Friday, June 07, 2019

சிராத்த ஹவிஸுகள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 88

Havis for Sraddha! | Anusasana-Parva-Section-88 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 88)


பதிவின் சுருக்கம் : சிராத்தத்தில் ஆகுதிகளாகப் பயன்படுத்தத் தகுந்த பொருட்களையும், அவற்றின் பலன்களையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும்பலம் கொண்டவரே, பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் எந்தப் பொருள் வற்றாததாகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் (காணிக்கை அளிக்கப்படும்) எந்த ஹவிஸ் {ஆகுதி பொருள்} காலத்திற்கும் நீடித்திருக்கிறது? உண்மையில் (கொடுக்கப்பட்டால்) நித்தியத் தன்மையை அடைவது எது?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, சிராத்த சடங்கை அறிந்த மனிதர்கள், சிராத்த நோக்கில் தகுந்ததெனக் கருதும் ஹவிஸ்கள் {வேள்வி நெருப்பில் இடத்தக்க பொருட்கள்} எவை என்பதையும், அவை ஒவ்வொன்றினாலும் விளையும் பலன்களையும் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, எள், அரிசி, வாற்கோதுமை, உளுந்து, நீர், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றைக் கொண்டு சிராத்தம் கொடுக்கப்பட்டால் ஒரு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருப்பார்கள்.(3) அதிக அளவிலான எள்ளைக் கொண்டு சிராத்தம் செய்யப்பட்டால், அத்தகைய சிராத்தம் வற்றாததாகிறது என மனு சொல்லியிருக்கிறார். அனைத்து வகை உணவுகளிலும், எள்ளே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.(4) சிராத்தங்களில் மீன்கள் காணிக்கையளிக்கப்பட்டால், இரண்டு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருக்கின்றனர். {செம்மறி} ஆட்டிறைச்சியினால் மூன்று மாதங்கள் வரையும், முயலிறைச்சியினால் அவர்கள் நான்கு மாதங்கள் வரையும் நிறைவடைந்திருக்கின்றனர்.(5)

ஓ! மன்னா, வெள்ளாட்டு இறைச்சியால் ஐந்து மாதங்கள் வரையும், பன்றியிறைச்சியால் ஆறு மாதங்கள் வரையும், பறவைகளின் இறைச்சியால் ஏழு மாதங்கள் வரையும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(6) பிருஷதம் {புள்ளிமான்} என்றழைக்கப்படும் மான்களில் இருந்து கிடைக்கும் இறைச்சியால் எட்டு மாதங்கள் வரையும், ருருவிடம் {கறுப்பு மானில் இருந்து} கிடைக்கும் இறைச்சியால் ஒன்பது மாதங்கள் வரையும், கவய {மற்றொரு வகை மான்} இறைச்சியால் பத்து மாதங்கள் வரையிலும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(7) எருமை இறைச்சியால் அவர்கள் பதினோரு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றனர். சிராத்தத்தில் அளிக்கப்படும் மாட்டிறைச்சியால் அவர்கள் ஒரு முழு வருடத்திற்கு நிறைவடைந்திருக்கிறார்கள்.(8) மாட்டிறைச்சியைப் போலவே நெய்யுடன் கலந்த பாயசம் பித்ருக்களுக்கு மிகவும் ஏற்புடையதாகும். வாத்ரீநச இறைச்சியால் பித்ருக்கள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் அளவுக்கு நிறைவடைந்திருக்கிறார்கள்[1].(9) பித்ருக்கள் இறந்த சந்திர நாளில் {திதியில்} ஆண்டுதோறும் காண்டாமிருகத்தின் இறைச்சி காணிக்கையளிக்கப்பட்டால் அது வற்றாததாகிறது. காலசாகம் என்றழைக்கப்படும் கீரை {அறைக்கீரை}, காஞ்சன மலரின் இதழ்கள், வெள்ளாட்டிறைச்சி ஆகியவை காணிக்கையளிக்கப்பட்டால் அவையும் வாற்றாதவையாகின்றன.(10)

[1] "வாத்ரீநசம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. ஒருவேளை இது பெரிய காளையாகவோ, ஒருவகைப் பறவையாகவோ, ஆடாகவோ இருக்கக்கூடும். பெருமளவில் காளையாகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எருமை மாம்ஸத்தினால் பதினொரு மாதங்களும் பிதிருக்களுக்குத் திருப்தியுண்டாகும். கோமாம்ஸத்தோடு சிராத்தம் செய்தால் ஒரு வருஷம் திருப்தியுண்டாகுமென்று சொல்லப்படுகிறது. நெய்யுடன் சேர்ந்த பாயஸமானது கோமாம்ஸத்தைப் போன்றது. விருஷபத்தின் மாம்ஸத்தினால் பனிரெண்டு வருஷம் பிதிரு திருப்தியுண்டாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "எருமை இறைச்சியால் மூதாதையர் பதினோரு மாதங்கள் இன்புற்றிருக்கின்றனர். மாட்டிலிருந்து உற்பத்தியாகுபவை ஈமச்சடங்கில் கொடுக்கப்பட்டால், நிறைவானது ஒரு வருடம் முழுவதும் நீடித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. மாட்டில் இருந்து உற்பத்தியாகும் பொருளைப் பாயசத்துடனும், நெய்யுடனும் கலந்து கொடுக்கலாம். வாத்ரீநச இறைச்சியால் நிறைவானது பனிரெண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கும்" என்றிருக்கிறது. மாட்டில் இருந்து உற்பத்தியாகும் பொருள் என்பதன் அடிக்குறிப்பில், "நாம் இம்மொழிபெயர்ப்புக்காக இவ்வாறு கூறவில்லை. இந்த உரையில் இறைச்சி குறித்துச் சொல்லப்படவில்லை. அது பசுவில் உற்பத்தியாகும் பொருள் என்றே கூறுகிறது" என்றிருக்கிறது. பாத்ரீநசம் என்பதன் அடிக்குறிப்பில், "ஒரு வேளை பெரிய பறவை ஒன்றாக இருக்கலாம்" என்றிருக்கிறது. இங்கே பிபேக்திப்ராயின் அடிக்குறிப்புக் கவனத்தில் கொள்ளத்தக்கது. மூலத்தில் "yathā gavyaṃ tathāyuktaṃ pāyasaṃ sarpiṣā saha vādhrīṇasasya māṃsena tṛptir dvādaśa vārṣikī" என்று இருக்கிறது. http://sacred-texts.com/hin/mbs/mbs13088.htm கவ்யம் என்பது பசுவின் உற்பத்திப் பொருளைக் குறிக்கும். மாமிம் (māṃsena) என்ற சொல் இதில் கையாளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. வாத்ரீநச (காளை / பெரிய பறவை) மாமிசமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக உண்மையில் பித்ருக்களாலேயே பாடப்பட்ட சில ஸ்லோகங்கள் (இவ்வுலகில்) பாடப்படுகின்றன. இவை பழங்காலத்தில் சனத்குமாரரால் சொல்லப்பட்டவை.(11) {அந்த ஸ்லோகங்கள்}, "எங்கள் குலத்தில் பிறந்தவன் எவனும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்கையில் {தக்ஷிணாயனத்தில்}, மக நட்சத்திரத்தின் கீழ் வரும் (தேய்பிறையின்) பதிமூன்றாம் நாளில் {திரயோதசியில்} எங்களுக்கு நெய் கலந்த பாயசம் கொடுக்க வேண்டும்.(12) எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன், நோன்பு நோற்பவனைப் போலவே, மக நட்சத்திரத்தின் கீழ் வெள்ளாட்டு இறைச்சியையோ, காஞ்சன மலரின் இதழ்களையோ {எங்களுக்குக்} காணிக்கையளிக்க வேண்டும். அவன், ஒரு யானையின் நிழலால் மறைக்கப்படும் இடத்தில் உரிய சடங்குகளுடன் நெய் கலந்த பாயசத்தை எங்களுக்குக் காணிக்கையளிக்கும் வகையில் அர்ப்பணிக்க வேண்டும்" {என்று சொல்கின்றன}[2].(13)

[2] கும்பகோணம் பதிப்பில், "தக்ஷிணாயனத்தில் மகநக்ஷத்திரம் கூடின திரயோதசியில் நெய்யுடன் சேர்ந்த பாயஸத்தைச் சால்வை முதலிய கம்பளத்தோடும், பொன் வெள்ளி முதலிய தக்ஷிணையோடும் நியமம் தவறாமல் கஜச் சாயையில் அதன் காதுக் காற்றாலே விசிறப்பட்டவையாகக் கொடுத்துச் சிராத்தம் செய்பவன் நமது குலத்திற்பிறப்பானா? ஒருவன் அநேகபுத்திரர்களை விரும்ப வேண்டும். ஏனெனில், உலகங்களில் பெயர் பெற்றதும் சிராத்தத்தை அக்ஷயமாகச் செய்வதுமாகிய அக்ஷயவடமென்னும் ஆலமரமிருக்கும் கயைக்கு ஒருவனாவது போவனே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உத்தராயணத்தின்போது, மக {மாசி} மாத பதிமூன்றாம் நாளில், எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன் நெய்யுடன் கலந்த பாயஸத்தை எங்களுக்குக் கொடுக்க வேண்டும். மக நட்சத்திரத்தன்று நோன்புகள் நோற்கும் ஒருவன் எங்களுக்கு வெள்ளாட்டு இறைச்சியுடன் காஞ்சன மலர் இதழ்களைக் காணிக்கை அளிக்க வேண்டும். ஹஸ்த நட்சத்திரத்தன்று, அவன் சடங்குகளுக்கு இணக்கமான வகையில், கொன்றை மர இலைகளால் செய்யப்பட்ட துடைப்பத்தைப் பயன்படுத்தி இதை {நெய்யுடன் கலந்த பாயசத்தைக்} காணிக்கை அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மொழிபெயர்ப்பதில் நாம் கொஞ்சம் சுதந்திரம் எடுத்திருக்கிறோம். உண்மையில் இந்த உரையை மொழிபெயர்த்தால் யானையின் (ஹஸ்தி) நிழல் என்ற பொருள் வரும். இது எப்பொருளையும் தருவதாகத் தெரியாததால் நாம் ஹஸ்தி என்பதை ஹஸ்தம் என்று எடுத்துக் கொள்கிறோம்" என்றிருக்கிறது.

பல மகன்களைப் பெற ஆசைப்பட வேண்டும், ஏனெனில் அவர்களில் ஒருவனாவது, எது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறதோ, எதன் கிளைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றானவாகின்றனவோ அந்த ஆலமரம் நிற்கும் கயைக்கு (தன் மூதாதையருக்குச் சிராத்தம் செய்வதற்காகச்) செல்வான்[3].(14) சிறிதளவு நீர், கிழங்குகள், கனிகள், இறைச்சி, அரிசி ஆகியவற்றைத் தேனில் கலந்து ஆண்டுதோறும் {குறிப்பிட்ட மூதாதையரின்} இறந்த நாளில் காணிக்கையளித்தால் அவை வற்றாதனவாகின்றன" என்றார் {பீஷ்மர்}.(15)

[3] "இந்த நாள்வரையிலும் கூட கயையின் புனிதத்தன்மை உலகளாவிய அளவில் இந்துக்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்படுகிறது. அங்கே, ‘அக்ஷயம்’ அல்லது வற்றாத ஆலம் என்றழைக்கப்படும் ஆலமரத்தின் கீழ் சிராத்தங்கள் செய்யப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அநுசாஸனபர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் :15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்