Thursday, June 06, 2019

சிராத்த பலன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 87

The merits of Sraddha! | Anusasana-Parva-Section-87 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 87)


பதிவின் சுருக்கம் : நீத்தார் வழிபாட்டுக்குரிய விதிகள் மற்றும் ஒவ்வொரு திதியிலும் சிராத்தம் செய்வதன் பலன் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அற ஆன்மாவே, நான்கு வகைக்கான கடமைகள் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர். அதுபோலவே, ஓ! மன்னா, (இறந்து போன மூதாதையருக்கான) சிராத்தம் {நீத்தார் வழிபாடு} தொடர்பான விதிகள் அனைத்தையும் இப்போது எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்".(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், அந்தச் சாந்தனுவின் மகன் {பீஷ்மர்}, விதிகளுக்கு இணக்கமாகச் சிராத்தம் தொடர்பான பின் வரும் சடங்கை அறிவிப்பதில் தம்மைத் தாமே நிறுவிக் கொண்டார்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, சிராத்த சடங்கு குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மங்கலமானதும், புகழத்தக்கதும், புகழையும், சந்ததியையும் உண்டாக்கவல்லதுமான அந்தச் சடங்கு, பித்ருக்களைக் கௌரவிப்பதில் ஒரு வேள்வியாகக் கருதப்படுகிறது.(3) தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, பிசாசங்கள் அல்லது கின்னரர்களோ எவராக இருந்தாலும் ஒருவன் பித்ரு வழிபாட்டை எப்போதும் செய்ய வேண்டும்.(4) மக்கள் பித்ருக்களை முதலில் வழிபடுவதும், அதன் பிறகு தேவர்களைத் துதித்து அவர்களை நிறைவடையச் செய்வதும் காணப்படுகிறது. எனவே, ஒருவன் மிகக் கவனமாக எப்போதும் பித்ரு வழிபாட்டைச் செய்ய வேண்டும்[1].(5)

[1] "பித்ருக்கள் புதுநிலவன்று {அமாவசையன்று} வழிபடப்பட வேண்டும் என்றும், தேவர்கள் வளர்பிறையின் முதல்நாளன்று {பிரதமையன்று} வழிபடப்பட வேண்டும் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார். அல்லது வளர்பிறையில் வேறு எந்த நாளாக இருந்தாலும் பித்ரு வேள்வி அல்லது சிராத்தமே முதலில் செய்யப்பட வேண்டும்; தேவ வேள்வி அல்லது இஷ்டி அடுத்து செய்யப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா, பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தத்தைப் பின்னர்ச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் பொதுவிதி (புதுநிலவு {அமாவாசை} நாளின் பிற்பகலில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராத்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்) ஒரு சிறப்பு விதியால் தடுக்கப்பட்டிருக்கிறது[2].(6) (இறந்து போன) பாட்டனார்கள் {மூதாதையர்கள்} எந்த நாளில் சிராத்தம் செய்தாலும் நிறைவடைவார்கள்[3]. எனினும், (பின்பற்றத் தகுந்த சூழ்நிலைகளை நோக்கில் கொண்டு சிராத்தங்களைச் செய்யும்) குறிப்பிட்ட சந்திர நாட்களின் {திதிகளின்} நிறைகுறைகளை இப்போது சொல்லப் போகிறேன். (7) ஓ! பாவமற்றவனே, எந்த நாட்களில் சிராத்தங்களைச் செய்தால் என்ன கனிகள் அடையப்படும் என்பது குறித்துச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(8)

[2] "சிராத்தமானது புது நிலவு நாளின் பிற்பகல் வேளையில் செய்யப்பட வேண்டும் என்ற சிறப்பு விதி இருக்கிறது. தேவர்கள் வளர்பிறையின் முதல் நாளில் துதிக்கப்பட வேண்டும். எனவே இந்தச் சிறப்பு விதியால் சிராத்தமானது, தேவ வழிபாட்டைப் பின்தொடராமல் முன்பே செய்யப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] இதன் பிறகு கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகச் செய்தி இருக்கிறது. அது பின்வருமாறு, "பிண்டங்கொடுத்துச் செய்யப்படும் சிராத்தத்தை மாதந்தோறும் {அமாவாசையில்} செய்ய வேண்டும். கிருகஸ்தனான பிராம்மணன் அமாவாஸ்யையில் பிதிரு யாகத்தைச் செய்ய வேண்டும். மாதந்தோறும் பிண்டதானத்தோடு செய்யும் தர்சஸ்ராத்ததைத்தான் அந்வாஹார்யமென்று வித்வான்கள் நினைக்கின்றனர். பரிசுத்தனாய்க் கைகூப்பிக் கொண்டு சிரத்தையுடன் மாமிசத்தினால் அந்தச் சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

வளர்பிறையின்[4] ஒன்றாம் நாளில் {பிரதமையில்} பித்ருக்களைத் துதிப்பதன் மூலம் ஒருவன், விரும்பத்தக்க சாதனைகளைச் செய்யும் பிள்ளைகள் பலரைப் பெறவல்ல அழகிய மனைவிகளைத் தன் வசிப்பிடத்தில் அடைவான்.(9)

[4] கும்பகோணம் பதிப்பில் வளர்பிறை என்ற குறிப்பு இல்லை. உண்மையில் பின்வரப்போகும் ஸ்லோகங்களில் உள்ள திதிகளும் கும்பகோணம் பதிப்பில் வளர்பிறை என்ற குறிப்பில்லை. அது பின்வருமாறு, "எந்தத் தினங்களில் சிராத்தங்களைச் செய்வதினால் என்ன பலன்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் உள்ளபடி சொல்வேன். அதை என்னிடம் தெரிந்து கொள். பிரதமையில் பிதிருக்களைப் பூஜிப்பதனால் அழகான பிள்ளைகளைப் பெறுமான ஸ்திரீகளைத் தன் கிருஹத்தில் அடைவான். துவிதியையில் பிதிரு சிராத்தம் செய்வதனால் வீட்டில் பெண்கள் பிறப்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் "சுக்லபக்ஷத்தின் முதல் நாள்" என்று சொல்லப்படுவதால் வளர்பிறை என்ற குறிப்பு இருக்கிறது. இப்பகுதியின் 19ம் ஸ்லோகத்தில் வளர்பிறையைவிடத் தேய்பிறையே சிறப்பு என்ற குறிப்பு உள்ளது.

வளர்பிறையின் இரண்டாம் நாளில் {துவிதியையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் மகள்கள் பலரை அடைகிறான். மூன்றாம் நாளில் {திருதியையில்} அதைச் செய்பவன் பல குதிரைகளை அடைகிறான். நான்காம் நாளில் {சதுர்த்தியில்} அதைச் செய்பவன் (வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் போன்ற) சிறு விலங்குகளின் பெரும் மந்தையைத் தன் வீட்டில் அடைகிறான்.(10)

ஓ! மன்னா, ஐந்தாம் நாளில் {பஞ்சமியில்} சிராத்தம் செய்பவர்கள் மகன்கள் பலரை அடைகிறார்கள். ஆறாம் நாளில் {சஷ்டியில்} சிராத்தம் செய்வோர் பெரும் காந்தியை அடைகிறார்கள்.(11)

ஏழாம் நாளில் {சப்தமியில்} அதைச் செய்யும் ஒருவன் பெரும் புகழை அடைகிறான். எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அதைச் செய்யும் ஒருவன் வணிகத்தில் பெரும் லாபங்கள் ஈட்டுகிறான்.(12)

ஒன்பதாம் நாளில் {நவமியில்} அதைச் செய்யும் ஒருவன் பிளவில்லாத {ஒற்றைக்} குளம்பைக் கொண்ட விலங்குகள் பலவற்றை அடைவான். பத்தாம் நாளில் {தசமியில்} அதைச் செய்யும் ஒருவன் பசுக்கள் என்ற பெருஞ்செல்வத்தை அடைகிறான்.(13)

பதினொன்றாம் நாளில் {ஏகாதசி} அதைச் செய்யும் ஒருவன் துணிமணிகள் மற்றும் (பித்தளை மற்றும் பிற உலோகங்களாலான) பாத்திரங்கள் போன்ற செல்வத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் பிரம்ம காந்தியுடன் கூடிய மகன்கள் பலரையும் அடைவான்.(14)

பனிரெண்டாம் நாளில் {துவாதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், விரும்பினால் வெள்ளி மற்றும் தங்கத்தினாலான பல்வேறு வகை அழகிய பொருட்களை எப்போதும் காண்பான்.(15)

பதிமூன்றாம் நாளில் {திரையோதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், தன் இனத்தில் சிறப்புமிக்கவனாவான். பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} சிராத்தம் செய்பவனுடைய குடும்பத்தில் உள்ள இளையோர் அனைவரும் {புருஷர்கள் அனைவரும் இளமைப் பருவத்திலேயே} மரணமடைவார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதன் போரில் சிக்குவான். புதுநிலவு நாளில் {அமாவாசையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைவான்.(16,17)

தேய்பிறையில் பத்தாம் நாள் {தசமி} தொடங்கி, (தசமி தொடங்கி அமாவாசை வரை வரும் நாட்களில்) பதினான்காம் நாளை {சதுர்த்தசியை} மட்டும் விட்டுவிட்டு வரும் அனைத்து நாட்களும் சிராத்தம் செய்வதற்கு மெச்சத்தகுந்த நாட்களே. தேய்பிறையின் மற்ற நாட்கள் {தேய்பிறையில் பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள நாட்கள்} அவ்வாறானவை அல்ல {சிராத்தம் செய்யத் தகுந்தவை அல்ல}.(18) மேலும், சிராத்த காரியங்களில் வளர்பிறையைவிடத் தேய்பிறை சிறந்ததாக இருப்பதைப் போலவே, முற்பகலைவிட, நாளின் பிற்பகலே சிறப்பானதாகும்[5]" என்றார் {பீஷ்மர்}.(19)

[5] கும்பகோணம் பதிப்பில், "கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தசியைத் தவிர மற்றத் தசமி முதலான திதிகள் சிராத்தத்திற்குச் சிறந்தவை; மற்றவை அவ்வளவு சிறந்தவையல்ல. சிராத்தத்திற்குக் கிருஷ்ணபக்ஷமானது சுக்கிலபக்ஷத்தைவிட எப்படி விசேஷமோ அப்படியே முற்பகலைவிடப் பிற்பகல் விசேஷம்" என்றிருக்கிறது.

அநுசாஸனபர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்