் கார்த்திகேயனுடன் (ஒரே வித்தில்) பிறந்ததாகும். எனவே, தங்கமானது, உயர்வானதும், மங்கலமானதும், மதிப்புமிக்கதும், சிறந்ததும், வற்றாத பலனைக் கொண்டதுமாக இருக்கிறது.(33) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே பழங்காலத்தில் பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} வசிஷ்டர் சொன்னார். எனவே, ஓ! மனிதர்களின் மன்னா, பொற்கொடை அளிப்பாயாக.(34) ராமர் {பரசுராமர்}, பொற்கொடை அளித்ததன் மூலம் தம் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, இறுதியாகப் பிற மனிதர்களால் அடைய முடியாத சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தார்" என்றார் {பீஷ்மர்}.(35)

அநுசாஸனபர்வம் பகுதி – 86ல் உள்ள சுலோகங்கள் : 35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்